search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Statue"

    • மாநில எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    • அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தெலுங்கானா அன்னையின் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலை அமைக்க முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அடிக்கல் நாட்டினார்.

    இதற்கு அந்த மாநில எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி சிலை வைக்க அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தெலுங்கானா அன்னையின் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

    அந்த இடத்தில் ராஜீவ் காந்தி சிலையை அமைக்க கூடாது. தெலுங்கானா அன்னை சிலை மாநிலத்தின் கலாச்சார அடையாளத்தை குறிக்கிறது. எனவே தலைமைச் செயலக வளாகத்தில் ராஜீவ் காந்தி சிலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

    அந்த இடத்தில் தெலுங்கானா அன்னை சிலையை வைக்க வேண்டும் என சந்திரசேகர ராவின் மகள் கவிதா வலியுறுத்தி உள்ளார்.

    • வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் அனுசரிப்பு
    • சமூக அமைப்பு மற்றும் இயக்க நிர்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி பாரதிப் பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், மத்திய இணை மந்திரி முருகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ. ஜெயக்குமார், சாய்.ஜெ. சரவணன் குமார், செல்வ கணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், ரிச்சர்ட் ஜான்குமார், வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மேலும் புதிய நீதி கட்சி தலைவர் பொன்னுரங்கம் மற்றும் பல்வேறு சமூக அமைப்பு மற்றும் இயக்க நிர்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    • பிரதமர் ஜவகர்லால் நேருவின் 134-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
    • காங்கிரஸ் சார்பில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 134-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள அவரது சிலைக்கு தஞ்சை மாவட்ட (தெற்கு) காங்கிரஸ் சார்பில் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமநாத துளசியய்யா வாண்டையார் மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புக்களை வழங்கினார்.

    முன்னதாக மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் வட்டார தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயண சாமி, மாவட்ட ஊடகப்பிரி வுத்தலைவர் பிரபு மண்கொண்டார், மாநகர மாவட்ட துணைத்தலைவர் செந்தில் நா.பழனிவேல், சோழமண்டல சிவாஜி பாசறை தலைவர் சதா.வெங்கட்ராமன், மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் களிமேடு ராமலிங்கம், கலைஇலக்கிய பிரிவுத்தலைவர் கலைச்செல்வன், ஐ.என்டி.யூ.சி. மணிவாசகம், 7-வது வார்டு செயலாளர் பாபுஜீ, வெங்கட், ராஜூ, வீணை கார்த்திக், சரவணன், மாரியம்மன் கோவில் ராமமூர்த்தி, பின்னையூர் ரவிச்சந்திரன், ரஞ்சித், ரவி, முகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் “தூத்துக்குடி மக்களின் தந்தை” என போற்றப்படுகிறார்.
    • தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் ரூ.77.87 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.

    சென்னை:

    ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் தூத்துக்குடியில் 15.11.1869 அன்று பிறந்தார். அறிவுத் திறமையும், அறிவுக் கூர்மையும் கொண்டவர். உழைப்பால் உயர்ந்தவர்.

    தூத்துக்குடி நகராட்சி தலைவராக 21.12.1909-ல் பொறுப்பேற்ற ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் 5 முறை தொடர்ந்து நகராட்சி மன்றத் தலைவராக விளங்கி உள்ளார். 1927-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி, மக்களின் பாராட்டினை பெற்றார். இந்தக் குடி நீர்ப்பிரச்சினைகள் தீர்ந்தது மட்டுமல்லாமல் நகரின் பல வளர்ச்சிப் பணிகளையும் நிறைவேற்றியதனால் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் "தூத்துக்குடி மக்களின் தந்தை" என போற்றப்படுகிறார்.

    அவரை போற்றும் வகையில் அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சியில் குவிமாடத்துடன் கூடிய முழு உருவச்சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் ரூ.77.87 லட்சம் செலவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீசுக்கு குவிமாடத்துடன் கூடிய திருவுருவச் சிலையினை நாளை காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.

    • பஞ்சபூதங்களில் திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண் டேஸ்வரி கோவில் ஒன்று
    • மிகவும் அழகுற, தத்ரூப மாக வடிவமைக்கப்பட் டுள்ள இந்த சிலையை பக்தர்கள் வருகிற 5-ந் தேதி வரை பார்வையிடலாம்.

    திருச்சி

    பஞ்சபூதங்களில் திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண் டேஸ்வரி கோவில். சைவத் திருத்தலங்களில் மிக முக்கி யமான தலமாக விளங்கும் இக்கோவிலில் எப்போதும் பக்தர்கள் வருகை நிறைந்து இருக்கும். சிவனை வழிபடப் பூலோகம் வந்த அம்பிகை காவேரியில் நீர் எடுத்து லிங்கம் வடித்து வழிபட்டார் என்றும், நீரால் ஆனதால் அந்த லிங்கம் ஜம்புகேஸ்வரர் எனப்பெயர் பெற்றது என்கி றது புராணம்.

    சக்திவாய்ந்த நீர் தலமாக விளங்கும் இங்கு ஜம்பு கேஸ்வரர், அகிலாண் டேஸ்வரி அம்மன் ஆகியோர் பிரதான தெய்வங்களாக இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்ற னர்.

    இங்குள்ள அகிலர்டேஸ் வரி அம்மன் சந்நிதி வளாகத் தில் புதிதாக 7 அடி உயரத் தில் பைபரால் ஆன அகிலாண்டேஸ்வரி அம் மன் சிலை ஒன்று வைக்கப் பட்டுள்ளது. பந்தல் அமைத்து, வண்ண விளக்கு களால் அலங்காரம் செய்யப் பட்டுள்ளது. இதை பக்தர் கள் வியப்புடன் பார்வை யிட்டு வணங்கி செல்கின்ற னர்.

    மிகவும் அழகுற, தத்ரூப மாக வடிவமைக்கப்பட் டுள்ள இந்த சிலையை பக்தர்கள் வருகிற 5-ந் தேதி வரை பார்வையிடலாம். அதன் பின்னர் பாதுகாப்பு டன் எடுத்து வைக்கப்பட்டு ஆண்டுதோறும் ேகாவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் காட்சிப்படுத்தப் படுத்தப்பட உள்ளது.

    சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் அண்மையில் நடைபெற்ற நவராத்திரி விழாவின் போது அமைக்கப் பட்டிருந்த கொலுக் காட்சி யில், மாங்காடு காமாட்சி யம்மன், மதுரை மீனாட்சி யம்மன், பட்டீஸ்வரம் துர் கையம்மன், திருவானைக்கா வல் அகிலாண்டேஸ்வரி அம்மன் உள்ளிட்ட தமிழ கத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சக்தி தலங்களில் உள்ள 9 அம்மன் சிலை களின் மாதிரிகள் பைபரால் செய்யப்பட்டு, காட்சிப்படுத் தப்பட்டன.

    நவராத்திரி திருவிழா நிறைவு பெற்ற பின்னர், அந்த சிலைகள் தொடர்பு டைய கோவில்களுக்கு அனுப்பப்பட்டன. அதன் படி எடுத்துவரப்பட்ட திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் சிலையைதான் இந்த சிலை.

    • மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.
    • சுவாமிமலை உலோக விக்ரக உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலையில் உள்ள உலோக சிலை கைவினை கலைஞர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலமாக மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி க்குழு துணை தலைவரும், கும்பகோணம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான முத்துச்செல்வன் தலைமை தாங்கினார்.

    இதில் தஞ்சை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனரும், சுவாமிமலை உலோக விக்ரக உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாக செயல் ஆட்சியருமான விஜயகுமார், மாவட்ட தொழில் மைய உதவி பொறி யாளர் கார்த்திகேயன், சுவாமிமலை தி.மு.க. பேரூர் செயலாளர் பாலசுப்ர மணியம், சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், தி.மு.க. பேரூர் துணை செயலாளர் கோபால், சுவாமிமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் தேவ. ராதாகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் துரை குணாளன், ஜெமினி, லட்சுமி பிரியா மற்றும் சம்பத் சுப்பிரமணியன், கோபால் மற்றும் சுவாமிமலை உலோக விக்ரக உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 1/2 அடி உயர ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.
    • விசலூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் மேல விசலூர் நாகரசம்பேட்டை வாய்க்கால் சீரமைக்கப்பட்டு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிக்காக குழி தோண்டிய போது, மேலவிசலூர் தெற்கு தெருவை சேர்ந்த செல்வமணி என்பவர் வீட்டின் பின்புறம் 1/2 அடி உயர ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.

    இதுகுறித்து செல்வமணி விசலூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் பூமா ஆகியோர் சிலையை பார்வையிட்டனர்.

    பின்னர், பொதுமக்கள் முன்னி லையில் சிலை அவர்களிடம் ஒப்படை க்கப்பட்டது.

    கறம்பக்குடியில் விநாயகர் சிலை ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன

    கறம்பக்குடி,  

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சீனி கடை முக்கம், தென்னகர், சடையன் தெரு, பேருந்து நிலையம், நரங்கியப்பட்டு, உள்பட 9 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

    இதை தொடர்ந்து சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி பல்வேறு இடங்களில் வைக்கப்ப ட்டிருந்த விநாயகர் சிலை கள் தாரை தப்பட்டைகள் முழங்க கறம்பக்குடி சீனி கடை முக்கம் பகுதிக்கு ஊர்வலமாக சென்றடைந்தன.

    பின்னர் அங்கிருந்து சிலைகளின் ஒன்றுபட்ட ஊர்வலம் நடைபெற்றது. இந்துக்களின் ஒற்றுமை எழுச்சி ஊர்வலம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தை பாஜக மற்றும் இந்து முன்னணி மாநில மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி வைத்து பேசினார்கள்.

    இந்த ஊர்வலம் சீனி கடை முக்கத்தில் தொடங்கி திருவோணம் சாலை, தட்டாவூரணி சாலை, தட்டார தெரு, கடைவீதி, பள்ளிவாசல் வீதி, பேருந்து நிலையம், கச்சேரி வீதி, புதுக்கோட்டை ரோடு வழியாக சென்று திருமணஞ்சேரி அக்கினி ஆற்றை அடைந்தது.

    பின்னர் விழா குழுவினர்கள் பூஜைகள் செய்து ஆற்றில் சிலைகளை கரைத்தனர்.

    புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியோர் தலைமையில் 600 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விநாயகர் சிலை ஊர்வலத்தினால் கறம்பக்குடியில் நேற்று மாலை 3 மணி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன.

    • பாராளுமன்றத்தில் வ.உ.சி. சிலை வைக்க வேண்டும் என்று புதுக்கோட்டையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது
    • புதுக்கோட்டையில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

     புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை லேணா திருமண மகாலில் வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் துரை.மதிவாணன் எழுதிய செம்மாப்புத் தமிழா சிதம்பரச் செம்மல் என்ற நூல் வெளியிடப்பட்டது. முன்னதாக வ.உ.சி. உருவபடத்தை அகில இந்திய வ.உ.சி.பேரவை மாநில தலைவர் லேணா.மு.லெட்சுமணன்பிள்ளை திறந்து வைத்தார். மாவட்ட கவுரவ தலைவர் ராமராஸ், பேராசிரியர் தா.மணி மாவட்ட தலைவர் நிலா மணியன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். வ.உ.சி.மகன் வழி பேரன் வ.உ.சி.வா.சிதம்பரம் நூலை வெளியிட கவிஞர் தங்கம்மூர்த்தி பெற்றுக் கொண்டார் .வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட வ.உ.சி. என்ற தலைப்பில் சென்னை ஆய்வாளர் ரெங்கையா முருகன், வ.உ.சி.யின் வழி என்ற தலைப்பில் தமிழ்நாடு வ.உ.சி.ஆய்வு வட்டம் செயலாளர் குருசாமி மயில்வாகனன் தமிழ்தேச அரசியலில் வ .உ.சி.யின் பங்கு என்ற தலைப்பில் சிவகங்கை பொறியாள்ர் கதிர் நம்பி பேசினார். தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர் பெ .மணியரசன் பேசினார். வ.உ.சி. கப்பலோட்டினார் என நிறுத்தி கொள்ளாமல் அவருடை பன்முக தன்மையை மக்கள் அறிந்து கொள்ள அவருடைய செயல்களை வெளிகொணரவேண்டும். அதற்காகதான் அவரை பற்றி தெரிந்துக் கொள்ள ஆராய்ச்சி நூலகம் அமைக்க வேண்டும். வேண்டும். இந்தியா பல சேதங்களாக பிரிந்து கிடந்தாலும் ஒற்றை தேசமாக விளங்கவேண்டும் என்றார். விழாவில் உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைகழகம் வ.உ.சி. பெயரில் மாற்றம் செய்ய தீர்மானம் போட வேண்டும். பராளுமன்ற வளாகத்தில் வ.உ.சி. சிலை வைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் வ.உ.சி பெயரில் பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட வேண்டும். வ.உ.சி. எழுதிய மெய்யறம் பள்ளிக் குழந்தைகளுக்கு பாடமாக வைக்கப்பட வேண்டும். சென்னை எழும்பூர் ரெயில்நிலையத்திற்கு வ.உ.சி பெயர் வைக்க வேண்டும். தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் ஆய்வாளர்களுக்கு வ.உ.சி. விருது வழங்கப்பட வேண்டும் . ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விழாவில் பொன்.வாசிநாதன் வரவேற்று பேசினார். சிவ.சண்முகராஜா நன்றி கூறினார். தனபதி சேவியர், பேராசிரியர் விஸ்வநாதன், ராமு கண்ணு, வைர.ந.தினரகன், விடுதலைகுமரன், பீர் முகமது, சிறு தொழிலதிபர்கள் சங்க தலைவர்கள் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை இடித்து தள்ளவேண்டும் என பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்
    • சிலைக்கு கூடுதல் பாது காப்பு போடப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோவில் அருகா மையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு இந்து அமைப்புகள் அவ்வப்போது எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றன.

    இந்த நிலையில் அந்த பெரியார் சிலையை இடித்து தள்ள வேண்டும் என ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார். இத னால் மீண்டும் பிரச்சனை எழுந்தது.

    அதைத்தொடர்ந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, துணை போலீஸ் கமிஷனர் அன்பு உள்ளிட்டோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிலைக்கு கூடுதல் பாது காப்பு போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சர்ச்சைக்குரிய பதிவினை ராமநாதபுரம் திருவாடனை பகுதியைச் சேர்ந்த பரணி என்பவர் பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை ஸ்ரீரங்கம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில் பெரியார் சிலையை தக ர்க்கப் போவதாக மீண்டும் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் திருச்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு

    திருச்சி:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து பா.ஜ.க., இந்து முன்னணி போன்ற அமைப்பினர் விநாயகர் சதுர்த்திக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு ள்ளனர்.

    இந்த பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில், விநாயகர் சிலை களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகளில் கைவினைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொண்டயம்பேட்டை மற்றும் திருவானை கோயி லில் பல தலைமுறைகளாக விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    மூலப் பொருள்கள் விலை ஏற்றம்

    தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வகையான விநாய கர் சிலைகள் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள களிமண்ணை கொண்டு வந்து செய்து வருகின்றனர். இதில் வீடுகளில் பூஜை செய்வதற்கு ஏற்ப ஒன்று முதல் இரண்டு அடி வரையிலான சிறிய சிலை கள் செய்யப்படுகி ன்றன.

    மேலும் ஊர்வலத்துக்கு தேவையாக 3 முதல் 15 அடி வரையிலான ராட்சத சிலைகளும் மோல்டிங் டைஸ் மூலம் தயாரிக்கி றார்கள்.

    தயாரிக்கும் முறை

    இந்த விநாயகர் சிலை தயாரிப்பதற்கு முக்கிய மூலப் பொருட்களாக காகி தக் கூழ் மற்றும் மரவள்ளி க்கிழங்கு மாவு பயன்படுத்த ப்படுகிறது, பாரம்பரியமாக சிலைகள் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள கொண்டயம்-பேட்டையைச் சேர்ந்த சிற்பி சாந்தி கூறும்போது,

    4 கிலோ மரவள்ளிக்கி ழங்கு மாவு 10 கிலோ காகித கூழுடன் அரைக்கும் இயந்திரத்தில் கலக்கப்படுகி றது. அது சிலை விரும்பிய நிலைத்தன்மையை அடையவும்,சரியான வலி மையை உறுதி செய்யவும் உதவுகிறது.

    சிலையின் ஒவ்வொரு பகுதியான தலை, கைகள், கால்கள் ஆகியவை தனித்த னியாக மோல்ட் டைஸைப் பயன்படுத்தி பின்னர் உடற்பகுதியில் இணைத்து வருகிறோம். தற்போது அந்த சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் சிற்பிகள் ஈடுபட்டு ள்ளனர்.

    சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வெல்ஸ் மற்றும் வண்ணமயமான நீர் சார்ந்த மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை மட்டு மே பயன்படுத்துகி றோம்.

    விநாயகர் சிலைகள் தயாரிப்பதற்கான ஆயத்தப் பணிகள் கடந்த ஜனவரி பிப்ரவரி மாதத்தில் தொட ங்கப்பட்டது. சேலம் மாவ ட்டத்தில் இருந்து மூலப்பொ ருட்களை கொள்முதல் செய்தோம்.

    மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது

    கடந்த ஆண்டை விட தற்போது மூலப்பொருட்க ளின் விலை அதிகரித்து ள்ளது. மேலும் தொழிலா ளர்க ளுக்கான கூலியும் உயர்ந்து விட்டது. இதனால் விநாயகர் சிலை உற்பத்தி செய்யும் பணிகள் சவால் நிறைந்ததாக உள்ளது என்றார். மற்றொரு கைவி னைஞர் பி.மணிகண்டன் பேசும்போது,

    கோவிட்-19 தொற்றுநோய்களின் போது எங்கள் தொழில் முடங்கி யது. திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அதற்கு காரணமாக இருந்தது.

    ஆனால் தற்போது இயல்பு நிலை திரும்பி இருந்தாலும் தேவைகள் குறைந்துள்ளது என்றார். பல கைவினைஞர்கள், வெளிச்சந்தையில் சிலைகளை அளவு மற்றும் வடிவமைப்பைப் பொறுத்து ரூ.12,000 முதல் 25,000 வரை விற்கின்றனர். திருச்சியில் தயாரிக்கப்படும் சிலைகளுக்கு தனி மவுசு உள்ளது. அதனால் திருச்சி மட்டுமல்லாமல் ராமநாதபுரம், தஞ்சாவூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களுக்கும் இங்கிருந்து சிலைகள் அனுப்பப்படுகிறது.

    சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் பண்டிகையை கொண்டாடுவதன் அவசியத்தை வலியுறுத்தி, சிலைகள் தயாரிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

    அதனை பின்பற்றியே கொண்டையம் பேட்டை மற்றும் திருவானைக்கோவில் பகுதிகளில் கலைஞர்கள் சிலைகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.

    இதனை அவ்வப்போது அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் சிற்பிகள் தெரிவித்தனர்.

    • மதுரையில் வீரன் அழகுமுத்து கோன் சிலை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • மாவட்ட தலைவர் நாட்டாமை ஜெயக்குமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மதுரை

    மதுரையில் தமிழ்நாடு யாதவா மகா சபை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் நாட்டாமை ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் வருகிற செப்டம்பர் 2-ந்தேதி திருச்சியில் நடைபெறும் யாதவா மாசபை மாநாட் டில் மதுரையிலிருந்து 10 ஆயிரம் பேருடன் பங்கேற்போம் என்றும் மதுரையில் முக்கிய சாலை சந்திப்புகளில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோனுக்கு தமிழ்நாடு அரசு சிலை அமைக்க வேண்டும், மேலும் தமிழ் இனத்தின் மூத்த குடியாக திகழும் யாதவ சமுதாயத்தினரை மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் சுப்பையா, சுடலை,கருணாநிதி, ராஜேந்திர பிரசாத், வெங்க டாஜலம், செல்லையா, சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    ×