search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raghava Lawrence"

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஒருவரை லாரான்ஸ் நேரில் சந்தித்து பாராட்டி உள்ளார்.
    • மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜீஆர், லாரன்ஸுக்கு முத்தம் கொடுப்பது போல ஒரு ஓவியம் இருந்தது.

    சென்னை:

    நடிகர் ராகவா லாரன்ஸ் 'மாற்றம்' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்தக் அறக்கட்டளை மூலம், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள் மற்றும் ஏழை எளிய மாணவ மாணவிகள் படிப்பதற்கு உதவி செய்து வருவதோடு, கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளும் செய்து வருகிறார்.

    அவரால் படித்து ஆளாக்கப்பட்ட மாணவர்கள் தற்போது நல்ல நிலைக்கு உயர்ந்திருப்பதை அடுத்து அவர்களும் ராகவா லாரன்ஸ் வழியில் ஏழை எளியோருக்கு உதவி செய்ய தயாராகி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு மாற்றம் என்ற பெயரில் மே ஒன்றாம் தேதி முதல் சேவை அமைப்பு மூலம் ராகவா லாரன்ஸ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஒருவரை லாரான்ஸ் நேரில் சந்தித்து பாராட்டி உள்ளார். அவரது ஓவிய திறமையை சமூக வலைதளங்கள் மூலம் கண்டு ரசித்த லாரன்ஸ் அவரது திறமையை பாராட்ட விரும்பியதாக கூறினார்.

    லாரன்ஸை சந்தித்த அந்த ஓவிய ஆசிரியர் ஒரு சிறப்பு பரிசை அவருக்கு வழங்கினார். அந்த ஓவியத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜீஆர், லாரன்ஸுக்கு முத்தம் கொடுப்பது போல ஒரு ஓவியம் இருந்தது. இதனை மகிழ்ச்சியுடன் லாரன்ஸ் ஏற்றுக் கொண்டார். பதிலுக்கு லாரன்ஸ் அந்த ஓவிய ஆசிரியருக்கு நிதி உதவி வழங்கினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வணக்கம் நண்பர்களே, ரசிகர்களே, அவர் மணலூர்பேட்டை கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் செல்வம். அவரது அற்புதமான ஓவியத் திறமையை உங்கள் அனைவராலும் சமூக ஊடகங்கள் மூலம் அறிந்து கண்டேன். அவரை நேரில் சந்தித்து அவரது திறமையைப் பாராட்ட விரும்பினேன். இன்று, நான் அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய பரிசை மிகவும் கவர்ந்தேன்! #Serviceisgod #Maatram

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,
    • இப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் பட புகழ் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்.

    மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், `கைதி', `மாஸ்டர்', `விக்ரம்' மற்றும் `லியோ' படங்களை இயக்கி குறுகிய காலத்திலேயே பிரபல இயக்குனரானார்.

    தற்போது ரஜினியின் 171 -வது படமான கூலி திரைப்படத்தை இயக்கவுள்ளார். திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. படங்கள் இயக்குவது மட்டுமல்லாமல் ஜி ஸ்குவாட் (G Squad)' தயாரிப்பு என்ற பெயரிலான சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 2023 -ல் 'பைட் கிளப்' மூலம் தயாரிப்பாளரானார்.

    அதைத்தொடர்ந்து 'பென்ஸ்' என்ற புதிய படத்தை தயாரிக்கவுள்ளார் லோகேஷ். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

    இப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் பட புகழ் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படத்தின் கூடுதல் அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தில் ஃபகத் பாசில் மற்றும் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சேவையே கடவுள் எனும் நோக்கத்தில் "மாற்றம்" என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார்.
    • குருவே சரணம் என சூப்பர் ஸ்டாருன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் தனக்கு என்று ஓர் நிலையான இடத்தை பிடித்துள்ளார். இதுவரையில் பலருக்கு தனிப்பட்ட முறையில் உதவிகள் செய்துவந்த நடிகர் லாரன்ஸ், சேவையே கடவுள் எனும் நோக்கத்தில் "மாற்றம்" என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார்.

    இந்த அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் கலக்கப்போவது யாரு பாலா, செஃப் வினோத் , அறந்தாங்கி நிஷா ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளி மாணவியான ஸ்வேதா, தனது படிப்பிற்கு உதவுமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இணையத்தில் இந்த வீடியோ டிரெண்டாகி அது ராகவா லாரன்ஸின் கண்ணில் பட, அந்த வீடியோவை லாரன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, ஹாய் ஸ்வேதா, கவலைப்படாதே, இன்றிலிருந்து நீ என் சொந்த குழந்தை, நான் எப்போதும் உங்களுக்காக இருப்பேன், இரண்டு நாட்களில் உங்களை சந்திப்பேன் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவானது இணையத்தில் டிரெண்டாகியது.

    இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மாற்றம் அறக்கட்டளை சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

    இது குறித்து தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது, "தலைவர் சூப்பர் ஸ்டாரை மாற்றம் அறக்கட்டளைக்கு ஆசீர்வாதம் வாங்க சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எனவும், குருவே சரணம்" என சூப்பர் ஸ்டாருன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

    • சமீபத்தில் அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 10 டிராக்டர்கள் வழங்கப்பட்டன.
    • ராகவா லாரன்சின் இந்த சேவையை பாராட்டும் பலரும் அவரது அறக்கட்டளை இணைந்து வருகின்றனர்.

    நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் 'மாற்றம்' என்ற அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அவரது இந்த பணியில் KPY பாலாவும் இணைந்துள்ளார். இருவரும் சேர்ந்து ஏழ்மை நிலையில் வாடும் மக்களுக்கு உதவி வருகின்றனர்.

    சமீபத்தில் அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 10 டிராக்டர்கள் வழங்கப்பட்டன. ராகவா லாரன்சின் இந்த சேவையை பாராட்டும் பலரும் அவரது அறக்கட்டளையில் இணைந்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யா மாற்றத்தில் இணைந்துள்ளார். இதுதொடர்பாக ராகவா லாரன்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு கூறியுள்ளதாவது:-

    எனது சொந்தப் பணத்தில் மாற்றம் அறக்கட்டளை மூலம் 10 டிராக்டர்களை விவசாயிகளுக்கு வழங்கியது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இன்று (நேற்று) எஸ்.ஜே.சூர்யா அண்ணன் தன் சொந்தப் பணத்தில் இன்னொரு டிராக்டரைச் சேர்த்து எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்ரிக்கு 11வது டிராக்டரைக் கொடுத்தோம். அவருடைய ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எஸ்.ஜே.சூர்யா மற்றும் அவரது குடும்பத்திற்காக நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். எனக்கு எப்போதும் போல் உங்கள் அன்பும் ஆசியும் தேவை என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயம்.
    • இருவரும் மக்கள் தொண்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

    இதைத் தொடர்ந்து கட்சியின் சின்னம், கொடி வடிவமைப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த கட்டமாக கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இதையொட்டி விஜய் ஆலோசனையின் பேரில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகிகளுடன் நேரடியாகவும், தொலைபேசி மூலமும் ஆலோசனை நடத்தி உறுப்பினர் சேர்க்கைக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் விஜய் போட்டியிடுவார் எனவும் அறவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு திரைத்துறையில் இருந்து ஆதரவு திரண்டு வருகிறது.

    இந்நிலையில், தவெக-வில் நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இருவரும் மக்கள் தொண்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சினிமாவை தாண்டி நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலான மக்கள் மனதில் தனி இடம் பிடித்துவிட்டனர்.

    இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலா விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் பென்ஸ், ஹண்டர் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    • ராகவா லாரன்ஸ், முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற காமெடி கலந்த ஹாரர் படங்களை இயக்கி, நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

    ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். அதே சமயம் இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டவர்.

    நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் பென்ஸ், ஹண்டர் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் இவர் ரஜினியின் கூலி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் படத்தில் கேமியா ரோலில் நடித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

    ராகவா லாரன்ஸ், முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற காமெடி கலந்த ஹாரர் படங்களை இயக்கி, நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

    ஹாரர் கதைக்கள பாணி பெருமளவு வெற்றிப் பெற்ற காரணத்தினால் அடுத்ததாக காஞ்சனா 4 திரைப்படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் திட்டமிட்டுள்ளார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூரை அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி மிருணாள் தாகூர் ஒப்புக்கொண்டால் அவர் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும்.

    மிர்ணாள் தாகூர், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதாராமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து ஹாய் நான்னா, ஃபேமிலி ஸ்டார் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் கூடுதல் தகவல்களைப் பற்றி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டவர்.
    • ராகவா லாரன்ஸ், முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற காமெடி கலந்த ஹாரர் படங்களை இயக்கி, நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

    ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். அதே சமயம் இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டவர்.

    நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் பென்ஸ், ஹண்டர் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் இவர் ரஜினியின் கூலி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் படத்தில் கேமியா ரோலில் நடித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

    ராகவா லாரன்ஸ், முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற காமெடி கலந்த ஹாரர் படங்களை இயக்கி, நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கடந்த மாதம் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

    ஹாரர் கதைக்கள பாணி பெருமளவு வெற்றிப் பெற்ற காரணத்தினால் அடுத்ததாக காஞ்சனா 4 திரைப்படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் திட்டமிட்டுள்ளார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

    இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் கூடுதல் தகவல்களைப் பற்றி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவர் இப்போது ‘மாற்றம்’ என்ற பெயரில் அறக்கட்டளை கடந்த மே 1 ஆம் தேதி தொடங்கியுள்ளார்.
    • இதில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து ராகவா லாரன்சுடன் சேவை பணியாற்றவுள்ளதாக அவரது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்

    நடிகர் ராகவா லாரன்ஸ், பல வருடங்களாக பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். இவர் இப்போது 'மாற்றம்' என்ற பெயரில் அறக்கட்டளை கடந்த மே 1 ஆம் தேதி தொடங்கியுள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து ராகவா லாரன்சுடன் சேவை பணியாற்றவுள்ளதாக அவரது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார் அது தொடர்ந்து செஃப் வினோத், அறந்தாங்கி நிஷாவும், KPY பாலா இணைந்து செயல்பட உள்ளனர்.

    இந்தக் அறக்கட்டளை மூலம், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள், தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், 10 டிராக்டர்கள், 10 ஊர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த அறக்கட்டளை தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.

    இந்நிலையில் 'மாற்றம்' அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் ராகவா லாரன்சுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், "வணக்கம் லாரன்ஸ் மாஸ்டர்! நீங்கள் பல வருடமாக நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறீர்கள். இப்பொழுது இன்னும் நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக 'மாற்றம்' என்கிற அறக்கட்டளையை ஆரம்பித்து இருக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் இன்னும் பல ஆயிரம் ஏழை மக்களுக்கு உதவி செய்யணும். அதற்கு அந்த ஆண்டவனுடைய அருள், மக்களுடைய துணை எப்போதும் இருக்கணும். வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இதனை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், "தலைவர், என் குரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து 'மாற்றம்' அறக்கட்டளை தொடங்கியுள்ளதற்கு வாழ்த்துகளைப் பெற்றேன். உங்கள் நிலையான ஆதரவால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. குருவே சரணம்" என்று தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து தற்பொழுது எஸ்ஜே சூர்யா அவரது எக்ஸ் தளத்தில் ராகவா லார்ன்ஸ்-க்கு வாழ்த்து தெரிவித்டு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    லாரன்ஸ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ், வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் மற்றும் வெற்றி மாறனின் எழுதிய கதையான அதிகாரம் படத்தில் நடிக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பல நற்பணி செய்லகளை மக்களுக்காக செய்து வருகிறார். சமீபத்தில் மாற்று திறனாளிகளுக்கு 14 இருசக்கர வாகனங்களை வாங்கி கொடுத்தார்.
    • ராகவா லார்ன்ஸ் தற்பொழுது மாற்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார்.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியானது. அதில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. ராகவா லாரன்ஸ்-க்கு இத்திரைப்படம் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

    ராகவா லாரன்ஸ் திரைத்துறையில் மட்டும் பணியாற்றாமல் அவரது பெயரில் பல ஆசிரமங்களை நடத்தி வருகிறார். பல நற்பணி செய்லகளை மக்களுக்காக செய்து வருகிறார். சமீபத்தில் மாற்று திறனாளிகளுக்கு 14 இருசக்கர வாகனங்களை வாங்கி கொடுத்தார்.

    அதைத்தொடர்ந்து ராகவா லார்ன்ஸ் தற்பொழுது மாற்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார். அந்த அமைப்பின் மூலம் இல்லாத மக்களுக்கும் தேவையுள்ள மக்களுக்கும் சேவை செய்ய போகிறார். அதில் அவர் படிக்க வைத்த பல இளைஞர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்ய போகிறோம் என்ற கூறி ஒரு வீடியோவை வெளியிட்டனர் அதை ராகவா லார்ன்ஸ் அவரது எக்ஸ் பகக்த்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்நிலையில் நடிகர் எஸ்ஜே சூர்யாவும் இந்த மாற்றம் அமைப்பில் சேர்ந்து தன்னால் முடிந்த உதவியை செய்வேன் என்றும், மே 1 மாஸ்டர் யாரை காண்பித்து உதவி செய்ய கூறினாலும் நான் செய்வேன். ஃபார் மை பாய் சீசர் என்று ஜிகர்தண்டா படத்தின் வசனத்தையும் பேசி வீடியோவை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வலுவான உடல் உள்ளவர்கள் செய்வது, உங்களால் முடியுமா?
    • இவர்களால் முடியாதது எதுவுமே இல்லை, இவர்களால் எல்லாமே முடியும்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ். திரையுலகில் நடிகர் ஹீரோ என்பதை கடந்து, நிஜ வாழ்வில் பலருக்கு உதவி செய்து வருகிறார். தமிழர்களின் பாரம்பரிய "மல்லர் கம்பம்" சாகச கலை நிகழ்வு, இதுவரையிலும் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக இருந்தது.

    தற்போது ராகவா லாரன்ஸ்-இன் "கை கொடுக்கும் கை" மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற "மல்லர் கம்பம்" சாகச நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

     


    தொடர்ந்து பேசிய ராகவா லாரன்ஸ், "எனக்கு எப்போதும் ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளி குழுவினர் தான். எனக்கு எப்போது தளர்வாக இருந்தாலும், இவர்களை ஆட வைத்து பார்த்து ஊக்கம் கொள்வேன். எப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும், பாடல்களில் டான்சில் இவர்களை ஆட வைப்பேன்."

    "நயன்தாரா எத்தனை முறை ஆடினாலும் பார்க்கிறார்களே அது போல் நம் படங்களை பார்க்கட்டும் இவர்களையும் பார்க்கட்டும். சில காலமாக அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கிறதே எனக் கவலைப்பட்டேன். அப்போது தான் 'மல்லர் கம்பம்' என ஒன்று இருக்கிறது அதைக் கற்றுக்கொள்கிறோம் மாஸ்டர் என்றார்கள்."

    "இது வலுவான உடல் உள்ளவர்கள் செய்வது, உங்களால் முடியுமா? எனக் கேட்டேன். ஆனால் எங்களால் முடியும் என்றார்கள். அதே போல் கற்றுக்கொண்டார்கள். இங்கு அவர்கள் செய்வதை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இவர்களால் முடியாதது எதுவுமே இல்லை. இவர்களால் எல்லாமே முடியும்."

    "இதன் மூலம் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். இவர்கள் வாடகை கட்டக் கூட கஷ்டப்படுகிறார்கள். உங்கள் வீட்டு விழா, தெரிந்த நிகழ்ச்சிகளில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள். இவர்களை அழைத்து நிகழ்ச்சி செய்யும் அனைவருக்கும் நான் வீடியோவில் வாழ்த்து சொல்வேன்."

    "இவர்களுக்காக நான் என்னால் முடிந்த அனைத்தும் செய்வேன். இந்த கலை இவர்களை வாழ வைக்கும். இந்த கலையை கற்றுக்கொண்டதற்காக இவர்கள் அனைவருக்கும் என் வீட்டில் ஸ்கூட்டி வழங்குகிறேன். அது மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளேன். அந்த படத்தின் மூலம் வரும் வருமானத்தில், இவர்களுக்கு வீடுகட்டி தரவுள்ளேன்," என்று தெரிவித்தார்.

    • 'டைட்டில்', போஸ்டரில் சிவப்பு நிறத்தில்,ஹெல்மெட் காட்டப்பட்டுள்ளது.
    • இந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

    மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், `கைதி', `மாஸ்டர்', `விக்ரம்' மற்றும் `லியோ' படங்களை இயக்கி குறுகிய காலத்திலேயே பிரபல இயக்குனரானார்.

    தற்போது ரஜினியின் 171 -வது படத்தின் 'ஸ்கிரிப்ட் ' தயார் செய்யும் பணியில் லோகேஷ் ஈடுபட்டு உள்ளார். மேலும் ஜி ஸ்குவாட் (G Squad)' தயாரிப்பு என்ற பெயரிலான சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 2023 -ல் 'பைட் கிளப்' மூலம் தயாரிப்பாளரானார்.




    இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று லோகேஷ் கனகராஜ் தனது 2- வது புதிய படம் தயாரிப்பு குறித்து இணைய தளத்தில் அறிவித்துள்ளார். 'பென்ஸ்' என்ற புதிய படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

    இப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் பட புகழ் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். 'பென்ஸ்' படத்தை விரைவில் வெள்ளித் திரையில் பார்க்க வேண்டும் என்பது தனது 'ஆசை' என்று லோகேஷ் தெரிவித்து உள்ளார்.




    மேலும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிப்பது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என லோகேஷ் தெரிவித்துள்ளார்

    இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை Netflix நிறுவனம் பெற்றுள்ளது. 'டைட்டில்', போஸ்டரில் சிவப்பு நிறத்தில்,ஹெல்மெட் காட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவருக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார் பாலா.
    • வீடியோவை பார்த்த பலரும் பாலாவையும், ராகவா லாரன்சையும் பாராட்டி வருகின்றனர்.

    தனியார் தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சியான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் KPY பாலா. அதை தொடர்ந்து 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். அதன் மூலம் அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு பெற்று தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    காமெடியனாக தன்னுடைய பயணத்தை தொடங்கி ஒரு தொகுப்பாளர், நடிகர், சமூக அக்கறையாளர் என மிகவும் சிறப்பாக செயல்படும் பாலா தன்னால் முடிந்த மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். தனக்கு வரும் வருமானத்தில் இருந்து பெரும்பகுதியை ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

    குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற முதியவர்களை அரவணைப்பது, மாற்றுத்திறனாளிக்கு உதவுவது, போதிய மருத்துவ வசதி இல்லாத இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மருத்துவ உதவி, புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு பண உதவி இப்படி பலருக்கும் பல வகையில் உதவியுள்ளார் பாலா. சமீபத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவருக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார்.

    இந்நிலையில், பாலாவின் தன்னலமற்ற சேவையில் இணைந்துள்ளார் நடன மாஸ்டரும், நடிகருமான ராகவா லாரன்ஸ்.

    கணவனை இழந்து 3 பெண் குழந்தைகளுடன் வாழ்வாதாரத்தை நடத்த அல்லல்படுபவர் முருகம்மாள். இவர் மின்சார ரெயிலில் சமோசா விற்று குடும்பத்தை நடத்தி வந்தார். அவருக்கு சொந்தமாக ஒரு ஆட்டோ வாங்கி ஓட்ட வேண்டும் என்பது தான் பல நாள் கனவாக இருந்தது. அதை தெரிந்து கொண்டு முருகம்மாளுக்கு புதிய ஆட்டோ ஒன்றை சர்ப்ரைஸாக வாங்கி கொடுத்துள்ளனர் பாலா மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ்.

    முருகம்மாளை சர்ப்ரைஸாக முகத்தை மூடிக்கொண்டு ஆட்டோவில் அழைத்து செல்கிறார் பாலா. சற்று நேரத்தில் அந்த ஆட்டோவை சுற்றி பல ஆட்டோக்கள் வட்டமிட ஒன்னும் புரியாத முருகம்மாளுக்கு பிறகு தான் தெரிகிறது, ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வந்தது பாலா என்று. பின்னர் பேசும் பாலா, இந்த ஆட்டோ ரூ.3 லட்சம். இதற்கு பாதி காசு நான் கொடுத்தேன். மீதி காசு கொடுத்தவரை பார்க்கிறீர்களா என கேட்க, காரில் வந்து இறங்குகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். பின்பு முருகம்மாள் லாரன்ஸை கட்டிப்பிடித்துக்கொள்கிறார். இதையடுத்து ஆட்டோ சாவியை வழங்க லாரன்ஸ் காலில் விழுகிறார் முருகம்மாள். மேலும், லாரன்சும், பாலாவும் சேர்ந்து முருகம்மாளுக்கு அவர் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வழங்க முருகம்மாள் கதறி அழுகிறார். இதையடுத்து பாலாவும், லாரன்சும் ஆட்டோவில் அமர முருகம்மாள் ஓட்டி செல்கிறார்.

    இது தொடர்பான வீடியோவை ராகவா லாரன்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் பாலாவையும், ராகவா லாரன்சையும் பாராட்டி வருகின்றனர்.

    ×