search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambai"

    • அம்பாசமுத்திரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் மற்றும் மனிதம் அமைப்பு சார்பில் புத்தகக் கண்காட்சி மற்றும் கவியரங்கம் நடைபெற்றது.
    • அம்பாசமுத்திரம் த.மு.எ.க.சங்கத் தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். புத்தக விற்பனையை ரோட்டரி சங்க துணை ஆளுநர் சுடலையாண்டி தொடங்கி வைத்தார்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரத்தில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் மற்றும் மனிதம் அமைப்பு சார்பில் புத்தகக் கண்காட்சி மற்றும் கவியரங்கம் நடைபெற்றது. அம்பாசமுத்திரம் த.மு.எ.க.சங்கத் தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். புத்தக விற்பனையை ரோட்டரி சங்க துணை ஆளுநர் சுடலையாண்டி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து நடைபெற்ற கவியரங்கத்தை அம்பாசமுத்திரம் வட்டார சாமில் மற்றும் மரவியாபாரிகள் சங்கத் தலைவர் மார்ட்டின் தொடங்கி வைத்தார். மூட்டா தலைவர் பேராசிரியர் இசக்கி, புரட்சிகர இளைஞர் முன்னணி மணிவண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். த.மு.எ.க.ச. செயலர் வேல்முருகன் வரவேற்றார். மனிதம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அம்பை அருகே உள்ள வி.கே.புரம் சிவந்திபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசிங் செல்போன் கடை நடத்தி வந்தார்.
    • நேற்று மாலை திடீரென தனசிங் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    நெல்லை:

    அம்பை அருகே உள்ள வி.கே.புரம் சிவந்திபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசிங் (வயது 32).

    செல்போன் கடை

    இவர் அங்கு செல்போன் கடை நடத்தி வந்தார். இந்நி லையில் கடந்த 2 வருடங்க ளுக்கு முன் தனசிங்கின் மனைவி உடல்நிலை பாதிப்பால் இறந்துள்ளார்.

    அதில் இருந்து தனசிங் மனமு டைந்த நிலையில் காணப் பட்டார். மேலும் அவர் கடைக்கும் சரியாக செல்லாமல், யாரி டமும் பேசாமல் இருந்துள் ளார்.

    தற்கொலை

    நேற்று மாலை திடீரென தனசிங் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை தனசிங் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வி.கே.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்பை வட்டார அளவில் நடைபெற்ற பேரவை கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் பரணி சேகர் தலைமை தாங்கினார்.
    • அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் சுகாதாரம் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், பள்ளிகள், சுகாதார மையங்களை மேம்படுத்துவது குறித்தும், அவற்றை சீர் செய்வதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும், எதிர்கால சுகாதார திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை வட்டார அளவில் நடைபெற்ற பேரவை கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் பரணி சேகர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயா செல்வி, ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி, இசக்கியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் சுகாதாரம் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், பள்ளிகள், சுகாதார மையங்களை மேம்படுத்துவது குறித்தும், அவற்றை சீர் செய்வதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும், எதிர்கால சுகாதார திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர்.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் அயன் சிங்கம்பட்டி முத்துகிருஷ்ணன், வெள்ளங்குளி முருகன், கோடாரங்குளம் தங்கம், அயன்தீருவாலீஸ்வரம் வள்ளி, வாகைக்குளம் சுப்புலெட்சுமி நந்தகுமார், மருத்துவர்கள் பிரவின் குமார், பழனிசெந்தில் குமார், ஸ்டான்லி பொன்ராஜ், நிலோபர், ஜெபிஷா ரெஜி, ஈஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், திருப்பதி, ரவிச்சந்திரன், கணேஷ் குமார், கணபதி ராமன், ஆனந்த் பொன்சிங், பாஸ்கர், சுகாதார செவிலியர்கள், ஆய்வக நட்பனர்கள், மஸ்தூர் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அம்பை சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன்,மண்டல துணை தாசில்தார் ராஜதுரை ஆகியோர் அடங்கிய குழுவினர் அம்பை மன்னார்கோவில் விலக்கு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • சுத்தமல்லியை சேர்ந்த முத்துராமன் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சந்திரன், மண்டல துணை தாசில்தார் ராஜதுரை ஆகியோர் அடங்கிய குழுவினர் அம்பை மன்னார்கோவில் விலக்கு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு லோடு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் அவர்கள் மானுரை சேர்ந்த இசக்கிமுத்து (39), சுத்தமல்லியை சேர்ந்த முத்துராமன் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த இசக்கி பாண்டி, நெல்லை டவுனை சேர்ந்த மடத்தான், சிவா ஆகியேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தமிழ்நாடு காவல்துறை மற்றும் விளையாட்டுத் துறையினர் இணைந்து நடத்திய மினி மாரத்தான் போட்டி அம்பை பூக்கடை பஜாரில் தொடங்கியது.
    • இதில் ஆண்கள் பிரிவில் 20 பேர்களுக்கும், பெண்கள் பிரிவில் 20 பேர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    சிங்கை:

    தமிழ்நாடு காவல்துறை மற்றும் விளையாட்டுத் துறையினர் இணைந்து நடத்திய மினி மாரத்தான் போட்டி அம்பை பூக்கடை பஜாரில் தொடங்கியது. ஏ.எஸ்.பி. பல்பீர்சிங் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். பெண்கள் பிரிவு போட்டி அகஸ்தியர் பட்டி கேம்பிரிட்ஜ் பள்ளியில் இருந்து தொடங்கியது. இதை மணிமுத்தாறு சிறப்பு காவல் படை 12-ம் அணி தலைவர் கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    மினி மாரத்தான் போட்டி யில் 3000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டார்கள். இதில் ஆண்கள் பிரிவில் 20 பேர்களுக்கும் பெண் கள் பிரிவில் 20 பேர்க ளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அனை வருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மினி மாரத்தான் போட்டியில் மாணவ- மாணவிகள், விளையாட்டுத் துறையினர், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் அம்பாசமுத்திரம் நீதிமன்ற ஊழியர்களுக்காக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்கள் என 120 பேருக்கு கண் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை நடைபெற்றது

    நெல்லை:

    நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் அம்பாசமுத்திரம் நீதிமன்ற ஊழியர்களுக்காக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை தாலுகா சட்டப்பணிகள் குழுத்தலைவர் மற்றும் சார்பு நீதிமன்ற நீதிபதி கே.செந்தில்குமார் தொடங்கி வைத்தார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சி.செந்தில்குமார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பி.குமார், குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஏ.பல்கலை செல்வன், வழக்கறிஞர் சங்கங்களின் தலைவர்கள் எம்.ராஜேந்திரன், எஸ்.செல்வ ஆண்டனி, கே.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் டாக்டர் காயத்ரி கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார். விழி ஒளி ஆய்வாளர் இந்திரா கண் பரிசோதனை மேற்கொண்டார். நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்கள் என 120 பேருக்கு கண் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை நடைபெற்றது. முகாமிற்கான ஏற்பாடுகளை நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் முதன்மை முகாம் மாணிக்கம், உதவி மேலாளர் அகிலன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அழகு, நல்லக்கண்ணு ஆகியோர் வாத்துகளை மேய்த்து கொண்டிருந்தனர்.
    • வயலில் பலத்த சத்ததுடன் இடி விழுந்ததில் 20 வாத்துகள் உயிரிழந்தது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரத்தில் நேற்று இடி மின்னல் தாக்கி 20 வாத்துகள் பலியானதுடன் 300-க்கும் மேற்பட்ட வாத்துகள் மயங்கி விழுந்தது.

    அம்பாசமுத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் அறுவடை முடிவடைந்த நிலையில் அம்பை ஊர்க்காடு பகுதியில் உள்ள வயல்வெளியில் மதுரையை சேர்ந்த சின்ன அழகு, நல்லக்கண்ணு ஆகியோர் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது நேற்று மதியம் பயங்கர இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. உடனே வாத்து மேய்த்து கொண்டிருந்த 2பேரும் அருகில் இருந்த மரத்தடியில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் வாத்துகள் மேய்ந்து கொண்டிருந்த வயலில் பலத்த சத்ததுடன் இடி விழுந்துள்ளது. இதில் அங்கிருந்த 20 வாத்துகள் அதிர்ச்சியில் உயிரிழந்தது. மேலும் 300-க்கும் மேற்பட்ட வாத்துகள் மயக்கமடைந்து விழுந்தது. மேலும் இடி, மின்னல் தாக்கியதில் இப்பகுதியில் பல வீடுகளில் டிவிகள் பழுதாகி உள்ளது.

    • ஓ. துலுக்கப்பட்டி, வீரவநல்லூர் அம்பை, மணிமுத்தாறு மற்றும் கடையம் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.
    • அப்பகுதிகளில் நாளை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மின்விநியோகம் தடைப்படும்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின் வாரிய செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஓ. துலுக்கப்பட்டி, வீரவநல்லூர் அம்பை, மணிமுத்தாறு மற்றும் கடையம் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது. எனவே அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்தநா டார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தபாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்க ம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளா ங்குளி, ரெங்கசமுத்திரம், ஊர்க் காடு, அம்பாசமுத்திரம், வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    அேதபோல் மணிமு த்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான் குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம், கடையம், பண்டாரகுளம், பொட்டல் புதூர், திருமலையப் புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள் புரம், சிவநாடனூர், மாதாபுரம், மயிலப்புரம், வெங்காலிபட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மின்விநியோகம் தடைப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆண்டுதோறும் அக்டோபர் 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை அஞ்சல் வார விழா கொண்டாடப்படுகிறது.
    • அஞ்சலகம் மூலம் அனுப்பப்படும் அஞ்சல்கள் பிரிக்கப்படும் முறை குறித்து செயல்விளக்கம் மூலம் விளக்கப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    ஆண்டுதோறும் அக்டோபர் 9-ந்தேதி முதல்13-ந்தேதி வரை அஞ்சல் வார விழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அஞ்சல்துறை சேவைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இதில் அம்பாசமுத்திரம் அஞ்சல் உபகோட்ட உதவி கண்காணிப்பாளர் பாலாஜி மாணவர்களுக்கு அஞ்சல்துறை சார்பில் வழங்கப்படும் பல்வேறு சேவைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    மேலும் அஞ்சலகம் மூலம் அனுப்பப்படும் அஞ்சல்கள் பிரிக்கப்படும் முறை குறித்து செயல்விளக்கம் மூலம் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அஞ்சல் அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




    • நகர் மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன் தலைமை தாங்கி கொடியசைத்து மாணவர்களின் தூய்மை விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ராஜேஷ்வரன் முன்னிலை வகித்தார்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து தூய்மையான நகரத்திற்கான மக்கள் இயக்கத்தின் படி நகர் மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன் தலைமை தாங்கி கொடியசைத்து மாணவர்களின் தூய்மை விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ராஜேஷ்வரன் முன்னிலை வகித்தார், நிகழ்வில் உடன் சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம், வார்டு கவுன்சிலர் அழகம்மை, மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கோகிலா மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அம்பாசமுத்திரம் பாரத் ஸ்டேட் வங்கி எதிரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • நகர மகளிரணி தலைவி சுமதி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

    கல்லிடைக்குறிச்சி:

    இந்துக்கள் பற்றி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா அவதூறாக பேசியதாக கூறி அவரை கண்டித்து அம்பாசமுத்திரம் பாரத் ஸ்டேட் வங்கி எதிரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பா.ஜ.க. நகரத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ராம்ராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஊரக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் லெட்சுமண ராஜா, வீகேபுரம் நகர தலைவர் தங்கேஸ்வரன், நகர பிரபாகரி பால்பாண்டி, அம்பை ஒன்றிய தலைவர் சண்முக பிரகாஷ், சேரை மேற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திர பிரசாத், சேரை கிழக்கு ஒன்றிய தலைவர் சின்ன முருகன், அம்பை நகர பொதுச்செயலாளர்கள் சுகுமாரன், சுதன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் சிவராமகிருஷ்ணன், மகளிரணி பொதுச்செயலாளர் செல்வி சுப்பிரமணியன்,நகர துணைத்தலைவர்கள் செல்வராஜ், வன்னியப்பன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் உதயகுமார், நகர மகளிரணி தலைவி சுமதி, நகர இளைஞரணி தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

    • நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூல்மாடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • லைசென்ஸ் எடுக்க தனது பெற்றோரிடம் அவர் பணம் கேட்டுள்ளார்.

    நெல்லை:

    அம்பைைய அடுத்த கோடாரங்குளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரது மகன் பூல்மாடன்(வயது 27).

    நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூல்மாடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வி.கே.புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பூல்மாடனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பூல்மாடன் வாகனம் ஓட்டி படித்துவிட்டு அதற்கு லைசென்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளார். லைசென்ஸ் எடுக்க பணம் தேவைப்பட்டுள்ளது.

    உடனே அவர் தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்துவிட்டதாகவும், சிறிது நாட்கள் கழித்து லைசென்ஸ் எடுத்து கொள்ளலாம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த பூல்மாடன் கோபத்தில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×