search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aishwarya Rai"

    தமிழ், இந்தி என கைவசம் படங்கள் இருப்பினும், ஐஸ்வர்யா ராய் தற்போது ஹாலிவுட்டில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #AishwaryaRai
    எந்திரன் படத்தைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வரஉள்ளார். பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் உள்ளார் மணிரத்னம். இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோருடன் ஐஸ்வர்யா ராயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    இந்தி, தமிழ் என கைவசம் படங்கள் இருப்பினும் ஐஸ்வர்யா ராயின் கவனம் ஹாலிவுட் பக்கம் திரும்பியுள்ளது.



    இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஐஸ்வர்யா ராய் ஹாலிவுட்டில் நடிக்கும் படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று கூறியுள்ளனர். 

    ஐஸ்வர்யா ஹாலிவுட் படங்களுக்காக ஒரு குழுவை அமைத்திருப்பதாகவும் அவர்கள் அங்கு ஐஸ்வர்யாவுக்கான வாய்ப்புகளை கவனித்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, நிவேதா பெத்துராஜுக்கு பிறகு ஹாலிவுட் செல்லும் நடிகையாக ஐஸ்வர்யா இருப்பார். #AishwaryaRai

    மணிரத்னமின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #PonniyinSelvan #Maniratnam
    இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். பொன்னியின் செல்வன் என்ற பெயரிலேயே இதை படமாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.

    படத்தில் சுந்தர சோழராக அமிதாப்பச்சனும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டவரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு நடிக்கிறார். மோசடிகள் செய்யும் வில்லத்தனமான பேரழகி நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேசும் நடிக்கின்றனர். பூங்குழலி வேடத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.



    ‘பொன்னியின் செல்வன்’ பெரிய கதை என்பதால் ஒரே படத்தில் முழு கதையையும் கொண்டு வருவது சாத்தியமில்லை. இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உருவாக்க வேண்டும். படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்குவது குறித்து மணிரத்னம் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கிராபிக்ஸ் காட்சிகளும் பாகுபலியை மிஞ்சும் வகையில் இருக்கும்.

    இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.800 கோடிக்கு மேல் செலவாகலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. #PonniyinSelvan #Maniratnam

    செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில், அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு உள்ளிட்டோர் நடிக்கவிருக்கிறார்களாம். #Maniratnam
    மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச்சிவந்த வானம். பிரகாஷ்ராஜ், அரவிந்தசாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல முன்னணி நடிகர், நடிகைகளை படத்தில் நடிக்க வைத்து இருந்தார்.

    படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு படத்தில் நடித்த அனைவருக்கும் பெயர் வாங்கி கொடுத்தது. அடுத்து மணிரத்னம் தன்னுடைய நீண்ட நாள் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ கதையைக் கையில் எடுத்து இருக்கிறார்.



    கடந்த முறை விஜய், மகேஷ் பாபு என மிகப்பெரிய நடிகர்களை வைத்து இந்த படத்தைத் தொடங்க முயற்சி செய்தார். ஆனால் பட்ஜெட் பிரச்சினையால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது, விக்ரம், விஜய் சேதுபதி, சிம்பு மற்றும் ஜெயம் ரவியை வைத்து மறுபடியும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஜெயம் ரவி அல்லது விஜய் தேவரகொண்டா என்ற முடிவில் இருக்கிறார்.

    இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயும் நடிக்கலாம் என்கிறார்கள். இருவரிடமும் கதை சொல்லிவிட்டாராம் மணிரத்னம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். #Maniratnam #PonniyinSelvan #AmitabhBachchan #Vikram #JayamRavi #VijaySethupathi #STR #AishwaryaRai

    இந்தி சினிமாவில் பிரபலமான அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யா ராய்யின் குழந்தையான ஆரத்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அபிஷேக், ஆரத்யாவை கொடுத்த ஐஸ்வர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். #AbhishekBachchan #AishwaryaRai
    இந்தி சினிமாவின் பிரபல தம்பதி அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யா ராய். மணிரத்னம் இயக்கத்தில் 2007-ம் ஆண்டு தமிழ், இந்தியில் திரைக்கு வந்த குரு திரைப் படத்தில் ஐஸ்வர் யாராயும் அபிஷேக் பச்சனும் ஜோடியாக நடித்தனர்.

    அந்த படப்பிடிப்பில் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்துகொண்டார்கள். இத்தம்பதியினர் நேற்று தங்களது மகள் ஆராத்யா பச்சனின் 7-வது பிறந்தநாளை கொண்டாடினர்.

    இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அபிஷேக் பச்சன், “குழந்தையின் பிறந்தநாள் அவளின் தாயை கொண்டாடாமல் முடிவடையாது.



    மகளுக்கு பிறப்பை அளித்ததற்கு, அவளின் மேல் அன்பை செலுத்துவதற்கு, அவளை பார்த்துக் கொள்வதற்கு, எல்லாவற்றுக்கும் மேலான ஆச்சரியப் பெண்ணாக இருப்பதற்கு... என்னுடைய திருமதிக்கு வாழ்க்கையின் ஆகச் சிறந்த பரிசான நம் மகளை அளித்ததற்கு நன்றி. என்னுடைய தேவதை ஆராத்யாவுக்கு மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். #AbhishekBachchan #AishwaryaRai 

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `2.0' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு ஐந்தாம் விசை வருவதாக குறிப்பிட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #2Point0
    ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் இணைந்து நடித்துள்ள படம் `2.0'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    படத்தின் டிரைலர் நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள போஸ்டரில், அக்‌‌ஷய் குமார் ஏற்றுள்ள கதாபாத்திரம் தனது கையில் உடைந்த செல்போனை வைத்திருப்பதாக காட்டப்பட்டுள்ளது.

    மேலும் “ஐந்தாம் விசை வருகிறது” எனவும் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ‌ஷங்கர். அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதால் தற்போது படத்தின் மீது புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இயற்பியல் உலகில் ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, வலுத்த அணுக்கரு விசை மற்றும் தளர்ந்த அணுக்கரு விசை என நான்கு விசைகளே அகில விசைகளாக அறியப்பட்டு வருகின்றன.

    பிரபஞ்சத்தில் ஐந்தாவதாகவும்கூட ஒரு விசை இருப்பதாகப் பல்வேறு கோட்பாடுகள் உலவுகின்றன. இதுகுறித்த ஆராய்ச்சியிலும் பலர் ஈடுபட்டுள்ளார்கள். இப்படியான சூழலில் இந்தப் படத்திற்கு ஐந்தாம் விசை தியரியைக் கனெக்ட் செய்திருக்கும் காரணத்தால் அதுகுறித்த படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நவம்பர் 29-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. #2Point0 #Rajinikanth #FifthForce

    ரஜினி தற்போது `2.0' மற்றும் `பேட்ட' படங்களில் நடித்து முடித்துவிட்ட நிலையில், ரஜினி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் `2.0' படத்தின் டிரைலர் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth
    ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது.

    நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் தீபாவளி விருந்தாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி தீபாவளிக்கு முன்பாக வருகிற நவம்பர் 3-ஆம் தேதி டிரைலரை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.



    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #2Point0 #Rajinikanth

    உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், மீடூ குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றுள்ளார். #MeToo #AishwaryaRai
    பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளைத் துணிந்து வெளியே சொல்வது மீ டூ இயக்கம் மூலம் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள், பத்திரிகையாளர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

    இந்தி சினிமாவில் விகாஷ் பால், சுபாஷ் கபூர், அலோக்நாத், சஜித்கான், நானாபடேகர் உள்ளிட்டோர் புகார்களில் சிக்கி தங்கள் படவாய்ப்புகளை இழந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகப் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அதற்காக நிதி வசூல் செய்யும் பணியிலும் ஈடுபட்டுவருகிறார். இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கிளம்பும்போது மீ டூ விவகாரம் தொடர்பாக அவரிடம் தொடர்ச்சியாக பல கேள்விகள் கேட்கப்பட்டன.



    அப்போது கேட்காதது போல் பதில் சொல்லாமல் கடந்துசென்றார். அவரது இந்தச் செய்கை இந்தி சினிமா வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் ஐஸ்வர்யா மீ டூ விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகப் பேசியிருந்தார்.
    ரஜினியின் எந்திரன் படத்தை தொடந்து மீண்டும் அவருடன் ஐஸ்வர்யா ராய் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #2PointO #Rajini
    ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதன் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கு முன்பே முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.

    இந்த படம் நவம்பர் 29 ந்தேதி வெளியாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கபட்டு உள்ளது. இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் உருவாகும் படம் இது. சுமார் ரூ.543 கோடி செலவில் 2.0 படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தனது தமிழ் திரைப்பட அறிமுகத்தை மெகா பட்ஜெட்டில் தொடங்கி உள்ளார். இதில், அவர் வில்லன் வேடத்தில் நடித்தார். இந்த படம் வெளியாக 2 மாதங்கள் இருக்கும் நிலையில் படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான செய்தி வெளிவந்து உள்ளது. 



    பாலிவுட் லைப் இணைய தளம் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது:-

    இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யாராய் 2010 சூப்பர் ஹிட் படமான 'எந்திரன்' படத்தில் நடித்துள்ளார், இது 2.0 இன் முன் படமாகும். ஐஸ்வர்யா ராய் உண்மையில் படத்தில் ஒரு கவுரவ தோற்றம் கொண்டால் நாம் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை.

    தகவலில் ஐஸ்வர்யாராய் விஞ்ஞானியாக நடித்த ரஜினிகாந்தின் வசீகரன் பாத்திரத்துடன் உணர்ச்சித் தோற்றத்தைக் கொண்டிருப்பார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 
    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படத்தின் கதை தொடர்பான வழக்கில் இறுதி விசாரணை தேதியை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. #Enthiran #Shankar
    ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’.

    இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார். 

    அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.



    இதில் சிவில் வழக்கின் முந்தைய விசாரணையின் போது, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் கால அவகாசம் கோரிய இயக்குநர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி விசாரணையை 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    இதில், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரிய வழக்கு, நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எட்டு ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி, தமிழ்நாடனின் கதை நகலை தாக்கல் செய்தார். மேலும், சிவில் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் சங்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார். இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணையை, வரும் 28 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். #Enthiran #Shankar #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படத்தின் கதை தொடர்பான வழக்கில் ஆஜராகாத இயக்குனர் ஷங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. #Enthiran #Shankar
    ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’.
    இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

    அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, கூடுதல் அவகாசம் கேட்டு இயக்குநர் ஷங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று, நீதிபதி சுந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஷங்கர் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. 



    இதை ஏற்க மறுத்த நீதிபதி, கால அவகாசம் கோரிய இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அந்த தொகையை புளூ கிராஸ் அமைப்புக்கு வழங்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். #Enthiran #Shankar #Rajinikanth

    உலக அழகியாக பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய், தற்போதும் நான் அழகாக இருக்கும் ரகசியத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார். #AishwaryaRai
    ஐஸ்வர்யா ராய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பானி கான் படம் சரியாக போகவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து குலாப் ஜாமூன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    8 ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யாவும் அபிஷேக்கும் சேர்ந்து நடிப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஐஸ்வர்யா ராய் இந்த வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ரகசியத்தை தெரிவித்துள்ளார்.

    நான் உடற்பயிற்சி செய்வது இல்லை. இயற்கையாகவே என் உடல் இப்படி உள்ளது. எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி நல்லபடியாக உள்ளதால் எடை அதிகரிப்பது இல்லை. நான் சுறுசுறுப்பானவள். அழகுக்காக நான் பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்யவில்லை. என் அழகு இயற்கையானது. என் சுயசரிதையை எழுதுவது பற்றி பலர் என்னிடம் கேட்கிறார்கள்.



    அது குறித்து நான் இதுவரை யோசிக்கவே இல்லை’ என்று கூறி இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படம் குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். #2Point0 #Rajinikanth
    ரஜினியின் ‘2.0’, விஜய்யின் ‘சர்கார்’, சிவகார்த்திகேயன் நடிக்கும் ஏலியன் படம், மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்‘ என தமிழிலேயே நிறையப் படங்களில் பிசியாக இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பாலிவுட், ஹாலிவுட் படங்கள், இசை நிகழ்ச்சிகள் என தீவிரமாக இயங்கி வருகிறார். மேலும் அவருடைய கதை தயாரிப்பில் உருவாகும் ‘99 சாங்க்ஸ்’ படத்தின் வெளியீட்டு வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

    ஏ.ஆர்.ரகுமான் அளித்த ஒரு பேட்டியில், சங்கரின் 2.0 பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரகுமான், “2.0 போன்ற படத்தை ‌ஷங்கரால் மட்டும்தான் உருவாக்க முடியும். அவர் விரும்பும் தரத்திற்கு வரும் வரை மிக மெனக்கெட்டு வருகிறார்.



    படத்தில் ஒரு பாடலைப் பார்த்தேன். எந்த கிராபிக்சும் இல்லாமலேயே அவ்வளவு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. முக்கியமாகப் படத்தின் மொத்த கிளைமாக்ஸ் காட்சியும் பார்த்தேன். எனக்கு அதன் வியப்பு இன்னமும் நீங்கவில்லை. ‌ஷங்கர் போன்ற திறமைசாலி இந்தியாவுக்கே பெருமை” என்று பதிலளித்தார்.

    ரஜினிகாந்துடன், அக்‌‌ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் 2.0 படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது. 3டி தொழில்நுட்பத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இந்தப் படத்தின் கிராபிக்ஸ் போன்ற பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. #2Point0 #Rajinikanth

    ×