search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Me Too"

    நானே படகேருக்கு எதிராக சாட்சி சொல்ல பலரும் பயப்படுகிறார் என்று மீடூ இயக்கம் மூலம் புகார் கூறிய தனுஸ்ரீ தத்தா வேதனையுடன் கூறியுள்ளார்.
    ‘மீடு’ இயக்கம் கடந்த ஆண்டு திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, பிரபல நடிகர் நானே படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறினார்.

    புகாரின் பேரில் நானே படேகர் மற்றும் டைரக்டர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். புகாருக்கு மறுப்பு தெரிவித்த நானே படேகர், தனுஸ்ரீ தத்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

    இந்நிலையில், நானே படேகர் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை. அவர் குற்றமற்றவர் என போலீசார் தெரிவித்து விட்டதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் இதை தனுஸ்ரீ தத்தா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நானே படேகர் குற்றமற்றவர் என யார் சொன்னது? இது வெறும் வதந்தி தான். நான் எனது வக்கீலிடம் பேசினேன். அவர் போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதை உறுதிபடுத்தினார். போலீஸ் விசாரணை மெதுவாக நடப்பது உண்மைதான். சாட்சிகளை முன்வந்து வாக்கு மூலம் அளிக்க வைப்பதற்கு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.



    முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பின்னர் இதுவரை ஒன்று அல்லது 2 சாட்சிகள் மட்டுமே வாக்குமூலம் அளித்துள்ளனர். எனினும் சம்பவத்தை நேரில் பார்த்த முக்கிய சாட்சிகள் பலர் இன்னும் வாக்குமூலம் அளிக்கவில்லை.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் அவர்கள் வாக்குமூலம் அளிக்க பயப்படுகிறார்கள். முதலில் வாக்குமூலம் அளிக்க முன்வந்த பலரும் தற்போது மாறி விட்டனர்.

    சம்பவம் நடந்து 10 வருடங்கள் ஆகி விட்டது. எங்களுக்கு சரியாக ஞாபகம் இல்லை என தெரிவிக்குமாறு சாட்சிகளிடம் கூறி உள்ளனர். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பலரின் முன்னிலையில்தான் அந்த சம்பவம் நடந்தது. நானே படேகர் அத்துமீறி நடந்து கொண்டார். இதை நான் தட்டிக் கேட்டபோது நடன இயக்குனர் கணேஷ் ஆச்சர்யா, தயாரிப்பாளர் சமி சித்திக், இயக்குனர் ராகேஷ் சரங் ஆகியோர் என்னை பாராட்டினார்கள்.

    நான் அங்கிருந்து வெளியேறிய போது எனது காரை அடித்து உடைத்தனர். இது படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் தெரியும். ஆனால் அன்று படப்பிடிப்பில் யார்-யார் இருந்தார்கள்? என்பதற்கு ஆவணங்கள் எதுவும் இல்லை என்கின்றனர். இது சந்தேகத்தை கிளப்புகிறது.

    பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும். பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டால் தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத்தான் நான் புகார் கொடுத்தேன். விசாரணை முழுமையாக முடிந்த பிறகு தான் உண்மை வெளிவரும்.

    பாலிவுட்டில் நிறைய நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆனால் புகார் கொடுத்தால் தங்களுக்கு படவாய்ப்பு கிடைக்காது என கருதி தற்போது வரை அமைதியாக இருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பற பட விழாவில் தன்னைப் பற்றி பேசிய தயாரிப்பாளர் ராஜனுக்கு, பாடகி சின்மயி பயப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். #MeToo
    நடிகைகள், பெண் இயக்குனர்கள், பாடகிகளின் பாலியல் புகார்களால் பட உலகை உலுக்கி வந்த மீ டூ இயக்கம் சமீபகாலமாக ஒய்ந்து இருந்தது. இந்த நிலையில் சென்னையில் நடந்த ‘பற’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ‘மீ டூ’ குறித்து பேசியவர்களின் கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

    சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் பேசும்போது, பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயிக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் பேசும்போது, “சமீபகாலமாக சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் பெயரை கெடுக்கும் செயல் நடக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு நடந்ததை இப்போது சொல்வதன் நோக்கம் என்ன? விளம்பரத்துக்காக பெருமைக்குரியவர்களை அசிங்கப்படுத்தி பெயரை சிதைக்கலாமா?. அப்படி சிதைத்தால் உங்களையும் சிதைப்பார்கள்.” என்று பேசினார்.

    இதற்கு பதில் அளித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது, “சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஸ்ரீரெட்டி உள்பட குற்றச்சாட்டு சொன்னவர்களின் புகார் குறித்து விசாரித்தால்தானே உண்மை தெரியவரும். புகார் சொன்ன பெண்ணை குற்றவாளியாக பார்க்க கூடாது” என்றார்.



    கே.ராஜன் பேசிய வீடியோவை பாடகி சின்மயி தனது டுவிட்டரில் பகிர்ந்து, “சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே. பயப்பட வேண்டுமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
    பிரபல பாலிவுட் இயக்குநர் சஜித்கான் மீது இந்தி நடிகைகள் ‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன்னிடம் அவர் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று கூறினார். #Tamannaah #SajidKhan
    இந்தி நடிகைகள் ‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். நடிகர் நானா படேகர் உள்ளிட்ட பலர் இதில் சிக்கினர். பிரபல இந்தி டைரக்டர் சஜித்கான் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சலோனி சோப்ராவும், ஒரு பெண் பத்திரிகையாளரும் புகார் கூறினார்கள்.

    அவர் படத்தில் நடித்த வித்யா பாலன், பிபாஷா பாசு ஆகியோரும் அவர் மீது பாலியல் புகார் கூறினார்கள். இதைத்தொடர்ந்து அவர் இயக்கிய ஹவுஸ்புல்-4 படத்தில் நடிக்க மறுத்து அக்‌ஷய்குமார் விலகினார். இதனால் அந்த படத்தில் இருந்து சஜித்கானை நீக்கிவிட்டனர். சஜித்கான் இயக்கிய ஹிம்மத்வாலா, ஹம்ஷகல்ஸ் ஆகிய இரண்டு இந்தி படங்களில் தமன்னா நடித்து இருந்தார்.



    படப்பிடிப்பின்போது சஜித்கான் தவறாக நடந்துகொண்டாரா? என்று தமன்னாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    “சஜித்கான் இயக்கத்தில் நான் நடித்த இந்தி படங்கள் சரியாக போகவில்லை. அந்த படங்களின் படப்பிடிப்புகள் நடந்தபோது சஜித்கான் எனக்கு எந்த தொந்தரவையும் தரவில்லை. என்னிடம் அவர் தவறாகவும் நடந்து கொள்ளவில்லை. சஜித்கானுடன் பணியாற்றியபோது சவுகரியமாகவே உணர்ந்தேன். மற்ற நடிகைகள் அவர் மீது பாலியல் புகார் கூறியிருப்பது பற்றி எனக்கு தெரியாது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அனுபவங்கள் இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி எந்த சங்கடமும் ஏற்படவில்லை”

    இவ்வாறு அவர் கூறினார். #MeToo #Tamannaah #SajidKhan

    பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதாக சில நடிகைகள் கூறுவதில் பொய் இருக்காது, அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார். #KajalAggarwal
    ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இந்த படத்தில் தனது கதாபாத்திரம் வித்தியாசமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    காஜலை பார்த்தால் சாதுவாக தெரிகிறார். ஆனால் நிஜத்தில் கோபம் வந்தால் காளியாக மாறிவிடுவாராம். இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது:-

    ‘நான் ஹீரோயினாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. வடநாட்டு பெண்ணாக இருந்தாலும் என்னை தமிழ் பெண்ணாகத் தான் பார்க்கிறார்கள். மார்க்கெட் போய் சும்மா உட்கார்ந்து விடுவோமோ என்று நான் ஒரு நாளும் பயந்ததே இல்லை.



    அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. நான் தைரியமானவள். எனக்கு என்னை காத்துக் கொள்ள தெரியும். எனக்கு கோபம் வந்தால் காளி மாதிரி ஆகிவிடுவேன். ஒரு முறை என் தோழியிடம் தவறாக நடக்க முயன்றவனின் சட்டை காலரை பிடித்து முகம் வீங்கும் அளவுக்கு அவனை அடித்தேன்.

    பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக சில நடிகைகள் தெரிவித்துள்ளனர். அதில் பொய் இருக்காது. ஆனால் என்னை யாரும் அப்படி அழைக்கவில்லை. அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்’ என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். #KajalAggarwal #Indian2 #ParisParis

    இந்திய சினிமாவையே உலுக்கிய மீ டூ இயக்கம் குறித்து மஞ்சிமா மோகனிடம் கேட்ட போது, தனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றும், இது போன்ற சம்பவங்களை தான் அனுபவித்ததும் இல்லை என்று கூறினார். #ManjimaMohan
    அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சிமா மோகன், தற்போது கவுதம் கார்த்திக் ஜோடியாக தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

    திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடைபெற்று வருவதை எதிர்த்து மீ டூ இயக்கம் உருவாகியுள்ளது. இந்த இயக்கம் வந்த பின் திரைத்துறையில் ஏதேனும் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த மஞ்சிமா, “ எனக்கு இது பற்றி தெரியாது. இது போன்ற சம்பவங்களை நான் அனுபவித்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை.



    இவர்களில் சிலரது அனுபவங்கள் நம்பக்கூடியதாகவும், சிலரது குற்றசாட்டுகள் நம்ப முடியாத அளவிலும் உள்ளன. ஆனால் இதைக் கேட்ட போது பெரும் கொந்தளிப்பே உருவானது” என்று கூறியுள்ளார். இந்தியில் வெளியான குயின் படம் ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் மலையாளத்தில் ஸம் ஸம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. அதில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்குவர உள்ளது. #ManjimaMohan #MeToo #MeTooIndia

    முன்னா பாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ், சஞ்சு போன்ற இந்தி படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி மீது பெண் உதவி இயக்குனர் பாலியல் புகார் அளித்துள்ளார். #RajkumarHirani #MeToo
    முன்னா பாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ், சஞ்சு போன்ற இந்தி படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி. சஞ்சய்தத் நடிப்பில் இவர் இயக்கிய முன்னா பாய் எம்.பி.பி.எஸ். படம் தமிழில் கமல் நடிப்பில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அமீர்கான் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் படம் தமிழில் ‌ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் திரைப்படம்.

    ராஜ்குமார் ஹிரானி மீது சஞ்சு படத்தில் அவரது உதவி இயக்குனராக பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரை 6 மாதம், ராஜ்குமார் ஹிரானியால் செக்ஸ் தொல்லைக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சு படத்தின் இணை தயாரிப்பாளர் வினோத் சோப்ரா, அவரது மனைவி அனுபமா சோப்ரா, படத்தின் திரைக்கதை ஆசிரியர் அபிஜத் ஜோஷி ஆகியோருக்கு இ-மெயில் அனுப்பி உள்ளார். அந்த பெண் இயக்குனர் அனுப்பியுள்ள மெயிலில் ‘2018 -ம் ஆண்டு ஏப்ரல் 9-ந் தேதி ஹிரானி தனது வீடு மற்றும் அலுவலகத்தில் செக்ஸ் ரீதியாக என்னை துன்புறுத்தினார்.

    இந்த குற்றச்சாட்டுக்கு ராஜ்குமார் ஹிரானி பதிலளிக்க மறுத்ததோடு தனது வழக்கறிஞர் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தரப்பு வக்கீல் தேசாய், ’இயக்குனர் மீதான பாலியல் குற்றச்சாட்டு முற்றிலும் பொய், வேண்டும் என்றே அவதூறு பரப்புகிறார்கள்’ என விளக்கம் அளித்துள்ளார்.



    இந்த இ-மெயில் தொடர்பாக சஞ்சு படத்தின் இணை தயாரிப்பாளர் வினோத் சோப்ரா எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், அவரது மனைவி அனுபமா சோப்ரா அந்த பெண் இ-மெயில் அனுப்பி இருப்பதை உறுதி செய்துள்ளார். இந்த பிரச்சினையை எப்படி எடுத்துச்செல்வது என்பது குறித்து யோசிக்க கால அவகாசம் வேண்டும் என்று அவள் என்னிடம் கூறினாள். அவள் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் அவளுக்கு ஆதரவாக இருப்போம்” என்றார்.

    சஞ்சு படத்தின் திரைக்கதை ஆசிரியர் அபிஜத் ஜோஷி கூறும்போது ’அந்த பெண்ணின் பிரச்சினையை காதுகொடுத்து கேட்பது என் கடமை. அவளுக்கு துணை நிற்பேன். மேலும், அறம் தவறமாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

    இந்த சர்ச்சையின் எதிரொலியாக ஹிரானியின் இணை தயாரிப்பில் பிப்ரவரி 1-ந் தேதி வெளிவர இருக்கும் ‘ஏக் லட்கிகோ தேகாதோ யேசா லகா’ படத்தின் போஸ்டரிலிருந்து ஹிரானியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 
    இந்தியாவிலும் ‘மீ டு’ பற்றி பல்வேறு புகார்கள் வெளியாகி வரும் நிலையில், தானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக அதிதி ராவ் கூறியுள்ளார். #AditiRaoHydari #MeToo
    மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அதிதிராவ் ஹிடாரி. தற்போது உதயநிதியுடன் சைக்கோ படத்திலும், தனுஷ் இயக்கி நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கிலும் கவனம் செலுத்துகிறார். 

    அதிதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பிரச்சினை பற்றி வெளிப்படையாக கருத்து கூறியுள்ளார்.

    ’என்னை ரொம்பவே பொத்திப் பொத்தி வளர்த்துவிட்டார்கள். அதனால் சினிமா துறைக்கு வந்தபோது ரொம்ப அப்பாவியாக இருந்தேன். அட்ஜஸ்ட் செய்வது பற்றிய வதந்திகள் எல்லாமே உண்மை என்பது எனக்கு தெரியாது. அது எல்லாம் நடந்து கொண்டிருந்தது. எனக்கு அப்படி ஒன்றும் மோசமாக நடக்கவில்லை. ஒரே ஒரு சம்பவம் நடந்தது. அதனால் நான் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இருந்தாலும் இது அல்லது அது என்று எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 

    நான் அப்படி ஒன்றும் பட வாய்ப்பு தேவையில்லை என்று நினைத்து நடையை கட்டிவிட்டேன். அதன்பிறகு எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன். அந்த சம்பவத்திற்கு பிறகு 8 மாதங்களாக எனக்கு வேலை இல்லை. 
    பாதிக்கப்பட்டவர்கள் அதுகுறித்து தைரியமாக வெளியே பேச வேண்டும். இல்லாவிட்டால் பணம் வாங்கி இருப்பார் என்றோ, மிரட்டி பணியவைத்து இருப்பார்கள் என்றோதான் வெளியே பேசுவார்கள். 

    நமக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்ய வேண்டும். இப்போது ‘மீ டு’ இயக்கம் வேறு திசையில் திரும்பி கொண்டிருக்கிறது. இவ்வாறு அதிதிராவ் கூறினார். #AditiRaoHydari #MeToo

    ‘மீ டூ’ இயக்கம் தங்களுக்கு வேண்டாதவர்களை சிக்கலில் மாட்ட வைத்து அசிங்கப்படுத்தும் ஒரு தளமாக இருக்கிறது என்பதும் பலரது கருத்தாக இருக்கிறது.
    இந்தியா முழுவதும் ‘மீ டூ’ (நானும்தான்) இயக்கம் புயலை கிளப்பி வருகிறது.

    ‘மீ டூ’ இயக்கம் ஆண்களை பயமுறுத்தினாலும் செக்ஸ் கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் கவசம் என்கின்றனர் பெண் உரிமைக்கு போர்க்கொடி உயர்த்துபவர்கள்.

    ‘மீ டூ’ ஹேஷ்டேக் உள்ளே விதவிதமான பாலியல் குற்றங்கள் பற்றிய தகவல்கள் தினமும் குவிகின்றன. பாலியல் ஆசாமிகளை அலற வைக்கும் இந்த ‘மீ டூ’ 2006-ம் ஆண்டிலேயே உதயமாகி விட்டது. இப்போது இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள பட உலகில் சூறாவளியாக சுழன்று பிரபலங்களை நிலைகுலையச் செய்து வருகிறது.

    தமிழ் பட உலகில் முதலில் சுசிலீக்ஸ் முகநூல் பக்கம்தான் திரையுலகினரின் அத்துமீறல்களை அம்பலபடுத்தியது. முன்னணி நடிகர், நடிகைகள் இதில் சிக்கினார்கள்.அதன்பிறகு தெலுங்கு பட உலகில் ஸ்ரீரெட்டி விஸ்வரூபம் எடுத்து பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களை சந்திக்கு இழுத்தார்.

    இப்போது தீராத விளையாட்டு பிள்ளை படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இந்தி நடிகை தனுஸ்ரீதத்தா மூலம் இந்தியா முழுவதையும் ‘மீ டூ’ உலுக்கி வருகிறது. தனுஸ்ரீதத்தா பாலியல் புகாரில் சிக்கிய நானா படேகர் சாதாரணமானவர் அல்ல. தேசிய விருதுகள் பெற்று இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் நடிகர். ‘காலா’, ‘பொம்மலாட்டம்’ என்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

    10 வருடங்களுக்கு முன்பு ‘ஹார்ன் ஓகே ப்ளஸ்’ இந்தி படத்தில் நடித்தபோது தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றும் அதை வெளியே சொன்னதால் ஆட்களை வைத்து மிரட்டினார் என்றும் தனுஸ்ரீ தத்தா கூறினார். அப்போது தனுஸ்ரீ கார் தாக்கப்பட்ட வீடியோவும் இப்போது வைரலாகி அவர் மீது அனுதாபம் ஏற்படுத்தி உள்ளது.

    அதோடு இந்தி நடிகர் அக்னி கோத்ரி படப்பிடிப்பு அரங்குக்குள் தனது ஆடைகள் முழுவதையும் களைந்து விட்டு நிர்வாணமாக நிற்க சொன்னார் என்று இன்னொரு பகீர் தகவலையும் வெளியிட்டார். தனுஸ்ரீதத்தாவிடம் போலீசார் புகார் பெற்று 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நானா படேகரை கோர்ட்டில் ஏற்ற தயாராகி வருகிறார்கள். மகளிர் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.

    இதற்கு பிறகு திரையுலகினர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் குவிய தொடங்கின.

    கங்கனா ரணாவத், தேசிய விருது பெற்ற ‘குயின்’ பட இயக்குனர் விகாஸ் பாஹல் தன்னை சந்திக்கும்போதெல்லாம் கட்டிப்பிடித்து கழுத்தில் முகத்தை புதைத்து எனது தலைமுடியில் வாசனையை நுகர்ந்து உங்கள் வாசனையை நான் விரும்புகிறேன் என்று தொல்லை கொடுத்ததாக குற்றம் சொன்னார்.

    தந்தை வேடங்களுக்கு பொருத்தமான நடிகர் என்று பெயர் எடுத்த பிரபல இந்தி நடிகர் அலோக் நாத் மதுவில் எதையோ கொடுத்து தன்னை கற்பழித்து விட்டதாக பெண் இயக்குனர் வின்டா நந்தா கொந்தளித்தார். இப்படி நிறைய புகார்கள் குவிந்து இந்தி பட உலகை அலற வைத்து வருகிறது.



    இப்போது தமிழ் பட உலகத்திலும் ‘மீ டூ’ புகுந்து பொங்க வைத்து இருக்கிறது. கவிஞர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி சொன்ன குற்றச்சாட்டு அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.

    சின்மயி புகாரின் சாராம்சம் என்னவென்றால், “சுவிட்சர்லாந்தில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றபோது வைரமுத்து அவர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு என்னை அழைத்தார். நான் மறுத்தேன். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் வைரமுத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி மிரட்டினார். எனக்கு பயம் ஏற்பட்டது. உடனடியாக இந்தியா திரும்பி விட்டோம். வைரமுத்து அவரது அலுவலகத்தில் இரண்டு பெண்களுக்கு முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார். என்னைப்போல் பாதிக்கப்பட்ட பாடகிகள் இனிமேல் இதுகுறித்து பேசுவார்கள்” என்பதுதான்.

    இதனை மறுத்துள்ள வைரமுத்து, “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவது இல்லை. உண்மையை காலம் சொல்லும்” என்றார்.

    வைரமுத்துவோடு இது நிற்கவில்லை. வில்லன் நடிகரும் நடன இயக்குனருமான கல்யாண் மீது இலங்கையை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் சொன்னதை சின்மயி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பெண் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராகும் ஆசையில் சென்னை வந்து கல்யாண் குழுவில் சேர்ந்ததாகவும் அப்போது படுக்கையை பகிர்ந்தால் உதவியாளராக வைத்துக்கொள்வேன் என்று கல்யாண் சொன்னதாகவும் கூறி உள்ளார்.

    இன்னொரு வில்லன் நடிகரான ஜான்விஜய்யும் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தகவலை பெங்களூருவை சேர்ந்த பெண் எழுத்தாளர் சந்தியா மேனன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

    மலையாள நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது பெண் இயக்குனர் டெஸ் ஜோசப் பாலியல் புகார் கூறியுள்ளார்.

    தினம் ஒரு தகவல் போல் பலரும் பாலியல் துன்புறுத்தல் பற்றி பேச ஆரம்பித்து உள்ளனர். 10, 15 வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த பாலியல் வன்மங்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார்கள்.

    இதை இனிமேல் கட்டுப்படுத்த முடியாது என்றும் பெண்களுக்கு எதிராக எங்கு தவறு நடந்தாலும் ‘மீ டூ’ தளம் அதை பகிரங்கப்படுத்தும் என்றும் பெண்கள் அமைப்பினர் கூறுகிறார்கள்.

    சினிமா துறை, அரசு, தனியார் அலுவலகங்கள் எங்கும் இனிமேல் ‘மீ டூ’ வுக்கு பயந்து பெண்களை பாலியல் வக்கிரமக்காரர்கள் நெருங்க பயப்படுவார்கள்.

    ‘மீ டூ’ இயக்கம் தங்களுக்கு வேண்டாதவர்களை சிக்கலில் மாட்ட வைத்து அசிங்கப்படுத்தும் ஒரு தளமாக இருக்கிறது என்பதும் பலரது கருத்தாக இருக்கிறது.

    நேர்மையான ஒருவர் மீது ‘மீ டூ’ புகார் பாய்ந்த உடனேயே அவர் மீது சேறு பூசப்பட்டு விடுகிறது. பின்னர் அவர் போராடி தன்னை தூய்மையானவர் என்று நிரூபித்தாலும், அவர் மீது சுமத்தப்பட்ட களங்கத்தின் வடு, காலத்துக்கும் மாறப்போவது இல்லை.

    எனவே ‘மீ டூ’ இயக்கம் தனக்கு பிடிக்காதவர்கள் மீது தவறாக ஏவப்படாமல் இருந்தால் நல்லது என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.
    மீடூ இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கொடுத்த ஸ்ருதி ஹரிஹரன், என்னுடன் இணைந்து பணியாற்ற தயங்குகிறார்கள் என்று கூறியிருக்கிறார். #SruthiHariharan #MeToo
    நிபுணன் படத்தில் நடித்த போது படப்பிடிப்பு தளத்தில் தவறாக நடந்து கொண்டார் என அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் குற்றம் சாட்டினார். இதற்கு அர்ஜுன் மறுப்பு தெரிவித்ததோடு அவர் மீது வழக்கு தொடர்ந்தார். இதனால் ஸ்ருதி ஹரிஹரனுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்துள்ளன.

    இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “இது என்னைக் காயப்படுத்தினாலும் பெருமை கொள்ளவும் செய்கிறது. நான் துன்பப்பட்டாலும் எதிர்காலத்தில் சில பெண்களாவது பயப்படாமல் துணிந்து பேசுவார்கள். இதை நடைமுறையில் எப்படி எதிர்கொள்வது என்பதைப் பார்க்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு வரை வாரத்திற்கு மூன்று பட வாய்ப்புகளாவது எனக்கு வரும்.

    நான் வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பேன். வழக்கமாக நமது படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றால் தான் அடுத்த வாய்ப்புகள் வரும். செப்டம்பர் மாதம் எனது பெரிய படம் ஒன்று வெளியானது. ஆனால் அதன் பின் வாய்ப்புகள் வருவது நின்றுவிட்டது. படவாய்ப்புகள் மிகவும் குறைந்துவிட்டன. என்னுடன் இணைந்து பணியாற்ற தயங்குகிறார்கள்.



    ஆனால் இயக்குனர்கள் நம்பிக்கையளிக்கும் விதமாக எனக்காக எழுதுகிறார்கள். இதன் மூலம் எனக்கு சில எதிரிகள் உருவாவார்கள் என்பது தெரியும். அதனால் இதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து போராடுவேன்’ என்றார்.
    மீடூவில் செக்ஸ் புகார் கூறியதால் என்னை பாலியல் தொழிலாளி என்று குற்றம் சாட்டுகிறார்கள் என்று பாடகி சின்மயி கூறியிருக்கிறார். #MeToo #Chinmayi
    பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது மீடூ இயக்கத்தின் மூலம் பாலியல் புகார் கூறினார். இது கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் பரபரப்பான செய்தியானது. இதன் பின்னர் ராதாரவியுடன் மோதல் தொடங்கியது.

    ராதாரவிக்கு டத்தோ பட்டம் கொடுக்கப்பட்டது என்பதே பொய் என்று டுவிட்டரில் கடித ஆதாரத்துடன் கூறிய சின்மயி, மீண்டும் அது தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

    நேற்று முகநூலில் நேரடி வீடியோவில் பேசிய அவர், மீடூ பற்றி பல்வேறு வி‌ஷயங்களை முன் வைத்தார். அதனைத் தொடர்ந்து தன்னை டப்பிங் யூனியனில் இருந்து நீக்க ராதாரவி சதி செய்திருப்பதாகக் கூறினார். தொடர்ந்து அவர் பேசும்போது:-

    “நான் 2016ல் இருந்தே டப்பிங் யூனியன் உறுப்பினர் இல்லை என்று சொல்லும் ராதாரவி, கடந்த 2 ஆண்டுகளில் 4 படங்களில் டப்பிங் பேச ஏன் ஒப்புக் கொண்டார்? டப்பிங் யூனியன் உறுப்பினர்களிடம் வசூலிக்கப்படும் பணத்தில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு, எதற்காக டத்தோ ராதாரவி வளாகம் எனப் பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்?

    மீடூ புகார் எல்லாம் சொன்னால் இனி நீங்கள் நடிக்கவே வராதீர்கள். ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பார்கள் என ஏன் எச்சரிக்கிறார்?

    ராதாரவி டத்தோ பட்டத்தை பயன்படுத்திக் கொள்வதில் தனிப்பட்ட முறையில் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால், அதை அவருடைய லெட்டர் பேட், டப்பிங் வளாகக் கட்டிடம் என எல்லா வற்றிலும் பயன்படுத்திய தாலேயே நான் அதைப் பற்றி ஆராய்ந்தேன். அப்போது தான் மெலாகா அரசு டத்தோ பட்டம் தரவே இல்லை என்பது தெரிய வந்தது.

    பின்னர் இப்போது அதை சுல்தான் ஒருவர் வழங்கினார் என்றார். அது எந்த சுல்தான் அல்லது எந்த தொழிலதிபர் என்று சொல்லலாம் அல்லவா? ராதாரவி அவருக்கு அவரே பாரத ரத்னா, பத்மஸ்ரீ என என்ன விருது வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளட்டும். எனக்கு அதைப் பற்றி சிறிதும் கவலை இல்லை.

    ஆனால், டப்பிங் யூனியனில் விசாகா குழு இருக்கிறது என்று அவர் கூறினால், பணியிடம் என்று எதைக் குறிப்பிடுவார் என்று கேள்வி கேளுங்கள். மீடூ பிரச்சினை வந்தது முதல் ஆண்களிடம் கேள்வி கேட்பதற்கும், பெண்களிடம் கேள்வி கேட்பதற்கும் இடையே அவ்வளவு வித்தியாசம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

    பாலியல் வன்கொடுமைகளை மறைக்காதீர்கள். இதை மூடி மறைக்கக்கூடாது. வெட்கப்பட வேண்டியது பெண்களும் குழந்தைகளும் கிடையாது என்பதே மீடூவின் அடிநாதம். பெண்களுக்கு மட்டும் இது நிகழ்வதில்லை. ஆண் குழந்தைகளுக்கும் நிகழ்கிறது. என்னிடம் நிறைய ஆண்கள் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை சொல்லியிருக்கின்றனர். இது நம்மை நாமே கேள்விக்கு உள்ளாக்க வேண்டிய தருணம்.

    ஆனால், இன்றும்கூட பாதிக்கப்பட்டவர்களை விடுத்து பாதிப்புக்கு உள்ளாக்கியவர்களை பலப்படுத்தவே இந்த சமூகம் முற்படுகிறது. பெண்கள் சொல்லும் புகார் மீதான சமூகத்தின் அமைதி பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் பலமாக்கும். மீடூவில் நான் புகார் சொன்ன பிறகு. நிறைய பெண்கள் என்னை இந்த சமூக வலைதளங்கள் எப்படிப் பார்க்கிறது என்று உற்று நோக்கினார்கள்.

    என்னை அவ்வளவு வசைபாடுகிறார்கள். தமிழில் இருக்கும் எல்லா கெட்ட வார்த்தைகளை சொல்லித்தந்த தமிழ் ஆண்மகன்களுக்கும் நன்றி. நீ யோக்கியமா? நீ ஒழுக்கமா? நீ உத்தமியா என்று கேட்பார்கள். அப்புறம் என்னை பாலியல் தொழிலாளி என்பார்கள். ஒரு வி‌ஷயம் சொல்கிறேன். நீங்கள் என்னை பாலியல் தொழிலாளி எனக் கூறுவதால் நான் வெட்கித் தலை குனிய மாட்டேன்.

    இந்த உலகிலேயே ஆண்களுக்காக மட்டுமே வாழும் தொழில் பாலியல் தொழில். ஆண்களின் பல்வேறு பாலியல் தேவைக்காகவே இந்தத் தொழில் இருக்கிறது. ஒருவேளை அந்த தொழிலாளிகள் எல்லாம் திருந்திவந்தால் நீங்கள் சமூகத்தில் அவர்களுக்கு இடமா கொடுக்கப் போகிறீர்கள்? இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

    உங்கள் வீட்டு பெண்கள் பாலியல் புகார் சொன்னால், வேலைக்கு போகாதே படிக்கப் போகாதே என்று வீட்டுக்குள் பூட்டி வைக்காதீர்கள். தப்பு செய்தவர்களை திருத்துங்கள். பாதிக்கப்பட்டவரை கேவலப்படுத்தாதீர்கள், அசிங்கப்படுத்தாதீர்கள். பாலியல் வன்கொடுமைகள் ஏன் நடக்கிறது. எதற்கு நடக்கிறது என்று பேசுங்கள். குடும்பம், கல்வி நிறுவனம், பணியிடம் என எல்லா இடத்திலும் பேசுங்கள். ஆண்களும் நம்மை புரிந்து கொள்வார்கள். எதுவாக இருந்தாலும் பேசி முடிவு செய்யலாம். சமூகம் அதற்கான மாற்றம் கண்டு வருகிறது.

    திருமணத்துக்குப் பின் கணவன் மனைவியின் விருப்பம் இல்லாமல் உறவு கொண்டால் அது மேரிட்டல் ரேப் என்று பேசும் அளவுக்கு இப்போதெல்லாம் சமூக மாற்றம் வந்திருக்கிறது. இன்னும் மாற்றம் வர வேண்டுமானால் அதற்கு விவாதமும் ஆலோசனையும் செய்யப்பட வேண்டும். எனவே வெளிப்படையாக பேசுங்கள். இதில் நீங்கள் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. இன்று சமூகம் சில விமர்சனங்களை முன்வைத்தாலும்கூட விரைவில் மாற்றம் வரும்’

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
    உலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியசெய்தி.
    உலகத்தில் எல்லா சமூகத்திலும், சாதி, மதம் என்கிற வித்தியாசமின்றி ஒட்டு மொத்தமாக ஒடுக்கப்படுகிற ஒரு இனம் உண்டு என்றால் அது பெண்ணினமேஆகும். தாமஸ்ராய்ட்டர்ஸ் ஆய்வின் முடிவின்படி உலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியசெய்தி.

    கருவிலேயே பெண் சிசுவாக இருந்தால் கருச்சிதைவிலிருந்து, பிறந்தவுடன் பெண்குழந்தையாக இருந்தால் கள்ளிப்பால் என்று வன்முறை தொடங்கி விடுகிறது. சாஸ்திர சம்பிரதாயங்கள் என்கிற பெயரில் பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், விதவை, பொட்டுக்கட்டுதல் என்று காலங்காலமாக பெண்கள் வஞ்சிக்கப்பட்டனர்.

    பெரும்பாலும் இத்தகையவன்முறைகள்,90 சதவீதம் நெருங்கிய உறவினர்களாலோ, நண்பர்களாலோ, அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களாலோ, பணியிடத்திலோ, பள்ளிக்கூடங்களிலோ உள்ளவர்களால் நடத்தப்படுகிறது.

    இதில் வேதனையான விஷயம், பெரும்பாலான குற்றங்கள் வெளியே தெரிவதில்லை. அப்படியே வந்தாலும் செய்தித்தாள்களில் எங்கோ ஒருமூலையில் ஒதுங்கி விடுகிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் சேலம் ஆத்தூரை சேர்ந்த ராஜலட்சுமி என்கிற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டு, தலை வெட்டப்பட்டுக் கொலை செய்யபட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்க வேண்டும். அப்படியே நாட்டையே உலுக்கினாலும், ஒரே வாரத்தில் மறக்கடிக்கப்படுகிறது. உதாரணமாக, காஷ்மீரில் எட்டு வயது பெண்குழந்தை ஆசிபா பலநாட்கள் கோவிலுக்குள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதில் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் வேதனை. இவைகள் எல்லாம் தடுக்கப்பட என்னதான் வழி?

    குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும். இந்திய அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம், 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியில் வல்லுறவு கொள்பவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படும் என்று சட்டம் இயற்றியுள்ளது. வரவேற்கப்படவேண்டிய ஒன்றானாலும், குற்றங்கள் விசாரணை செய்து நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறுவதற்கும் பலஆண்டுகள் ஆகி விடுகிறது.

    தண்டனைகள் மட்டும் குற்றங்களை முழுவதும் குறைத்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்களது ஆண்குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களிடத்தே, பெண்களும் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு சமஉரிமை உடையவர்கள்; ஆண்களுக்கு அடிமையாக, ஏவல் செய்பவர்களாக உருவாக்கப்பட்டவர்கள் அல்ல என்கிற உண்மையை உரத்துச் சொல்ல வேண்டும்.



    சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை. தைரியம், பலம், அறிவு, இவைகளை எல்லாம் ஆணுக்கு மட்டுமே உரியகுணங்களாக சித்தரிக்கப்படுகிறது, அத்தகைய சூழலில் வளரும் பெண் குழந்தைகள் தங்களுக்கு புத்திசாலித்தனமும் சாமர்த்தியமும் குறைவு, மற்றும் பலவீனமானவர் என்று கருதத் தொடங்கி விடுகின்றனர். உதாரணமாக, ஏதாவது பொருளினைத் கைத்தவறி நழுவவிட்டால், ஆண்குழந்தை அதைபற்றிக் கவலைக்கொள்ளாது.

    வீட்டிலும் திட்டிவிட்டு விட்டு விடுவார்கள். அதே நேரத்தில் பெண் குழந்தைக்கு திட்டு மட்டுமல்ல, உனக்கு ஏன் இந்த கடினமான வேலை என்று கூறப்படும் போது பெண் குழந்தை தன்னால் கடினமானவற்றை செய்ய முடியாது என்று நம்பத் தொடங்குகிறது. இப்படியாக வளரும் அப்பருவத்திலேயே அதன் மனதில் நீ பலவீனமானவள் என்கிற ஆழமான விதை ஊன்றப்படுகிறது. நன்கு பயிற்சிப் பெற்ற தடகள வீராங்கனையுடனோ, குத்துச்சண்டை பயின்ற பெண்ணிடமோ அவ்வாறு பயிற்சிப் பெறாத ஆண்கள் மோதி வெற்றிப் பெறமுடியாது. ஆகவே ஆணோ, பெண்ணோ, நான் யாருக்கும் சளைத்தவரல்ல, என்கிற எண்ணமும், பயிற்சியும் பெற்றால் எதையும் செய்ய முடியும் என்பது தான் உண்மை.

    ஊடகங்கள் மற்றும் தொலைக் காட்சி தொடர்கள் பெண்களுக்கு எதிரானதாகவும் வன்முறையை தூண்டுபவையாகவும் உள்ளன. திரைப்படங்கள் போன்று தணிக்கைக்குழு இல்லையென்றாலும் சுயக்கட்டுப்பாடுகளோடு நம் வீட்டு பெண்களும் குழந்தைகளும் பார்ப்பதாக இருந்தால் எத்தகைய பொறுப்புணர்வோடு நடந்து கொள்வோமோ அந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும். அதேப்போன்று ஊடகங்கள் பெண்களுக்கு எதிரான கருத்துகளையும் கேலி செய்யும் செய்திகளையும் வெளியிடக்கூடாது.

    பெண்களையும் சகமனிதர்களாக பார்க்காமல் அவர்கள் தங்ககள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கருவியாக பார்க்கும் மனோபாவமே அடிப்படை முறையான பாலினகல்வி கொடுக்காமையும், இத்தகைய தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கின்றன.

    மீடூ (நானும்கூட) இயக்கங்கள் தற்போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வடிக்கால்களாக அமைந்துள்ளன. மேலைநாடுகளில் மட்டுமின்றி நமது நாட்டில் கூட, பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகவலைத்தளங்களில் தங்களுக்கு கொடுமை இழைத்தோரை குறித்த உண்மையை வெளியிடுவதன் மூலமாக, தவறு செய்தவர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. இது போன்று தவறு செய்தவர்களை வெளிப்படுத்தும் போது எதிர்காலத்தில் தவறு செய்ய முயற்சி செய்பவர்களை தடுக்க ஏதுவாகும். பெண்களுக்கு எதிராக தொடரும் இழிச்செயல்கள் முடிவுக்கு கொண்டு வர இந்நாளில் உறுதி ஏற்போம்.

    வழக்கறிஞர் நல்லினி

    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால், மீடூ இயக்கம் உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளார். #Mohanlal #Metoo
    தமிழ் திரையுலகில் பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது மீ டூ புகார் கூறியதை அடுத்துப் பரபரப்பானது. அதே போல் கேரள திரையுலகிலும் நடிகை ஒருவர் கடத்தப்பட்ட விவகாரத்திலிருந்து அங்கிருக்கும் நடிகைகள் திரையுலகில் பெண்களுக்கு நிகழும் பாலியல் கொடுமைகள் பற்றி பேசி வருகின்றனர்.

    இந்நிலையில், மீ டூ விவகாரம் குறித்து கருத்துக் கூறியுள்ளார் நடிகர் மோகன்லால். சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பாதிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்ட மலையாள திரையுலகம் வரும் டிசம்பர் 7ஆம் தேதி துபாயில் கலை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிகழ்விற்கான ஏற்பாடு வேலைகளுக்காக துபாய் சென்றுள்ள நடிகர் மோகன்லால் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மீ டூ விவகாரம் பற்றி பேசும் போது, “மலையாள சினிமா உலகில் இதுபோன்ற பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீ டூவை ஒரு இயக்கமாக நீங்கள் நினைக்கக் கூடாது. அது உள்நோக்கம் கொண்டது. அது ஒரு டிரெண்ட். பாலியல் குற்றம் சொல்வது ஒரு பே‌ஷனாக மாறிவிட்டது. எந்த ஒரு சிக்கலுக்கும் ஒரு ஆயுட்காலம் உண்டு. பாலியல் சச்சரவுகள் திரைப்படங்களில் மட்டுமல்ல... வாழ்வில் எல்லா இடங்களிலும் நடக்கலாம்” என்று கூறியுள்ளார்.
    ×