search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெதர்லாந்து அணி"

    • 2018-ம் ஆண்டு முதல் உணவு விநியோகிப்பாளராக வேலை பார்த்து வந்த அவர் கிரிக்கெட் வீரர் ஆவார்.
    • 10 ஆயிரம் பந்துவீச்சாளர்களை மதிப்பீடு செய்த நெதர்லாந்து அணி நிர்வாகம் லோகேஷ் குமார் உள்பட 4 பேரை தேர்வு செய்தது.

    சென்னை:

    இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் நெதர்லாந்து அணிக்கு வலை பயிற்சி பந்து வீச்சாளராக தமிழக வீரர் ஒருவர் தேர்வாகி உள்ளார். சென்னையை சேர்ந்தவர் லோகேஷ் குமார் (வயது 29). 2018-ம் ஆண்டு முதல் உணவு விநியோகிப்பாளராக வேலை பார்த்து வந்த அவர் கிரிக்கெட் வீரர் ஆவார்.

    இதற்கிடையே நெதர்லாந்து அணிக்கு வலைபயிற்சி பந்துவீச்சாளர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து விண்ணப்பித்தார். இடது கை வேகப்பந்து மற்றும் சைனாமேன் பந்து வீச்சாளராக அவர் தனது பந்து வீசும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் அனுப்பி வைத்தார். இந்தியாவில் இந்து சுமார் 10 ஆயிரம் பந்துவீச்சாளர்களை மதிப்பீடு செய்த நெதர்லாந்து அணி நிர்வாகம் லோகேஷ் குமார் உள்பட 4 பேரை தேர்வு செய்தது.

    இதுகுறித்து லோகேஷ் குமார் கூறும்போது, இது எனது வாழ்க்கையின் விலை மதிப்பற்ற தருணங்களில் ஒன்றாகும். நான் இன்னும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மூன்றாம் பிரிவு லீக்கில் கூட விளையாடவில்லை. நான்கு ஆண்டுகளாக 5-வது பிரிவில் விளையாடினேன். நடப்பு சீசனில் 4-வது பிரிவில் பதிவு செய்துள்ளேன்.

    நெதர்லாந்து அணியால் ஒரு வலைப்பந்துவீச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது எனது திறமைக்கு அங்கீகாரம் கிடைத்ததாக உணர்கிறேன். நெதர்லாந்து அணி வீரர்கள் என்னை உற்சாகமுடன் வரவேற்றனர். இது உங்கள் அணி தாராளமாக உணருங்கள் என்று என்னிடம் தெரிவித்தனர். நெதர்லாந்து அணியின் விளம்பரத்தை பார்த்து அதற்கு முயற்சி செய்ய முடிவு எடுத்தேன். அதிக சைனாமேன் பந்துவீச்சாளர்கள் இல்லாததால் நான் தேர்வு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடகாவின் ஆலூரில் நடந்து வரும் நெதர்லாந்து அணியின் பயிற்சி முகாமில் லோகேஷ் குமார் இணைந்து உள்ளார்.

    • ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியில் அனுபவ வீரர்களான வான் டெர் மெர்வே மற்றும் அக்கர்மேன் இருவரும் இடம்பிடித்துள்ளனர்.
    • நெதர்லாந்து அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 6-ம் தேதி பாகிஸ்தான் உடன் மோத உள்ளது.

    ஆம்ஸ்டர்டாம்:

    இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ள அணிகள் தங்களது 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன.

    இந்நிலையில் தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்ற நெதர்லாந்து அணி தங்களது 15 வீரர்கள் கொண்ட பட்டியலை இன்று அறிவித்துள்ளது. ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியில் அனுபவ வீரர்களான வான் டெர் மெர்வே மற்றும் அக்கர்மேன் இருவரும் இடம்பிடித்துள்ளனர். நெதர்லாந்து அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 6-ம் தேதி பாகிஸ்தான் உடன் மோத உள்ளது.

    நெதர்லாந்து அணி;- ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், ரியான் க்ளீன், வெஸ்லி பர்ரேசி, சாகிப் சுல்பிகார், ஷரிஸ் அஹ்மத் மற்றும் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.

    ×