search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andal"

    • மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    • ஏகாதசி என்ற சொல்லுக்கு பதினோராம் தினம் என்று பொருள்.

    மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாக கொண்டாட ஏற்பாடு செய்தார்.

    ஏகாதசி என்ற சொல்லுக்கு பதினோராம் தினம் என்று பொருள்.

    ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், மனம் அனைத்தையும் பெருமாளுடன் ஐக்கியப் படுத்தி தியானம் இருப்பதே ஏகாதசி விரதம்.

    உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

    தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

    விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

    ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி) இருக்க வேண்டும்.

    குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை.

    ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும்.

    ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும்.

    பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.

    • புத்ரதா - தை - சுக்ல-- புத்ர பாக்கியம் கிடைக்கும்.
    • பாப மோசனிகா - சித்திரை - க்ருஷ்ண-பாவங்கள் அகலும்.

    1. உற்பத்தி (ஏகாதசி),- மார்கழி - கிருஷ்ண (பக்ஷம்)-சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

    2. மோட்ச - மார்கழி-சுக்ல - வைகுண்டம் கிடைக்கும்.

    3. ஸபலா - தை - க்ருஷ்ண- -பாபநிவர்த்தி.

    4. புத்ரதா - தை - சுக்ல-- புத்ர பாக்கியம் கிடைக்கும்.

    5. ஷட்திலா - மாசி - க்ருஷ்ண- - அன்னதானத்திற்கு ஏற்றது.

    6. ஜயா - மாசி - சுக்ல-- பேய்க்கும் மோட்சம் உண்டு.

    7. விஜயா - பங்குனி- க்ருஷ்ண-ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனி வரின் உபதேசப்படி, விரதம் இருந்த நாள்.

    8. ஆமலதீ - பங்குனி - சுக்ல- -கோ தானம் செய்ய ஏற்றது.

    9. பாப மோசனிகா - சித் திரை - க்ருஷ்ண-பாவங்கள் அகலும்.

    10. காமதா - சித்திரை - சுக்ல - நினைத்த காரியம் நடக்கும்.

    11. வருதிந் - வைகாசி க்ருஷ்ண-ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

    12. மோஹினி - வைகாசி-- சுக்ல - பாவம் நீங்கும்.

    13. அபார - ஆனி - க்ருஷ்ண- குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்.

    14. நிர்ஜலா (பீம) - ஆனி- சுக்ல - எல்லா ஏகாதசி பலனும் உண்டு.

    15. யோகினீ - ஆடி- க்ருஷ்ண - நோய் நீங்கும்.

    16. சயிநீ - ஆடி - சுக்ல-தெய்வ சிந்தனை அதிகமாகும்.

    17. சாமிகா - ஆவணி க்ருஷ்ண-விருப்பங்கள் நிறைவேறும்.

    18. புத்ரஜா - ஆவணி - சுக்ல- புத்ர பாக்கியம் கிடைக்கும்.

    19. அஜா - புரட்டாசி க்ருஷ்ண-இழந்ததை பெறலாம்.

    20. பத்மநாபா - புரட்டாசி -சுக்ல-பஞ்சம் நீங்கும்.

    21. இந்திரா - ஐப்பசி - க்ருஷ்ண -பித்ருக்கள் நற்கதி பெறுவர்.

    22. பாபாங்குசா - ஐப்பசி சுக்ல-கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாவங்கள் அகலும்.

    23. ரமா - கார்த்திகை க்ருஷ்ண-உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்.

    24. ப்ரபோதின் - கார்த்திகை சுக்ல-பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்.

    25. கமலா-மகாலட்சுமி அருள் கிடைக்கும்.

    • பகவானும் பிரம்ம தேவர்களுக்கு காட்சியளித்து அவர்களை காத்தருளினாராம்.
    • மறு பிறவியில் வைகுண்டவாசம் சொர்க்க வாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

    ராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபட்ச

    (வளர் பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர்.

    பகவானும் பிரம்ம தேவர்களுக்கு காட்சியளித்து அவர்களை காத்தருளினாராம்.

    இவ்வாறு தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.

    தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்தபோது

    அமுதம் வெளிப்பட்டது என்றும், துவாதசியன்று மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து

    தேவர்களுக்குத் திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார் என்றும்,

    அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹா விஷ்ணுவை துதிப்போருக்கு

    இந்த பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன் மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு,

    மறு பிறவியில் வைகுண்டவாசம் சொர்க்க வாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

    • இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது வைகுண்ட ஏகாதசி.
    • பரம தயாளனாகிய பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார்.

    இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது வைகுண்ட ஏகாதசி.

    முற்காலத்தில் பிரம்மாவுக்கு ஏற்பட்ட அகங்காரத்தை ஒடுக்க நினைத்த மகா விஷ்ணு, தன் காதுகளிலிருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்படச் செய்தார்.

    அவர்கள் பிரம்மாவை கொல்ல முயன்ற போது, அவர்களைத் தடுத்த மகாவிஷ்ணு, பிரம்மாவை விட்டு விடும் படியும்,

    அவர்கள் கேட்கும் வரத்தை தருவதாகவும் கூறினார்.

    அந்த அசுரர்கள் மகா விஷ்ணுவிற்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாகக் கூறினர்.

    மகா விஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தை கேட்டார்.

    அசுரர்களானாலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற நினைத்த அசுரர்கள், தங்களை சமாளித்துக் கொண்டு,

    'பகவானே, ஒரு விண்ணப்பம், தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும்.

    அதன் பிறகே நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்' என்று வேண்டினார்கள்.

    பகவானும் அப்படியே வரம் தந்தார். யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார்.

    பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், அவனின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தை கேட்டனர்.

    மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலை (சொர்க்க வாசல்) திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக்கொண்டார்.

    அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, பகவானே,

    தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று,

    தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஓர் உற்சவமாக கடைபிடிக்க வேண்டும்

    அன்று ஆலயத்தின் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல்

    வழியாக வெளியே வருபவர்களும் மோட்சம் அடைய வேண்டும் என்று வரம் கேட்டனர்.

    பரம தயாளனாகிய பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார்.

    • மார்கழி மாத தேய்பிறையில் தோன்றிய ஏகாதசி ‘உற்பத்தி ஏகாதசி’ ஆகும்.
    • மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும்.

    மார்கழி மாத தேய்பிறையில் தோன்றிய ஏகாதசி 'உற்பத்தி ஏகாதசி' ஆகும்.

    மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும்.

    அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

    மார்கழி ஏகாதசி

    ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள்.

    ஞானேந்திரியம் ஐந்து, கர் மேந்திரியம் ஐந்து, மனம் ஒன்று என்னும் பதினொன்றும் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதமாகும்.

    அந்த நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ்பாடி விரதமிருந்தால், மனக்கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும் என்பது ஐதீகம்.

    • மாதங்களில் நான் மார்கழி என்பது கீதாசார்யனின் அமுதமொழி.
    • மகா விஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள்.

    மாதங்களில் நான் மார்கழி என்பது கீதாசார்யனின் அமுதமொழி.

    வைகுண்ட ஏகாதசி வருவதால் வைஷ்ணவர்களுக்கும், ஆருத்ரா வருவதால் சைவர்களுக்கும் உகந்த மாதம் மார்கழி.

    ஏகாதசி திதி தோன்றியதும் இந்த மாதத்தில் தான்.

    கிருதயுகத்தில் முரன் என்ற ஓர் அசுரன் இருந்தான். தேவர்கள் உட்பட அனைவரையும் அவன் துன்புறுத்தினான்.

    தேவர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி, மகா விஷ்ணு முரனை சம்ஹாரம் செய்ய புறப்பட்டார்.

    முரனின் படைக்கலன்களை எல்லாம் அழித்த பகவான், அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று திருவுள்ளம் கொண்டார்.

    அதன்படி போர்க்களத்திலிருந்து விலகி, பத்ரிகா ஆசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார்.

    பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன், பகவான் உறங்குவதாக நினைத்துக் கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான்.

    அப்போது மகா விஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள்.

    ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்தப் பெண், முரனை போருக்கு அழைத்தாள்.

    பெண்ணென்று அலட்சியமாக நினைத்த முரன், 'பெண்ணே, உன்னை கொல்ல ஓர் அம்பே போதும்' என்று அம்பை எடுக்க முனைந்தபோது, அந்த பெண், "ஹூம்்" என்று ஓர் ஒலி எழுப்பினாள்.

    அவ்வளவில் முரன் பிடி சாம்பலாகிப்போனான்.

    ஏகாதசி

    அதே நேரத்தில் ஏதுமறியாதவர் போல் கண் விழித்த பகவான், தன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட

    சக்தியைப் பாராட்டியதுடன், அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டி,

    "ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும்

    அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்" என்று அருளினார்.

    • இன்று மூலவர், உற்சவருக்கு அணிவிக்கப்படுகிறது.
    • வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.

    திருப்பதி:

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் நேற்று திருமலைக்கு வந்தன. அந்த மாலைகளுக்கு பெரிய ஜீயர் மடத்தில் பூஜைகள் செய்யப்பட்டது. இன்று மூலவர், உற்சவருக்கு அணிவிக்கப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 'சிகர' நிகழ்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) இரவு கருடசேவை நடக்கிறது.

    தங்க கருட வாகனத்தில் எழுந்தருளும் உற்சவர் மலையப்பசாமிக்கும், மூலவர் வெங்கடாசலபதிக்கும் அணிவிப்பதற்காக தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கோதாதேவி 'சூடிக்கொடுத்த மாலைகள்' மற்றும் கிளிகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் நேற்று திருமலைக்கு வந்தன.

    முதலில் திருமலை பேடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகில் உள்ள பெரியஜீயர் மடத்துக்கு ஆண்டாள் சூடிய மாலைகள் கொண்டு வரப்பட்டன. அங்கு பெரிய ஜீயர் சுவாமி, சின்னஜீயர் சுவாமி தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    அதன் பிறகு பெரிய ஜீயர் மடத்தில் இருந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, தமிழகத்தைச் சேர்ந்த அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர் மனோகரன் ஆகியோர் கோதாதேவியின் மாலைகளை ஏழுமலையான் கோவில் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று மூலவர் சன்னதிக்குள் கொண்டு சென்றனர்.

    அப்போது திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருமலைக்கு கோதாதேவி மாலைகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி கோதாதேவி மாலைகள் திருமலைக்கு வந்தன. கருடசேவையின்போது புனித மாலைகள் மூலவருக்கும், உற்சவருக்கும் அணிவித்து அலங்கரிக்கப்படும், என்றார். மாலைகள் ஊர்வலத்தில் டெல்லி தகவல் மைய உள்ளூர் ஆலோசனைக் குழு தலைவர் வேமிரெட்டிபிரசாந்தி, திருமலை கோவில் துணை அதிகாரி லோகநாதம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அதிகாரிகள் ரங்கராஜன், சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பதியில் நாளை கருடசேவையை முன்னிட்டு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு புறப்பட்டது.
    • கருட சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து மலையப்ப சுவாமி மோகினி அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மூலவர் வடபத்ர சயனர் தினமும் பூஜையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    அதேபோல் மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா, ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சித்திரை தேரோட்டம், திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவ கருட சேவை ஆகிய நிகழ்ச்சி களின்போது பெருமாளுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கள பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

    அதற்கு மறு சீராக ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவில் ஆண்டா ளுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், மதுரை கள்ளழகர் உடுத்தி கொடுத்த பட்டு வஸ்திரம் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்படும். ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தின் போது அணிவதற்காக திருப்பதி பெருமாள் உடுத்தி கொடுத்த பட்டு வஸ்திரம் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் மூலவர் வெங்க டேச பெருமாளும், உற்சவர் மலையப்ப சுவாமியும் அணிவதற்காக ஸ்ரீவில்லி புத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலை, கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழாவில் நாளை (22ந்தேதி) மலையப்ப சுவாமி மோகன அலங்கா ரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாளை மாலை கருட சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து மலையப்ப சுவாமி மோகினி அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளிப் பார்.இதற்காக ஸ்ரீவில்லி புத்தூரில் பிரம்மாண்ட மாலை தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கு அணி விக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி ஆகி யவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • ஆண்டாள் கோவில் 108 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 14-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22-ந் தேதி தேரோட்ட திருவிழா நடைபெற்றது, இதையொட்டி நிறைவு நிகழ்ச்சியாக புஷ்பயாகம் நேற்று நடைபெற்றது. இதை யொட்டி ஆண்டாள் கோவில் 108 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆண்டாள், ரெங்கமன்னார் மேளதாளங்களுடன் தேரில் எழுந்தருளினர்.
    • 25-ந்தேதி புஷ்ப யாகம் நடைபெற உள்ளது.

    108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக திகழும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பல்வேறு உற்சவங்கள், வைபவங்கள் நடைபெற்ற போதிலும் ஆடிப்பூர திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரத்தை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு ஆண்டாள்-ரெங்கமன்னார் சேர்த்தியில் 16 வண்டி சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

    விழாவையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 5-ம் திருநாளான 18-ந்தேதி 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஆண்டாள் பெரிய அன்னவாகனம், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத் தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனங்களிலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளி காட்சி அளித்தனர். 7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு சயனசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 8-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆண்டாள், ரெங்கமன்னார் மேளதாளங்களுடன் தேரில் எழுந்தருளினர். காலை 8.05 மணிக்கு தேரோட்டத்தை கலெக்டர் ஜெயசீலன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா..., கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேர் செல்லும் 4 ரதவீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தேர் சக்கரங்கள் பதியாத வகையில் இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டு இருந்தன. மேலும் வேளாண்மைத்துறை சார்பில் பொக்லைன் எந்திரங்கள் தேரை பின்னால் இருந்து தள்ளும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    அதேபோல் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டிருந்தது.

    வருகிற 24-ந்தேதி காலை இரட்டை தோளுக்கினியானில் வாழைக்குளத்தெரு தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளல் மற்றும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    பன்னிரெண்டாம் திருநாளான 25-ந்தேதி காலை விடாயத்து மண்டபத்தில் உற்சவ சாந்தியும், மாலை 6 மணிக்கு ஆண்டாள்-ரெங்க மன்னார் திவ்ய தம்பதியினருக்கு புஷ்ப யாகமும் நடைபெற உள்ளது. அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் மு.கரு.முத்துராஜா மற்றும் கோவில் பட்டர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆண்டாள் நாச்சியார், மனிதர்களைப் போல பிறப்பெடுத்தவர் இல்லை.
    • ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால் விரைவில் திருமணம் கைகூடும்.

    ஆடிப்பூர நாளில், வைணவத் தலங்கள் அனைத்திலும், ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரத்தில்தான் ஆண்டாள் அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டாள் நாச்சியார், மனிதர்களைப் போல பிறப்பெடுத்தவர் இல்லை. அவர் பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருந்த பெரியாழ்வார் வளர்த்த நந்தவனத்தில் துளசிச் செடியின் கீழ் தோன்றியவர். அந்த தாயாரை, அன்போடும், பண்போடும் வளர்த்து வந்த பெரியாழ்வார், தினமும் அதிகாலையில் பூக்களைப் பறித்து அதனை மாலைகளாகத் தொடுத்து பெருமாளுக்கு அளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

    அப்படி பெருமாளுக்கு கொடுத்தனுப்பும் மாலைகளை, அதற்கு முன்பாகவே அணிந்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார், ஆண்டாள். பல நாட்களாக நடைபெற்று வந்த இந்த செயலை, ஒரு நாள் பெரியாழ்வார் பார்த்துவிட்டார். இறைவனுக்கு சாற்றும் மாலையை இப்படி அசுத்தம் செய்து விட்டாயே என்று, ஆண்டாளை கடிந்து கொண்டார். பின்னர் இறைவனிடம் மனமுருக மன்னிப்பும் கேட்டார்.

    அன்று இரவு பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள், "எனக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையையே தர வேண்டும்" என்றார். அப்போதுதான், ஆண்டாள் சாதாரண பிள்ளை இல்லை. அவர் தெய்வக்குழந்தை என்பது பெரியாழ்வாருக்கு தெரியவந்தது. ஆண்டாள் திருமண வயதை அடைந்ததும், அவரை பெருமாளின் கட்டளைப்படி திருவரங்கம் அழைத்துச் சென்றார், பெரியாழ்வார். அங்கு அரங்கநாதரிடம் ஒளியாக கலந்து விட்டார் ஆண்டாள் நாச்சியார். திருமணமாகாத பெண்கள், ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால் விரைவில் திருமணம் கைகூடும்.

    ஆடிப்பூரம் அன்று தான் சித்தர்களும், யோகிகளும் தங்களுடைய தவத்தைத் தொடங்குகின்றனர் என புராணங்கள் குறிப்பிடுகின்றன. தேவிக்குரிய திருநாள்களில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் 'ஆடிப் பூரம் திருநாள்' மிகவும் சிறப்பானது. கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு ஆடிப்பூர நாளில் வளைகாப்பு நடத்தப்படுவது வாடிக்கை. இந்த நாளில் அனைத்து அம்மன் கோவில்களிலும், அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். பின்னர் அம்மனை அலங்கரிக்கப் பயன்படுத்திய வளையல்கள், தரிசிக்க வந்த பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் ஆலயங்கள் அனைத்திலுமே வளையல் காப்பு அணிவிக்கும் உற்சவம் நடத்தப்படும். அன்றைய தினம் அம்மனுக்கு படைத்து வழிபட்டு, அவளது பிரசாதமாக சில வளையல்களைப் பெற்று அணிந்து கொண்டால், மனம்போல மாங்கல்யம் அமையவும், மங்கலங்கள் நிலைக்கவும் செய்யும். அதோடு, அம்பிகை தாய்மைக் கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

    ஒவ்வொரு பெண்ணிடமும் அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது. எனவே ஆடிப்பூரம் தினத்தன்று அம்பிகையின் அருள் முழுமையாக நிறைந்திருக்கும் என்பதால், எந்த பேதமும் இன்றி இயன்ற அளவு மற்ற பெண்களுக்கு வளையல்கள், குங்குமம், மஞ்சள், ரவிக்கைத் துணி, புடவை போன்ற மங்கலப் பொருட்களை கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் இல்லறம் வாழ்வு சிறப்பாக அமையும். தாலி பாக்கியம் சிறக்க, தாயாகும் பேறுபெற, வளமும் நலமும் பெருக, வேறு எந்த வேண்டுதல்களும் தேவையில்லை. ஆடிப்பூர நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தாலே போதுமானது. அனைத்து வளங்களையும் அம்பிகை நிச்சயம் தந்தருள்வாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு ஆடிப்பூர விழாவின் 4-ம் நாளன்று ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறுகிறது. இந்த அம்பிகையை வழிபடுவோர் திருமணம், பிள்ளைப்பேறு பெறுகின்றனர். சிலர் வீட்டில் முளைப்பாலிகை வைத்து அதைக் கோவிலில் கொண்டு போய் சேர்க்கின்றனர். ஆடிப்பூர விழா, பல்வேறு ஆலயங்களில் வாகன சேவையுடன் 10 நாள் திருவிழாவாகவும் நடைபெறும். திருவாரூர் கமலாம்பாள், நாகப்பட்டினம் நீலாயதாட்சி, திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை உள்பட பல திருத்தலங்களில் 10 நாள் பிரம்மோற்சவமும், திருமயிலைக் கற்பகவல்லிக்கு ஆடிப் பூரத்தன்று மதியம் சந்தன காப்பு அலங்காரமும், இரவு வளையல் அலங்காரமும் நடைபெறுகிறது.

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு கூழ்வார்க்கும் பண்டிகை சிறப்பாக நடைபெறும். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் அன்னை திரிபுரசுந்தரி, சுயம்பு வடிவானவள். இந்த அன்னையின் திருவடிவம், அஷ்ட கந்தகம் உள்ளிட்ட எட்டு விதமான வாசனை பொருட்களால் ஆனது. அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில், ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்திரியில் வரும் நவமி ஆகிய 3 நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் அம்மனின் திருப்பாதத்திற்கு மட்டுமே பூஜைகள் செய்வார்கள். எனவே ஆடிப்பூரத்தில் அன்னை திரிபுரசுந்தரிக்கு நடைபெறும் அபிஷேகத்தை கண்டு வணங்கினால் பாவம் விலகும், நன்மைகள் வந்து சேரும்.

    • ஆடி மாதத்தில், பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும்.
    • அம்மனை வழிபாடு செய்தால், கேட்ட வரம் கிடைக்கும்.

    ஆடி மாதம் முழுவதுமே அம்மனை வழிபடக்கூடிய மாதமாக உள்ளது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளை, 'ஆடிப்பூரம்' என்ற பெயரில் அம்மன் ஆலயங்கள் தோறும் கொண்டாடுவார்கள். ஆடி மாதத்தில் சிவனை விட அம்மனையே அதிகமாக வழிபாடு செய்வார்கள். பூமியில் அவதரித்த அம்மன், ஆடி மாதத்தில் தான் பூப்படைந்ததாகவும், சூலுக்கு தயாரானதாகவும் கூறப்படுகிறது. அதை குறிப்பதாக ஆடிப்பூரம் திருவிழா நடைபெறும் 10 நாட்களும், அம்மன் தினமும் ஒரு கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவதாக நம்பிக்கை.

    ஆடி பூரத்தன்று அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம். வளையல்களை அம்மனுக்கு படைத்து வழிபட்டு, அவளது பிரசாதமாக சில வளையல்களைப் பெற்று அணிந்து கொண்டால், மனம்போல மாங்கல்யம் அமையவும், மங்கலங்கள் நிலைக்கவும் செய்யும். அதோடு, அம்பிகை தாய்மைக் கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

    திருமணமாகாத பெண்கள், நல்ல கணவன் துணையாக அமைய வேண்டும் என்றும், தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டால், அந்த வரத்தை ஆதிசக்தியான அன்னை அருள்வதாக நம்பிக்கை. இந்த அற்புத திருநாளில் எழை, எளிய சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, குங்குமம், மஞ்சள், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பதும் உண்டு. பலர் மஞ்சள் தாலி கட்டிக் கொள்வர்.

    ஆடி மாதத்தில், பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும். இந்நாளில் வயதில் மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுத்து ஆசிபெறுவது நல்லது. ஆடிப்பூரம் அன்று சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் அம்மன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால், கேட்ட வரம் கிடைக்கும். ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் உண்டாகும்.

    ஆடிப்பூரமான இன்று விரதம் இருந்து ஆலயத்திற்குச் சென்று அம்மனை வழிபட இயலாதவர்கள், தங்கள் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு, பட்டு வஸ்திரம், வளையல், பூக்கள் படைத்து வணங்கலாம். இளம்பெண்கள், திருமணமான பெண்களுக்கு வளையல் கொடுத்தால் நம்முடைய வீட்டிலும் வளைகாப்பு நடைபெறும் என்பது நம்பிக்கையாகும். அன்னைக்கு பிரியமான பிரசாதமாக பானகம், நீர் மோர், சர்க்கரைப் பொங்கல், கூழ், ஆகியவற்றை படைத்து வேண்டிக்கொண்டால் சகலவிதமான நன்மைகளையும் பெறலாம்.

    திருமணமாகாத பெண்கள், ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால் விரைவில் திருமணம் கைகூடும்.

    ×