search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    நெல்லை அருகே ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

    • ஏற்கனவே குருநாதன் 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.
    • பக்கத்து வீட்டுக்காரர்கள் குருநாதன் வீட்டில் பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த முன்னீர்பள்ளம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் பண்டாரம் மகன் குருநாதன் (வயது 29). ஆட்டோ டிரைவரான இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குருநாதன் மற்றும் அவரது மனைவியின் சொந்த ஊர் பாலாமடையாகும். இதனிடையே கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஏற்கனவே இருமுறை குருநாதன் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பாலாமடையில் நடைபெறும் திருவிழாவிற்காக இசக்கியம்மாள் தனது குழந்தைகளுடன் அங்கு சென்றுள்ளார். நேற்று இரவு குருநாதன் அக்கம் பக்கத்தினரிடம் தூங்க செல்வதாக கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் இன்று காலை வெகு நேரம் ஆகியும் அவரது வீட்டின் கதவு திறக்கவில்லை. இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் குருநாதன் வீட்டில் பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது.

    இது குறித்து உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், குருநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×