search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rakhi Sawant"

    • இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராக்கி சாவந்த்.
    • சமீபத்தில் இவர் தனது காதலனை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

    பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த், தமிழில் 'என் சகியே', 'முத்திரை' கம்பீரம் உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். கடந்த ஆண்டு ஆதில் துரானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன் அதில் துரானிக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டி, மும்பை ஒஷிவாரா போலீசில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், துரானி தன்னை அடித்ததாகவும், முகத்தில் திராவகம் வீசிவிடுவேன், சாலை விபத்து மூலம் கொன்று விடுவேன் என கணவர் மிரட்டியதாகவும், தொழுகை செய்யுமாறு கட்டாயப் படுத்தியதாகவும் கூறியிருந்தார்.

     

    அதன்பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தேரியில் உள்ள வீட்டில் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், ரூ.2½ லட்சம் மதிப்பிலான நகை மாயமாகியுள்ளது. காவலாளி மூலம் கணவர் அதில் துரானி வீட்டுக்கு வந்து சென்றதை தெரிந்து கொண்ட அவர், நேற்று முன்தினம் மீண்டும் ஓஷிவாரா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். ராக்கி சாவந்த் அளித்த புகார்கள் தொடர்பாக போலீசார் அதில் துரானி மீது மோசடி, காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று போலீசார் புகார் தொடர்பாக ஆதில் துரானியிடம் விசாரணை நடத்தினர்.




    இது தொடர்பாக ஒஷிவாரா போலீஸ் நிலையத்திற்கு வெளியில் நடிகை ராக்கி சாவந்த் கூறியதாவது:- என் கணவருக்கு எதிராக நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் எனது நகை, பணத்தை திருடிவிட்டார். என்னை ஏமாற்றிய அவரை விவாகரத்து செய்ய உள்ளேன். இனி அவருடன் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த ராக்கி திடீரென மயக்கம் அடைந்து சுருண்டு விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராக்கி சாவந்த்.
    • இவர் தனது காதலனை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராக்கி சாவந்த். இவர் அரசியல், நடனம், மாடல் அழகி, நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல துறைகளில் முத்திரை பதித்தவர். தற்போது 44 வயதாகும் ராக்கி சாவந்த் கடந்த 2019-ம் ஆண்டு ரிதீஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 2022-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

     

    ராக்கி சாவந்த் - ஆதில் கான்

    ராக்கி சாவந்த் - ஆதில் கான்


    ரிதீஷ் சிங்கை விவாகரத்து செய்த ராக்கி சாவந்த், மைசூருவைச் சேர்ந்த ஆதில் என்பவருடன் பழகி வந்தார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இருவருக்கும் திருமணம் நடந்து விட்டதாகவும், மிகவும் எளிமையாக இவர்களது திருமணம் நடந்ததாகவும், தங்களது திருமணத்தை அவர்கள் பதிவு செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    • ஷெர்லின் சோப்ராவும், ராக்கி சாவந்த் மீது மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • என்னைப்பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டு வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்தி கவர்ச்சி நடிகைகள் ராக்கி சாவந்த், ஷெர்லின் சோப்ரா ஆகியோர் ஒருவருக்கொருவர் தரக்குறைவாக பேசி வருகிறார்கள். ராக்கி சாவந்துக்கு 10 ஆண் நண்பர்கள் உள்ளனர் என்று ஷெர்லின் சோப்ரா கூறினார். தன்னை இழிவுபடுத்திய ஷெர்லின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராக்கி சாவந்த் மும்பை போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ஷெர்லின் சோப்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

     

    ராக்கி சாவந்த் - ஷெர்லின் சோப்ரா

    ராக்கி சாவந்த் - ஷெர்லின் சோப்ரா

    இந்நிலையில் ஷெர்லின் சோப்ராவும், ராக்கி சாவந்த் மீது மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ''ராக்கி சாவந்த் என்னைப்பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டு உள்ளார். வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இழிவாக பேசி உள்ளார். பொது இடத்தில் பெண்களை இழிவுபடுத்தி பேச சட்டத்தில் இடம் இல்லை. எனவே ராக்கி சாவந்த் மற்றும் அவரது வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் ராக்கி சாவந்த் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • என் சகியே, முத்திரை ஆகிய தமிழ் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் ராக்கி சாவந்த்.
    • இவர் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில், என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை 2019-ல் ரகசிய திருமணம் செய்து கொண்டார். திருமணமான தகவலை இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார். ரிதேஷ், ஏற்கனவே திருமணம் ஆனவர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரிதேஷை ராக்கி சாவந்த் பிரிந்தார். தற்போது ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து வருகிறார்.

    அடிக்கடி எதையாவது கூறி சர்ச்சையில் சிக்கி கொள்ளும் ராக்கி சாவந்த், தற்போது கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை வயாகராவுடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார். மும்பை விமான நிலையத்தில் பூஸ்டர் தடுப்பூசி பக்க விளைவுகள் குறித்து ராக்கி சாவந்த் பேசினார்.

    ராக்கி சாவந்த்

    ராக்கி சாவந்த்

    அவர் பூஸ்டர் தடுப்பூசி எடுத்து கொண்டதாகவும் ஆனால் இரண்டு நாட்களாக தூங்க முடியவில்லை. என் இதயத்துடிப்பு மிகவும் வேகமாக உள்ளது. நான் சோர்வடைந்து இருக்கிறேன். என் முகம் வீங்கி விட்டது. அரை மணி நேரம் கூட தூங்க முடியாமல் சிரமப்படுகிறேன். நான் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறேன். கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இளம் வயதினருக்கு ஏற்றதல்ல என்பதால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் இந்த பூஸ்டர் டோஸ் ஷிலாஜித் அல்லது வயாகராவை ஒத்திருக்கிறது என அவர் கூறினார். இவரின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் ஆதில் கான் என்பவரை காதலித்து வருகிறார்.
    • திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாலும் எனக்கு கவலை இல்லை என நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்து உள்ளார்.

    பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கும், நடிகர் ரன்பீர் கபூருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதாக ஜூன் 27ம் தேதி சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தார். இது குறித்து பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் போன ராக்கி சாவந்திடம் கேட்கப்பட்டது. தன் காதலரான ஆதிலுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது ராக்கியிடம் செய்தியாளர்கள் இந்த கேள்வியை எழுப்பினார்கள்.

    ராக்கி சாவந்த்

    ராக்கி சாவந்த்

    அதற்கு பதிலளித்த ராக்கி, நான் எப்பொழுது கர்ப்பமாவேன்? திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாலும் எனக்கு கவலை இல்லை. நான் கர்ப்பமான மறுநாளே திருமணம் செய்து கொள்வேன். அனைத்தையும் சரியாக்கும் ஒரு நல்ல பிள்ளையை பெற்றெடுப்பேன் என்றார். வழக்கம் போல், ராக்கி இந்த செய்தியை டிரெண்டாக்கும் வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டதாக வலைத்தளத்தில் பலர் பதிவிட்டு வருகின்றனர். 

    • பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சவந்த் மீது முன்னாள் கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு.
    • எனது பணத்தில் கார், பங்களா எல்லாம் வாங்கி கொண்டு மற்றொரு நபரை வீட்டில் வைத்து வாழ்கிறார்.

    இந்தி திரை துறையில் பிரபல கவர்ச்சி நடிகையாக அறியப்படுபவர் ராக்கி சவந்த். இவரது முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங். தனது சமூக கணக்குகளை முடக்கி விட்டார் என கூறி ரித்தேஷ் மீது போலீசில் நேற்று புகார் கூறினார். இதற்காக அவர் தனது காதலரான அடில் கானுடன் புகார் அளிக்க சென்றார். அவர் திரும்பி வரும்போது, எனது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் மெயில் கணக்கை கூட முடக்கம் செய்து விட்டார் என ரித்தேஷ் மீது குற்றச்சாட்டாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

    ராக்கி சவந்த்

    ராக்கி சவந்த்

    அவர் பேசும்போது மனம் உடைந்து அழுது விட்டார். ராக்கி சவந்த் மற்றும் அவரது முன்னாள் கணவர் ரித்தேஷ் இருவரும் பிக் பாஸ் சீசன் 15ல் ஒன்றாக பங்கேற்றனர். வைல்ட் கார்டு வழியே உள்ளே நுழைந்த ரித்தேஷ், ஒரு சில வாரங்கள் தங்கி விட்டு பின்னர் பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறினார். இதன்பின்பு இருவரும் மனம் ஒத்து போகாமல் பிரிந்தனர். இதனை கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தில் ராக்கி சவந்த் உறுதிப்படுத்தினார். முதல் திருமணம் நடந்து, மனைவியிடம் விவாகரத்து பெறாமல், அதனை மறைத்து தன்னை காதலித்து உள்ளார் என்று ராக்கி குற்றச்சாட்டாகவும் கூறியுள்ளார்.

    ராக்கி சவந்த்

    ராக்கி சவந்த்

    இந்த நிலையில், ராக்கி சவந்தின் சமூக ஊடக புகார் பற்றி பேசிய முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங், அவரது குற்றச்சாட்டுகளுக்கு சட்டப்பூர்வ முறையில் பதிலளிப்பேன். நிலைமை வெளிப்படையாக தெரிகிறது. கோடிக்கணக்கில் அவருக்காக பணம் வாரி இறைத்திருக்கிறேன். அதனை பெற்று கொள்ளும்போது, அவருக்கு ஒரு பிரச்னையும் இல்லை. நான் செலவு செய்வது நின்றவுடன், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்துகிறார். இன்ஸ்டாகிராம் பதிவால் உறவு முடிந்து போனதுபற்றி இதற்கு முன் நீங்கள் கேள்விபட்டு உள்ளீர்களா? என அவர் கேட்டுள்ளார். வருங்காலத்தில், அவதூறு ஏற்படுத்த என் மீது இன்னும் பல குற்றச்சாட்டுகளை கூட அவர் கூறுவார். அவரும், அடிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல விரும்பினோம் என்று கூட சொல்வார். அவரால் இந்த நாடகம் போட மட்டுமே முடியும்.

    ராக்கி சவந்த்

    ராக்கி சவந்த்

    அவரை விட்டு விலகி விட்டேன். வாழ்வில் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். 3 ஆண்டுகளாக அவர் என்னை பயன்படுத்தி வந்துள்ளார். அவரிடம் ஒரு கார் கூட கிடையாது. வீட்டில் எந்த பொருட்களும் கிடையாது. அவரது வீட்டில் வைத்திருக்கும் பொருட்கள் எல்லாம் எனது பணத்தில் வாங்கியவை. நான் வாங்கி வைத்த பொருட்களை பயன்படுத்தி கொண்டு, வெட்கமேயில்லாமல் வீட்டில் சட்டவிரோத வகையில் மற்றொரு நபரை அவர் வைத்திருக்கிறார் என நடிகை ராக்கி சவந்த் மீது அவரது முன்னாள் கணவரான ரித்தேஷ் சிங் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

    புதிய காதலன் ஆதில் கான் துரானி, தான் ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் சரியில்லை என்றும், ‘அதிக மூடிய’ ஆடைகளையே அணிய வேண்டும் என விரும்புவதாகவும் ராக்கி சாவந்த் கூறினார்.
    பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தன் காதல் கணவரான ரித்தேஷை பிரிந்துவிட்டதாக அண்மையில் அறிவித்தார். அதன்பிறகு ஆதில் கான் துரானி என்பவரை காதலிப்பதாக கடந்த வாரம் அறிவித்தார். ஆதிலின் குடும்பம் நான் கவர்ச்சியான உடை அணிவதால் என்னை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் ஆடை அணிவது அந்த குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என கூறி இருந்தார். இந்த நிலையில் காதலன் ஆதில் கான் துரானி உடனான உறவின் காரணமாக ராக்கி சாவந்த் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஆதில் கான் தனக்கு பிஎம்டபிள்யூ கார் கொடுத்ததைப் பற்றி அவர் பதிவிட்டுள்ளார், மேலும் ஆதில் துபாயில் தனது பெயரில் ஒரு வீட்டை வாங்கி உள்ளார். மற்ற அனைத்தையும் விட அவரது அன்பை தான் அதிகம் மதிக்கிறேன். 

    ராக்கி சாவந்த்
    ராக்கி சாவந்த்

    ஒரு ஆண் தனது காதலியை உறவின் ஆரம்பத்தில் தனது குடும்பத்திற்கு அறிமுகப்படுத்துவது பெரும்பாலும் இல்லை. இருப்பினும், ஆதில் மற்றும் அவரது குடும்பத்தினருடன் என்னை அறிமுகபடுத்தினார். அவர் தனது குடும்பத்தில் இருந்து சில 'எதிர்ப்பு' இருப்பதாக ஒப்புக்கொண்டார், தனது கடந்த காலத்தைப் பற்றி அவரிடம் கூறியதற்காகவும். எதையும் மறைக்காமல் இருந்ததற்காகவும் பாராட்டினார். வேலையை விட்டு விலகுவது போன்ற எந்த கட்டுப்பாடுகளையும் ஆதில் தன் மீது விதிக்கவில்லை. ஆனால் சில விஷயங்கள் உள்ளன. கவர்ச்சி குறைவான மற்றும் அதிக மூடிய ஆடைகளை அணிய வேண்டும் என்று ஆதில் விரும்புகிறார் என நான் நினைக்கிறேன் என ராக்கி சாவந்த் கூறினார்.
    என் காதல் எனக்கு மட்டும் தான், நாங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என முன்னாள் காதலிக்கு கவர்ச்சி நடிகை கூறி உள்ளார்.
    பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், தன் காதல் கணவரான ரித்தேஷை பிரிந்துவிட்டதாக அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் ஆதில் கான் துரானி என்பவரை காதலிப்பதாக கடந்த வாரம் அறிவித்தார். வீடியோ கால் மூலம் தன் காதலரை செய்தியாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் ராக்கியை விட ஆறு வயது இளையவர். ராக்கிக்கு பி.எம்.டபுள்யூ காரை பரிசளித்தார் ஆதில். ராக்கி சாவந்துக்கு ரோஷினா தல்வாரி என்பவர் போன் செய்து பேசியிருக்கிறார். 

    ராக்கி சாவந்த்
    ராக்கி சாவந்த்

    மைசூரை சேர்ந்த ரோஷினா கூறியதாவது, நானும், ஆதில் கானும் 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம் என்றார். மேலும் தன் காதலரிடம் இருந்து தள்ளி இருக்குமாறு சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ரோஷினா. தானும், ஆதிலும் நேரம் செலவிட்டது குறித்து விவரித்துள்ளார். ரோஷினா போன் செய்ததும் ஆதிலை அழைத்து கேட்டிருக்கிறார் ராக்கி சாவந்த். 

    ராக்கி சாவந்த்
    ராக்கி சாவந்த்

    அதற்கு ஆதில் கானோ, ரோஷினா தன் முன்னாள் காதலி என்று பதில் அளித்திருக்கிறார். ஆதில் கான் தற்போது ராக்கியை காதலிப்பது ரோஷினாவுக்கு பிடிக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ரோஷினா பற்றி ராக்கி கூறியதாவது, ரோஷினா எனக்கு போன் செய்ததால் எதுவும் மாறப் போவது இல்லை. ஆதில் எனக்கு மட்டும் தான். ரோஷினா அவரின் முன்னாள் காதலி. ஆதிலும், நானும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்றார். மற்றொரு பேட்டியில் ஆதிலின் குடும்பம் நான் கவர்ச்சியான நபர் என்பதால் என்னை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் ஆடை அணிவது அந்த குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என கூறி உள்ளார்.
    மல்யுத்த வீராங்கனையுடன் சவால் விட்டு அடிவாங்கிய நடிகை ராக்கி சாவந்த், எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #RakhiSawant
    தமிழில் கம்பீரம் படத்தில் நடித்தவர் ராக்கி சாவந்த். என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீ தத்தாவுக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டினர்.

    இந்த நிலையில் சண்டிகாரில் உள்ள பஞ்சபுலா என்ற இடத்தில் நடந்த பெண்கள் மல்யுத்த போட்டியை காண ராக்கிசாவந்த் சென்று இருந்தார். ஸ்டேடியத்தின் முன்பகுதியில் உட்கார்ந்து போட்டியை ரசித்தார். மல்யுத்தத்தில் எல்லோரையும் வென்ற ரொபல் என்ற வீராங்கனை பார்வையாளர்களை நோக்கி என்னுடன் மோத தைரியம் உள்ள பெண் யாராவது இருக்கிறீர்களா? என்று சவால் விடுத்தார்.



    உடனே ராக்கி சாவந்த் மல்யுத்த வளையத்துக்குள் குதித்து மோதுவதற்கு நான் தயார். ஆனால் என்னைபோல் உன்னால் நடனம் ஆட முடியுமா? என்று எதிர் சவால் விடுத்தார். அதை ரொபல் ஏற்றதும் இருவரும் மோதினார்கள்.

    சில நொடிகளிலேயே ராக்கி சாவந்தை ரொபல் தனது தலைக்கு மேலே தூக்கி வேகமாக தரையில் அடித்தார். இதில் ராக்கி சாவந்துக்கு காயம் ஏற்பட்டு மயக்கமானார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் பதறியபடி ஓடிப்போய் முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.



    கைத்தாங்கலாக அழைத்துச் சென்று தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ராக்கி சாவந்துக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு சவால் விட்டபடி ரொபல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி விட்டு ஸ்டேடியத்தில் இருந்து வெளியேறினார். 
    ‘மிஸ் இந்தியா’ பட்டத்துக்காக நடிகை தனுஸ்ரீ படுக்கையை பகிர்ந்தார் என்று நடிகை ராக்கிசாவந்த் பரபரப்பு புகார் கூறியிருக்கிறார். #MeToo #Tanushree #RakhiSawant
    பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது முன்னாள் இந்திய அழகியும், நடிகையுமான தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது மீடூ இயக்கம் மூலம் வெளிவந்த முதல் குற்றச்சாட்டு ஆகும்.

    அதன்பிறகு மீடூ இயக்கத்தில் நடிகர்கள், டைரக்டர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த பாலியல் குற்றச்சாட்டின்போது நானாபடேகருக்கு ஆதரவாக நடிகை ராக்கி சாவந்த் செயல்பட்டார்.

    இந்த நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. தனுஸ்ரீ தத்தா பற்றி ராக்கி சாவந்த் அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து ராக்கி சாவந்த் கூறியதாவது:-

    தனுஸ்ரீ தத்தா 10 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் லெஸ்பியன் உறவு கொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தனுஸ்ரீ ஆண்கள் மற்றும் பெண்களுடன் உறவு கொள்ளும் குணம் உள்ளவர். பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அனைவரும் தங்களின் மீடூ கதைகளுடன் விரைவில் வெளியே வருவார்கள்.



    நான் அப்படிப்பட்டவள் இல்லை. ஆனால் தனுஸ்ரீ தான் என்னை ஓரினச் சேர்க்கையாளராக மாற்றினார். நான் பெரிய ஆளாக வர மாட்டேன் என்று நினைத்து அவர் என்னை பயன்படுத்திக் கொண்டார். அவர் செய்ததை எல்லாம் நான் வெளியே சொல்ல மாட்டேன் என்று நினைத்து விட்டார். அவர் நினைத்தது தவறு.

    தனுஸ்ரீ தத்தா படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா அழகிப்பட்டத்தை வென்றார். தனுஸ்ரீயால் என் பெயர் கெடுகிறது. எனக்கு இந்தியாவில் நல்ல பெயர் உள்ளது.

    எனக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. இந்தியர்கள் என் மீது மதிப்பு வைத்துள்ளனர். ஆனால் தனுஸ்ரீ என் இமேஜை டேமேஜ் செய்கிறார். அவர் அமெரிக்காவில் இருந்து போலியான மீடூ இயக்கத்தை கொண்டு வந்து என் இமேஜை கெடுக்கிறார். அவருக்கு இந்தியாவை பிடிக்காது. அமெரிக்கா தான் பிடிக்கும்.

    தனுஸ்ரீ தத்தா நன்றாக சாப்பிட்டு குண்டாகி அசிங்கமாக உடலுடன் இருக்கிறார். அவருக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அவரிடம் பணம் இல்லாததால் அனைத்தும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தனுஸ்ரீ தத்தாவிடம் “25 பைசா” இழப்பீடு கேட்டு நடிகை ராக்கி சாவந்த் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். #MeToo #RakhiSawant #TanushreeDutta
    காலா படத்தில் நடித்தவரும், பிரபல இந்தி நடிகருமான நானா படேகர் 2008-ம் ஆண்டு நடந்த ஒரு படப்பிடிப்பில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக, பாலியல் புகார் கூறி இந்தி திரையுலகில் நடிகை தனுஸ்ரீதத்தா பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

    இந்தப் புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், தனுஸ்ரீதத்தா நானா படேகருக்கு எதிராக மும்பை போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே நடிகர் நானா படேகருக்கு ஆதரவாக நடிகை ராக்கி சாவந்த் களம் இறங்கினார். இவர் ‘தனுஸ்ரீதத்தா ஒரு பொய்யர்' எனக் கூறியதுடன், அவர் போதைக்கு அடிமையானவர். ஓரின சேர்க்கையாளர். என்னிடம் தவறாக நடந்துகொண்டார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பாக ராக்கி சாவந்துக்கு எதிராக ரூ.10 கோடி கேட்டு ஒரு அவதூறு வழக்கை தனுஸ்ரீதத்தா தொடர்ந்து உள்ளார்.



    மேலும் சமீபத்தில் தனுஸ்ரீ தத்தா அளித்த பேட்டியிலும் ராக்கி சாவந்தை கடுமையாக தாக்கி பேசியதாக தெரிகிறது. இந்த நிலையில் தனுஸ்ரீ தத்தாவிடம் “25 பைசா” இழப்பீடு கேட்டு ராக்கி சாவந்த் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இதில் “ நான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி நல்லபெயரை சம்பாதித்து வைத்திருக்கிறேன். சமீப காலமாக தனுஸ்ரீ தத்தா கூறிவரும் மோசமான மற்றும் இழிவுபடுத்தும் பேச்சுகளால் எனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டதுடன், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இதை மீண்டும் ஈடுசெய்ய பல ஆண்டுகள் ஆகும்.

    எனவே எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய தனுஸ்ரீ தத்தா “25 பைசா” இழப்பீடு வழங்கவேண்டும். மேலும் ஊடகங்கள் முன் பகிரங்கமாக மன்னிப்பு கோர கோர்ட்டு உத்தரவிடவேண்டும்” என கூறியுள்ளார். #MeToo #RakhiSawant #TanushreeDutta

    லெஸ்பியன் என்று கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்துக்கு கூறியதற்கு நடிகை தனுஸ்ரீ தத்தா பதிலடி கொடுத்துள்ளார். #TanushreeDutta #RakhiSawant
    தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.

    இது இந்தி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த பரபரப்பான நிலையில் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் பல நடிகர்-நடிகைகள் அவருக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் அந்த படத்தில் அந்த பாடலில் தனுஸ்ரீக்கு பதில் நடித்த நடிகை ராக்கி சாவந்த், தனுஸ்ரீ தத்தா ஒரு பொய்யர் என கூறினார். மேலும் அவர் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் இது தொடர்பாக ராக்கி சாவந்து எதிராக ரூ 10 கோடி கேட்டு ஒரு அவதூறு வழக்கை தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து உள்ளார்.

    இந்த நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள ராக்கி சாவந்த் ரூ. 50 கோடி கேட்டு வழக்கு தொடரப் போவதாக தனுஸ்ரீ தத்தாவுக்கு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்து இருந்தார்.



    மேலும் ராக்கி ஷாவந்த் சீ டூ என்ற ஒரு இயக்கத்தை தொடங்கி உள்ளார். இது குறித்து அவர் பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:- தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன். அதை அவரே என்னிடம் தெரிவித்தார். அவர் ஒரு போதை அடிமை. ஒரு முறை அவர் என்னை ரேவ் பார்ட்டிக்கு அழைத்தார். அங்கு அவர் என்னுடன் லெஸ்பியன் உறவு கொள்ள முயன்றார். அவர் மட்டுமல்ல அவரது தோழிகளும் என்னை லெஸ்பியன் உறவுக்கு அழைத்தார்கள். இப்படிப்பட்ட தனுஸ்ரீ தத்தா என் மீது வழக்கு போட்டு உள்ளார் என கூறினார்.

    இது குறித்து பதில் அளித்துள்ள தனுஸ்ரீ தத்தா, ‘நான் ஒரு போதை மருந்து அடிமையாக இல்லை, நான் புகைபிடிப்பதில்லை அல்லது குடிக்க மாட்டேன், லெஸ்பியன் அல்ல. எனவே என்னை வக்கிரமாக சித்தரித்து என் வாயை மூட முயற்சிக்கிறது. இது தெளிவாக வேலை செய்யவில்லை. நமது சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும். இத்தகைய தீவிர இயக்கத்தில் நகைச்சுவையை உருவாக்காதே என கூறி உள்ளார்.
    ×