search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பை யூனியன் அலுவலகத்தில் வட்டார சுகாதார பேரவை கூட்டம்
    X

    வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

    அம்பை யூனியன் அலுவலகத்தில் வட்டார சுகாதார பேரவை கூட்டம்

    • அம்பை வட்டார அளவில் நடைபெற்ற பேரவை கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் பரணி சேகர் தலைமை தாங்கினார்.
    • அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் சுகாதாரம் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், பள்ளிகள், சுகாதார மையங்களை மேம்படுத்துவது குறித்தும், அவற்றை சீர் செய்வதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும், எதிர்கால சுகாதார திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை வட்டார அளவில் நடைபெற்ற பேரவை கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் பரணி சேகர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயா செல்வி, ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி, இசக்கியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் சுகாதாரம் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், பள்ளிகள், சுகாதார மையங்களை மேம்படுத்துவது குறித்தும், அவற்றை சீர் செய்வதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும், எதிர்கால சுகாதார திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர்.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் அயன் சிங்கம்பட்டி முத்துகிருஷ்ணன், வெள்ளங்குளி முருகன், கோடாரங்குளம் தங்கம், அயன்தீருவாலீஸ்வரம் வள்ளி, வாகைக்குளம் சுப்புலெட்சுமி நந்தகுமார், மருத்துவர்கள் பிரவின் குமார், பழனிசெந்தில் குமார், ஸ்டான்லி பொன்ராஜ், நிலோபர், ஜெபிஷா ரெஜி, ஈஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், திருப்பதி, ரவிச்சந்திரன், கணேஷ் குமார், கணபதி ராமன், ஆனந்த் பொன்சிங், பாஸ்கர், சுகாதார செவிலியர்கள், ஆய்வக நட்பனர்கள், மஸ்தூர் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×