search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளம் தோண்டிய போது ஐம்பொன் சிலை கண்டெடுப்பு
    X

    கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை.

    பள்ளம் தோண்டிய போது ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

    • 1/2 அடி உயர ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.
    • விசலூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் மேல விசலூர் நாகரசம்பேட்டை வாய்க்கால் சீரமைக்கப்பட்டு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிக்காக குழி தோண்டிய போது, மேலவிசலூர் தெற்கு தெருவை சேர்ந்த செல்வமணி என்பவர் வீட்டின் பின்புறம் 1/2 அடி உயர ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.

    இதுகுறித்து செல்வமணி விசலூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் பூமா ஆகியோர் சிலையை பார்வையிட்டனர்.

    பின்னர், பொதுமக்கள் முன்னி லையில் சிலை அவர்களிடம் ஒப்படை க்கப்பட்டது.

    Next Story
    ×