search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ration cards"

    • ரேசன் அட்டையில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்களது விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.
    • பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ள இந்த உத்தரவு குறித்து தமிழக அரசு விளக்கம்.

    சென்னை:

    தமிழகத்தில் தற்போது 2.23 கோடி ரேசன் அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34 ஆயிரத்து 793 ரேசன் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51 ஆயிரத்து 954 பேர் பயன் பெறுகின்றனர். இவர்களில் 6 கோடியே 96 லட்சத்து 47 ஆயிரத்து 407 பேர் தங்களது ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். மொத்தம் உள்ள குடும்ப அட்டைகளில் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் அந்தி யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 18.61 லட்சம் குடும்ப அட்டைகளும் முன்னுரிமை பெற்ற 95.67 லட்சம் குடும்ப அட்டைகளும் உள்ளன. 'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் தமிழ்நாட் டில் செயல்படுத்தப்பட்டு வருவதால், உணவுப் பொருள் வழங்கல் திட்டம் கணினி மயமாக்கப்பட்டு உள்ளது.

    ரேசன் பொருட்களும் கைரேகை பதிவு மூலம் வழங்கப்படுவதால் யார் வேண்டுமானாலும் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என்ற நிலை உள்ளது.

    இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ரேசன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கை விரல் ரேகையை ரேசன் கடையில் பதிவு செய்ய வேண்டும் என்று கடைக்காரர்கள் வலியுறுத்தி வந்தனர்.


    இதில் சிலர் மட்டும்தான் கைவிரல் ரேகையை பதிவு செய்தனர். இன்னும் ஏராளமானோர் கைவிரல் ரேகையை பதிவு செய்யாமல் உள்ளனர்.

    இந்த நிலையில் தற்போது ரேஷன் அட்டையில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்களது விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த மாதம் ரேசன் பொருளை முழுமையாக தர மாட்டோம். குறைத்து விடுவோம் என்று கராராக இப்போது கூறி வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி விரல் ரேகை வைக்காத உறுப்பினரின் பெயரை ரேசன் அட்டையில் இருந்து எடுத்து விடுவோம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். வீட்டில் உள்ள வயதானவர்களை எப்படி ரேசன் கடைக்கு அழைத்து செல்வது, ஆஸ்பத்திரியில் இருப்பவர்களை ஆம்புலன்சில் கொண்டு வந்தா விரல் ரேகையை பதிவு செய்ய முடியும் என்று ரேசன் கடைக்காரர்களிடம் வாக்குவாதம் செய்து வந்தனர்.

    பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ள இந்த உத்தரவு குறித்து தமிழக அரசு இப்போது விளக்கம் அளித்து உள்ளது.

    இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர் சஹாய் மீனா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை சரி பார்ப்பு தொடர்பாக மாவட்டங்களுக்கு ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த சமயத்தில் நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பு பணியினை முடிக்க பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

    * நியாய விலை கடைகளில் இன்றியமையாப் பண்டங்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்களது கைவிரல் ரேகை வைக்கப்படும் போது ஆவணங்கள் ஏதும் கோரக் கூடாது.


    * குடும்ப அட்டைதாரரின் குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்படவில்லை எனில், அவர்களின் பெயர் நீக்கம் செய்யப்படும் என்றோ, இன்றியமையாப் பண்டங்கள் வழங்கப்படாது என்றோ தவறான தகவல்களை வழங்கப்படக் கூடாது.

    * குடும்ப அட்டைதாரர்களின் வசதியின்படி, நியாய விலை கடைக்கு வருகை தந்து கை விரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம். மாறாக, அவர்களை கட்டாயப்படுத்தி நியாயவிலை கடைக்கு வர வழைத்து சிரமங்களை ஏற்படுத்தக் கூடாது.

    நியாய விலை கடையில் விற்பனை முடிந்த பிறகு குடும்ப அட்டைதாரர்களது வீடுகளுக்கு சென்று பயனாளிகளின் கை விரல் ரேகை வைக்கும் பணியினை முடிக்கலாம்.

    மேற்கூறியவாறு, அறிவுரைகளை பின்பற்றி கை விரல் ரேகை சரிபார்ப்பு பணியினை, பயனாளிகளுக்கு எவ்வித இடையூறுகள் இல்லாமலும், குழப்பங்கள் ஏதும் இல்லாமலும் முடிக்கப்பட நியாய விலை கடை பணியாளர்களை அறிவுறுத்துமாறும் அப்பணியினை மேற்பார்வையிட சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்து மாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த உத்தரவின் நகல் ரேசன் கடைகளின் உயர் அதிகாரிகளுக்கும் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ. 1000-ம் வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்பட்டது.
    • குடும்ப அட்டை விண்ணப்பித்து 4 மாதங்களாகியும் கிடைக்காமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

    திருப்பூர்:

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ. 1000-ம் வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளன்று, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதில் தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பெண்களுக்கு மேல் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தில் பலரும் பயன்பெறவே புதியதாக குடும்ப அட்டைகளை பலரும் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளதாகவும், அதேசமயம் உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கும், குடும்ப அட்டை விண்ணப்பித்து 4 மாதங்களாகியும் கிடைக்காமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இதுகுறித்து வட்ட வழங்கல்துறை அலுவலர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: -

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டப்பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டன. அப்போது தொடங்கி தற்போது அக்டோபர் மாதம் வரை புதிய குடும்ப அட்டைகள் யாருக்கும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய குடும்ப அட்டைக்கு பல ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 4 மாதங்களாக குடும்ப அட்டை அச்சிடப்படவில்லை.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு பலர் இனி வரும் நாட்களில் விண்ணப்பிக்க இருப்பதால், ஒரே கதவு எண்ணில் பலர் புதியதாக விண்ணப்பிப்பதையும் பார்க்க முடிகிறது. ஆனாலும் உரிய விசாரணைகள் முடிந்த பின்னர்தான், உரியவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்க இயலும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 1500 முதல் 2000 குடும்ப அட்டைகள் புதியதாக விண்ணப்பித்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

    சென்னையில் இது பல மடங்கு அதிகமாக இருக்கும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது கடந்த ஒரு வார காலமாக தான் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் ஆகிய பணிகளை தொடங்கி வழங்கி வருகிறோம். இன்னும் புதிய குடும்ப அட்டை அச்சிட்டு வழங்கும் பணி தொடங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் இது நிலுவையில் இருப்பதால், விரைவில் அரசு இது தொடர்பாக தெளிவான முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்". இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ரூ.7.60 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி வைத்தார்.
    • 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 15 லட்சம் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன என பேசினார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரூ.2 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து ரூ.7.60 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். மகளிர் உரிமை திட்டம் வழங்கியதன் மூலம் பெண்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வழிவகை செய்துள்ளார். முதியோர் உதவித்தொகை ரூ.1200 ஆகவும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1500 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 15 லட்சம் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. வயதானவர்கள், மாற்றுத்திற னாளிகள், நோயாளிகள் என ரேசன் கடைக்கு செல்ல முடியாதவர்கள் பொருட்கள் வாங்க வேறு ஒருவரை நியமித்து விண்ணப்பம் அளித்தால் அந்த நபரிடம் பொருட்கள் வழங்கப்படும். தமிழகத்தில் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்ப ட்டுள்ளது. பரப்பலாறு அணை விரைவில் தூர்வாரப்படும். குடிநீர், தெருவிளக்கு, பஸ் வசதி, கல்வி, சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பொங்கல் பரிசு தொகுப்பை வருகிற 9-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைக்கிறார்.
    • மாவட்டம் முழுவதும் மொத்தம் 4 லட்சத்து 87 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    நெல்லை:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கான பரிசு தொகுப்பாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ரூ.1,000 ஆகியவை வழங்கப்பட உள்ளன.

    பொங்கல் பரிசு தொகுப்பு

    இந்த பொங்கல் பரிசு தொகுப்பை வருகிற 9-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பொங்கல் தொகுப்பை பெறுவதற்காக முன்கூட்டியே டோக்கன் வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி டோக்கன்கள் அச்சடிக்கப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த டோக்கனில் பொங்கல் தொகுப்பை பெறும் நாள், நேரம் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும். அதைக் காட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    4.87 லட்சம் ரேசன் கார்டுகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் கலெக்டர் விஷ்ணு உத்தரவின்பேரில் நெல்லை, பாளை, சேரன்மகாதேவி, அம்பை, மானூர், திசையன்விளை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 8 தாலுகாக்களில் இன்று முதல் அலுவலர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்கள் வழங்கினர்.

    நாளொன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 4 லட்சத்து 87 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதுதவிர இலங்கை அகதிகள் சுமார் 658 பேருக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

    வீடு வீடாக வினியோகம்

    இந்த தொகுப்பானது மாவட்டம் முழுவதும் உள்ள 796 ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு தொகுப்பை வருகிற 9-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் எனவும், கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை வழங்கினர். பெரும்பாலான கிராமப்பு றங்களில் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளுக்கு நேரடியாக சென்று டோக்கன்களை பெற்றுக்கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மேற்பார்வையில் குடிமைப்பொருள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு குறைதீர் நாள் முகாம் நாளை (9-ந்தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
    • நாமக்கல், ராசிபுரம், மோகனூர், குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளில், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், கைபேசி எண் பதிவு, புதிய குடும்ப அட்டை கோருதல், மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளவும், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் வரும் நாளை (9-ந்தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

    நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி-வேலூர் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    எனவே, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - 2019 தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு இம்முகாமினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், முகாமில் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்குமாறும், அதாவது முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் கிருமி நாசினி பயன்படுத்துதலை கடைபிடிக்குமாறும் கேட்டுக்கொள் ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    பொங்கல் பரிசை 14-ந்தேதிக்குள் வாங்கவேண்டும். இல்லாவிட்டால் கிடைக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது. #PongalGift #Pongal #TNGovt
    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு முன்கூட்டியே ஊருக்கு செல்வதால் 6 நாள் விடுமுறை முடிந்து வந்து பொங்கல் பொருட்களை வாங்கி கொள்ளலாமா? என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்தது. இது பற்றி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தொடங்கி இன்றோடு 3 நாட்களாகி விட்டது. 7-ந்தேதியில் இருந்து 14-ந்தேதிக்குள் மட்டுமே பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



    எனவே எக்காரணம் கொண்டும் 14-ந்தேதிக்கு பிறகு பொங்கல் பரிசு பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை. எனவே பொதுமக்கள் குறிப்பிட்ட தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ள வேண்டும். 14-ந்தேதிக்கு பிறகு பொங்கல் பரிசு கண்டிப்பாக கிடைக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எனவே பொங்கல் பரிசு பொருட்களை இன்று முதல் விரைந்து கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #PongalGift #Pongal #TNGovt
    பொங்கல் பரிசாக குடும்பத்துக்கு ரூ.1000 கொடுக்கும் பட்சத்தில் நடப்பாண்டில் அரசுக்கு வருவாய் பற்றாக்குறை ரூ.20 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #PongalGift #TNGovt
    சென்னை:

    பொங்கலைக் கொண்டாட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    வருகிற திங்கட்கிழமை முதல் இந்த பணப்பட்டுவாடா தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் 2 கோடியே 1 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1000 கொடுக்கும்பட்சத்தில் தமிழக அரசுக்கு சுமார் ரூ.2 ஆயிரத்து 20 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    2 வாரங்களுக்கு முன்பு அரிசி, கரும்பு, சர்க்கரை கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.1000 கொடுக்கும் முடிவு அதற்கு பிறகு எடுக்கப்பட்டது.

    தமிழக அரசின் இந்த திடீர் முடிவால் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை கணிசமான அளவுக்கு அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நடப்பாண்டில் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.17 ஆயிரத்து 500 கோடியாக இருக்கும் என்று அதிகாரிகள் வரையறுத்துள்ளனர்.


    இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பரிசுத் தொகை திட்டத்துக்காக கிட்டத்தட்ட ரூ.2,277 கோடி செலவாகும் என்று தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக நடப்பாண்டில் அரசுக்கு வருவாய் பற்றாக்குறை ரூ.20 ஆயிரம் கோடியை எட்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    2016-17ம் ஆண்டு வருவாய் பற்றாக்குறை சுமார் ரூ.13 ஆயிரம் கோடியாக இருந்தது. 2017-18ம் நிதியாண்டில் அது ரூ.18,370 கோடியாக உயர்ந்தது. என்றாலும் வருவாய் பற்றாக்குறை, நிதிச்சுமையை சமாளிக்க முடியும் என்று தமிழக அரசு அதிகாரிகள் கூறி உள்ளனர். #PongalGift #TNGovt
    தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வரும் 7-ந்தேதி முதல் அனைத்து ரே‌சன் கடைகளிலும் வழங்கப்படுகிறது. #PongalGift #EdappadiPalaniswami
    சென்னை:

    கடந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் தொகுப்பு பச்சை நிற ரே‌சன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

    சர்க்கரை பெறக்கூடிய குடும்ப அட்டை வைத்து இருப்பவர்களுக்கு இதுவரை பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் நடுத்தர மற்றும் வசதி படைத்த குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர்.

    ஆனால் இந்த வருடம் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 கோடியே ஒரு லட்சம் குடும்பத்தினர் இதன் மூலம் பயன் அடைகிறார்கள்.

    இடைத்தேர்தல் நடைபெறும் திருவாரூர் மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இடைத்தேர்தல் முடிந்த பின்னர் திருவாரூர் மாவட்டத்திற்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தபோது தி.மு.க. ஆட்சியிலும் சரி, ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போதும் கூட அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. 1000 ரூபாய் பணமும் வழங்கப்படவில்லை.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் முதன் முதலாக அனைத்து ரே‌சன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

    ஏழைகள், வசதி படைத்தவர்கள் என்று பாகுபாடு பார்க்காமல் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொருட்கள் வாங்குகின்ற அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் கிடைக்கும்.

    இதன் மூலம் அரசுக்கு ரூ.1,974 கோடியே 17 லட்சம் செலவாகிறது. பொங்கல் பொருட்கள் தொகுப்பிற்கு மட்டும் ரூ.257 கோடியே 52 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.



    பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சிரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கும். இந்த பொருட்களுடன் பை ஒன்றும் வழங்கப்படும்.

    பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் அனைத்து ரேசன் கடைகள் மூலம் குடும்பதாரர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வழங்கப்படும். ஒவ்வொரு அட்டைத்தாரர்களோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ நேரில் சென்று பெற்று கொள்ள வேண்டும்.

    பொங்கல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு பேக்கிங் செய்யும் பணி நடைபெறுகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டு இருப்பதால் காகித பையில் பொருட்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

    பொங்கல் பரிசு 7-ந்தேதி முதல் அனைத்து ரே‌சன் கடைகளிலும் கிடைக்கும் வகையில் இத்திட்டத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

    அதனை தொடர்ந்து அடுத்த வாரம் முதல் 13-ந்தேதி வரை பொங்கல் பரிசு அனைவருக்கும் கிடைக்கும்.

    நெரிசல் இல்லாமல் வழங்கும் வகையில் ஒவ்வொரு ரே‌சன் கடைகளிலும் தினமும் 300 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    எந்தெந்த கார்டுகளுக்கு எந்த நாட்களில் பெற்றுக் கொள்வது என்பது குறித்து ரே‌சன் கடைகளில் அறிவிப்பு வெளியிடப்படும். #PongalGift #EdappadiPalaniswami
    தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் இலவச சர்க்கரை, துணிகளுக்கு பதிலாக ரூ.1000 ரொக்க பணத்தை பரிசாக வழங்க புதுவை அரசு முடிவு செய்துள்ளது. #Diwali #PondicherryGovernment
    புதுச்சேரி:

    புதுவையில் தீபாவளி பண்டிகையின் போது அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச சர்க்கரை வழங்கப்படும்.

    மேலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு செட் துணி ஆகியவையும் வழங்கப்படும்.

    தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு ஒரு குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு செட் துணி, மற்றும் சர்க்கரை வழங்கப்படும்.

    கடந்த ஆண்டு தீபாவளி சர்க்கரை வழங்க கவர்னர் கிரண்பேடி அனுமதிக்கவில்லை. இதனால் அப்போது தீபாவளி சர்க்கரை, மற்றும் இலவசங்கள் வழங்கப்படவில்லை.

    இந்த ஆண்டு இவற்றை எப்படியாவது வழங்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வற்புறுத்தி வந்தன.

    நேற்று இது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் அமைச்சரவை அரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், அனைத்து கட்சி எம்.எல.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது இலவசங்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வற்புறுத்தினார்கள்.

    இதையடுத்து அரசு அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச சர்க்கரை, துணிகளுக்கு பதிலாக ரூ.1000 ரொக்க பணத்தை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளது.

    இதுபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் துணியை கணக்கிட்டும் அதற்கான பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ரேசன் கார்டு களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியையும் ரொக்க பணமாக வழங்க முடிவு செய்துள்ளனர்.

    இது சம்பந்தமாக அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச கைலி, சேலை, 2 கிலோ சர்க்கரை ஆண்டுதோறும் வழங்கப்படும்.



    இந்த ஆண்டு ரொக்க பணமாக வழங்க எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளனர். காலம் கடந்துவிட்டதால் டெண்டர் வைத்து பொருட்களை வழங்க முடியாது என்பதால் இதற்கு அரசும் சம்மதித்துள்ளது.

    இதனடிப்படையில் ஒரு செட் துணி, 2 கிலோ இலவச சர்க்கரைக்கு ஈடாக பிற சமூகத்தினரின் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் ரூ.ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளோம்.

    தாழ்த்தப்பட்டோருக்கு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தலா ஒரு செட் துணி வழங்கப்படும். இந்த ஆண்டு ஒரு செட் துணிக்கு ரூ.822, சர்க்கரைக்கு ரூ.80 என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தொகை ரேசன் கார்டுதாரர்களின் குடும்ப தலைவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    மேலும் இலவச அரிசிக்கு பதிலாகவும் பணமாக கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    இதன்படி சிகப்பு ரேசன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசிக்கு ரூ.600 கணக்கிட்டு 2 மாதத்திற்கான தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். மஞ்சள் ரேசன் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ அரிசிக்கு ரூ.300 என கணக்கிட்டு 2 மாதத்திற்கான தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் ஒப்புதலோடு இந்த தொகையை செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். தலைமை செயலாளரும், நிதித்துறை செயலாளரும் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர்.

    ஓரிருநாளில் இத்தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். பாப்ஸ்கோ சார்பில் வழக்கமாக தீபாவளி சிறப்பு அங்காடி அமைக்கப்படும். இந்த ஆண்டு புதுவையில் 3 திருமண நிலையங்களில் அமுதசுரபி சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி திறக்கப்படும். காரைக்காலில் வானவில் சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி நடத்தப்படும். இங்கு தரமான பொருட்களை மலிவான விலையில் பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Diwali #PondicherryGovernment

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இந்திய வாக்காளர் அடையாள அட்டைகளுடன் 23 பாகிஸ்தானியர்கள் பிடிபட்டது தொடர்பாக விசாரணை தொடங்கியது. #PakistanCitizens #DehradunPolice
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நீண்ட கால விசாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களில் இந்திய வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மாநில போலீசின் உளவுப்பிரிவு நடத்திய சோதனையின் போது 12 பேரிடம் வாக்காளர் அடையாள அட்டையும், 11 பேரிடம் ரேசன் கார்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக முழு விசாரணையை தொடங்கியுள்ள போலீஸ், நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.

    நீண்ட கால விசாவில் பாகிஸ்தானின் சிந்தி இந்துக்கள் இந்தியாவில் இருப்பது சட்டப்பூர்வமானது. ஆனால் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவது என்பது சட்டப்பூர்வமானது கிடையாது. எனவே, சட்டவிரோதமாக ஆவணங்களை வைத்திருப்பதை தடுக்க இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி டேராடூனில் 275 பாகிஸ்தானியர்கள் உள்ளதாகத் தெரிகிறது. #PakistanCitizens #DehradunPolice
    ×