search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயம்ரவி"

    • நேற்று சென்னை ராஜ ரத்தினம் கலையரங்கத்தில் 2015 தமிழக திரைப்பட விருது வழங்கும் விழா நடைப்பெற்றது
    • கவுதம் கார்த்திக் அவருடைய எக்ஸ் பக்கத்தில் விருது அளித்து கவுரவித்த தமிழ்நாடு மாநில அரசுக்கும், தனது ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.

    நேற்று சென்னை ராஜ ரத்தினம் கலையரங்கத்தில் 2015 தமிழக திரைப்பட விருது வழங்கும் விழா நடைப்பெற்றது.

    இதில் ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருதும், சிறந்த கதையாசிரியருக்கான விருது மோகன் ராஜா தனி ஒருவன் படத்திற்காக பெற்றார். இறுதிச்சுற்று படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை சுதா கொங்கரா பெற்றார்.

    சிறந்த நடிகருக்கான விருதை கவுதம் கார்த்திக் 'வை ராஜா வை' படத்திற்கு பெற்றார்.

    தனி ஒருவன் படம் அதிக விருதை அள்ளியது. அரவிந்த சாமி சிறந்த வில்லனுக்கான விருதும்.ராம்ஜி சிறந்த ஒளிபதிவாளர் விருதும்,கோபி க்ருஷ்ணா சிறந்த எடிடர்கான விருதும், பிருந்தா மாஸ்டர் சிறந்த நடன இயக்குநர்கான விருதும் பெற்றனர்.

    மாதவன் இறுதிச்சுற்றுக்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.ஜோதிகா 36 வயதினிலே படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை சிங்கம் புலி வென்றார். சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருதை தேவதர்ஷினி வென்றார்.கிப்ரான் உத்தம வில்லன் மற்றும் பாபநாசம் படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர்கான விருதை வென்றார்.

    ஜோதிகா விருதை வாங்கி தான் மிகவும் சந்தோஷமாக உணர்வதாக செய்தியாளர்களிடம் பேட்டிக் கொடுத்தார்.கவுதம் கார்த்திக் அவருடைய எக்ஸ் பக்கத்தில் விருது அளித்து கவுரவித்த தமிழ்நாடு மாநில அரசுக்கும், தனது ரசிகர்களுக்கும், தனது குடும்பத்துக்கும், இயக்குனர் ஐஷ்வர்யா ரஜினிகாத்துக்கும். தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனதுக்கு அவரின் நன்றியை தெரிவித்துள்ளார்.

    நேற்று விருது வழங்கப்பட்ட பட்டியல்.

    சிறந்த படம் முதல் பரிசு - தனி ஒருவன்

    சிறந்த படம் இரண்டாம் பரிசு - பசங்க 2

    சிறந்த படம் மூன்றாம் பரிசு - ப்ரபா

    சிறந்த படத்திற்கான சிறப்பு பரிசு - இறுதிச்சுற்று

    பெண்கள் முன்னேற்றதிற்கான சிறந்த படம் - 36 வயதினிலே

    சிறந்த நடிகர் - மாதவன் [இறுதிச்சுற்று]

    சிறந்த நடிகை - ஜோதிகா[36 வயதினிலே]

    சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசு - கவுதம் ராஜா [ வை ராஜா வை]

    சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசு - ரித்திக்கா சிங் [இறுதிச்சுற்று]

    சிறந்த வில்லன் - அரவிந்த் சாமி [தனி ஒருவன்]

    சிறந்த நகைச்சுவை நடிகர் - சிங்கம்புலி [ அஞ்சுக்கு ஒன்னு]

    சிறந்த நகைச்சுவை நடிகை - தேவ தர்ஷினி [ திருட்டு கல்யாணம், 36 வயதினிலே]

    சிறந்த குணச்சித்திர நடிகர் - தலைவாசல் விஜய் [அபூர்வ மகான்]

    சிறந்த குணச்சித்திர நடிகை - கவுதமி [ பாபநாசம்]

    சிறந்த இயக்குநர் - சுதா கொங்கரா {இறுதிச்சுற்று]

    சிறந்த கதையாசிரியர் - மோகன் ராஜா [ தனி ஒருவன்]

    சிறந்த வசன எழுத்தாளர் - சரவணன் [கத்துக்குட்டி]

    சிறந்த இசையமைபாளர் - ஜிப்ரான் [ உத்தம வில்லன், பாபநாசம்]

    சிறந்த பாடலாசிரியர் - விவேக் [36 வயதினிலே]

    சிறந்த பின்னணி பாடகர் [ஆண்] - கானா பாலா {வை ராஜா வை}

    சிறந்த பின்னணி பாடகர் [ பெண்] - கல்பனா ராகவேந்தர் [36 வயதினிலே]

    சிறந்த ஒளிப்பதிவாளர் - ராம்ஜி [தனி ஒருவன்]

    சிறந்த ஒளிப்பதிவாளர் - ராம்ஜி (தனி ஒருவன்)

    சிறந்த ஒலி வடிவமைப்பாளர் - ஏ.எல்.துக்காராம், ஜே.மகேஸ்வரன் (தாக்க தாக்க)

    சிறந்த எடிட்டர் - கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்)

    சிறந்த கலை இயக்குனர் - பிரபாஹரன் (பசங்க 2)

    சிறந்த ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளர் - டி ரமேஷ் (உத்தம வில்லன்)

    சிறந்த நடன இயக்குனர் - பிருந்தா (தனி ஒருவன்)

    சிறந்த ஒப்பனை - சபரி கிரிஷன் (36 வயதினிலே, இறுதிச்சுற்று)

    சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - வாசுகி பாஸ்கர் (மாயா)

    சிறந்த குழந்தை கலைஞர் - மாஸ்டர் நிஷேஷ், பேபி வைஷ்ணவி (பசங்க 2)

    சிறந்த டப்பிங் கலைஞர் (ஆண்) - கௌதம் குமார் (36 வயதினிலே)

    சிறந்த டப்பிங் கலைஞர் (பெண்) - ஆர் உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று)

    • நடிகர் ஜெயம் ரவி தற்போது ‘அகிலன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.


    அகிலன்

    இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியானது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.


    அகிலன்

    இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஜெயம் ரவி பேசியதாவது, "மாநகரம் முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் எனக்கு ஒரு கதை கூறினார். சில காரணங்களால் அந்த படம் பண்ண முடியவில்லை. அவர் விக்ரம் ஷுட்டிங்கில் இருந்த போது எங்களுடைய அகிலன் படப்பிடிப்பு அங்கே நடந்தது. அப்போது எடுத்த புகைப்படம் தான் அது மற்றபடி அவர் இயக்கத்தில் நான் நடிக்கவில்லை" என்று பேசினார்.

    • சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது.
    • இவ்விழாவில் ரஜினி மற்றும் கமல் சிற்ப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

    மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.


    ஜெயம் ரவி - விக்ரம்

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது, "இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று அனைவரும் கேட்டார்கள். எனக்கு தெரியாது, மணிரத்தினம் கூப்பிட்டார், சென்றேன், நடித்தேன் என்று கூறினேன். இந்த கதாபாத்திரம் கிடைப்பதற்கு நான் அப்படி என்ன நல்லது செய்து விட்டேன் என்று தோன்றியது.

    இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்த போது, நான் சினிமாத் துறைக்கு வந்து 20 வருடங்களாகிறது. நீண்ட வருடங்களாக உழைத்திருக்கிறேன், அதன் பலனாகத்தான் இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருக்கிறது எனக்கு தோன்றியது.


    ஜெயம் ரவி

    கமல் சாரும் ரஜினி சாரும் பல ஆண்டுகள் தங்கள் உழைப்பால் தான் முன்னுக்கு வந்தார்கள். அப்படிப்பட்ட உழைப்பால் தான் எனக்கு இந்த படம் கிடைத்திருக்கிறது என்றும் நான் நம்புகிறேன். பேச்சால் ஒருவரை மாற்றமுடியுமா? என்று நினைத்தேன். ஆனால், அது மணி சாரால் முடியும் என்று நான் தெரிந்து கொண்டேன்.

    ஏனென்றால், அருண்மொழிவர்மன் மக்களிடம் எப்படி இருப்பான், அக்காவிடம் எப்படி இருப்பான், மற்ற ராஜாக்களிடம் எப்படி இருப்பான் என்று ஒவ்வொன்றாக விளக்கிக் கொண்டே வந்தார். அவர் சொல்லி முடித்ததும் ஒரு மூட் கிரியேட் ஆச்சி. அப்படியே வீட்டுக்கு சென்றேன். எப்போது பாத்தாலும் ஆதே மூடில் இருந்தேன். இதுனால் வீட்டில் திட்டு வாங்கினேன். ஆறு மாதத்தில் அதே மூடில் அவர் சொல்லிக் கொடுத்தது போல் நடித்தேன். இவரிடம் நடிப்பதே பெரும் பாக்கியம்" என்று பேசினார்.

    ×