search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Me Too India"

    மீடூ புகார்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய சின்மயி, உண்மை கண்டறியும் சோதனைக்கு தான் தயாராக இருப்பதாக கூறினார். #MeToo #Chinmayi
    இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பெசண்ட் நகர் கடற்கரையில் கேஸ்டலெஸ் கலெக்டிவ் என்னும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பறை இசையோடு தொடங்கிய இந்த நிகழ்வில் சினிமா, கலையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். பாடகி சின்மயி பாடல்கள் பாடினார்.

    நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்த விழாவில் பங்கேற்று பாடல்களை பாடியது மிகுந்த மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இந்த விழாவின் நோக்கமே சமத்துவம் தான். இன்றைய சூழ்நிலையில் இதுபோன்ற விழாக்கள் அவசியம்.

    பறை, மேளம், நாதஸ்வரம், தவில் போன்ற பாரம்பர்ய இசையை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த கலைகள் அழியாமல் இருக்கும்.

    இந்த விழாவில் மோடி என்ற பெயரை பயன்படுத்த காவல்துறை அனுமதிக்கவில்லை. நாங்கள் லலித் மோடி பற்றி பாடுகிறோம் என்றாலும் விடவில்லை.



    மீடூ விவகாரத்தில் சட்டத்தில் மாற்றம் வேண்டும். அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்றார்கள். இதுவரை அமைக்கப்படவில்லை. அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. பாதிக்கப்பட்டோர் பலர் வழக்குபதிவு செய்தும் நடவடிக்கை இல்லை. ‘‘சட்டம் எங்களை கைவிட்டுவிட்ட நிலையில் தான் இருக்கிறோம். டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளேன்’. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சின்மயி கூறும் புகார்கள் உண்மையாக இருந்தால் ஏன் சட்டப்படி புகார் அளிக்கவில்லை என டுவிட்டரில் சிலர் விமர்சித்தனர். வழக்கறிஞர் ஒருவர் ’உண்மை கண்டறியும் சோதனை தான் ஒரே வழி’ என்று கூற ஆத்திரமடைந்த சின்மயி, ’நான் தயார். மீடியாவை வர சொல்லுங்கள்.

    ஒரே நேரத்தில் இருவருக்கும் நடக்கட்டும். அப்போது உண்மை தெரியும். கணவரை தவிர நீ யாரிடம் செல்கிறாய் என என்னை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, ஆம்பளையாக இருந்தால் ‘உண்மை கண்டறியும் சோதனைக்கு ஏற்பாடு செய்துவிட்டு கால் செய்யுங்கள்’.

    இவ்வாறு அவர் கூறினார். #MeToo #Chinmayi

    இந்திய சினிமாவையே உலுக்கிய மீ டூ இயக்கம் குறித்து மஞ்சிமா மோகனிடம் கேட்ட போது, தனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றும், இது போன்ற சம்பவங்களை தான் அனுபவித்ததும் இல்லை என்று கூறினார். #ManjimaMohan
    அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சிமா மோகன், தற்போது கவுதம் கார்த்திக் ஜோடியாக தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

    திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடைபெற்று வருவதை எதிர்த்து மீ டூ இயக்கம் உருவாகியுள்ளது. இந்த இயக்கம் வந்த பின் திரைத்துறையில் ஏதேனும் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த மஞ்சிமா, “ எனக்கு இது பற்றி தெரியாது. இது போன்ற சம்பவங்களை நான் அனுபவித்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை.



    இவர்களில் சிலரது அனுபவங்கள் நம்பக்கூடியதாகவும், சிலரது குற்றசாட்டுகள் நம்ப முடியாத அளவிலும் உள்ளன. ஆனால் இதைக் கேட்ட போது பெரும் கொந்தளிப்பே உருவானது” என்று கூறியுள்ளார். இந்தியில் வெளியான குயின் படம் ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் மலையாளத்தில் ஸம் ஸம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. அதில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்குவர உள்ளது. #ManjimaMohan #MeToo #MeTooIndia

    துபாயில் வசிக்கும் நபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை நேகா சக்சேனா ‘மீ டூ’ மூலம் புகார் தெரிவித்துள்ளார். #MeToo #NehaSaxena
    மலையாளத்தில் மம்முட்டி நடித்த ‘கசபா’, மோகன்லால் நடித்த ‘முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நேகா சக்சேனா. தமிழில், நீ என்ன மாயம் செய்தாய், அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஒரு மெல்லிய கோடு’, லொடுக்கு பாண்டி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

    துபாயில் வேலை பார்க்கும் ஒருவர் நேகாவின் மேனேஜருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினார். அதில் ஒரு நாள் இரவு மட்டும் தன்னுடன் வர முடியுமா என்று கேட்டுள்ளார். அந்த வாட்ஸ்அப் செய்தியை நேகா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு அந்த நபரை மீடூ மூலம் அடையாளம் காட்டியுள்ளார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இந்த நாய்க்கு பாடம் கற்பிக்க இதை நான் அனைத்து மீடியாக்களுக்கும் அனுப்புகிறேன். அவர் பெண்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை அவரின் குடும்பம் தெரிந்து கொள்ளட்டும். இது போன்ற வி‌ஷயங்களுக்கு எதிராக பேச நான் பயப்படவில்லை. ஒரு நடிகை என்பதையும் தாண்டி நான் ஒரு பெண்.



    ஒரு பிரபலமாக இருந்து கொண்டு இதற்கு எதிராக நான் குரல் கொடுக்கவில்லை என்றால் இதுபோன்ற சங்கடங்களை அனுவிக்கும் சாதாரண பெண்ணுக்கு நான் எந்த மாதிரியான முன் உதாரணமாக இருக்க முடியும்? இந்தியா மாற வேண்டும் என்கிறோம்.

    ஆனால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நாம் பொறுப்பேற்றால் தான் இந்தியா மாறும். அப்படி செய்தால் தான் சில நாய்கள் காணாமல் போகும். இன்னொரு நிர்பயா, ஜிஷா இருக்காது. நான் எனக்காகவும், பிற பெண்களுக்காகவும் குரல் கொடுக்கிறேன். இது தான் நான். நான் மாற மாட்டேன்’.

    இவ்வாறு நேகா தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    நேகா தன்னை அழைத்த நபரின் முகவரியை கண்டுபிடித்து அதையும் வெளியிட்டுள்ளார். அந்த நபரின் பெயர் எல்சன் லோகிதட்சன். நேகாவின் பதிவுகளை பார்த்த எல்சன் தனது செல்போனை யாரோ ஹேக் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    எல்சன் பொய் சொல்வதாக நேகா கூறி இருக்கிறார். #MeToo #NehaSaxena

    அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறியுள்ள நிலையில், ‘அர்ஜுன் நல்ல மனிதர்’ என்று வழக்கு விசாரணைக்கு ஆஜரான ‘விஸ்மய’ படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் விளக்கம் அளித்துள்ளார். #MeToo #ArjunSarja
    நடிகர் அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறியுள்ளார். இந்த நிலையில், போலீஸ் முன்பு விசாரணைக்கு ஆஜரான ‘விஸ்மய’ படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் ‘நடிகர் அர்ஜுன் நல்ல மனிதர்’ என்று கூறினார்.

    ‘விஸ்மய’ (தமிழில் ‘நிபுணன்’ என்ற பெயரில் வெளியானது) படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சுருதி ஹரிகரன் குற்றம்சாட்டினார். இதுகுறித்து நடிகை சுருதி ஹரிகரன் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் அர்ஜுன் மீது கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



    இந்த நிலையில், வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜரான படத்தின் உதவி பெண் இயக்குனர் மோனிகா, நடிகை சுருதி ஹரிகரனின் உதவியாளர் கிரண் ஆகியோர் நடிகை சுருதி ஹரிகரன் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் போலீசாரிடம் விளக்கம் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று நடிகை சுருதி ஹரிகரனின் தோழி யசஸ்வினி கப்பன்பார்க் போலீசார் முன்பு ஆஜரானார். அப்போது, அவர் ‘நடிகர் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை சுருதிஹரிகரன் என்னிடம் கூறி கண்ணீர் சிந்தினார்’ என்பன போன்ற விவரங்களை கூறியுள்ளார்.

    இதேபோல், ‘விஸ்மய’ படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் வழக்கு சம்பந்தமாக நேற்று போலீசார் முன்பு ஆஜரானார். அப்போது, அவர் ‘நடிகர் அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிகரன் தெரிவித்து இருக்கும் பாலியல் குற்றச்சாட்டு பற்றி தனக்கு எதுவும் தெரியாது. நடிகர் அர்ஜுன் அப்படிப்பட்ட நபர் இல்லை. அவர் நல்ல மனிதர். படப்பிடிப்பின்போது நடிகர் அர்ஜுன், நடிகை சுருதி ஹரிகரன் ஆகியோர் நன்றாக பழகினர். படப்பிடிப்புக்கு வெளியே என்ன நடந்தது? என்பது பற்றி நான் அறிந்து கொள்ளவில்லை’ என்று கூறியுள்ளார்.



    இதேபோல், படத்தின் தயாரிப்பாளர் உமேசும், ‘படப்பிடிப்பின்போது நடிகை சுருதி ஹரிகரன் கூறுவது போன்று எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இதுதொடர்பாக என்னிடம் எந்த புகாரும் வரவில்லை’ என்று நேற்று போலீசாரிடம் கூறினார். #MeToo #ArjunSarja #ShruthiHariharan #ArunVaidyanathan #Nibunan #Vismaya 

    தனுஸ்ரீ தத்தாவிடம் “25 பைசா” இழப்பீடு கேட்டு நடிகை ராக்கி சாவந்த் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். #MeToo #RakhiSawant #TanushreeDutta
    காலா படத்தில் நடித்தவரும், பிரபல இந்தி நடிகருமான நானா படேகர் 2008-ம் ஆண்டு நடந்த ஒரு படப்பிடிப்பில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக, பாலியல் புகார் கூறி இந்தி திரையுலகில் நடிகை தனுஸ்ரீதத்தா பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

    இந்தப் புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், தனுஸ்ரீதத்தா நானா படேகருக்கு எதிராக மும்பை போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே நடிகர் நானா படேகருக்கு ஆதரவாக நடிகை ராக்கி சாவந்த் களம் இறங்கினார். இவர் ‘தனுஸ்ரீதத்தா ஒரு பொய்யர்' எனக் கூறியதுடன், அவர் போதைக்கு அடிமையானவர். ஓரின சேர்க்கையாளர். என்னிடம் தவறாக நடந்துகொண்டார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பாக ராக்கி சாவந்துக்கு எதிராக ரூ.10 கோடி கேட்டு ஒரு அவதூறு வழக்கை தனுஸ்ரீதத்தா தொடர்ந்து உள்ளார்.



    மேலும் சமீபத்தில் தனுஸ்ரீ தத்தா அளித்த பேட்டியிலும் ராக்கி சாவந்தை கடுமையாக தாக்கி பேசியதாக தெரிகிறது. இந்த நிலையில் தனுஸ்ரீ தத்தாவிடம் “25 பைசா” இழப்பீடு கேட்டு ராக்கி சாவந்த் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இதில் “ நான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி நல்லபெயரை சம்பாதித்து வைத்திருக்கிறேன். சமீப காலமாக தனுஸ்ரீ தத்தா கூறிவரும் மோசமான மற்றும் இழிவுபடுத்தும் பேச்சுகளால் எனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டதுடன், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இதை மீண்டும் ஈடுசெய்ய பல ஆண்டுகள் ஆகும்.

    எனவே எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய தனுஸ்ரீ தத்தா “25 பைசா” இழப்பீடு வழங்கவேண்டும். மேலும் ஊடகங்கள் முன் பகிரங்கமாக மன்னிப்பு கோர கோர்ட்டு உத்தரவிடவேண்டும்” என கூறியுள்ளார். #MeToo #RakhiSawant #TanushreeDutta

    குளியல் அறையில் வைத்து அப்பா வயது நடிகர் கட்டிப்பிடிக்க முயன்றதாக புதுமுக நடிகை பிரெர்னா கண்ணா புகார் தெரிவித்துள்ளார். #MeToo #PrernaKhanna
    ‘வேறென்ன வேண்டும்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ்த் திரை உலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் பிரெர்னா கண்ணா.

    தெலுங்கு நடிகையான இவர் மீ டூ இயக்கம் பற்றி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது ‘ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தேன். படம் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வரத் தொடங்கின.

    என்னைத் திரையுலகில் வழிநடத்த யாரும் இல்லை. இந்த துறைக்கு நான் புதியவள். ஒருமுறை ஐதராபாத்திலிருந்து ஒரு நடிகர் என்னை அழைத்தார். ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும், ஒரு கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறினார். சிகப்பு நிறச் சேலையில், ஈரமான முடியுடன் 5 நட்சத்திர விடுதிக்கு வரச் சொன்னார்.

    என் அம்மாவை உடன் அழைத்துவரக் கூடாது என்பதை வலியுறுத்தி கூறினார். ஆனால் அதிர்ஷ்ட வசமாக நான் என் அம்மாவை அழைத்துச் சென்றேன்.

    நாங்கள் அறையில் இருந்தபோது எனது ஐ லைனரை நீக்கச் சொன்னார். ஐ லைனர் இல்லாமல் எனது முகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க விரும்புவதாக கூறினார். நான் கழிவறைக்கு ஐ லைனரை அழிக்கச் சென்றபோது, அந்த நடிகர் என் அம்மாவிடம் முகம் கழுவிவிட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

    நான் என் கண்ணை துடைத்துக் கொண்டிருக்கும் போது, அவர் திடீரென்று கண்ணாடியை நோக்கி என்னைத் தள்ளியபடி கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார். நான் மிகவும் பயந்துபோய் அவரை தள்ளினேன். இவை அனைத்தும் சில விநாடிகளில் நடந்து முடிந்தன. பின்னர் அவர் என்னை மிரட்டத் தொடங்கினார்.

    எனது அப்பாவயதுள்ள ஒருவர் இப்படி நடந்து கொண்டது கவலையும் ஆச்சரியத்தையும் தந்தது. அவருக்கும் ஒரு மகள் இருக்கிறாள்.



    தமிழ் சினிமாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இயக்குனர், எனது விவரங்கள் மற்றும் புகைப்படங்களைப் பார்த்த பின்னர் எனது மேனேஜரின் அலுவலகத்துக்குத் தொடர்புகொண்டார்.

    நான் அவருடன் இணக்கமாகச் சென்றால் கதாநாயகியாக நடிக்கவைப்பதாக எனது மேனேஜரிடம் வெளிப்படையாகக் கூறியுள்ளார். நான் கோபத்துடன் திட்டி அவரது அலுவலகத்தில் இருந்து வந்தேன்.

    பெண்கள் இணக்கமாகப் போவதால்தான் பெரிய படங்களில் பணியாற்றுகின்றனர் என்று சிலர் கூறுகின்றனர். இந்த மனப்போக்கை ஊக்குவிக்க முடியாது.

    இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் தற்போது பாலியல் கொடுமைகளுக்கு எதிராக நிற்கின்றனர். ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட கொடுமையை வெளியில் சொல்வதற்கு முன்னர் மூன்று முறை யோசிப்பாள்.

    அப்படி வெளியில் சொல்லும்போது அவளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மீ டூ இயக்கம் ஒவ்வொரு பாலினத்தவரும் தங்களை அதிகாரம், பணம், செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் பாலியல் கொடுமைக்கு ஆளாக்குபவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள உருவாகியுள்ளது. ஆண்களும், ஓரின சேர்க்கை சமூகத்தினரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பேச முன்வர வேண்டும். மீ டூ இயக்கம் பெண்களுக்கானது மட்டுமல்ல ஒவ்வொரு தனிமனிதருக்குமானது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MeToo #PrernaKhanna

    மீ டூ விவகாரம் இந்தியா முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் அனிருத் ‘மீ டூ’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். #MeToo #AnirudhRaviChander
    இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து ‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. திரையுலகம் உட்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

    சமீபத்தில் குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சினி, நடிகை ஸ்ருதி ஹரிஹரன், அமலாபால், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

    இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் ‘மீ டூ’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனிருத் தெரிவித்திருப்பதாவது,



    `பாலியல் தொல்லைகள் பற்றி பெண்கள் வெளிப்படையாக பேசுவது வரவேற்கத்தக்கது. இந்த விவகாரம் குறித்து பலரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். குற்றச்சாட்டு நிரூபிக்கபட்டால் சம்பந்தப்பட்டவர்களின் உண்மை முகம் வெளிவரும்' என்றார். #MeToo #AnirudhRaviChander

    அறியாத வயதில் பள்ளி படிக்கும் போது, தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து மனம்திறந்த சுனைனா, சம்பந்தபட்டவரை சட்டை காலரை பிடித்து கேட்க வேண்டும் என்று கூறினார். #MeToo #Sunanina
    காதலில் விழுந்தேன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, தெறி, சமர், கவலை வேண்டாம், காளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இணைய தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் சமுத்திரக்கனியின் சில்லுகருப்பட்டி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    நடிகைகள் மீ டூ வில் பாலியல் தொல்லைகள் பகிர்ந்து வரும் நிலையில் சுனைனாவும் தனக்கு ஏற்பட்ட தொல்லை குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    ‘‘எனக்கு அப்போது 12 வயது இருக்கும். தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வேன். ஆட்டோ ஓட்டுநர் அருகில் அமர்ந்து செல்ல மாணவர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் அந்த டிரைவர் என்னை மட்டும் அருகில் உட்கார வைத்துக்கொள்வார். அதை பெருமையாக நினைப்பேன்.



    அவர் அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி செல்வேன். அப்போது அந்த டிரைவர் வெளியே சொல்ல முடியாத சில்மி‌ஷங்கள் செய்வார். அவரது செயல் அப்போது எனக்கு புரியவில்லை. இப்படி 10-ம் வகுப்பு படித்து முடிக்கும்வரை அந்த டிரைவர் எனக்கு தொல்லை கொடுத்தார்.

    ஒரு கட்டத்தில் எனக்கு புரிந்தது. உடனே ஓட்டுநர் மீது கோபம் வந்தது. எனக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் சொல்லவில்லை.இப்போது அந்த டிரைவரை தேடுகிறேன். அவன் சட்டை காலரை பிடித்து ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க ஆத்திரத்தோடு இருக்கிறேன்.’’

    என்று சுனைனா கூறினார். #MeToo #Sunanina

    ‘மீ டூ’வில் நடிகர் அர்ஜுன் மீது நடிகை சுருதிஹரிகரன் பாலியல் புகார் கூறிய நிலையில், சுருதி விளம்பரத்துக்காக பொய் சொல்வதாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா கண்டனம் தெரிவித்துள்ளார். #MeToo #ArjunSarja #ShruthiHariharan
    கன்னட நடிகை சுருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

    இந்த புகாருக்கு அர்ஜுன் மகளும். நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    எதன் அடிப்படையில் என் தந்தை மீது சுருதி பாலியல் புகார் கூறுகிறார். நானும் ஒரு நடிகைதான். எனக்கு அனுபவம் மிகக் குறைவுதான். ஆனால் படத்தில் காதல் காட்சிகள் படமாக்கப்படும்போது என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும். என் தந்தை இயக்கிய ஒரு படத்தில் நான் நடித்திருக்கிறேன்.

    காதல் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை உதவி இயக்குனருடன் சேர்ந்து என் தந்தை எனக்கு நடித்துக் காண்பித்தார். உதவி இயக்குனருடன் அன்று அவர் நெருக்கமாக நடித்ததால் அந்த நபர் வெளியே வந்து அர்ஜூன் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சொல்ல முடியுமா?.

    இவையெல்லாமே நடிகர், நடிகையரின் வேலையில் ஒரு பகுதியாகும். அத்தனை பேர் முன்னிலையில் என் தந்தை எப்படி அத்துமீறி இருக்க முடியும். அப்படி என் தந்தை தவறு செய்திருந்தால் படப்பிடிப்பின் போதே சொல்லியிருக்கலாமே.



    என் தந்தை இரவு விருந்துக்கு அழைத்ததாக சுருதி சொல்கிறார். அதற்கெல்லாம் என் தந்தைக்கு ஏது நேரம். அவர் பப்புக்கோ, வேறு சொகுசு விடுதிகளுக்கோ போவதே கிடையாது. விஸ்மயா படம் குறித்து என்னிடமும் என் சகோதரியிடமும் என் தந்தை பேசிக்கொண்டிருந்தபோது படத்தில் நெருக்கமான காட்சிகள் இருப்பதாக இயக்குனர் கூறியதாகச் சொன்னார்.

    மேலும் அந்தக் காட்சிகளை குறைக்குமாறு சொல்லியிருப்பதாகவும் கூறினார். சுருதி முன்வைத்துள்ள அர்த்தமற்ற புகாரால் என் தந்தை அவரை நினைத்து வருத்தப்படவில்லை. எங்களை நினைத்தும் எங்கள் மனநிலையை நினைத்தும் தான் வருந்துகிறார். பாலியல் துன்புறுத்தல் என்பது மிகவும் வலுவான வார்த்தை. சுருதி அதைப் பயன்படுத்துவதற்கு முன் யோசித்திருக்க வேண்டும்.

    ஒரு பெண்ணாக மீடூ என்னும் இயக்கத்தை நான் மதிக்கிறேன். ஆனால் சுருதி போன்றவர்கள் விளம்பரத்துக்காக பொய் புகார் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஸ்ருதிக்கு எதிராக என் தந்தை சட்டப்படி கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர்வார்.

    இவ்வாறு அவர் கூறினார். #MeToo #ArjunSarja #ShruthiHariharan #AishwaryaArjun

    நடிகை சுருதி ஹரிகரன் கூறியுள்ள பாலியல் புகாருக்கு, நடிகர் அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தி உள்ளார். #MeToo #ShruthiHariharan #ArjunSarja
    நடிகர் அர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் கதாநாயகியாக பெங்களூருவை சேர்ந்த நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று நடிகை சுருதி ஹரிகரன் குற்றம்சாட்டி இருக்கிறார். முன்னணி நடிகரான அர்ஜூன் மீது பாலியல் புகார் எழுந்துள்ள இந்த சம்பவம், சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த பாலியல் புகார் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,

    அர்ஜூன் மூத்த நடிகர் என்பதை நாம் மறக்கக்கூடாது. ஆனால் பாலியல் புகார் கூறியுள்ள அந்த பெண், இவ்வளவு நாட்கள் தனக்கு ஏற்பட்ட அவமானம், காயத்தை, தனக்குள்ளேயே புதைத்து வைத்திருந்த வலியை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. தன் மீதான பாலியல் புகாரை அர்ஜூன் புறம்தள்ளினாலும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இது அவரது பெருந்தன்மையை காட்டும்.



    பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது ‘மீ டூ’ இயக்கத்தை தொடங்கி இருக்கிறார்கள். இது அடுத்து வரும் காலத்தில் பெண்கள் மீது நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு முடிவு கட்டட்டும்.

    இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார். #MeToo #ShruthiHariharan #ArjunSarja #Prakashraj

    நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறியுள்ள சுருதி ஹரிஹரன் மீது மீது சட்டப்படி கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக அர்ஜுன் தெரிவித்துள்ளார். #MeToo #ArjunSarja #ShruthiHariharan
    சமீப காலமாக ‘மீ டூ’ அமைப்பு மூலம் சினிமா பிரபலங்கள் பாலியல் ரீதியாக தங்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளை வெளி யிட்டு வருகிறார்கள்.

    கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியதையடுத்து தற்போது மற்றொரு பிரபல நடிகரான அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். நிபுணன் படத்தில் நடித்த போது நடிகர் அர்ஜுன் தவறாக நடந்து கொண்டதாக சுருதி ஹரிஹரன் தெரிவித்திருந்தார். 

    இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகர் அர்ஜுன் கூறியிருப்பதாவது:-

    இந்த புகாரை நான் எதிர்பார்க்கவில்லை. நான் 150 படங்களில் 60 முதல்70 கதாநாயகிகளுடன் நடித்து இருக்கிறேன். ஆனால் யாரும் என்னைப் பார்த்து கையை நீட்டி புகார் கூறியதில்லை.



    சுருதி அந்தப் படத்தில் மிகவும் விரும்பி நடித்தார். என்னுடன் பல படங்களில் நடிக்க விரும்புவதாக கூறினார். நான் முழுக்க முழுக்க தொழில் ரீதியான நடிகன். டைரக்டர் விருப்பப் படிதான் நான் அவருடன் நடித்தேன். அதை மீறி நான் நடிக்கவில்லை. இந்த புகார் பற்றி எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எப்படி புரிய வைப்பேன் என்று கவலையாக உள்ளது. சுருதியை நான் ஒரு போதும் விருந்துக்கு அழைத்தது இல்லை. எனவே என் மீது தவறான புகார் கூறிய சுருதி ஹரிகரன் மீது சட்டப்படி கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.

    இந்த புகாரின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

    இவ்வாறு அர்ஜுன் கூறியுள்ளார். #MeToo #ArjunSarja #ShruthiHariharan

    நிபுணன் படத்தில் நடித்த போது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் குற்றம்சாட்டியுள்ளார். #MeToo #ShruthiHariharan #ArjunSarja
    இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து ‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திரையுலகம் உட்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

    சமீபத்தில் குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சினி உள்ளிட்டோரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.



    இந்த நிலையில், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பிரபல நடிகர் அர்ஜுன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். ஸ்ருதி நிபுணன் படத்தில் அர்ஜுன் மனைவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து ஸ்ருதி ஹரிஹரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    எனக்கு பாலியல் தொல்லைகள் நடக்கும் போதெல்லாம் உடல் ரீதியாக அங்கிருந்து வெளியேறிவிட்டேன், ஆனால் மனரீதியாக அது பயத்தை உண்டாக்கி என்னை பாதித்துவிட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவத்தில் இருந்து வெளிவர நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அப்போது இரு மொழிகளில் உருவாகி வந்த ஒரு படத்தில் நான் நடித்துவந்தேன். அதில் நடிகர் அர்ஜுன் சர்ஜா தான் நாயகன். அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவள் நான். அவருடன் நடிப்பது குறித்து ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தேன். படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களுக்கு எனக்கு எதுவும் தோன்றவில்லை, அந்த படத்தில் நான் அவரது மனைவியாக நடித்தேன். 



    ஒரு நாள் படப்பிடிப்பில் நாங்கள் இருவரும் ரொமான்ஸ் செய்வது போன்ற ஒரு காட்சி இருந்தது. அதில் ஒரு நீளமான வசனத்திற்கு பிறகு நானும், அவரும் கட்டிப் பிடித்து நடிக்க வேண்டி இருந்தது. அந்த காட்சியை நாங்கள் ஒத்திகை பார்த்த போது, அர்ஜுன் திடீரென என்னை கட்டிப்பிடித்தார். என்னிடம் எதுவும் சொல்லாமல், என் அனுமதியை பெறாமல் என்னை கட்டி அணைத்து எனது பின் பகுதியில் மேலும், கீழும் அவர் கையை படறவிட்டார். என்னை மேலும் இறுக்கி அணைத்து, வேண்டுமென்றால் இந்த காட்சியை வைத்துக் கொள்ளலாமா என்று இயக்குநரிடம் கேட்டார்.

    சினிமாவில் காட்சிகள் இயல்பாக வர வேண்டும் என்பதற்காக இப்படி நடந்து கொள்வது தவறு. அவர் சினிமாவுக்காக அப்படி நடந்து கொண்டிருந்தாலும் அது தவறு தான். அவர் செய்தது எனக்கு அது பிடிக்கவில்லை, என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. 

    இவ்வாறு கூறியுள்ளார். #MeToo #ShruthiHariharan #ArjunSarja



    ×