search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajkumar Hirani"

    • ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டங்கி’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'டங்கி'. இந்த படத்தில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேக கதாபாத்திரங்களுடன் நடித்துள்ளனர்.


    ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள். 'டங்கி' திரைப்படம் டிசம்பர் 21-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி குறிப்பிடத்தக்க வகையில் அதன் முத்திரையைப் பதித்துள்ளது.


    டங்கி போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'டங்கி' திரைப்படம் ரூ.323.77 கோடியை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • 'டங்கி' திரைப்படம் டிசம்பர் 21-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
    • 'டங்கி' திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்து, பாக்ஸ் ஆபிஸில் தனது இருப்பிடத்தை உறுதி செய்தது.

    ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'டங்கி'. இந்த படத்தில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேக கதாபாத்திரங்களுடன் நடித்துள்ளனர்.


    ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள். 'டங்கி' திரைப்படம் டிசம்பர் 21-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி குறிப்பிடத்தக்க வகையில் அதன் முத்திரையைப் பதித்துள்ளது.


    'டங்கி' திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்து, பாக்ஸ் ஆபிஸில் தனது இருப்பிடத்தை உறுதி செய்தது. தற்போது இந்த திரைப்படம் 250 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. 'பதான்' மற்றும் 'ஜவான்' ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு இந்த ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'டங்கி' திரைப்படம் இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்த மூன்றாவது திரைப்படமாகும்.


    டங்கி போஸ்டர்

    இத்திரைப்படம் சுமார் 29.25 கோடி ரூபாய் முதல் 30.25 கோடி ரூபாய் வரை வசூலித்து, ஞாயிற்றுக்கிழமையன்று அதன் மொத்த வசூல் 102.50 கோடி ரூபாயாக இருந்தது. இதன் மூலம் நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த ஷாருக்கானின் பத்தாவது படமாக 'டங்கி' இடம்பெற்றது. இந்த திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இத்திரைப்படம் 250 கோடி ரூபாயை எட்டி, 250 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருக்கிறது.

    • நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டங்கி’.
    • இப்படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார்.

    ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'டங்கி'. இந்த படத்தில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேக கதாபாத்திரங்களுடன் நடித்துள்ளனர்.


    ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள். 'டங்கி' திரைப்படம் டிசம்பர் 21-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.



    இந்நிலையில், 'டங்கி' திரைப்படம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கிவிட்டது. இத்திரைப்படம் இதுவரை ரூ.30 கோடியை வசூலித்திருந்தாலும், முதல் நாளில் இருந்ததை விட வார இறுதியில் 40 முதல் 50 சதவீதம் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. குடும்பங்கள் 'டங்கி' திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். அழகான ரொமான்ஸ் டிராமா திரைப்படமான 'டங்கி' பாக்ஸ் ஆபிஸிலும் கலக்க ஆரம்பித்துள்ளது.

    • நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ’டங்கி’.
    • இப்படம் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டங்கி'. இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் டாப்சி பன்னு, போமன் இரானி, விக்கி கவுசல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, 'டங்கி' திரைப்படம் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், டங்கி படத்தின் டிராப்-4, ராஜ்குமார் ஹிரானியின் அன்பான உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது. ரயிலில் நடிகர் ஷாருக்கான் பயணிப்பதுடன் தொடங்கும் கதையானது, அதைத் தொடர்ந்து படத்தில் நடைபெறும் சாகசத்துக்கான தொனியில் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது.


    பஞ்சாபில் உள்ள ஒரு அழகிய கிராமத்துக்கு சென்று நண்பர்கள் மனோ, சுகி, புக்கு, மற்றும் பாலி ஆகிய இருவரும் லண்டனுக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற பொதுவான கனவைக் கொண்ட குழுவைச் சந்திக்கும் ஹார்டியுடன் (நடிகர் ஷாருக்கானின் கதாபாத்திரம்) தொடங்கிறது. அற்புதமான விசித்திரக் கதாபாத்திரங்களை இந்த டிராப்-4 அறிமுகப்படுத்துகிறது.



    • ஹிரானி அனைத்து வயதினரும் கொண்டாடும் படங்களை தொடர்ந்து வழங்கி வந்துள்ளார்.
    • டங்கியில் பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் நடித்துள்ளனர்.

    மக்களின் இதயங்களைத் தொடும் அழகான சினிமாவை தொடர்ந்து வழங்கியவர், திரையுலக மாஸ்டர் கதாசிரியரான இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பார்வையாளர்களின் மனதில் நீங்காத அளவில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களை வழங்கி, பிளாக்பஸ்டர் வெற்றிச்சாதனையையும் படைத்துள்ளார்.

    'சஞ்சு,' 'பிகே,' '3 இடியட்ஸ்,' போன்ற கிளாசிக் படங்கள் மற்றும் அனைவரும் கொண்டாடிய 'முன்னா பாய்' என, ஹிரானி அனைத்து வயதினரும் எப்போதும் கொண்டாடும் படங்களை தொடர்ந்து வழங்கி வந்துள்ளார். இப்போது, ஷாருக்கானுடன் 'டங்கி' மூலம் முதல் முறையாக இணைந்திருக்கும் அவர் மீண்டும் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தவுள்ளார்.

    ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவைக் கொண்ட 'டங்கி' திரைப்படத்தில் நகைச்சுவை, இதயம் வருடும் அழகான அனுபவம் என மீண்டும் திரையில் ஒரு காவியத்தை காட்டவுள்ளது.

    இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, "டங்கி" திரைப்படம் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது.

    முன்னா பாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ், சஞ்சு போன்ற இந்தி படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி மீது பெண் உதவி இயக்குனர் பாலியல் புகார் அளித்துள்ளார். #RajkumarHirani #MeToo
    முன்னா பாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ், சஞ்சு போன்ற இந்தி படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி. சஞ்சய்தத் நடிப்பில் இவர் இயக்கிய முன்னா பாய் எம்.பி.பி.எஸ். படம் தமிழில் கமல் நடிப்பில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அமீர்கான் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் படம் தமிழில் ‌ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் திரைப்படம்.

    ராஜ்குமார் ஹிரானி மீது சஞ்சு படத்தில் அவரது உதவி இயக்குனராக பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரை 6 மாதம், ராஜ்குமார் ஹிரானியால் செக்ஸ் தொல்லைக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சு படத்தின் இணை தயாரிப்பாளர் வினோத் சோப்ரா, அவரது மனைவி அனுபமா சோப்ரா, படத்தின் திரைக்கதை ஆசிரியர் அபிஜத் ஜோஷி ஆகியோருக்கு இ-மெயில் அனுப்பி உள்ளார். அந்த பெண் இயக்குனர் அனுப்பியுள்ள மெயிலில் ‘2018 -ம் ஆண்டு ஏப்ரல் 9-ந் தேதி ஹிரானி தனது வீடு மற்றும் அலுவலகத்தில் செக்ஸ் ரீதியாக என்னை துன்புறுத்தினார்.

    இந்த குற்றச்சாட்டுக்கு ராஜ்குமார் ஹிரானி பதிலளிக்க மறுத்ததோடு தனது வழக்கறிஞர் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தரப்பு வக்கீல் தேசாய், ’இயக்குனர் மீதான பாலியல் குற்றச்சாட்டு முற்றிலும் பொய், வேண்டும் என்றே அவதூறு பரப்புகிறார்கள்’ என விளக்கம் அளித்துள்ளார்.



    இந்த இ-மெயில் தொடர்பாக சஞ்சு படத்தின் இணை தயாரிப்பாளர் வினோத் சோப்ரா எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், அவரது மனைவி அனுபமா சோப்ரா அந்த பெண் இ-மெயில் அனுப்பி இருப்பதை உறுதி செய்துள்ளார். இந்த பிரச்சினையை எப்படி எடுத்துச்செல்வது என்பது குறித்து யோசிக்க கால அவகாசம் வேண்டும் என்று அவள் என்னிடம் கூறினாள். அவள் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் அவளுக்கு ஆதரவாக இருப்போம்” என்றார்.

    சஞ்சு படத்தின் திரைக்கதை ஆசிரியர் அபிஜத் ஜோஷி கூறும்போது ’அந்த பெண்ணின் பிரச்சினையை காதுகொடுத்து கேட்பது என் கடமை. அவளுக்கு துணை நிற்பேன். மேலும், அறம் தவறமாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

    இந்த சர்ச்சையின் எதிரொலியாக ஹிரானியின் இணை தயாரிப்பில் பிப்ரவரி 1-ந் தேதி வெளிவர இருக்கும் ‘ஏக் லட்கிகோ தேகாதோ யேசா லகா’ படத்தின் போஸ்டரிலிருந்து ஹிரானியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 
    ராஜ்குமார் இரானி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் சஞ்சய் தத்தின் வாழ்க்கைப் படமாக உருவாகி இருக்கும் ‘சஞ்சு’ படம் ரிலீசான ஒரு வாரத்தில் ரூ.200 கோடியை வசூல் செய்து சாதனை படைக்க உள்ளது. #Sanju #RanbirKapoor
    பிரபல நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கை கதை ‘சஞ்சு’ என்ற பெயரில் இந்தியில் படமாகி உள்ளது. ராஜ்குமார் இரானி இயக்கியிருக்கும் இந்த படத்தில் சஞ்சய் தத் வேடத்தில் ரன்பீர் கபூரும், அவரது தாய் நர்கீஸ் வேடத்தில் மனிஷா கொய்ராலாவும் நடித்துள்ளனர். 

    முக்கிய கதாபாத்திரங்களில் விக்கி கவுசால், சோனம் கபூர், பரேஷ் ரவால், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படம் கடந்த ஜூன் 29-ஆம் தேதி ரிலீசாகியது. 6 நாட்களில் படம் ரூ.186.41 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 7-வது நாளான இன்று படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    ரூ.200 கோடி வசூலின் மூலம் கான் நடிகர்களின் பட்டியலில் ரன்பீர் கபூரும் இணையவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சஞ்சு படம் சல்மானின் ரேஸ் 3 படத்தின் வசூலையும் நெருங்கி இருப்பதாக பாலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    சஞ்சய் தத்தின் சிறுவயது சம்பவங்கள், சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தது, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்தது உள்ளிட்ட விஷயங்களை படத்தில் காட்சிப்படுத்தி உள்ளதால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    இதற்கிடையே படம் இணையதளங்களில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. #Sanju #RanbirKapoor #SanjayDutt

    பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கைப் படமான ‘சஞ்சு’ படத்தில் பெண்களை தவறாக சித்தரித்திருப்பதாக, படத்தில் நடித்துள்ள ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Sanju #RanbirKapoor
    பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கை ‘சஞ்சு’ என்ற பெயரில் படமாகி இன்று திரைக்கு வருகிறது. இதில் சஞ்சய்தத் வேடத்தில் ரன்பீர்கபூர் நடித்துள்ளார். சஞ்சய்தத் தாய் நர்கீஸ் கதாபாத்திரத்தில் மனிஷா கொய்ராலா வருகிறார். அனுஷ்கா சர்மாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் மும்பையில் நேற்று நடிகர்-நடிகைகளுக்கு சிறப்பு காட்சியாக திரையிட்டு காட்டப்பட்டது.

    சஞ்சய் தத்துக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்புகள், போதை பழக்கத்துக்கு அவர் அடிமையானது, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்தது என்று அவரது வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களையும் இதில் காட்சிப்படுத்தி உள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியானபோது அதில் சிறைச்சாலையில் கழிவறை நிரம்பி வழிவதுபோன்ற காட்சி இடம்பெற்று இருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது.

    சிறைச்சாலையை தவறாக சித்தரித்து இருப்பதாக தணிக்கை குழுவில் மனு அளிக்கப்பட்டது. இப்போது படத்தில் இன்னொரு சர்ச்சை காட்சி இருப்பதாகவும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சஞ்சய்தத் பல பெண்களுடன் தவறான தொடர்பு வைத்து இருந்ததாகவும் அவர்களை காதலிப்பதாக ஆசைக்கு பயன்படுத்தியதாகவும் காட்சி வைத்துள்ளனர்.



    மூத்த நடிகைகள், இளம் நடிகைகள் என்று 350-க்கும் மேற்பட்ட காதலிகள் அவருக்கு இருந்ததாக படத்தில் கூறப்பட்டு உள்ளது. இதற்கு சமூக ஆர்வலர் கவுரவ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். பெண்களுக்கு எதிரான வசனங்கள் படத்தில் உள்ளன. நடத்தைகளை தவறாக சித்தரித்து உள்ளனர்.

    எனவே படத்தில் நடித்துள்ள ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்து இருக்கிறார். #Sanju #RanbirKapoor #AnushkaSharma

    ராஜ்குமார் இரானி இயக்கத்தில் ரன்பீர் கபூல் நடிப்பில் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘சஞ்சு’ படத்திற்கு தணிக்கை குழு அனுமதி வழங்கியது. #Sanju #RanbirKapoor
    பிரபல நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கை கதை இந்தியில் படமாகி உள்ளது. அவரது சிறுவயது சம்பவங்கள், சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தது, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்தது உள்ளிட்ட விஷயங்களை இதில் காட்சிப்படுத்தி உள்ளனர். 

    ராஜ்குமார் இரானி ‘சஞ்சு’ என்று பெயரிட்டுள்ள இந்த படத்தில் சஞ்சய் தத் வேடத்தில் ரன்பீர் கபூரும், அவரது தாய் நர்கீஸ் வேடத்தில் மனிஷா கொய்ராலாவும் நடித்துள்ளனர். படம் திரைக்கு வர தயாராக உள்ளது. இந்த படத்துக்கு எதிராக சமூக ஆர்வலர் பிரித்வி மஸ்கி என்பவர் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தில் புகார் அளித்தார்.

    அந்த மனுவில், “சஞ்சய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள சஞ்சு படத்தில் சிறையில் கழிவறை நிரம்பி வழிவது போன்ற காட்சி உள்ளது. இந்த காட்சி மூலம் சிறைச்சாலையை மோசமாக சித்தரித்து உள்ளனர். இதனால் மக்களுக்கு சிறைத்துறை மீதும் சிறை அதிகாரிகள் மீதும் தவறான எண்ணம் ஏற்படும். இந்த காட்சிகள் தொடர்பாக தணிக்கை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.



    இந்த நிலையில் சஞ்சு படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து படம் வெளியாக அனுமதி வழங்கி உள்ளனர். கழிப்பறை நிரம்பி வழியும் காட்சியை மட்டும் திருத்தம் செய்யும்படி படக்குழுவினரிடம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

    மேலும் படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் வருகிற 29-ஆம் தேதி ரிலீசாகிறது. #Sanju #RanbirKapoor #SanjayDutt

    ×