search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto Driver"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என் மீது நம்பிக்கை வைத்து ஆட்டோவில் பயணம் செய்ய அனுமதித்தீர்கள்.
    • தற்போது 30 ஆண்டுகள் கடந்து விட்டது.

    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலம் கோழஞ்சேரியை சேர்ந்தவர் பாபு (வயது 62). இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர் பாபுவை சந்தித்தார். அப்போது அவர் ஒரு கவரை பாபுவிடம் கொடுத்தார். அதை பிரித்துப்பார்த்த பாபு அதிர்ச்சி அடைந்தார். அதில் பல ரூபாய் நோட்டுகள் இருந்தன.

    இந்த பணம் என்று பாபு பேசத்தொடங்கியதும், எதிரில் நின்ற நபர் என் பயண கடன்...அதைத்தான் தற்போது தீர்க்க வந்துள்ளேன் என்று கூறி புதிர்போட்டார். எதுவும் புரியாமல் விழிபிதுங்கி நின்ற பாபுவிடம் உங்கள் கையில் 10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது. அது உங்களுக்குத்தான் வைத்துக்கொள்ளுங்கள் என்று அந்த நபர் கூறினார்.

    மேலும், அவர் தான் திருவனந்தபுரத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும், தனது பெயர் அஜித் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டார். அதன்பிறகு அந்த பணத்தை கொடுத்ததற்கான காரணத்தை தெரிவித்தார். அதன்விவரம் வருமாறு:-

    கடந்த 1993-ம் ஆண்டு நான் சங்கனாச்சேரியில் பி.எட். படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது மங்கலத்துநடையில் உள்ள எனது நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு மூவாற்றுப்புழா செல்ல பஸ்சிற்காக காத்து நின்றேன். பஸ் வராததால் ஆட்டோவில் செல்ல முடிவு செய்தேன். ஆனால் என்னிடம் பஸ்சில் செல்வதற்கான பணம் மட்டுமே கையில் இருந்தது. அப்போது ஆட்டோ டிரைவரிடம் ரூ.100 பிறகு தருவதாக கூறி வீட்டிற்கு சென்றேன்.

    இடைப்பட்ட காலத்தில் பல முறை உங்களை சந்தித்து ஆட்டோ கட்டணத்தை கொடுக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை. வாய் வார்த்தை என்றாலும் கூட அதுவும் கடன்தானே. இப்போது ரூ.100 பெரிய தொகையல்ல. அந்த காலத்தில் அது பெரிய தொகை. என் மீது நம்பிக்கை வைத்து ஆட்டோவில் பயணம் செய்ய அனுமதித்தீர்கள்.

    தற்போது 30 ஆண்டுகள் கடந்து விட்டது. தங்களை சந்திக்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. ஆதலால் ரூ.100-க்கு பதிலாக ரூ.10 ஆயிரம் தந்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அப்போதுதான் பாபுவிற்கும் அந்த பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது. ஆனால் அந்த பணத்தை ஏற்றுக்கொள்ள பாபு மறுத்தார். அதே நேரம் விடாப்பிடியாக அன்புடன் அந்த பணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அஜித் கூறினார். ரூ.100 கடனை 30 ஆண்டுகள் கடந்தும் நேர்மையுடன் ரூ.10 ஆயிரமாக ஆசிரியர் திருப்பி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • ஏற்கனவே குருநாதன் 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.
    • பக்கத்து வீட்டுக்காரர்கள் குருநாதன் வீட்டில் பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த முன்னீர்பள்ளம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் பண்டாரம் மகன் குருநாதன் (வயது 29). ஆட்டோ டிரைவரான இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குருநாதன் மற்றும் அவரது மனைவியின் சொந்த ஊர் பாலாமடையாகும். இதனிடையே கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஏற்கனவே இருமுறை குருநாதன் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பாலாமடையில் நடைபெறும் திருவிழாவிற்காக இசக்கியம்மாள் தனது குழந்தைகளுடன் அங்கு சென்றுள்ளார். நேற்று இரவு குருநாதன் அக்கம் பக்கத்தினரிடம் தூங்க செல்வதாக கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் இன்று காலை வெகு நேரம் ஆகியும் அவரது வீட்டின் கதவு திறக்கவில்லை. இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் குருநாதன் வீட்டில் பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது.

    இது குறித்து உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், குருநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • எனது மகள் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருப்பது எனக்கு உண்மையிலேயே பெருமையாக உள்ளது.
    • அரசு மாதிரிப் பள்ளி தொடர்ந்து 2-வது ஆண்டாக சாதனை படைத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை சேர்ந்தவர் ரவிக்குமார் ஆட்டோ டிரைவர். இவருடைய மகள் வர்ஷா. திருவண்ணாமலை அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

    நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் வர்ஷா 600-க்கு 589 மதிப்பெண்கள் பெற்றார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    சாதனை படைத்த மாணவியை திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் பாராட்டினார்.

    எனது தந்தை ஆட்டோ ஓட்டி வருகிறார். எங்கள் குடும்பத்தில் அதிக நிதி நெருக்கடி உள்ளது.

    எனக்கு மாதிரி பள்ளியில் ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. பொது தேர்வுகளின் போது ஆசிரியர்கள் தொடர்ந்து என்னை கடினமாக படிக்க தூண்டினர். தேர்வு நேரத்தில் எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போது பாடங்களை படித்து முடிப்பது சோதனையாக இருந்தது.

    ஆனாலும் கடினமாக படித்தேன். தற்போது அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. நான் அரசு ஊழியராக ஆசைப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மகள் சாதனை பெற்றதில் ஆட்டோ டிரைவர் ரவிக்குமார் மகிழ்ச்சியோடு காணப்பட்டார். அவர் கூறுகையில்:-

    நான் ஆட்டோ ஓட்டி வருகிறேன். அந்த வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறோம். வறுமையிலும் எனது மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவளை தொடர்ந்து படிக்க வைத்தேன்.

    தேர்வு நேரத்தில் எனது மகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இருந்தாலும் அவர் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நன்றாக படித்தார். எனது மகள் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருப்பது எனக்கு உண்மையிலேயே பெருமையாக உள்ளது என்றார்.

    திருவண்ணாமலையில் உள்ள அரசு மாதிரிப் பள்ளி, தொடர்ந்து 2-வது ஆண்டாக சாதனை படைத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மாடல் பள்ளியைச் சேர்ந்த 77 மாணவர்களில், 23 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 

    • மகள் வீட்டுக்கு சென்றதும் பார்த்தபோது ரூ. 80 ஆயிரம் இருந்த பணப்பை மாயமாகி இருந்தது.
    • விசாரணையில் அந்த பணப்பை மும்தாஜ் தவற விட்டு இருப்பது தெரியவந்தது.

    திருவொற்றியூர்:

    ராயபுரம் உசேன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் மும்தாஜ் பேகம் (வயது 67). இவர்,சேக் மேஸ்திரி பகுதியில் உள்ள மகள் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றார்.

    அப்போது ரூ.80 ஆயிரம் ரொக்கத்தையும் எடுத்து சென்றார்.

    மகள் வீட்டுக்கு சென்றதும் பார்த்தபோது ரூ. 80 ஆயிரம் இருந்த பணப்பை மாயமாகி இருந்தது. அதனை ஆட்டோவிலேயே தவறவிட்டது தெரியவந்தது.

    இது குறித்து ராயபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே திருவொற்றியூர் டோல்கேட் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ் (35) என்பவர் தனது ஆட்டோவில் பயணம் செய்த மூதாட்டி ஒருவர் ரூ.80 ஆயிரம் பணப்பையை தவற விட்டுவிட்டதாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    விசாரணையில் அந்த பணப்பை மும்தாஜ் தவற விட்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மும்தாஜை போலீசார் வரவழைத்து ரூ.80ஆயிரத்தை ஒப்படைத்தனர். மேலும் பயணி தவறவிட்ட பணத்தை நேர்மையாக போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் பிரகாசை ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமணன், இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

    • போலீசார் விசாரணை நடத்தி கூடலூரை சேர்ந்த நசீமா மற்றும் அவரது நண்பர் முகமது அமீன் ஆகியோரை கைது செய்தனர்.
    • போனில் உள்ள வீடியோ மற்றும் போட்டோக்கள் சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆய்வு செய்யப்படும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த டாக்டரின் மருத்துவமனைக்கு சம்பவத்தன்று ஒரு பெண் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவர் டாக்டரிடம் மருந்து-மாத்திரைகள் வாங்கி விட்டு சென்றுவிட்டார்.

    அதன்பிறகு சில நாட்கள் கழித்து அந்தப் பெண், டாக்டருக்கு போன் செய்து தனது உடல் நலம் மோசமாக உள்ளதாகவும், வீட்டிற்கு வந்து பார்க்குமாறும் கூறி உள்ளார். இதனை நம்பிய டாக்டர், அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றார்.

    அவர் சிகிச்சை அளித்து விட்டு திரும்பிவிட்டார். இந்நிலையில் அந்தப் பெண், மீண்டும் டாக்டரை வரவழைத்துள்ளார். அப்போது தன்னுடன் டாக்டர் இருப்பது போன்ற படங்களை காட்டி மிரட்டி உள்ளார்.

    இதனை பார்த்து டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். அந்த பெண் படங்களை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என்று கூறி உள்ளார். அப்போது அங்கு பெண்ணுக்கு ஆதரவாக ஒருவர் வந்துள்ளார். அவரும் டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஜி.பே. மூலம் டாக்டரிடம் இருந்து ரூ.45 ஆயிரத்தை பறித்துள்ளனர். மேலும் அவரது கார் சாவியையும் பறித்து வைத்துக்கொண்டனர்.

    இந்நிலையில் சில நாட்களுக்கு பிறகு அந்த 2 பேரும், டாக்டருக்கு போன் செய்து மேலும் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான டாக்டர், இது பற்றி போலீசில் புகார் செய்தார். அதில், தன்னை சிகிச்சைக்காக வீட்டுக்கு வரவழைத்த பெண், தான் சிகிச்சை அளித்த போது, அதனை ஆட்டோ டிரைவர் முகமது அமீன் என்பவர் மூலம் படம் பிடித்து பின்னர் பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி கூடலூரை சேர்ந்த நசீமா மற்றும் அவரது நண்பர் முகமது அமீன் ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், பணம் பறித்தவர்கள் போனில் உள்ள வீடியோ மற்றும் போட்டோக்கள் சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆய்வு செய்யப்படும் என்றனர்.

    • ஆட்டோ டிரைவர் மது போதைக்கு அடிமையானதால் மாணவி பழகுவதை தவிர்த்தார்.
    • ஆலாந்துறை போலீசார் ஆட்டோ டிரைவரை கைது செய்தனர்

    கோவை,

    கோவையை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவிக்கு கோவை அறிவொளி நகரை சேர்ந்த 22 வயது ஆட்டோ டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இரண்டு பேரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் மது போதைக்கு அடிமையானார்.

    இது மாணவிக்கு அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கடந்த 6 மாதங்களாக மாணவி ஆட்டோ டிரைவருடன் பேசுவதையும், பழகுவதையும் முற்றிலும் தவிர்த்தார்.

    இது ஆட்டோ டிரைவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று மாணவி கல்லூரியில் உள்ள உணவகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே சென்ற ஆட்டோ டிரைவர் மாணவி கையை பிடித்து என்னுடன் வா என அழைத்தார்.

    அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து ஆட்டோ டிரைவர் மாணவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து மாணவி ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரிக்கு சென்று காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய ஆட்டோ டிரைவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • புதுவை மீனாட்சிபேட்டை பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி.
    • கடந்த 20 நாட்களாக சிவக்குமார் ஆட்டோ ஓட்ட செல்லவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மீனாட்சிபேட்டை பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி. சிவக்குமார் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர்களுக்கு சூர்யா, அய்யனார் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    சிவக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருந்து-மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இதையடுத்து கடந்த 20 நாட்களாக சிவக்குமார் ஆட்டோ ஓட்ட செல்லவில்லை. சிவக்குமாரின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவரது குடும்பத்தினர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிவக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி முத்துலட்சுமி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தனது தந்தையிடம் புதிய ஆட்டோ வாங்கி தருமாறு தங்கலெட்சுமணன் கேட்டுள்ளார்.
    • திருக்குறுங்குடி பூங்காவில் தங்கலெட்சுமணன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே நம்பிதலைவன் பட்டயம் மேலத் தெருவை சேர்ந்தவர் தங்கலெட்சுமணன் (வயது21). ஆட்டோ டிரைவரான இவர் தனது தந்தை சுசிகர்ராஜிடம் புதிய ஆட்டோ வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தங்கலெட்சுமணன் கடந்த மாதம் 8-ந் தேதி திருக்குறுங்குடி பூங்காவில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    உறவினர்கள் அவரை மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் தங்கலெட்சுமணன் இறந்தார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்களின் எதிர்ப்பை மீறி பஸ் நிலையம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும்
    • மனிதநேய ஜனநாயக கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. பொதுச செயலாளர் ஹாரூன் ரசீது சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். மாநில துணைச் செயலாளர் சைபுல்லா முன்னிலை வகித்தார்.

    நிர்வாகிகள் சலீம், அபூபக்கர், சிராஜுதீன், அசாருதீன், உஸ்மான், அல்லாபிச்சை, முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    சிவகங்கை மாவட்டத்தில் பேரூர்களை இணைக்கும் வகையில் சிவகங்கை, திருப்புவனம், மானா மதுரை, இளையான்குடி, காளையார் கோயில், சிவகங்கை வழித்தட ங்களில் இரு மார்க்கங்களிலும் வட்ட பஸ்கள் இயக்க வேண்டும்.

    சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சிவகங்கை நேரு பஜாரில் குடியிருப்புகளுக்கு அருகில் மதுக்கடை மற்றும் மதுக்கூடம் மீண்டும் திறக்க முயற்சி நடப்பதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.

    இளையான்குடியில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், அமைப்புகளின் எதிர்ப்புகள், போராட் டங்களை மீறி நகருக்கு வெளியே பொதுமக்களுக்கு பயன் தராத வகையில் கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய கட்டுமான பணி களை ஆரம்ப நிலையில் உடனே நிறுத்தி தற்போ துள்ள பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளி ட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    இளையான்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பல இடங்களில் ஆட்டோ சங்கங்கள் மற்றும் பெயர் பலகைகளை திறந்து வைத்து கட்சி கொடிகளை பொதுச் செயலாளர் ஹாருன்ரசீது ஏற்றி வைத்தார்.

    • ஆட்டோ டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • வலி தாங்காமல் அன்பழகன் அலறவே அங்கிருந்தவர்கள் ஜெயசந்திரனையும், ஜோதியையும் தடுத்தி நிறுத்தி சமாதானம்படுத்தினர்.

    புதுச்சேரி:

    சவாரி ஏற்றி செல்வதில் தகராறு ஆட்டோ டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை திலாஸ்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்ப ழகன் (வயது46). ஆட்டோ டிரைவர். இவருக்கும் மற்ற ஆட்டோ டிரைவர்களான கோவிந்தசாலையை சேர்ந்த ஜெயசந்திரன் மற்றும் சோனாம்பாளையத்தை சேர்ந்த ஜோதி ஆகியோ ருக்கும் கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு சவாரி ஏற்றி செல்வதில் தகராறு ஏற்பட்டது.

    அப்போது மற்ற ஆட்டோ டிரைவர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமா தானம் செய்து வைத்தனர்.

    இந்த நிலையில் அன்பழகன் புதுவை காந்தி வீதியில் சவாரிக்காக ஆட்டோ ஒட்டி சென்றார். அப்போது ஜெயசந்திரன் மற்றும் ஜோதி ஆகிய இருவரும் அன்பழகனை வழி மறித்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டினர்.

    மேலும் இருவரும் சேர்ந்து அன்பழகனை தாக்கினர். வலி தாங்காமல் அன்பழகன் அலறவே அங்கிருந்தவர்கள் ஜெயசந்திரனையும், ஜோதியையும் தடுத்தி நிறுத்தி சமாதானம்படுத்தினர்.

    ஆனால் ஆத்திரம் தீராத ஜெயசந்திரனும், ஜோதியும் இனிமேல் இங்கு வந்தால் வெட்டி கொலை செய்து விடுவோம் என்று அன்பழகனை மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த அன்பழகன் புதுவை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கள்ளக்காதல் விவகாரம் வம்சிக்கு தெரிய வந்ததால் தனது மனைவியை கண்டித்தார்.
    • தாய் வீட்டிற்கு செல்வதாக வம்சியிடம் கூறிவிட்டு சென்ற மனைவி மீண்டும் திரும்பி வரவில்லை.

    திருப்பதி:

    திருப்பதி மாவட்டம், ரங்கம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வம்சி. ஆட்டோ டிரைவர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் வம்சிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    திருப்பதி அருகே உள்ள முஸ்லிம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் அன்வர். இவர் தனது ஆட்டோவை வம்சிக்கு வாடகைக்கு கொடுத்து இருந்தார். இதனால் அன்வர் வம்சியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது வம்சியின் மனைவிக்கும் அன்வருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    கள்ளக்காதல் விவகாரம் வம்சிக்கு தெரிய வந்ததால் தனது மனைவியை கண்டித்தார்.

    கடந்த மாதம் தனது தாய் வீட்டிற்கு செல்வதாக வம்சியிடம் கூறிவிட்டு சென்ற மனைவி மீண்டும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது தனது மனைவி அன்வருடன் குடும்பம் நடத்தி வருவது வம்சிக்கு தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வம்சி உள்ளூரில் வசிக்க பிடிக்காமல் பெங்களூருக்கு சென்று ஆட்டோ ஓட்டி வந்தார்.

    அப்போது அன்வர் வம்சியின் மனைவியுடன் இருக்கும் போட்டோக்கள் பேஸ்புக்கில் பதிவிடப்பட்டு இருந்தது. இதனை கண்ட வம்சி இருவரும் இறந்துவிட்டதாகவும் உங்களுடைய ஆன்மா சாந்தி அடையட்டும் ரிப்ஸ் என பதிவிட்டு இருந்தார்.

    இதனை கண்டு ஆத்திரமடைந்த அன்வர் கடந்த மாதம் 8-ந் தேதி பெங்களூருக்கு சென்று வம்சியை கடத்தி திருப்பதிக்கு கொண்டு வந்தார். மறுநாள் திருப்பதி அருகே உள்ள ராயலாபுரத்தில் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று வம்சிக்கு மொட்டை அடித்தார்.

    வம்சிக்கு மொட்டை அடிக்கும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவவிட்டார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் வம்சிக்கு மொட்டை அடித்து கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கருதி ஆட்டோ டிரைவர்கள் போலீசில் புகார் செய்தனர். ஆனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வம்சி பெங்களூரில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • சந்திப்பு ரெயில்நிலையத்தில் சுப்பிரமணியன் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.
    • கடந்த 1-ந்தேதி வெளியூருக்கு சவாரி செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 33). இவரது மனைவி தங்க துரைச்சி. சந்திப்பு ரெயில்நிலையத்தில் சுப்பிரமணியன் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். கடந்த 1-ந்தேதி வெளியூருக்கு சவாரி செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது கடந்த 7-ந்தேதி வரை அழைப்பு சென்றும் அவர் போனை எடுக்கவில்லை. அதன்பின்னர் அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தங்க துரைச்சி தனது கணவர் காணாமல் போனது குறித்து சந்திப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.

    ×