search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirugurungudi"

    • தனது தந்தையிடம் புதிய ஆட்டோ வாங்கி தருமாறு தங்கலெட்சுமணன் கேட்டுள்ளார்.
    • திருக்குறுங்குடி பூங்காவில் தங்கலெட்சுமணன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே நம்பிதலைவன் பட்டயம் மேலத் தெருவை சேர்ந்தவர் தங்கலெட்சுமணன் (வயது21). ஆட்டோ டிரைவரான இவர் தனது தந்தை சுசிகர்ராஜிடம் புதிய ஆட்டோ வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தங்கலெட்சுமணன் கடந்த மாதம் 8-ந் தேதி திருக்குறுங்குடி பூங்காவில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    உறவினர்கள் அவரை மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் தங்கலெட்சுமணன் இறந்தார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×