search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில், நாளை ரேசன் அட்டைகளில் பெயர் சேர்த்தல் முகாம்
    X

    நாமக்கல் மாவட்டத்தில், நாளை ரேசன் அட்டைகளில் பெயர் சேர்த்தல் முகாம்

    • குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு குறைதீர் நாள் முகாம் நாளை (9-ந்தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
    • நாமக்கல், ராசிபுரம், மோகனூர், குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளில், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், கைபேசி எண் பதிவு, புதிய குடும்ப அட்டை கோருதல், மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளவும், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் வரும் நாளை (9-ந்தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

    நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி-வேலூர் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    எனவே, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - 2019 தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு இம்முகாமினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், முகாமில் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்குமாறும், அதாவது முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் கிருமி நாசினி பயன்படுத்துதலை கடைபிடிக்குமாறும் கேட்டுக்கொள் ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×