search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    14-ந்தேதிக்குள் வாங்காவிட்டால் பொங்கல் பரிசு கிடையாது: அதிகாரிகள் தகவல்
    X

    14-ந்தேதிக்குள் வாங்காவிட்டால் பொங்கல் பரிசு கிடையாது: அதிகாரிகள் தகவல்

    பொங்கல் பரிசை 14-ந்தேதிக்குள் வாங்கவேண்டும். இல்லாவிட்டால் கிடைக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது. #PongalGift #Pongal #TNGovt
    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு முன்கூட்டியே ஊருக்கு செல்வதால் 6 நாள் விடுமுறை முடிந்து வந்து பொங்கல் பொருட்களை வாங்கி கொள்ளலாமா? என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்தது. இது பற்றி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தொடங்கி இன்றோடு 3 நாட்களாகி விட்டது. 7-ந்தேதியில் இருந்து 14-ந்தேதிக்குள் மட்டுமே பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



    எனவே எக்காரணம் கொண்டும் 14-ந்தேதிக்கு பிறகு பொங்கல் பரிசு பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை. எனவே பொதுமக்கள் குறிப்பிட்ட தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ள வேண்டும். 14-ந்தேதிக்கு பிறகு பொங்கல் பரிசு கண்டிப்பாக கிடைக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எனவே பொங்கல் பரிசு பொருட்களை இன்று முதல் விரைந்து கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #PongalGift #Pongal #TNGovt
    Next Story
    ×