search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seedling"

    • பெரும்பாலான மரங்கள் விழுந்து விட்டது.
    • தற்போதைய சூழலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம் இணைந்து நடப்பாண்டு 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்ட த்தினை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில், ஆணையர் மல்லிகா, பொறியாளர் பிரதான் பாபு, பாலம் தொண்டு நிறுவனச்செ யலாளர் செந்தில்குமார் முன்னிலையில், கலெக்டர் சாருஸ்ரீ மரக்கன்றை வழங்கி தொடங்கி வைத்தார் .

    இதுகுறித்து கவிதா பாண்டியன் கூறும்போது கஜா புயலின்போது நகரத்திலிருந்த பெரும்பாலான மரங்கள் விழுந்து விட்டது. இதனால் தற்போதைய சூழலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் காற்று மாசுவை குறைத்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும், நகரை பசுமையாக்கவும், காடுகளின் பரப்பளவை 33 சதவீதமாக மாற்றும் வகையிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

    இதில் நிழல் தரும் மரங்களான புங்கன், வேம்பு, சரக் கொன்றை, இலுப்பை மற்றும் பூங்காக்களில் முள் இல்லா மூங்கில் போன்ற மரங்கள் நடப்படும், இப்பணியில் தன்னார்வலர்கள், சேவை அமைப்புகள், என்.எஸ்.எஸ். மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.

    நிகழ்ச்சியில் நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

    • இதில் ஊழியர்கள், செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • 77 சதவீத சலுகையில் மூத்தகுடி மக்களுக்கு சிறப்பு உடல் பரிசோதனை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் 77-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம் தேசியக்கொடி ஏற்றிவைத்தார்.

    நிகழ்ச்சியில் மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர்.சரவணவேல், நரம்பியல் சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர். காமேஷ் அருண், மேலாளர்கள், ஊழியர்கள், செவிலியர்கள், டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    மேலும், 77-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மருத்துவமனையில் 77 சதவீத சலுகையில் மூத்தகுடி மக்களுக்கு சிறப்பு உடல் பரிசோதனை இன்று (15-ந் தேதி) முதல் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • புவி வெப்பத்தை குறைக்க மரம் நடுவது அவசியம்.
    • தூய்மை பாரதம் இயக்கம் மூலம் நகரம் தூய்மையடைகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா இருவார விழாவின் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ் தலைமை வகித்து பேசும்போது, பொதுமக்களிடையே தூய்மை உறுதிமொழி ஏற்றல், திடக்கழிவு மேலாண்மை, இயற்கை முறையில் உரம் தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், நீர் மேலாண்மை,மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை குறைத்தல், நாப்கின்கள் பயன்ப டுத்துதல், கழிப்பறைகளின் பயன்பாட்டை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. என்றார்.

    திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றினை நட்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்து பேசும்போது, தூய்மை பாரதம் இயக்கம் மூலம் நகரம் தூய்மையடைகிறது. மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக பூமி வெப்பம் அதிகரித்து வருகிறது.

    இதனால் எதிர்காலத்தில் நாம் பேரிடரில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. எனவே மரங்களை நட்டு 33 சதவீத வனபரப்பை அதிகரித்து பூமியை குளிர்ச்சிபடுத்துவதால் மட்டுமே எதிர்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். ஒவ்வொருவரும் தன் கடமையாக கருதி மரக்கன்று நடுவதை இயக்கமாக கொண்டு செல்லவேண்டும் என்றார்.

    நிகழ்ச்சிக்கு பாலம் சேவை நிறுவனச்செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நகராட்சி மேலாளர் சீதாலெட்சுமி, அலுவலர்கள் சிற்றரசு, நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், செந்தில்குமார் மற்றும் மக்கள் கல்வி நிறுவன அலுவலர்கள் திருலோகச்சந்தர், கனகதுர்கா, பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

    • மயிலாடுதுறை மாவட்ட கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
    • சாலையோரம் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே காவாலம்பாடி பகுதியில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த யொட்டி 3000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மயிலாடு துறை மாவட்ட கோட்ட பொறியாளர் பாலசுப்பி ரமணியம் தலைமை வகித்தார்.

    சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் சீர்காழி ஆனந்தி, மயிலாடுதுறை இந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உதவி பொறியாளர் சசிகலா தேவி வரவேற்றார்.

    இதில் சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்துக் கூண்டு வைத்தார்.

    தொடர்ந்து சாலை ஓரம் 3000 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

    இதில் சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சு குமார், தி.மு.க. அவைத் தலைவர் நெடுஞ்செழியன், ஊராட்சித் துணைத் தலைவர் சுதாகர் மற்றும் கட்சி பிரமுகர்கள் முத்தமிழ், பன்னீர்செல்வம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் மெகா தூய்மை பணி நடைபெற்றது.
    • பொதுமக்களிடம் சாலையில் குப்பைகளை கொட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    வேதாரண்யம்:

    சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி ஆகியோரின் உத்தரவின்படி, வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மை இயக்கம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று விழா கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார்.

    நகராட்சி ஆணையர் ஹேமலதா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் மங்கள நாயகி, உறுப்பினர்கள், ஈகா, பிரியம் அறக்கட்டளைகள், தன்னார்வலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் மெகா தூய்மை பணி நடைபெற்றது.

    பின், நந்தவன குள தெருவில் பொதுமக்கள் பங்களிப்புடன் குளத்தை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து, அகஸ்தியர்கோவில் குளம் தூய்மை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து, தூய்மை பணியாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக நகராட்சி நுண்ணிய உரக்கிடங்கில் பணிபுரியும் 8 பணியாளர்களுக்கு நற்சான்றிதழை நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் வழங்கினர்.

    பின்னர், தோப்புத்துறை இலந்தயடி ரஸ்தா பகுதியில் கொட்டப்பட்டிருந்த கட்டிடக்கழிவுகள் அகற்றப்பட்டு பொதுமக்களிடம் குப்பைகளை சாலையில் கொட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

    • நாற்றுகள் மூழ்கிய நிலையில் உள்ளதால் நாற்றுகள் அழுகி வீணாகி வருகிறது.
    • நடவு வயல்களில் மழைநீர் அதிகளவில் தேங்கி பயிர்கள் முற்றிலும் அழுகி போகும் அபாய நிலை உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் சம்பா பருவத்தில் நடவு செய்திருந்த பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுருந்த சம்பா பயிர்கள் தொடர்மழையால் வயல்களில் மழைநீர் தேங்கி கடந்து சில தினங்களாக நாற்றுகள் மூழ்கிய நிலையில் உள்ளதால் நாற்றுகள் அழுகி வீணாகி வருகிறது.

    ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்து நடவு செய்த சம்பா விவசாயிகள், தற்போது பெய்து வரும் தொடர்மழையால் நடவு வயல்களில் மழைநீர் அதிகளவில் தேங்கி பயிர்கள் முற்றிலும் அழுகி போகும் அபாய நிலையில் உள்ளதால் சம்பா விவசாயிகள் கடும் பாதிப்பில் உள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட சம்பா விவசாயிகளுக்கு உடனடியாக அரசு பயிர் நிவாரண தொகை வழங்க உத்திரவிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கல்லூரி வளாகத்தினுள்ளேயே அமர்ந்து உணவருந்தும் விதமாக ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் உணவருந்தும் மேடை.
    • தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்றுகளை எம்.எல்.ஏ நட்டு வைத்தார்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த புத்தூரில் சீனிவாசா சுப்புராயா அரசு பல் தொழிநுட்பக் கல்லூரியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் மதிய உணவு இடைவேளையின் போது மாணவிகள் கல்லூரி மைதானம் மற்றும் மரத்தின் நிழல்களில் அமர்ந்து உணவருந்துவதை அறிந்த கல்லூரியின் முன்னாள் மாணவரும் சென்னை துர்கா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் உரிமையா ளருமான சண்முகம் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ளேயே அமர்ந்து உணவருந்தும் விதமாக ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் உணவருந்தும் மேடை அமைத்து கொடுத்துள்ளார்.

    இதையடுத்து உணவரு ந்தும் வளாகம் திறப்பு விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

    பின்னர் பருவ தேர்வு களில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் விளையாட்டு துறையில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கல்லூரி முதல்வர் முனைவர் தங்கமணி தலைமை வகித்தார்.

    இயந்திரவியல் துறை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.

    ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி ராஜேந்திரன், அமைப்பியல் துறை தலைவர் முகமதுஆஷிக் அலி முன்னிலை வகித்தனர்.

    கண்காணிப்பாளர் வைத்தியநாதன், ஆசிரிய ர்கள் பிரேம்நாத், தாமரைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கணினியில் துறை விரிவுரையாளர் சத்யா நன்றி கூறினார்.

    • அண்ணா படத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • அண்ணா பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாள் விழா தி.மு.க கொண்டாடப்பட்டது. முன்ன தாக சந்தைப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ.செங்குட்டுவன் தலைமையில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    அதேபோல் திருமருகல் தெற்கு ஒன்றியம் பூதங்குடியில் அண்ணாவின் படத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திட்டச்சேரியில் நகர செயலாளர் முகமது சுல்தான் தலைமையில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காரையூரில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அதேபோல் 39 ஊராட்சிகளிலும் அண்ணாவின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    • 72 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 52 ஆயிரத்து 935 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா உபய வேதாந்தபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 72 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 52 ஆயிரத்து 935; மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கி பேசியதா வது, தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

    மக்கள் நேர்காணல் முகாமில் ஊரக வளர்ச்சி த்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் ரூ.21 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணையும், வருவாய்துறையின் சார்பில் 31 பேருக்கு ரூ.31 ஆயிரம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், 5 பேருக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டாவும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 2 பேருக்கு ரூ.11 ஆயிரத்து 700 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரமும், வேளாண்மைத் துறை சார்பில் 17 பேருக்கு ரூ.25 ஆயிரத்து 235 மதிப்பீட்டில் இடுபொருட்களும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பேருக்கு மரக்க ன்றுகளும் என மொத்தம் 72 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 52 ஆயிரத்து 935 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என கூறினார்.

    முன்னதாக அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள திட்ட விளக்ககண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்.சித்ரா, ஆர்.டி.ஓ சங்கீதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) கண்மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன், தாசில்தார் பத்மினி, உபயவேதந்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார் நாற்றுப்பண்ணைகள் வாயிலாக உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • மிளகாய்20 சதவீதமும், கத்தரி, காலிப்பிளவர் 10 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மடத்துக்குளம்,

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், காய்கறி பயிர் சாகுபடி பிரதானமாக உள்ளது.குறைந்த கால சாகுபடி, மகசூல், வருவாய் என்ற அடிப்படையில், 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர்.

    சாகுபடிக்கு தேவையான தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, காலிபிளவர் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்கள், தனியார் நாற்றுப்பண்ணைகள் வாயிலாக உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட நாற்றுப்பண்ணைகள் உள்ளன. இங்கு குழித்தட்டுகளில் காய்கறி விதை நடவு செய்து 20 முதல் 25 நாட்கள் வளர்ந்த நாற்றுக்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிகளவு இருக்கும் என்பதால் நாற்றுப்பண்ணைகளில் 70 சதவீதம் தக்காளி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    சாகுபடி செய்வதற்கு தேவையான நாற்றுக்கள் வினியோகம் செய்வதற்காக உடுமலை பகுதியிலுள்ள ஒவ்வொரு நாற்றுப்பண்ணைகளிலும் தலா 10 லட்சம் நாற்றுக்கள் வரை உற்பத்தி செய்து தயார் நிலையில் உள்ளது.தற்போது தக்காளிக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் தக்காளி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இது குறித்து நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது: -

    தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து, நாற்றுப்பண்ணைகளில் தக்காளி, கத்தரி, மிளகாய், காலிப்பிளவர் உள்ளிட்ட நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.கடந்த வாரம் மழை பெய்ததால், விற்பனை அதிகரித்தது. தென்மேற்கு பருவ மழை துவங்க தாமதமாவதால் தற்போது விற்பனை குறைந்துள்ளது. மழை துவங்கியதும் விற்பனையும், நடவும் தீவிரமடையும். தக்காளி நாற்று ரகத்திற்கு ஏற்ப 50 முதல் 80 பைசா வரையும், பந்தல் சாகுபடியில் ஆப்பிள் வகை தக்காளி நாற்று நடவு செய்யவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்த வகை நாற்று ஒரு ரூபாய்க்கு விற்கிறது.அதே போல், மிளகாய்70 முதல் 80 பைசாவுக்கும், கத்தரி50 பைசாவுக்கும், காலிபிளவர் 70 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.அதே போல் மிளகாய்20 சதவீதமும், கத்தரி, காலிப்பிளவர் 10 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது.நடப்பு சீசனில்அதிக மகசூல், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் விரைவில் அழுகாமல் தாங்கும் திறனுள்ள தோல்களை கொண்ட காய் எனஇரண்டு புதிய ரக தக்காளி விதைகள் நடவு செய்து நாற்று உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்வாறு நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்

    • விவசாய நிலத்தில் மின் இணைப்புக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
    • நாற்று கருகும் நிலையில் உள்ளதால் விரைந்து மின் இணைப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    நாங்குநேரி தாலுகாவுக்கு உட்பட்ட கூந்தன்குளம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முருகதாஸ். விவசாயி. இவர் கலெக்டர் அலுவலகத்துக்கு கையில் நெல் நாற்றுடன் வந்து மனு அளித்தார்.

    அந்த மனுவில், கூந்தன்குளம் கிராமத்தில் எனக்கு விவசாய நிலம் உள்ளது. அங்கு நான் ஆழ்துளை கிணறு அமைத்து உள்ளேன். அதனை நம்பி தற்போது நெல் நாற்று நடவு செய்துள்ளேன்.

    விவசாய நிலத்தில் மின் இணைப்புக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே நாற்று கருகும் நிலை உள்ளது. எனவே எனக்கு விரைந்து மின் இணைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்பன் பாண்டியன் அளித்த மனுவில், நெல்லை சிந்துபூந்துறையில் உள்ள சிவன் கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்டது. இங்கு இரண்டு கடைகள் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

    அப்போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் ஏலம் எடுக்க சென்றிருந்தபோது மாற்று சமுதாயத்தினர் அவர்களை எடுக்க விடாமல் தாங்களே ஏலத்தில் எடுத்தனர். இந்த சம்பவத்திற்கு உடந்தையாக சில அதிகாரிகளும் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சியை சேர்ந்த யாக்கோபு என்பவர் பதாகையுடன் வந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். முன்னதாக அவர் கலெக்டர் அலுவலகம் சாலையில் உள்ள ஒரு மரத்தில் கயிறு மாட்டி தூக்கில் தொங்குவது போல கழுத்தை வைத்து கோஷம் எழுப்பினார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து அவரை தடுத்து நிறுத்தி எச்சரித்தனர்.

    பின்னர் அவரை போலீசார் அழைத்துச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க செய்தனர். அவர் அளித்த மனுவில், நான் மானூர் யூனியனுக்கு உட்பட்ட மதவக்குறிச்சி ஊராட்சி மன்ற செயலாளராக பணியாற்றி வந்தேன்.

    ஊராட்சிக்கான நிதியை நான் எடுத்து செலவு செய்ததாக கூறி கடந்த 2004-ம் ஆண்டு நெல்லை மாவட்ட உதவி இயக்குனர் (தணிக்கை) அறிக்கையின் படி என்னை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக பணி நீக்கம் செய்தது.

    அதன் பின்னர் நான் கடந்த 17 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்ட ரீதியாக போராடி வருகிறேன். எனக்கு வேலை வழங்குவதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    ×