திருவாரூரில், சமூக சேவை விருது வழங்கும் விழா

புதுச்சேரி முதல் மந்திரியுடன் சகோதரியாக இணைந்து பணியாற்றுகிறேன். அனைவரும் உழைப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விருது வழங்கினார்.
விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விருது வழங்கினார்.
Published on

திருவாரூர்:

திருவாரூரில் நடைபெற்ற ஒரு சமுக சேவை விருது வழங்கும் விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது,

தஞ்சை மண் மிகுந்த சிறப்புக்குரியது. நான் வாழ்க்கை பாடத்தை தஞ்சையில் தான் கற்றுக் கொண்டேன். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்கள் மிகுந்த அன்பு செலுத்துபவர்கள். அவர்களைப் பார்த்துதான் எனக்கு பொது வாழ்வின் மீது பற்றுதல் ஏற்பட்டது. தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

புதுவையிலும் அன்போடு மக்கள் பழகி வருகிறார்கள். பலர் நான் ஆளுநராக இருந்து அரசியல் செய்வதாக சொல்லுகிறார்கள். அதே நேரத்தில் புதுவை முதல்வர் என்னிடம் சகோதர உணர்வோடு பழகி வருகிறார். புதுச்சேரியில் முதல்வருக்கு, நான் சகோதரியாக இருந்து ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறோம்.

தெலுங்கானாவில் முதல்வர் என்னை எதிரியாக பார்க்கிறார். அனைவரும் உழைப்பில் கவனம் செலுத்த வேண்டும். உழைப்பு இருந்தால் எவரும் முன்னுக்கு வரலாம். அதே நேரத்தில் ஏழைகளுக்கும் சேவை செய்ய வேண்டும். ஏழைகளுக்கு சேவை இறைவனுக்கு செய்யும் சேவை.

இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக மாவட்டச் செயலாளர் இரா.காமராஜ் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com