என் மலர்

    புதுச்சேரி

    ஆட்டோ டிரைவரை தாக்கி கொலை மிரட்டல்
    X

    கோப்பு படம்.

    ஆட்டோ டிரைவரை தாக்கி கொலை மிரட்டல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆட்டோ டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • வலி தாங்காமல் அன்பழகன் அலறவே அங்கிருந்தவர்கள் ஜெயசந்திரனையும், ஜோதியையும் தடுத்தி நிறுத்தி சமாதானம்படுத்தினர்.

    புதுச்சேரி:

    சவாரி ஏற்றி செல்வதில் தகராறு ஆட்டோ டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை திலாஸ்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்ப ழகன் (வயது46). ஆட்டோ டிரைவர். இவருக்கும் மற்ற ஆட்டோ டிரைவர்களான கோவிந்தசாலையை சேர்ந்த ஜெயசந்திரன் மற்றும் சோனாம்பாளையத்தை சேர்ந்த ஜோதி ஆகியோ ருக்கும் கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு சவாரி ஏற்றி செல்வதில் தகராறு ஏற்பட்டது.

    அப்போது மற்ற ஆட்டோ டிரைவர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமா தானம் செய்து வைத்தனர்.

    இந்த நிலையில் அன்பழகன் புதுவை காந்தி வீதியில் சவாரிக்காக ஆட்டோ ஒட்டி சென்றார். அப்போது ஜெயசந்திரன் மற்றும் ஜோதி ஆகிய இருவரும் அன்பழகனை வழி மறித்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டினர்.

    மேலும் இருவரும் சேர்ந்து அன்பழகனை தாக்கினர். வலி தாங்காமல் அன்பழகன் அலறவே அங்கிருந்தவர்கள் ஜெயசந்திரனையும், ஜோதியையும் தடுத்தி நிறுத்தி சமாதானம்படுத்தினர்.

    ஆனால் ஆத்திரம் தீராத ஜெயசந்திரனும், ஜோதியும் இனிமேல் இங்கு வந்தால் வெட்டி கொலை செய்து விடுவோம் என்று அன்பழகனை மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த அன்பழகன் புதுவை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×