என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா

X
சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா? - சின்மயி கேள்வி
By
மாலை மலர்18 April 2019 1:31 PM GMT (Updated: 18 April 2019 1:31 PM GMT)

பற பட விழாவில் தன்னைப் பற்றி பேசிய தயாரிப்பாளர் ராஜனுக்கு, பாடகி சின்மயி பயப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். #MeToo
நடிகைகள், பெண் இயக்குனர்கள், பாடகிகளின் பாலியல் புகார்களால் பட உலகை உலுக்கி வந்த மீ டூ இயக்கம் சமீபகாலமாக ஒய்ந்து இருந்தது. இந்த நிலையில் சென்னையில் நடந்த ‘பற’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ‘மீ டூ’ குறித்து பேசியவர்களின் கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.
சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் பேசும்போது, பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயிக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் பேசும்போது, “சமீபகாலமாக சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் பெயரை கெடுக்கும் செயல் நடக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு நடந்ததை இப்போது சொல்வதன் நோக்கம் என்ன? விளம்பரத்துக்காக பெருமைக்குரியவர்களை அசிங்கப்படுத்தி பெயரை சிதைக்கலாமா?. அப்படி சிதைத்தால் உங்களையும் சிதைப்பார்கள்.” என்று பேசினார்.
இதற்கு பதில் அளித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது, “சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஸ்ரீரெட்டி உள்பட குற்றச்சாட்டு சொன்னவர்களின் புகார் குறித்து விசாரித்தால்தானே உண்மை தெரியவரும். புகார் சொன்ன பெண்ணை குற்றவாளியாக பார்க்க கூடாது” என்றார்.
Producer K Rajan and his open threat to deal with for naming Mr Vairamuthu.
— Chinmayi Sripaada (@Chinmayi) April 14, 2019
Sidhaikka aal ellam vechurkkaarame. Bayappdnuma? pic.twitter.com/D6MBqU5sRb
கே.ராஜன் பேசிய வீடியோவை பாடகி சின்மயி தனது டுவிட்டரில் பகிர்ந்து, “சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே. பயப்பட வேண்டுமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
