search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலோக சிலை கைவினை கலைஞர்களுக்கு தொழில் கடன்
    X

    உலோக சிலை கைவினை கலைஞர்களுக்கு தொழில் கடன் வழங்கப்பட்டது.

    உலோக சிலை கைவினை கலைஞர்களுக்கு தொழில் கடன்

    • மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.
    • சுவாமிமலை உலோக விக்ரக உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலையில் உள்ள உலோக சிலை கைவினை கலைஞர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலமாக மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி க்குழு துணை தலைவரும், கும்பகோணம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான முத்துச்செல்வன் தலைமை தாங்கினார்.

    இதில் தஞ்சை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனரும், சுவாமிமலை உலோக விக்ரக உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாக செயல் ஆட்சியருமான விஜயகுமார், மாவட்ட தொழில் மைய உதவி பொறி யாளர் கார்த்திகேயன், சுவாமிமலை தி.மு.க. பேரூர் செயலாளர் பாலசுப்ர மணியம், சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், தி.மு.க. பேரூர் துணை செயலாளர் கோபால், சுவாமிமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் தேவ. ராதாகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் துரை குணாளன், ஜெமினி, லட்சுமி பிரியா மற்றும் சம்பத் சுப்பிரமணியன், கோபால் மற்றும் சுவாமிமலை உலோக விக்ரக உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×