என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "president election"
- தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- அதிபர் ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடவில்லை.
ஜகார்த்தா:
உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடு இந்தோனேசியா. 20 கோடி வாக்காளர்களை கொண்ட அங்கு இன்று அதிபர் தேர்தல் நடந்தது. மேலும் பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடந்தது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. மக்கள் காலையிலேயே வாக்குசாவடி மையங்களில் குவிந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நீண்ட வரிசை காணப்பட்டது.
தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதிபர் தேர்தலில் மூன்று பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடவில்லை.
பாதுகாப்புத்துறை மந்திரியாக பிரபோலோ சுபியாண்டோ, முன்னாள் மாகாண கவர்னர்களான அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.
தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளை பெற வேண்டும். எந்த வேட்பாளர்களுக்கும் 50 சதவீத வாக்கு கிடைக்காவிட்டால் 2-வது சுற்றுத் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும்.
கருத்து கணிப்புகளில் பாதுகாப்பு மந்திரி பிரபோலோ வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 52 சதவீத வாக்குகள் பெறுவார் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இவர் தற்போதைய அதிபரின் ஆதரவை பெற்றவர் ஆவார். துணை அதிபர் பதவிக்கு அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை ஓட்டுப் பதிவு முடிந்ததும் அதில் பதிவான வாக்குகள் உடனே எண்ணப்படுகின்றன.
- ரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
- அரசியல் சாசனத் திருத்தத்தின்படி புதினால் 2036-ம் ஆண்டு வரை அதிபராகத் தொடர முடியும்.
மாஸ்கோ:
ரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி அதிபர் தேர்தல் நடத்த அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கான அரசாணையை பாராளுமன்ற மேலவையான தேசிய கவுன்சில் ஒருமனதாக அங்கீகரித்தது.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் விருப்பம் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் மாளிகையில் ரஷிய ராணுவ அதிகாரிகளுக்கு நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அதிபர் புதின், அவரது முடிவை ராணுவ அதிகாரியிடம் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அரசியல் சாசனத் திருத்தத்தின்படி புதினால் வரும் 2036-ம் ஆண்டு வரை ரஷிய அதிபராகத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
- குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்.
சென்னை:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் 24-ந் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி டெல்லியில் அவருக்கு நாளை பிரிவு உபசார விழா நடைபெறுகிறது.
டெல்லி அசோகா ஓட்டலில் நாளை இரவு நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் பா.ஜனதா மேலிடம் அழைப்பு அனுப்பி உள்ளது.
அதன்படி கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு அனுப்பி உள்ளனர்.
இந்த அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி புறப்பட்டு செல்கிறார். டெல்லி செல்லும் அவர் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதன் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
- ஜனாதிபதி தேர்தல் கடந்த 18-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
- துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறுகிறது.
புதுடெல்லி:
நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில், பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கும் இடையேதான் போட்டி.
தலைநகர் டெல்லியில் பாராளுமன்ற வளாகம் மற்றும் மாநிலங்களில் சட்டசபை வளாகங்கள் என 31 இடங்களில் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி, வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
இந்தத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்ததைத் தொடர்ந்து ஓட்டு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டன. ஒவ்வொரு இடத்தில் இருந்தும் விமானத்தில் 'மிஸ்டர் பேலட் பாக்ஸ்' என்ற பெயரில் முன்பகுதி இருக்கையில், உதவி தேர்தல் அதிகாரியின் பாதுகாப்பு, கண்காணிப்புடன் ஓட்டு பெட்டிகள் டெல்லி எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. இமாசல பிரதேசத்தில் இருந்து மட்டும் சாலை மார்க்கமாக ஓட்டு பெட்டி டெல்லிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன்மூலம் நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும்.
- பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார்.
- துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலமும் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதியுடன் முடிகிறது.
புதுடெல்லி:
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வருகிற 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார். எதிர்கட்சி வேட்பாளராக யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டு உள்ளார்.
இதுபோல துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலமும் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதியுடன் முடிகிறது. இதற்கான தேர்தல் ஆகஸ்டு 6-ந் தேதி நடக்கிறது.
இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு நாளை கூடி முடிவு செய்கிறது.
இதற்கிடையே எதிர்கட்சிகளும் துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது.
இதில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது பற்றி நாளை மறுநாள் 17-ந் தேதி ஆலோசனை நடத்த உள்ளனர்.
- பா.ஜ.க. கூட்டணியின் சுரேஷ் பிரபு, ஹர்தீப் பூரி, எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.
- காங்கிரஸ் கட்சிக்கு பாராளுமன்றத்தில் 22 சதவீத வாக்குகளே உள்ளன.
புதுடெல்லி:
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்டு 10-ந் தேதி முடிகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய கடந்த 5-ந் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அன்றைய தினமே மனு தாக்கலும் தொடங்கியது.
துணை ஜனாதிபதி பதவிக்கு மனு தாக்கல் செய்ய வருகிற 19-ந் தேதி கடைசி நாளாகும். 20-ந் தேதி மனுக்கள் பரிசீலனையும், 22-ந் தேதி மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். போட்டி இருந்தால் ஆகஸ்டு 6-ந் தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு அன்றே முடிவும் அறிவிக்கப்படும்.
மனு தாக்கலுக்கு இன்னும் 6 நாட்களே அவகாசம் உள்ள நிலையில் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா கூட்டணி சார்பில் கேரள கவர்னர் ஆரீப்கான், முன்னாள் கவர்னர் நஜீம்கமார்துல்லா, பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங், உத்தரபிரதேச கவர்னர் அனந்தி பென் படேல் ஆகியோரது பெயர் அடிபட்டது.
என்றாலும், முன்னாள் மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி பெயர் பா.ஜ.க. தலைவர்களிடையே தீவிர பரிசீலனையில் உள்ளது. அவரது பெயரை விரைவில் பா.ஜ.க. மேலிடம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பா.ஜ.க. கூட்டணியின் சுரேஷ் பிரபு, ஹர்தீப் பூரி, எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன. என்றாலும் முக்தர் அப்பாஸ் நக்விக்குத் தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத்தில் பா.ஜனதா கூட்டணிக்கு 58 சதவீத எம்.பிக்கள் ஆதரவு உள்ளது. எனவே எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்து தேர்வு செய்ய உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா நிறுத்தும் வேட்பாளர் மிக மிக எளிதில் வெற்றிபெறுவார்.
காங்கிரஸ் கட்சிக்கு பாராளுமன்றத்தில் 22 சதவீத வாக்குகளே உள்ளன. மற்ற கட்சிகளுக்கு 21 சதவீத வாக்குகள் இருக்கின்றன. என்றாலும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் சேர்ந்தாலும் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற இயலாது.
இதனால் எதிர்க்கட்சிகள் துணை ஜனாதிபதி தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது புரியாமல் தவித்து கொண்டிருக்கின்றன. முக்தர் அப்பாஸ் நக்வியை பா.ஜனதா வேட்பாளராக நிறுத்தினால் அவரை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
- கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நூர்முகம்மது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
- நூர்முகம்மது 38 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது 39-வது தேர்தலை சந்திக்க உள்ளார்.
கோவை:
ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் முன்னாள் கவர்னர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா களமிறங்கி உள்ளார்.
இந்த நிலையில் கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் நூர்முகம்மது என்பவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இவர் சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், வேலூர் தொகுதி எம்.பி. தேர்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளார்.
சாத்தான்குளம், ஆண்டிப்பட்டி, திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் என பல்வேறு தேர்தல்களை சந்தித்த இவர் தற்போது ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடுகிறார். அதற்காக அவர் டெல்லி சென்று மனுதாக்கல் செய்தார்.
இதுவரை நூர்முகம்மது 38 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது 39-வது தேர்தலை சந்திக்க உள்ளார். எந்த பகுதியில் தேர்தல் நடந்தாலும் அந்த தேர்தலை நான் சந்திக்க தயாராக உள்ளேன் என்கிறார் நூர்முகம்மது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மன்னர் வேடம் அணிந்து கொண்டு வீதி வீதியாக பொதுமக்களை சந்தித்தார்.
நூர்முகம்மது
- திரவுபதி முர்முவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது.
- யஷ்வந்த் சின்கா ஓட்டு சேகரிக்க ஐதாராபாத் வரும்போது அவரை தனியாக சந்திக்க சந்திர சேகரராவ் முடிவு செய்து உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐதாராபாத்:
ஜனாதிபதி தேர்தல் அடுத்தமாதம் (ஜூலை) 18-ந்தேதி நடக்கிறது. இதில் பாரதிய ஜனதா சார்பில் பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். திரவுபதி முர்முவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. இதனால் அவர் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
யஷ்வந்த் சின்காவுக்கு சில மாநில கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறாத தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவரும். தெலுங்கானா முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சந்திரசேகரராவ் அறிவித்து உள்ளார்.
நாளை யஷ்வந்த்சின்கா வேட்பு மனுதாக்கல் செய்கிறார் இதில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி.க்கள் கேசவராவ், நாகேஸ்வர ராவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். யஷ்வந்த் சின்கா ஓட்டு சேகரிக்க ஐதாராபாத் வரும்போது அவரை தனியாக சந்திக்க சந்திர சேகரராவ் முடிவு செய்து உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.
- பா.ஜனதா, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்கட்சிகளுக்கு எதிராகவோ இந்த முடிவை எடுக்கவில்லை.
லக்னோ:
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். பா.ஜனதா, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்கட்சிகளுக்கு எதிராகவோ இந்த முடிவை எடுக்கவில்லை. எங்கள் கட்சி மற்றும் இயக்கத்தை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.
எதிர்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யஷ்வந்த்சின்கா நிறுத்தப்பட்டுள்ளார்.
- திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகள் சரத் பவாரை ஆதரித்தன.
- கூட்டத்தில் பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், டிஆர்எஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
புதுடெல்லி:
புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை நிறுத்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கினார். பொது வேட்பாளரை தேர்வு செய்வதற்காக இன்று டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி உள்ளார். இக்கூட்டத்தில் பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
இக்கூட்டத்தில் பொது வேட்பாளரை யாரை நிறுத்தலாம் என்பது குறித்து கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்தலாம் என மம்தா தெரிவித்தார். ஆனால் அவரது யோசனையை சரத் பவார் ஏற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
அதன்பின்னர் மேற்கு வங்காள முன்னாள் கவர்னரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா ஆகியோரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. இதுபற்றி விவாதிக்கப்பட்டது.
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகள் சரத் பவாரை ஆதரித்தன. ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட தயங்குகிறார். "சரத் பவார் ஒப்புக்கொண்டால், அனைவரும் அவருக்கு ஆதரவளிப்பார்கள். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை, இது தொடர்பாக விவாதிக்க உள்ளோம்" என மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான வரைவுத் தீர்மானத்தை மம்தா பானர்ஜி சமர்ப்பித்ததாகவும், ஆனால் இதற்கு மற்ற கட்சிகள் உடன்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விவாதிக்க கூட்டம் கூட்டப்பட்டதாக பலர் கூறியுள்ளனர்.
- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றொரு திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
- காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவை ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று கூறி உள்ளார்.
புதுடெல்லி:
புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
பா.ஜனதா கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் விவரம் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு பொது வேட்பாளரை நிறுத்த முயற்சி செய்து வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முதலில் இதற்கான முயற்சியை எடுத்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அவர் மற்ற எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்து உருவாக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில் உள்ள ராகுல்காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அலைந்து கொண்டு இருக்கிறார்.
இதனால் காங்கிரஸ் அல்லாத ஒருவரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை தேர்வு செய்வதற்காக இன்று (புதன்கிழமை) டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி உள்ளார். 22 கட்சிகளுக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார். முதலில் அவரது முயற்சிக்கு காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால் மம்தா மேற்கொண்ட திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சியினர் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டனர். இதனால் இன்று பிற்பகல் டெல்லியில் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள பொது வேட்பாளர் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை களம் இறக்க முதலில் முயற்சிகள் நடந்தன. ஆனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி விட்டார். அவரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சமரசம் செய்து வருகின்றன.
இதற்கிடையே மம்தா பானர்ஜி புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டார். பா.ஜ.க.வில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்காவை பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று யோசனை தெரிவித்தார். ஆனால் அதை காங்கிரஸ், இடது சாரிகட்சிகளின் தலைவர்கள் திட்டவட்டமாக ஏற்க மறுத்து விட்டனர்.
இதற்கிடையே மேற்கு வங்காள முன்னாள் கவர்னரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியை பொது வேட்பாளராக நிறுத்த யோசனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் பேச்சு நடத்தினார்கள். அவர் யோசித்து பதில் சொல்வதாக கூறி உள்ளார்.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றொரு திட்டத்தை வெளியிட்டுள்ளார். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவை ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று கூறி உள்ளார்.
ஆனால் பரூக் அப்துல்லாவும் பொது வேட்பாளராக களம் இறங்க தயங்குகிறார். இதுபற்றி எல்லாம் எதிர்க்கட்சிகளின் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ஜெயராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோரில் 2 பேர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. 2-ம் நிலை தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, சிவசேனா சார்பில் சுபாஸ்தேசாய், ராஷ்டீரிய லோக்தளம் சார்பில் ஜெயம்சவுத்ரி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகாபூபா ஆகியோர் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தி உள்ளனர். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் முதல்-மந்திரியுமான ஹேமந்த்சோரனும் கலந்து கொள்ள உள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் நிலைப்பாடு தெரியவில்லை.
ஆனால் மம்தா ஏற்பாடு செய்துள்ள ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது. அதுபோல ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் மம்தா கூட்டத்தை புறக்கணித்துள்ளது.
தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவரும், பொது வேட்பாளருக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கூறி உள்ளார். இதனால் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்துக்கு இறுதி வடிவம் கிடைக்காத நிலை இப்போதே உருவாகி உள்ளது.
பா.ஜ.க. நிறுத்தும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை பிஜு ஜனதா தளம் அல்லது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி ஆதரித்தால் கூட போதும், பா.ஜ.க. வேட்பாளர் எளிதில் வெற்றி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மம்தா பானர்ஜி தனது கட்சியை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.
- காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் டெல்லியில் நாளை கூடி ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளன.
புதுடெல்லி:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூலை 24-ந்தேதி) முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. போட்டி ஏற்பட்டு ஓட்டுப்பதிவு நடக்கும் பட்சத்தில் ஜூலை 21-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இன்னும் சில தினங்களில் பா.ஜனதா கட்சி வேட்பாளரை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதில் அனைத்து கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படுத்த பா.ஜனதா தலைவர் நட்டா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய இருவரையும் பிரதமர் மோடி பணியில் அமர்த்தி உள்ளார்.
அவர்கள் இருவரும் பா.ஜனதாவின் தோழமை கட்சி தலைவர்களிடம் பேசி வருகிறார்கள். அதுபோல சில எதிர்க்கட்சி தலைவர்களிடமும் அவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். என்றாலும் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை களம் இறக்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை எதிர்க்கட்சிகன் பொது வேட்பாளராக களம் இறக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே கடந்த வாரம் சரத் பவாரை சந்தித்து பேசினார். பிறகு மகாராஷ்டிர முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சரத்பவார் அனைத்து கட்சிகளுடன் நல்ல அணுகுமுறையில் இருப்பதால் அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தலாம் என்று சோனியா விரும்புகிறார். எனவே ஜனாதிபதி தேர்தல் தேதி அட்டவணை வெளியிடப்பட்டதும் அவர் முதன் முதலில் சரத் பவாருடன் போனில் பேசினார். அதுபோல இடதுசாரி கட்சி தலைவர்களும் சரத்பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சரத்பவாரை பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று முடிவு செய்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் மற்ற எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
குறிப்பாக மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியிடம் காங்கிரஸ், கம்யூனிஸ்டு தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். மம்தா பானர்ஜி தனது கட்சியை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.
இதற்காகவே அவர் நாளை (புதன்கிழமை) டெல்லியில் 22 எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவார் என்று தெரிகிறது.
குறிப்பாக சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த முன்னாள் பா.ஜனதா தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான யஷ்வந்த் சின்காவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி விரும்புகிறார். ஆனால் அவரது திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை.
பா.ஜனதாவில் இருந்து வந்த ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று காங்கிரஸ், இடதுசாரிகள் திட்டவட்டமாக கூறிவிட்டன. எனவே நாளை மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்தில் தி.மு.க., ஆம்ஆத்மி, போன்ற கட்சிகளும் பங்கேற்காது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களம் இறங்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தயக்கத்தை வெளியிட்டுள்ளார். நேற்று அவர் தனது கட்சி மூத்த தலைவர்களுடன் பேசுகையில், 'பொது வேட்பாளராக போட்டியிட எனக்கு விருப்பமில்லை' என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் பட்டியலில் நான் இல்லை என்றும் அவர் தெளிவுபட கூறி உள்ளார். 81 வயதாகும் சரத் பவார் தனக்கு பதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தச்செயலாம் என்று கூறி வருகிறார்.
குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத்தை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று சரத்பவார் விரும்புகிறார். தனது விருப்பத்தை அவர் காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் டெல்லியில் நாளை கூடி ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளன. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் பற்றி ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டு விடும் என்று உறுதியாக தெரிகிறது.
காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா உள்பட பல கட்சிகள் சரத்பவாரையே ஆதரிக்கின்றன. எனவே அவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேர்வு செய்யப்படுவாரா என்பது நாளை தெரிந்து விடும்.
சரத் பவாருக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் மம்தா பானர்ஜி, சந்திர சேகர ராவ், நவீன் பட்நாயக் போன்ற தலைவர்களும் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரத் பவாரை முன் நிறுத்தினால் மட்டுமே அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓர் அணியில் ஒன்று திரட்ட முடியும் என்று சோனியா கருதுகிறார். எனவே நாளை முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்