search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களின் எதிர்ப்பை மீறி பஸ் நிலையம் அமைக்கும் பணி
    X

    மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

    பொதுமக்களின் எதிர்ப்பை மீறி பஸ் நிலையம் அமைக்கும் பணி

    • பொதுமக்களின் எதிர்ப்பை மீறி பஸ் நிலையம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும்
    • மனிதநேய ஜனநாயக கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. பொதுச செயலாளர் ஹாரூன் ரசீது சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். மாநில துணைச் செயலாளர் சைபுல்லா முன்னிலை வகித்தார்.

    நிர்வாகிகள் சலீம், அபூபக்கர், சிராஜுதீன், அசாருதீன், உஸ்மான், அல்லாபிச்சை, முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    சிவகங்கை மாவட்டத்தில் பேரூர்களை இணைக்கும் வகையில் சிவகங்கை, திருப்புவனம், மானா மதுரை, இளையான்குடி, காளையார் கோயில், சிவகங்கை வழித்தட ங்களில் இரு மார்க்கங்களிலும் வட்ட பஸ்கள் இயக்க வேண்டும்.

    சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சிவகங்கை நேரு பஜாரில் குடியிருப்புகளுக்கு அருகில் மதுக்கடை மற்றும் மதுக்கூடம் மீண்டும் திறக்க முயற்சி நடப்பதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.

    இளையான்குடியில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், அமைப்புகளின் எதிர்ப்புகள், போராட் டங்களை மீறி நகருக்கு வெளியே பொதுமக்களுக்கு பயன் தராத வகையில் கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய கட்டுமான பணி களை ஆரம்ப நிலையில் உடனே நிறுத்தி தற்போ துள்ள பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளி ட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    இளையான்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பல இடங்களில் ஆட்டோ சங்கங்கள் மற்றும் பெயர் பலகைகளை திறந்து வைத்து கட்சி கொடிகளை பொதுச் செயலாளர் ஹாருன்ரசீது ஏற்றி வைத்தார்.

    Next Story
    ×