search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடிக்கான விருது நிகழ்ச்சியில் சரத் பவார் பங்கேற்பு- உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் அதிருப்தி
    X

    பிரதமர் மோடிக்கான விருது நிகழ்ச்சியில் சரத் பவார் பங்கேற்பு- உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் அதிருப்தி

    • புனேயில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோகமான்ய திலக் தேசிய விருது வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு பிறகு மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    புனே:

    சுதந்திர போராட்டத்தில் முக்கிய நபர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாலகங்காதர திலகர். அவர் திலக் மகராஜ், லோக மான்ய திலகர் என்றும் போற்றப்பட்டார்.

    லோகமான்ய திலகரின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களுக்கு திலக் ஸ்மார்க் மந்திர் அறக்கட்டளையால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ந்தேதி திலக் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோகமான்ய திலக் தேசிய விருது வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மூத்த அரசியல்வாதியும், தேசியவாத காங்கரஸ் தலைவருமான சரத்பவார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மோடியுடன் அவர் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தார்.

    இந்த விழாவில் சரத் பவார் கலந்து கொள்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. மகாராஷ்டிராவில் இந்த 3 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சியின் எதிர்ப்பையும் மீறி சரத்பவார் இந்த விழாவில் கலந்து கொண்டார். இதனால் அவர் மீது காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அதிருப்தி அடைந்தன.

    இதற்கிடையே பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

    லோகமான்ய திலகர் தேசிய விருதை பெறுவதற்கு முன்பு பிரதமர் மோடி புனேயில் உள்ள கணேசர் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

    விருது நிகழ்ச்சிக்கு பிறகு மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    Next Story
    ×