search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sruthi Hariharan"

    மீடூ இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கொடுத்த ஸ்ருதி ஹரிஹரன், என்னுடன் இணைந்து பணியாற்ற தயங்குகிறார்கள் என்று கூறியிருக்கிறார். #SruthiHariharan #MeToo
    நிபுணன் படத்தில் நடித்த போது படப்பிடிப்பு தளத்தில் தவறாக நடந்து கொண்டார் என அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் குற்றம் சாட்டினார். இதற்கு அர்ஜுன் மறுப்பு தெரிவித்ததோடு அவர் மீது வழக்கு தொடர்ந்தார். இதனால் ஸ்ருதி ஹரிஹரனுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்துள்ளன.

    இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “இது என்னைக் காயப்படுத்தினாலும் பெருமை கொள்ளவும் செய்கிறது. நான் துன்பப்பட்டாலும் எதிர்காலத்தில் சில பெண்களாவது பயப்படாமல் துணிந்து பேசுவார்கள். இதை நடைமுறையில் எப்படி எதிர்கொள்வது என்பதைப் பார்க்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு வரை வாரத்திற்கு மூன்று பட வாய்ப்புகளாவது எனக்கு வரும்.

    நான் வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பேன். வழக்கமாக நமது படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றால் தான் அடுத்த வாய்ப்புகள் வரும். செப்டம்பர் மாதம் எனது பெரிய படம் ஒன்று வெளியானது. ஆனால் அதன் பின் வாய்ப்புகள் வருவது நின்றுவிட்டது. படவாய்ப்புகள் மிகவும் குறைந்துவிட்டன. என்னுடன் இணைந்து பணியாற்ற தயங்குகிறார்கள்.



    ஆனால் இயக்குனர்கள் நம்பிக்கையளிக்கும் விதமாக எனக்காக எழுதுகிறார்கள். இதன் மூலம் எனக்கு சில எதிரிகள் உருவாவார்கள் என்பது தெரியும். அதனால் இதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து போராடுவேன்’ என்றார்.
    நடிகர் அர்ஜுன் மீது கொடுத்த பாலியல் புகாரால் நடிகை ஸ்ருதியின் ரகசியம் வெளியாகி இருக்கிறது. #Arjun #SruthiHariharan #MeToo
    நிபுணன் படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இரவு விருந்துக்கு அழைத்ததாகவும் நடிகை ஸ்ருதி ஹரிகரன் பரபரப்பு புகார் கூறினார். மீடூ இயக்கம் மூலம் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அர்ஜுன் ஸ்ருதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இருவரும் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்துள்ளனர்.

    ஸ்ருதி போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் தான் திருமணமானவர் என்றும் கணவர் பெயர் ராம்குமார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காரணம் ஸ்ருதி தான் திருமணமானவர் என்று இதுவரை வெளிப்படுத்தியதே இல்லை. ஸ்ருதிக்கு திருமணம் முடிந்துவிட்டதாக கடந்த ஆண்டே ஊடகங்களில் செய்தி வந்தது. ஆனால் ஸ்ருதி அதை மறுத்து வந்தார். போலீசில் புகார் செய்ததன் மூலம் ஸ்ருதி ரகசியத்தை வெளியிட வேண்டியதாகிவிட்டது.

    பொதுவாக நடிகைகளுக்கு திருமணமானால் வாய்ப்புகள் குறைந்துவிடும். வாய்ப்புகளுக்காக ஸ்ருதி பொய் கூறியிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

    சுருதி பொய் சொன்னது வெளிப்பட்டிருப்பதால் இந்த விவகாரத்தில் சுருதிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேரியருக்காக பொய் சொன்னவரை இந்த வி‌ஷயத்தில் எப்படி நம்புவது? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோபத்துடன் பதிவிட்டு வருகிறார்கள்.
    நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கொடுத்த புகாரின் அடிப்படையில், நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Arjun #MeToo
    அர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’.  இந்த படத்தில் பெங்களூருவை சேர்ந்த ஸ்ருதி ஹரிஹரன் கதாநாயகியாக நடித்தார்.  இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் கூறினார்.

    ஸ்ருதி ஹரிஹரன் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து இருந்தார். “நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. ஸ்ருதி ஹரிஹரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள்” என்று அவர் விளக்கம் அளித்து இருந்தார்.

    மேலும் தமது திரையுலக வாழ்வில் பெற்ற பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், குற்றம்சாட்டிய நடிகை ஸ்ருதி ஹரிஹரனுக்கு எதிராக பெங்களூர் நகர் சிவில் கோர்ட்டில் ரூ. 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்தார்.



    இந்நிலையில், நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிபுணன் படத்தில் நடித்த போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    நடிகர் அர்ஜூன் மீது 354 ஏ, 509, 506, 354 ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    நிபுணன் படத்தில் தன்னுடன் நடிக்கும் போது அர்ஜுன் தவறாக நடந்துக்கொண்டார் என்று ஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுத்துள்ளார். #Arjun
    இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து ‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திரையுலகம் உட்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் வருகின்றன.

    சமீபத்தில் குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சினி உள்ளிட்டோரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இந்த நிலையில், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பிரபல நடிகர் அர்ஜுன், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பாலியல் குற்றச்சாட்டை கூறினார். 



    இதற்கு நடிகர் அர்ஜுன் தனது இணையதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தாம் எந்த பெண்ணிடமும் இதுவரை தவறாக நடந்ததில்லை எனவும், ஸ்ருதியின் குற்றச்சாட்டின் பின்னணியில் யாரோ இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
    ×