search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "may 1"

    • இந்நிலையில் அஜித் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்
    • அஜித்திடம் சொகுசு கார்கள் இருந்தாலும், பைக்குகள் மீது தனி ஆர்வம் உண்டு.

    நடிகர் அஜித்குமார், நடிகை ஷாலினி இருவரும் முதன்முதலில் ஜோடியாக நடித்த படம் அமர்க்களம். இயக்குனர் சரண் இப்படத்தை இயக்கினார்.

    இந்நிலையில் பட ஷூட்டிங்கில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது அஜித் அவரை பாசத்துடன் பார்த்துக்கொண்டார். இதனால் ஷாலினிக்கு அஜித் மீது காதல் உருவானது.

    மேலும் பட ஷூட்டிங் நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் அதிகரித்தது. இதை யொட்டி கடந்த 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்தனர்.




    இந்நிலையில் அஜித் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

    இதையொட்டி நடிகை ஷாலினி, தனது காதல் கணவர் அஜித்தின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த டுகாட்டி பைக்கை பரிசாக கொடுத்துள்ளார் .இதன் விலை ரூ.23 லட்சம் ஆகும்.

    அஜித்திடம் பல சொகுசு கார்கள் இருந்தாலும், அவருக்கு பைக்குகள் மீது தனி ஆர்வம் உண்டு. அஜித் பைக் பிரியர் என்பதால் 'டுகாட்டி' 'பைக்' ஷாலினி பரிசாக கொடுத்துள்ளார். 




    ஷாலினி தனது கணவருக்கு விலை உயர்ந்த பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படம் தற்போது இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அஜித்தின் பிறந்த நாளை மேலும் சிறப்பாகும் விதத்தில், விடாமுயற்சி குறித்த அப்டேட் மற்றும் குட் பேட் அக்லி படம் குறித்த அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சென்னையில் ஒரு தியேட்டரில் ரசிகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நடனமாடத் தொடங்கினர்.
    • ரசிகர்கள் மத்தாப்பு மற்றும் சரவெடி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் துள்ளல் ஆட்டம் போட்டனர்.

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2001-ல் வெளிவந்த படம் 'தீனா'.இப்படத்தில் அஜித்குமார், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து நடித்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படத்திற்கு பின் அஜித்திற்கு 'தல' என்ற பட்டம் பிரபலமானது.

    இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் முறையில் இன்று (மே 1 ) அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.




    இந்நிலையில் அஜித் பிறந்தநாள் விழாவை இன்று அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அஜித் நடித்த தீனா "ரீ ரிலீஸ்" செய்யப்பட்டதை யொட்டி அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் 'தீனா' படத்தை பார்ப்பதற்காக இன்று காலையில் அஜித் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று 'தீனா' படம் ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது 'வத்திக்குச்சி பத்திக்காதுடா '.. பாடல் ஒலித்தது. உடனே ரசிகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நடனமாடத் தொடங்கினர்.



    அப்போது ரசிகர்கள் மத்தாப்பு மற்றும் சரவெடி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் துள்ளல் ஆட்டம் போட்டனர். இதனால் தியேட்டரில் பட்டாசு தீப்பொறி புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.




    மேலும் தியேட்டரின் உள்ளே படம் ஓடிக்கொண்டு இருந்த போது அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடிய சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பல நற்பணி செய்லகளை மக்களுக்காக செய்து வருகிறார். சமீபத்தில் மாற்று திறனாளிகளுக்கு 14 இருசக்கர வாகனங்களை வாங்கி கொடுத்தார்.
    • ராகவா லார்ன்ஸ் தற்பொழுது மாற்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார்.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியானது. அதில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. ராகவா லாரன்ஸ்-க்கு இத்திரைப்படம் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

    ராகவா லாரன்ஸ் திரைத்துறையில் மட்டும் பணியாற்றாமல் அவரது பெயரில் பல ஆசிரமங்களை நடத்தி வருகிறார். பல நற்பணி செய்லகளை மக்களுக்காக செய்து வருகிறார். சமீபத்தில் மாற்று திறனாளிகளுக்கு 14 இருசக்கர வாகனங்களை வாங்கி கொடுத்தார்.

    அதைத்தொடர்ந்து ராகவா லார்ன்ஸ் தற்பொழுது மாற்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார். அந்த அமைப்பின் மூலம் இல்லாத மக்களுக்கும் தேவையுள்ள மக்களுக்கும் சேவை செய்ய போகிறார். அதில் அவர் படிக்க வைத்த பல இளைஞர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்ய போகிறோம் என்ற கூறி ஒரு வீடியோவை வெளியிட்டனர் அதை ராகவா லார்ன்ஸ் அவரது எக்ஸ் பகக்த்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்நிலையில் நடிகர் எஸ்ஜே சூர்யாவும் இந்த மாற்றம் அமைப்பில் சேர்ந்து தன்னால் முடிந்த உதவியை செய்வேன் என்றும், மே 1 மாஸ்டர் யாரை காண்பித்து உதவி செய்ய கூறினாலும் நான் செய்வேன். ஃபார் மை பாய் சீசர் என்று ஜிகர்தண்டா படத்தின் வசனத்தையும் பேசி வீடியோவை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    மே தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 1-ந்தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 1-ந்தேதி (புதன் கிழமை) மே தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மூடப்பட்டிருக்கும். அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள், எப்.எல்.1,  எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ., எப்.எல்.3ஏஏ., மற்றும் எப்.எல்.11 முதலான ஓட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும்.

    எனவே மே தினத்தன்று அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும். 

    இவ்வாறு கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
    ×