search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு புறப்பட்டது
    X

    ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு புறப்பட்டது

    • திருப்பதியில் நாளை கருடசேவையை முன்னிட்டு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு புறப்பட்டது.
    • கருட சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து மலையப்ப சுவாமி மோகினி அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மூலவர் வடபத்ர சயனர் தினமும் பூஜையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    அதேபோல் மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா, ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சித்திரை தேரோட்டம், திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவ கருட சேவை ஆகிய நிகழ்ச்சி களின்போது பெருமாளுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கள பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

    அதற்கு மறு சீராக ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவில் ஆண்டா ளுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், மதுரை கள்ளழகர் உடுத்தி கொடுத்த பட்டு வஸ்திரம் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்படும். ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தின் போது அணிவதற்காக திருப்பதி பெருமாள் உடுத்தி கொடுத்த பட்டு வஸ்திரம் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் மூலவர் வெங்க டேச பெருமாளும், உற்சவர் மலையப்ப சுவாமியும் அணிவதற்காக ஸ்ரீவில்லி புத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலை, கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழாவில் நாளை (22ந்தேதி) மலையப்ப சுவாமி மோகன அலங்கா ரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாளை மாலை கருட சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து மலையப்ப சுவாமி மோகினி அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளிப் பார்.இதற்காக ஸ்ரீவில்லி புத்தூரில் பிரம்மாண்ட மாலை தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கு அணி விக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி ஆகி யவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    Next Story
    ×