search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கணவர் மீது அடுக்கடுக்கான புகார்: பேசிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த பிரபல நடிகை
    X

    கணவர் மீது அடுக்கடுக்கான புகார்: பேசிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த பிரபல நடிகை

    • இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராக்கி சாவந்த்.
    • சமீபத்தில் இவர் தனது காதலனை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

    பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த், தமிழில் 'என் சகியே', 'முத்திரை' கம்பீரம் உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். கடந்த ஆண்டு ஆதில் துரானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன் அதில் துரானிக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டி, மும்பை ஒஷிவாரா போலீசில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், துரானி தன்னை அடித்ததாகவும், முகத்தில் திராவகம் வீசிவிடுவேன், சாலை விபத்து மூலம் கொன்று விடுவேன் என கணவர் மிரட்டியதாகவும், தொழுகை செய்யுமாறு கட்டாயப் படுத்தியதாகவும் கூறியிருந்தார்.

    அதன்பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தேரியில் உள்ள வீட்டில் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், ரூ.2½ லட்சம் மதிப்பிலான நகை மாயமாகியுள்ளது. காவலாளி மூலம் கணவர் அதில் துரானி வீட்டுக்கு வந்து சென்றதை தெரிந்து கொண்ட அவர், நேற்று முன்தினம் மீண்டும் ஓஷிவாரா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். ராக்கி சாவந்த் அளித்த புகார்கள் தொடர்பாக போலீசார் அதில் துரானி மீது மோசடி, காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று போலீசார் புகார் தொடர்பாக ஆதில் துரானியிடம் விசாரணை நடத்தினர்.




    இது தொடர்பாக ஒஷிவாரா போலீஸ் நிலையத்திற்கு வெளியில் நடிகை ராக்கி சாவந்த் கூறியதாவது:- என் கணவருக்கு எதிராக நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் எனது நகை, பணத்தை திருடிவிட்டார். என்னை ஏமாற்றிய அவரை விவாகரத்து செய்ய உள்ளேன். இனி அவருடன் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த ராக்கி திடீரென மயக்கம் அடைந்து சுருண்டு விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×