திருத்துறைப்பூண்டியில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும்பணி

பெரும்பாலான மரங்கள் விழுந்து விட்டது. தற்போதைய சூழலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது
மரக்கன்று நடும் பணியை கலெக்டர் சாருஸ்ரீ மரக்கன்றை வழங்கி தொடங்கி வைத்தார்.
மரக்கன்று நடும் பணியை கலெக்டர் சாருஸ்ரீ மரக்கன்றை வழங்கி தொடங்கி வைத்தார்.
Published on

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம் இணைந்து நடப்பாண்டு 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்ட த்தினை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில், ஆணையர் மல்லிகா, பொறியாளர் பிரதான் பாபு, பாலம் தொண்டு நிறுவனச்செ யலாளர் செந்தில்குமார் முன்னிலையில், கலெக்டர் சாருஸ்ரீ மரக்கன்றை வழங்கி தொடங்கி வைத்தார் .

இதுகுறித்து கவிதா பாண்டியன் கூறும்போது கஜா புயலின்போது நகரத்திலிருந்த பெரும்பாலான மரங்கள் விழுந்து விட்டது. இதனால் தற்போதைய சூழலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் காற்று மாசுவை குறைத்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும், நகரை பசுமையாக்கவும், காடுகளின் பரப்பளவை 33 சதவீதமாக மாற்றும் வகையிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதில் நிழல் தரும் மரங்களான புங்கன், வேம்பு, சரக் கொன்றை, இலுப்பை மற்றும் பூங்காக்களில் முள் இல்லா மூங்கில் போன்ற மரங்கள் நடப்படும், இப்பணியில் தன்னார்வலர்கள், சேவை அமைப்புகள், என்.எஸ்.எஸ். மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.

நிகழ்ச்சியில் நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com