search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்ப அட்டைகள்"

    • குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ. 1000-ம் வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்பட்டது.
    • குடும்ப அட்டை விண்ணப்பித்து 4 மாதங்களாகியும் கிடைக்காமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

    திருப்பூர்:

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ. 1000-ம் வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளன்று, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதில் தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பெண்களுக்கு மேல் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தில் பலரும் பயன்பெறவே புதியதாக குடும்ப அட்டைகளை பலரும் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளதாகவும், அதேசமயம் உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கும், குடும்ப அட்டை விண்ணப்பித்து 4 மாதங்களாகியும் கிடைக்காமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இதுகுறித்து வட்ட வழங்கல்துறை அலுவலர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: -

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டப்பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டன. அப்போது தொடங்கி தற்போது அக்டோபர் மாதம் வரை புதிய குடும்ப அட்டைகள் யாருக்கும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய குடும்ப அட்டைக்கு பல ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 4 மாதங்களாக குடும்ப அட்டை அச்சிடப்படவில்லை.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு பலர் இனி வரும் நாட்களில் விண்ணப்பிக்க இருப்பதால், ஒரே கதவு எண்ணில் பலர் புதியதாக விண்ணப்பிப்பதையும் பார்க்க முடிகிறது. ஆனாலும் உரிய விசாரணைகள் முடிந்த பின்னர்தான், உரியவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்க இயலும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 1500 முதல் 2000 குடும்ப அட்டைகள் புதியதாக விண்ணப்பித்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

    சென்னையில் இது பல மடங்கு அதிகமாக இருக்கும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது கடந்த ஒரு வார காலமாக தான் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் ஆகிய பணிகளை தொடங்கி வழங்கி வருகிறோம். இன்னும் புதிய குடும்ப அட்டை அச்சிட்டு வழங்கும் பணி தொடங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் இது நிலுவையில் இருப்பதால், விரைவில் அரசு இது தொடர்பாக தெளிவான முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்". இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • குடும்ப அட்டைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ரேசன் கடைகள் திறக்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
    • ஒன்றியக்குழுத்தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாதாநகர் பகுதியில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு நியாய விலை கடையினை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் மொத்தம் 995 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. அதில் 725 முழு நேர நியாய விலை கடைகளும், 270 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் இயங்கி வருகின்றன. மேலும், 65 நடமாடும் நியாய விலை கடைகளும் உள்ளன.

    விருதுநகர் மாவட்டத்தில் 6,10,845 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 6,00,248 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மற்றும் குடும்ப அட்டை தாரர்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப புதிய, பகுதி நேர நியாய விலை கடைகளும் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத்தலைவர் ரவிக்கண்ணன், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொது விநியோக திட்டத்திற்காக வழங்கப்படும் குடும்ப அட்டைகளை வகைப்படுத்தி சீரமைத்து தர வேண்டும்.
    • அரசு ஊழியர்களுக்கு இணையான வகையில் கூட்டுறவு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்டத் தலைவர் முருகையன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் சௌந்தரராஜன் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி நிறைவு உரையாற்றினார்.

    கூட்டத்தில் தமிழகத்தில் பொது வினியோகத் திட்டம் கூட்டுறவு துறை மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பொருள் வழங்கு துறை ஆகிய இரண்டு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நிர்வாக குளறுபடிகள் ஏற்படுவதால் பொது விநியோகத் திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டு வரவேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்காக வழங்கப்படும் குடும்ப அட்டைகளை வகைப்படுத்தி சீரமைத்து தர வேண்டும்.

    பொருள்களின் எடை குறைகளை தவிர்க்கும் வகையில் பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கப்படும் அனைத்து பொருட்களும் உறைகளில் அடைத்து தரவேண்டும். பொதுவிநியோகத் திட்ட ஊழியர்களுக்கு முழு ஊதிய நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்குவதில் உள்ள சிக்க ல்களை நீக்கிட வேண்டும். கூட்டுறவு நிறுவன ங்களில் பணியாற்றும் ஊழிய ர்களுக்கு கருணை ஓய்வூதிய திட்டத்தை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான வகையில் கூட்டுறவு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.கூட்டுறவு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பராமரிக்கும் முறையினை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மூலம் செயல்படுத்திட வேண்டும்.

    இவைகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில இணை செயலாளர் சித்ரா, சிஐடியு மாவட்டத் தலைவர் மாலதி, மாவட்டப் பொருளாளர் வைத்தியநாதன், கூட்டுறவு ஊழியர் சங்க செயலாளர் சாந்தகுமாரி, கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முருகானந்தம், மாவட்டப் பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக வரவேற்புக் குழுத் தலைவர் விஜயன் வரவேற்றார். இறுதியில் மாநில குழு உறுப்பினர் செல்வம் நன்றி கூறினார்.

    ×