search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நானும் பாதிக்கப்பட்டேன் - மீ டூ பற்றி மனம்திறந்த அதிதி ராவ்
    X

    நானும் பாதிக்கப்பட்டேன் - மீ டூ பற்றி மனம்திறந்த அதிதி ராவ்

    இந்தியாவிலும் ‘மீ டு’ பற்றி பல்வேறு புகார்கள் வெளியாகி வரும் நிலையில், தானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக அதிதி ராவ் கூறியுள்ளார். #AditiRaoHydari #MeToo
    மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அதிதிராவ் ஹிடாரி. தற்போது உதயநிதியுடன் சைக்கோ படத்திலும், தனுஷ் இயக்கி நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கிலும் கவனம் செலுத்துகிறார். 

    அதிதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பிரச்சினை பற்றி வெளிப்படையாக கருத்து கூறியுள்ளார்.

    ’என்னை ரொம்பவே பொத்திப் பொத்தி வளர்த்துவிட்டார்கள். அதனால் சினிமா துறைக்கு வந்தபோது ரொம்ப அப்பாவியாக இருந்தேன். அட்ஜஸ்ட் செய்வது பற்றிய வதந்திகள் எல்லாமே உண்மை என்பது எனக்கு தெரியாது. அது எல்லாம் நடந்து கொண்டிருந்தது. எனக்கு அப்படி ஒன்றும் மோசமாக நடக்கவில்லை. ஒரே ஒரு சம்பவம் நடந்தது. அதனால் நான் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இருந்தாலும் இது அல்லது அது என்று எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 

    நான் அப்படி ஒன்றும் பட வாய்ப்பு தேவையில்லை என்று நினைத்து நடையை கட்டிவிட்டேன். அதன்பிறகு எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன். அந்த சம்பவத்திற்கு பிறகு 8 மாதங்களாக எனக்கு வேலை இல்லை. 
    பாதிக்கப்பட்டவர்கள் அதுகுறித்து தைரியமாக வெளியே பேச வேண்டும். இல்லாவிட்டால் பணம் வாங்கி இருப்பார் என்றோ, மிரட்டி பணியவைத்து இருப்பார்கள் என்றோதான் வெளியே பேசுவார்கள். 

    நமக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்ய வேண்டும். இப்போது ‘மீ டு’ இயக்கம் வேறு திசையில் திரும்பி கொண்டிருக்கிறது. இவ்வாறு அதிதிராவ் கூறினார். #AditiRaoHydari #MeToo

    Next Story
    ×