search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 World Cup 2024"

    • இந்தியாவின் முதல் பயிற்சி அமர்வில் ஹர்திக் பாண்டியா கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பந்து வீசினார்.
    • இந்திய அணி, தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை ஜூன் 5-ம் தேதி நியூயார்க்கில் எதிர்கொள்கிறது.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற ஜூன் 2-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்க உளள்து.

    இந்த தொடரில் இந்திய அணி, தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை ஜூன் 5-ம் தேதி நியூயார்க்கில் எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்த போட்டிகளுக்கு முன்னதாக இந்திய அணி நாளை சனிக்கிழமை நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டியானது நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, இந்திய அணி வீரர்கள் நியூயார்க்கில் உள்ள கான்டியாக் பார்க் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நியூயார்க்கில் நடந்த இந்தியாவின் முதல் பயிற்சி அமர்வில் ஹர்திக் பாண்டியா கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பந்து வீசினார். நடப்பு ஐ.பி.எல் சீசனில் அவரது ஆல்ரவுண்டர் திறம் பெரும் விவாதப் பொருளாக மாறி இருந்த நிலையில், அவரது பந்துவீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    ஹர்திக் கணிசமான நேரத்தை நெட்ஸில் பேட்டிங்கிற்கு செலவிட்டதாகவும், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை வரும் 5-ம் தேதி சந்திக்கிறது.
    • இந்திய வீரர்கள் அனைவரும் சில நாட்கள் முன்பே நியூயார்க் சென்று பயிற்சிகளைத் தொடங்கிவிட்டனர்.

    நியூயார்க்:

    9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை வரும் 5-ம் தேதி சந்திக்கிறது.

    இந்நிலையில் விராட் கோலி முதல் போட்டியில் விளையாட முடியாது என தகவல் வெளியாகி உள்ளது. நாளை நடைபெறவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய வீரர்கள் அனைவரும் சில நாட்கள் முன்பே நியூயார்க் சென்று பயிற்சிகளைத் தொடங்கிவிட்ட நிலையில், விராட் கோலி நேற்று இரவுதான் நியூயார்க் புறப்பட்டார். இதனால் அவர் பங்கேற்பது கடினம் என தெரிய வந்துள்ளது. ஆனால் ஜூன் 5-ம் தேதி நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

    • பாபர் அசாம் தொடக்க வீரராக விளையாடுவதற்கு பதிலாக அந்த வரிசையில் களமிறங்க வேண்டும் என மாலிக் தெரிவித்துள்ளார்.
    • நாம் முன்பு கடினமான இடத்தில் இருந்து தற்போது முன்னேறியுள்ளோம்.

    டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணியானது 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் முதல் மற்றும் மூன்றாவது போட்டியானது மழையால் கைவிடப்பட்டது. 2-வது மற்றும் 4-வது டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று அசத்தியது. இதன்மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணியானது 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

    உலகக்கோப்பை தொடர் நெருங்கும் சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது பெரும் விமர்சனங்களுக்கும் வழிவகுத்துள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் மீதான விமர்சனங்கள் தான் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில், வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் மூன்றாம் இடத்தில் தான் களமிறங்க வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் சோயப் மாலிக் அறிவுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இது ஒரு கடினமான தொடர். ஆனால் நினைவில் கொள்ளுங்கள். நாம் முன்பு கடினமான இடத்தில் இருந்து தற்போது முன்னேறியுள்ளோம். அதேசயம் பாபர் அசாம் மூன்றாம் இடத்தில் களமிறங்க வேண்டும்.

    ஏனெனில் மிடில் ஓவர்களில் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்யும் பேட்டர் நிச்சயம் தேவை. அதற்கான சிறந்த தேர்வு பாபர் அசாம் தான். ஏனெனில் அவரின் வழிகாட்டுதலுக்கு கீழ் மிடில் ஆர்ட்ர் பேட்டர்களால் மேற்கொண்டு சிறப்பாக விளையாட முடியும்.

    இவ்வாறு மாலிக் கூறினார்.

    • அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது.
    • இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்குகிறது. டி20 உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற இருக்கிறது.

    உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ள ஒவ்வொரு நாடும் தனது அணியை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. மேலும், உலகக் கோப்பையின் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு இந்திய அணி வீரர்கள் அமெரிக்கா புறப்பட்டு சென்றது.

    முன்னதாக உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிய ஜெர்சியுடன் இந்திய அணி வீரர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

    • அடுத்த இரண்டு வருடங்களில் இன்னொரு உலகக் கோப்பை இருக்கிறது. அதை நோக்கி தயாராகும்படி ரோகித் கூறினார்.
    • ரோகித் எப்பொழுதும் இளம் வீரர்களிடம் நன்றாக விளையாடுங்கள் என்றுதான் கூறுவார்.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் அடுத்த மாதம் டி20 உலகக்கோப்பை தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் 15 பேர் கொண்ட டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரிங்கு சிங் இடம் பெறவில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக அவர் பினிஷிங் ரோலில் எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் விளையாடி இந்திய அணியில் வாய்ப்பை பெற்றார். இதைத்தொடர்ந்து இந்திய டி20 அணியில் கிடைத்த 15 வாய்ப்புகளில் மிகச் சிறப்பான பேட்டிங்கை பினிஷிங் ரோலில் வெளிப்படுத்தினார்.

    ஆனால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இன்டிஸ் சூழ்நிலைகளில் விளையாட நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் தேவை எனக் கருதிய இந்திய தேர்வுக்குழு ரிங்கு சிங்கை சேர்க்காமல் விலக்கி வைத்தது.

    இதுகுறித்து ரிங்கு சிங் கூறியதாவது:-

    நல்ல செயல் திறனோடு இருந்தும் கூட நீங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அது யாருக்கும் வருத்தத்தை உண்டாக்கக் கூடியதாகத்தான் இருக்கும். ஆனால் இந்த மாதிரி அணி காம்பினேஷன் காரணமாக என்னை அவர்கள் தேர்வு செய்யவில்லை. ஆனாலும் பரவாயில்லை நம் கையில் இல்லாத விஷயங்கள் குறித்து நாம் எப்பொழுதும் கவலைப்பட கூடாது. ஆரம்பத்தில் இது குறித்து எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது உண்மைதான். ஆனாலும் எது நடந்தாலும் பரவாயில்லை அது நன்மைக்கேதான் நடக்கும்.

    ரோகித் பாய் என்னிடம் சிறப்பாக எதுவும் சொல்லவில்லை. அடுத்த இரண்டு வருடங்களில் இன்னொரு உலகக் கோப்பை இருக்கிறது, எனவே அதை நோக்கி கடுமையாக உழைத்து தயாராகும்படி மட்டும் கூறினார்.

    ரோகித் பாய் கேப்டன்சி எவ்வளவு சிறந்தது என உலகம் பார்த்திருக்கிறது. அவருடன் என்னைப்பற்றி தனிப்பட்ட முறையில் பேசினால் நான் ஒரே ஒரு தொடரில் மட்டுமே விளையாடி இருக்கிறேன். அவருடன் நான் அதிகம் பேசியது கூட கிடையாது. இளம் வீரர்கள் நன்றாக விளையாட வேண்டும் என்று விரும்புவார். அவர் எப்பொழுதும் இளம் வீரர்களிடம் நன்றாக விளையாடுங்கள் என்றுதான் கூறுவார்.

    இவ்வாறு ரிங்கு சிங் கூறினார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ரோவ்மன் பவல் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஜேசன் ஹோல்டருக்கு பதிலாக மாற்று வீரரை வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவித்தது.

    டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இத்தொடருக்காக தற்போது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்துள்ளன.

    அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ரோவ்மன் பவல் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நட்சத்திர ஆல் ராவுண்டர் ஜேசன் ஹோல்டர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஒபேத் மெக்காய் சேர்க்கப்பட்டுள்ளார். நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்க தொடரிலும் மெக்காய் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி: ரோவ்மன் பாவெல் (கேப்டன்), அல்ஸாரி ஜோசப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரான் ஹெட்மையர், ஒபேத் மெக்காய், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமார் ஜோசப், பிராண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட்.

    • சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன்.
    • ஷிவம் துபே போன்ற பந்து வீசக்கூடிய சில வீரர்கள் டாப் 5 பேட்ஸ்மேன்களில் இருக்க வேண்டும்.

    வெலிங்டன்:

    20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வருடம் ரோகித் சர்மா தலைமையில் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை பைனல்களில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால், ஷிவம் துபே போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இம்முறை டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி முழு மூச்சுடன் போராட உள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியில் டாப் 5 பேட்ஸ்மேன்களில் யாருமே பந்து வீசுபவர்களாக இல்லை என்பது பெரிய பிரச்சினையாக இருப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசியது பின்வருமாறு:-

    டி20 அணியில் டாப் 5 - 6 பேட்ஸ்மேன்களில் பவுலர்கள் இல்லாதது இந்தியா தவற விட்ட பெரிய விஷயம். வெஸ்ட் இண்டீசுக்கு செல்லும் தற்போதைய அணியில் உலகக்கோப்பை முடிந்ததும் நீங்கள் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அது போன்ற சூழ்நிலையில் அபிஷேக் சர்மா, ருதுராஜ், ஜெய்ஸ்வால் அல்லது சுப்மன் கில் ஆகியோரை நீங்கள் விரும்புவீர்கள்.

    சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன். மேலும் ஷிவம் துபே போன்ற பந்து வீசக்கூடிய சில வீரர்கள் டாப் 5 பேட்ஸ்மேன்களில் இருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து 2 - 3 ஆல் ரவுண்டர்கள், கணிசமாக பேட்டிங் செய்யக்கூடிய பவுலர்கள் இருக்க வேண்டும்.

    இவ்வாறு டவுல் கூறினார்.

    • 2007-க்குப் பின் 17 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது.
    • இந்திய அணியின் தரத்தை எதிரணியினர் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

    ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. அதில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.

    2007-க்குப் பின் 17 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. அந்தத் தொடரில் வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்வியை இந்தியா நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

    இந்நிலையில் உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு இந்தியா அச்சுறுத்தலை கொடுக்கக்கூடிய அணியாக இல்லை என முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாய்ட் கூறியுள்ளார்.

    இது அவர் கூடியதாவது:-

    இந்தியா கணிக்கக்கூடிய அணியாகும். இந்திய அணியின் தரத்தை எதிரணியினர் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். ஆம் அவர்கள் நல்ல வீரர்கள். ஆனால் அவர்கள் பேட்டிங் அல்லது பந்து வீச்சில் ரிஸ்க் எடுத்து விளையாட தயாராக இல்லை. அவர்கள் எதிரணிக்கு அச்சுறுத்தலை கொடுப்பவர்களாக இல்லை.

    என்று டேவிட் லாய்ட் கூறினார். 

    • ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள சீனியர் வீரர் ஹசன் அலியை இந்த தொடரில் இருந்து விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் திவிரமாக தயாரகும் வகையில் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.

    அந்தவகையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையே 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெறவுள்ளது.

    இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் பக்கார் ஜமான், இப்டிகார் அகமது, இமாத் வாசிம், ஷதாப் கான், முகமது ரிஸ்வான், ஹசன் அலி, ஹாரிஸ் ராப், முகமது அமீர், நசீம் ஷா, ஷாகீன் அப்ரிடி போன்ற சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள சீனியர் வீரர் ஹசன் அலியை இந்த தொடரில் இருந்து விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கவுண்டி கிரிக்கெட்டில் வார்விக்ஷயர் அணிக்காக ஹசன் அலி விளையாட பாகிஸ்தான் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து பிசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், கவுண்டி கிரிக்கெட்டில் ஹசன் அலி தனது கடமைகளை தொடர அனுமதிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆரம்பத்தில், ஹாரிஸ் ரவுஃபின் காயம் கரணமாக ஹசன் அலி பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தார்" என்று தெரிவித்துள்ளது. 

    • அந்த அணியில் ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா ரியாத், சவுமியா சர்கார், முஸ்தாபிசுர் ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • ரிசர்வ் வீரர்களாக அபிப் ஹொசைன், ஹசன் மஹ்மூத் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன.

    அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வங்காளதேச கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

    அதன்படி வங்காளதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா ரியாத், சவுமியா சர்கார், முஸ்தாபிசுர் ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    வங்காளதேச அணி விவரம்:-

    நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), தஸ்கின் அகமது, லிட்டன் தாஸ், சவுமியா சர்கார், தன்சித் ஹசன் தமீம், ஷாகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா ரியாத், ஜேக்கர் அலி அனிக், தன்வீர் இஸ்லாம், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப்.

    ரிசர்வ் வீரர்கள்; அபிப் ஹொசைன், ஹசன் மஹ்மூத்

    • இளம் அதிரடி வீரர் மைக்கேல் லெவிட்டிற்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணியில் இடம்கிடைத்துள்ளது.
    • இளம் வீரர்களான டிம் பிரிங்கிள், கைல் கெலின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. இதன் காரணமாக இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

    இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நெதர்லாந்து கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

    அதன்படி ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியில் அனுபவ வீரர்கள் ரோலோஃப் வான்டெர் மெர்வ் மற்றும் காலின் அக்கர்மேன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் இளம் வீரர்களான டிம் பிரிங்கிள், கைல் கெலின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுடன் இளம் அதிரடி வீரர் மைக்கேல் லெவிட்டிற்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணியில் இடம்கிடைத்துள்ளது. அதேசமயம் மேக்ஸ் ஓடவுட், ஆர்யன் தத், லோகன் வான் பீக், பால் வான் மீகெரன், விக்ரம்ஜித் சிங், வெஸ்லி பரேஸி, ஃபிரெட் கிளாசென், பாஸ் டி லீட் போன்ற நட்சத்திர வீரர்கள் தங்கள் இடத்தை தக்கவைத்துள்ளனர்.

    நெதர்லாந்து அணி:

    ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), ஆர்யன் தத், பாஸ் டி லீட், டேனியல் டோரம், ஃபிரெட் கிளாசென், கைல் கெலின், லோகன் வான் பீக், மேக்ஸ் ஓ'டவுட், மைக்கேல் லெவிட், பால் வான் மீகெரென், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், தேஜா நிடமானுரு, டிம் பிரிங்கிள், விக்ரம்சித் சிங், விவ் கிங்மா, வெஸ்லி பாரேசி.

    • பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி தயாகம் திரும்பினர்.
    • ஆர்சிபி அணியில் இடம் பிடித்துள்ள வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லி உள்ளிட்ட வீரர்கள் நாடு திரும்பி உள்ளனர்.

    ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும். இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளது. இதன்காரணமாக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    அந்தவகையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இத்தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்தனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி தயாகம் திரும்பினர். அந்தவகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தாயகம் திரும்பியுள்ளார்.

    அதேபோல் ஆர்சிபி அணியில் இடம் பிடித்துள்ள வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லி உள்ளிட்ட வீரர்கள் நாடு திரும்பி உள்ளனர். ஆர்சிபி அணியின் இருந்து வில் ஜேக்ஸ் வெளியேறியது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவருக்கு பதிலாக மேக்ஸ்வெல் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவர்களை தவிர ஜானி பேர்ஸ்டோவ், பில் சால்ட், மொயீன் அலி, சாம் கரண் ஆகியோரும் தயாகம் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் உள்ள நிலையில் அணியின் முக்கிய வீரர்கள் விலகியுள்ளது அந்த அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    ×