என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Amitabh Bachchan"
- இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கல்கி 2898- ஏடி'.
- இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர்.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD). இந்த படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் அறிமுகவிழாவில், நடிகர் கமல்ஹாசன், "இந்த படத்தில் நடிக்க நான் ஒப்புகொண்டதற்கு முக்கியமான காரணம் நான் அனலாக் பார்மெட் சினிமாவிலிருந்து வந்தவன்.
நெகட்டிவ் இல்லாமல் பாசிட்டிவ் இல்லை. அதனால் ஒரு படத்தில் நெகட்டிவ் ரோல் என்பது மிக முக்கியமானது. அமிதாப் பச்சன் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே பெருமை என்றார். உடனே குறுக்கிட்ட அமிதாப், "இவ்வளவு அடக்கமாக இருப்பதை நிறுத்துங்கள் கமல். நீங்கள் எங்கள் எல்லோரையும் விட சிறந்த நடிகர்" என பாராட்டினார்.
- நடிகர் ரஜினி தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் நடிக்கின்றனர். ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை 'ஜெய் பீம்' பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும், போலி என்கவுண்டர்களுக்கு எதிரான கதைக்களத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
ரஜினி- அமிதாப் பச்சன்
இந்நிலையில், இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ரஜினிக்கு இணையான முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகர்களை தேர்வு செய்து வைத்த நிலையில் தற்போது இந்த கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியில் 1991-ம் ஆண்டு வெளியான 'ஹும்' படத்திற்கு பிறகு ரஜினியும் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
- மது அருந்தி கொண்டிருக்கும் போதே கிளாசை தூக்கி எறியுங்கள்.
- கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவது முடியாத காரியம்.
சினிமாக்களை பார்த்து தான் இளைஞர்கள் புகைப்பிடிப்பதையும், மது குடிப்பதையும் கொண்டாடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆனால் சினிமாக்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வந்தால் புகை பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும், உயிரை கொல்லும் என்ற வாசகமும், மது அருந்துவது போன்று காட்சி வந்தால் மது அருந்துதல் உடல் நலத்திற்கு தீங்கானது என்ற வாசகமும் தவறாமல் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சன் தனது வலைதள பக்கத்தில் மது அருந்துவது, புகை பிடிப்பது ஆகிய பழக்கங்களை கைவிடுவது குறித்து பதிவிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், மது அல்லது சிகரெட் பழக்கம் அவரவர் தனிப்பட்ட விஷயம் தான்.
ஆனாலும் அதை விட்டு விட நினைப்பவர்களுக்கு ஒரு அறிவுரை வழங்குகிறேன். அது எளிதான விஷயம். மது அருந்தி கொண்டிருக்கும் போதே கிளாசை தூக்கி எறியுங்கள். இதற்கு நடுவில் சிகரெட்டை உதட்டில் இருந்து துப்பி அதற்கு விடை கொடுங்கள். இது தான் இரண்டு பழக்கங்களையும் கைவிடுவதற்கு சிறந்த வழி.
கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவது முடியாத காரியம். இது புற்றுநோயை அகற்றுவது போல் இது செயல்படும் என குறிப்பிட்டுள்ளார்.
- 5 கிரகங்கள் அணிவகுத்த வீடியோவை பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
- வீடியோ பதிவிட்ட சில நிமிடங்களிலேயே 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்தது.
வானில் அரிய நிகழ்வாக நேற்று மாலை செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் ஒரே நேரத்தில் அணிவகுத்தன.
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மேற்கு தொடுவானில் நிலவுக்கு அருகே இந்த 5 கிரகங்களும் அணிவகுத்தன. இந்த அரிய நிகழ்வு சில வினாடிகள் நீடித்தது.
இந்தநிலையில் 5 கிரகங்கள் அணிவகுத்த வீடியோவை பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த 45 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவுடன் பதிவு ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.
அதில், என்ன ஒரு அழகான காட்சி, 5 கிரகங்கள் இன்று ஒன்றாக இணைந்துள்ளன. அழகான மற்றும் அரிதான காட்சி. நீங்களும் இதற்கு சாட்சியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ பதிவிட்ட சில நிமிடங்களிலேயே 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்தது.
மேலும் அவரது பதிவிற்கு நடிகை ஷில்பா ஷெட்டி, நடிகர் சித்தார்த் கபூர் உள்ளிட்ட பல பிரபலங்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.
- நடிகர் அமிதாப் பச்சனுக்கு சமீபத்தில் படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டது.
- இவர் தற்போது வீட்டிலேயே இருந்தபடி ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அமிதாப் பச்சன் தற்போது புராஜெக்ட் கே என பெயரிடப்பட்ட படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதற்காக ஹைதராபாத் நகரில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது, நடிகர் அமிதாப்புக்கு வலது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. தசை பகுதியும் பாதிப்படைந்து உள்ளது.
அமிதாப் பச்சன்
இதனால், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவர் உடனடியாக ஹைதராபாத் நகரில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் செய்த பின்னர் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கினர். இதனை தொடர்ந்து, அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். வீட்டிலேயே இருந்தபடி ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்த விவரங்களை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, "மூச்சு விடும்போதும், நடந்து செல்லும்போதும் வலி ஏற்படுகிறது. இதனால், இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகலாம். வலிக்கான மருந்துகளை எடுத்து வருகிறேன். ரசிகர்கள் யாரும் தன்னை பார்க்க வரவேண்டாம்" என்று குறிப்பிட்டிருந்தார். இவர் நலமடைய வேண்டும் என ரசிகர்கள் பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அமிதாப் பச்சன்
இந்நிலையில், தற்போது அமிதாப் பச்சன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "உங்களின் அக்கறைக்கும், அன்பிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது பிரார்த்தனை மூலம் நான் குணமடைந்து வருகிறேன். அனைவருக்கும் ஹோலி வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
T 4577 - I rest and improve with your prayers
— Amitabh Bachchan (@SrBachchan) March 7, 2023
- பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமிதாப் பச்சன்.
- இவர் இரண்டுமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமிதாப் பச்சன். தலைமுறை தலைமுறையாக பார்வையாளர்களை கவர்ந்து, மகிழ்வித்த இந்தியாவின் குறிப்பிடத்தக்க திரையுலக ஆளுமைகளில் இவரும் ஒருவர். இரண்டுமுறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'குட்பை', 'பிரம்மாஸ்திரா' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அமிதாப் பச்சன்
இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சனின் பெயர், குரல் போன்றவற்றை பயன்படுத்த டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதாவது, அமிதாப் பச்சனின் பெயரில் போலி கோட்டீஸ்வர நிகழ்ச்சி, லாட்டரி மோசடி நடைபெறுவதாகவும் இவரின் புகைப்படத்தை போஸ்டர்கள், ஆடைகள் போன்றவற்றில் உபயோகிப்பதனால் அமிதாப் பச்சனின் பெயர், குரல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை வணிக நோக்கத்துடன் முன் அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அமிதாப் பச்சன் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
அமிதாப் பச்சன்
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அமிதாப் பச்சனின் பெயர், குரல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை முன் அனுமதியின்றி பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
- பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன்.
- இவர் இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் தனது சிறந்த நடிப்பாற்றலால் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இரண்டு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து நடித்து வரும் இவர் இன்று தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
அமிதாப் பச்சன் - ரஜினிகாந்த்
இவருக்கு பிரதமர் மோடி மற்றும் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "தி லெஜண்ட். என்னை எப்போதும் ஊக்கப்படுத்திய ஒரு நபர். இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர் சூப்பர் ஹீரோ அமிதாப் பச்சன் 80-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு அன்பும் மரியாதையும் கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
The legend.. someone who has inspired me always… the one true sensation and superhero of our glorious Indian film fraternity enters 80 .. happy birthday my dearest and most respected @SrBachchan Amitabh ji .. with lots of love and best regards always ❤️🙏🏻
— Rajinikanth (@rajinikanth) October 11, 2022
- அமிதாப் பச்சனின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- தலைமுறை தலைமுறையாக பார்வையாளர்களை கவர்ந்து, மகிழ்வித்த இந்தியாவின் குறிப்பிடத்தக்க திரையுலக ஆளுமைகளில் அமிதாப் பச்சனும் ஒருவர்.
பாலிவுட்டின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தலைமுறை தலைமுறையாக பார்வையாளர்களை கவர்ந்து, மகிழ்வித்த இந்தியாவின் குறிப்பிடத்தக்க திரையுலக ஆளுமைகளில் அமிதாப் பச்சனும் ஒருவர். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழட்டும்.
இந்தி திரையுலகில் 80 வயதிலும், பச்சன் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அதே சமயம் ஆண்டாண்டு காலமாக மிகவும் வெற்றிகரமான தொலைக்காட்சி தொடரான 'கவுன் பனேகா குரோர்பதி' தொடர்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று இரவு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நெகட்டிவ் என வந்துள்ளது.
- பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்துள்ளார்.
மும்பை:
இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கடந்த ஆண்டு கொரோனா தொற்றல் பாதிக்கபட்டு மீண்ட நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தனிமைபடுத்தபட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
7 நாட்கள் கடந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நெகட்டிவ் என வந்துள்ளது. இத்தகவலை அமிதாப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தனது வழக்கமான பணிக்கு திரும்பியதாக கூறி உள்ளார். குணமடைவதற்காக வாழ்த்தி பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்துள்ளார்.
அமிதாப் அடுத்ததாக அயன் முகர்ஜியின் 'பிரம்மாஸ்திரா பகுதி ஒன்று: ஷிவா', விகாஸ் பாஹ்லின் 'குட்பை' 'உஞ்சாய்' மற்றும் 'புராஜெக்ட் கே' ஆகிய படங்களில் நடிக்கிறார்.
- தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வலியுறுத்தல்.
- கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றார்.
மும்பை:
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில் இந்தி திரையுல சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
79 வயதான அமிதாப் பச்சனுக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள அமிதாப், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு கூர்ந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
எனினும் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளாரா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாரா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல்முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமிதாப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்