search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mental health"

    • உலகில் எல்லா உயிர்களுமே அன்புக்காக ஏங்குகின்றன.
    • நம்மை நாமே அன்பு செய்வோம், மகிழ்ச்சியாக வாழ்வோம்.

    இந்த உலகில் எல்லா உயிர்களுமே அன்புக்காக ஏங்குகின்றன. தன் மீது பிறர் அன்பு காட்ட வேண்டும், தன்னிடம் ஆறுதலாக பேச வேண்டும், மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும், தன் செயல்களை அங்கீகரிக்க வேண்டும், தான் சிறப்பாக செயல்பட்டால் பாராட்ட வேண்டும் என ஏதாவதொரு வகையில் பிறர் தன் நலன் மீது அக்கறை கொள்ள வேண்டும் என்று மனிதர்களும் ஆசைப்படுவது யதார்த்தமானது.

    அதேபோல தனக்கு பிடித்தமானவரிடம் அளவில்லா அன்பை பொழிவதும், அவருக்கு பிடித்ததை பரிசாக அளிப்பதும், அவரை சந்திக்க அலாதியான விருப்பம் கொள்வதும் பலரது இயல்பாக இருக்கும். தன்னிடம் அன்பு காட்டுபவருக்காக எதையும் செய்ய துணிந்திடுவார்கள். தம்மால் முடியாததையும் தமது சக்திக்கு அப்பாற்பட்டதையும் கூட செய்ய முயற்சி செய்வார்கள்.

     அதேபோலவே நம்மையும் பிறர் அன்பு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் நாம் நம்மையே அன்பு செய்ய மறந்து விடுகிறோம். இதனையே சுய அன்பு என்று சொல்கிறார்கள் மனநல ஆலோசகர்கள். சுய அன்பு என்பது சுய நலம் அல்ல. அது நமது மன நலனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்யும் அற்புதமான திறவுகோலாகும்.

    இன்றைய சமூகச்சூழலில் பலர் வாழ்க்கை மீது வெறுப்பு கொள்வதற்கும், இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று முடிவு எடுப்பதற்கும் சுய அன்பு இல்லாததே காரணம். சுய அன்பு என்றால் புரியாத புதிரல்ல, அது மிகவும் எளிதானது. நம்மையே நாம் அன்பு செய்வது என்றால் நம்மையே நாம் முழுமையாக ஏற்றுக்கொள்வது. நாம் சிகப்போ, கருப்போ, குண்டோ, ஒல்லியோ, குட்டையோ, நெட்டையோ எப்படியாக இருந்தாலும் நாம் நம்மையே ஏற்றுக்கொள்ள வேண்டும். நமக்குள்ளேயே `நான் அழகானவன்' என்று சொல்லிக்கொள்ள வேண்டும்.

     ஒருபோதும் நாம் நம்மை பிறரோடு ஒப்பிடவே கூடாது. நாம் ஒவ்வொருவருமே ஏதாவதொரு வகையில் தனித்துவம் ஆனவர்கள். எனவே நமது தனித்துவ பண்பை ஏற்றுக்கொண்டு அதனை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்காக நம்மையே நாம் அன்பு செய்வோம். அதன் வெளிப்படாக நமக்காக மேற்கொள்ளும் சிறு, சிறு காரியங்களை ரசித்து, மகிழ்ச்சியுடன் செய்வோம்.

    அதேபோன்று நல்ல செயலை செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு, அதனை செய்து முடித்து விட்டால் நம்மை நாமே பாராட்டிக்கொள்வோம். அதற்கு தக்க சன்மானமாக ஏதாவதொரு பரிசை வாங்கி நமக்கே நாம் அளித்துக்கொள்வோம். அது ஐஸ்கிரீம் வாங்கி ருசித்து சாப்பிடுவதாகக் கூட இருக்கலாம். இப்படி செய்வது விளையாட்டாக தெரியலாம். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் உளவியல் தாக்கம் பெரியது என்கிறார்கள் உளவியலாளர்கள். எனவே நம்மை நாமே அன்பு செய்வோம்...! மகிழ்ச்சியாக வாழ்வோம்...!

    • மகிழ்ச்சியோடு இருப்பதுதான் நல்ல மனநலனுக்கான அறிகுறி.
    • வாழ்வின் பொருள் மற்றும் இலக்கு என்பது மன மகிழ்ச்சிதான்.

    மனதை அலையவிட ஆயிரம் விஷயங்கள் இந்த உலகில் வந்துவிட்டன. தேவையற்றவற்றைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டத்தில் மனநலனைப் பாதுகாக்க மறந்துவிட்டோம். முடிவில், மனமகிழ்ச்சியின்றி இருக்கின்றோம். வாழ்வின் பொருள் மற்றும் இலக்கு என்பது மன மகிழ்ச்சிதான். மன மகிழ்ச்சியோடு இருப்பதுதான் நல்ல மனநலனுக்கான அறிகுறி, நம்மைச் சுற்றிலும், நமக்குள்ளேயும் மன மகிழ்ச்சி மற்றும் மனநலனுக்கான வாசல்கள் திறந்தே உள்ளன. அந்த வழிகள் இதோ:

    இயற்கையோடு இணையலாம்

    பூங்கா, காடு, வயல் போன்ற பச்சை நிறம் கொண்ட இடங்களில் மற்றும் ஏரி, கடல் போன்ற நீலநிறம் கொண்ட இடங்களில் நம்முடைய நேரத்தைச் செலவிடும்போதோ, வசிக்கும்போதோ மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை குறைவதாகவும் மேலும், கவலையும் அச்சமும் கலந்த மனநிலை கொண்டவர்கள் தெளிவான மனநிலையைப் பெறுகிறார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

    ஆகவே கான்கிரீட் காடுகள் என்று அழைக்கப்படும் நகரங்களுக்கு வெளியே வந்து செயற்கை கருவிகளான கைபேசி, மடிக்கணினி ஆகியவற்றுக்கு விடுப்பு வழங்கிவிட்டு இயற்கையின் அழகை ரசிக்கப் பழகுவோம். உங்களிடம் நீங்களே அக்கறை காட்டுங்கள்

    மனித வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது. அத்தகைய சவால்களை எதிர்கொண்டு பாதிக்கப்படும்போது, சிக்கலுக்கு ஆளாகின்ற போதும் நம்மை நாமே குறை விமர்சனம் கூறிக் கொண்டு சுருங்கிவிடக் கூடாது. வாழ்க்கைப் பாடங்கள்தான் நம்மை முழு முனிதனாக ஆக்குகின்றன என்பதை அறிந்து, நீங்கள் தெரியாமல் தவறு செய்துவிட்டாலோ, உங்களிடம் குறைகளைக் கண்டறிந்தாலோ அடுத்தமுறை இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து உங்களை நீங்களே மன்னிக்கப் பழகுங்கள்.

    மற்றவர்களுக்கு உதவலாம்

    தன்னார்வ சேவை செய்யும்போதும், பிறருக்கு உதவி செய்யும்போதும் மூளையின் குறிப்பிட்ட பகுதிகள் தூண்டப்பட்டு மனமகிழ்ச்சியை நமக்கு கொடுப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும், அன்பு மற்றும் உதவி செய்யும் குணத்துடன் இருப்பதால் நாம் வாழ்வின் நோக்கமான நற்பெயரையும் அடையலாம்.

    நிகழ்காலத்தில் வாழ்வோம்

    நேற்றில் இருந்து கற்றுக் கொள், இன்றைய நாளில் வாழ், நாளை மீது நம்பிக்கை கொள் என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறிய பொன்மொழி. கடந்தகால தவறுகள், கசப்புகளை நினைத்துப் பார்க்காமல், எதிர்காலம் பற்றி பயப்படாமல், தேவையில்லாமல் பிரச்சினைகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் இருப்பதன் மூலம், நிகழ்காலத் தருணங்களை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழமுடியும்.

    உறவுகள் இனிமை தரும்

    நமக்கு எது மகிழ்ச்சியும், உடல் நலனும் தருகின்றது என்று 80 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த அறிவியல் ஆய்வின் முடிவுகள் கூறும் ஒரே பதில் என்ன தெரியுமா இனிமையான உறவுகள் என்பதுதான். இனிய உறவுகளுடன் நாம் நேரம் செலவிடும்போது மகிழ்ச்சியை பெறுகின்றோம். அப்படி மகிழ்ச்சியுடன் இருப்பதால் நல்ல உடல்நலம் கிடைக்கின்றது. தனிமையில் இருப்பவர்களின் மகிழ்ச்சியும் வாழ்நாளும் குறைகின்றன. ஆகவே, இனிமையான உறவுகளைப் போற்றிப்பாதுகாப்போம்.

    அறிவை வளர்க்கலாம்

    ஓவியம், இசை, எழுத்து போன்ற கலைகளில் ஈடுபடுதல், புத்தகம் வாசித்தல், கலை மற்றும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், புதிய திறன்கள் மற்றும் மொழிகளைக் கற்றல், மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகளை விளையாடுதல் போன்ற செயல்பாடுகளால் நம் மூளை தூண்டப்படுகின்றது.

    உடம்பை உறுதியாக்கலாம்

    தினமும் உடற்பயிற்சிகள் செய்வது, சரிவிகித உணவு உண்பது, போதுமான தண்ணீர் குடிப்பது, நல்ல தூக்கம், மன அழுத்தம் குறைக்கும் விதம் யோகா மற்றும் மூச்சுப்பயிற்சிகள் செய்வது, தீமை விளைவிக்கும் புகை மற்றும் மதுப்பழக்கம் தவிர்ப்பது போன்ற செயல்பாடுகளால் நமது உடல்நலனை அதிகரிக்கலாம். உடல் நலம் மேம்படும்போது மனநலனும் சேர்ந்தே மேம்படும்.

    நேர்மறைக் கண்ணோட்டம் வேண்டும்

    வாழ்வில் இன்பமும் துன்பமும் இயற்கையே. துன்பங்களில் இருந்து மீண்டெழுவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். தடைக்கற்களை படிக்கற்களாக பார்க்கப் பழகுங்கள். உங்களிடம் இல்லாதவற்றை நினைத்து வருத்தப்படாமல், உங்களிடம் இருப்பவற்றை நினைத்து நன்றி உணர்வுடன் இருங்கள். எதிர்மறையான செய்திகள், உறவுகள் மற்றும் சூழல்களை தவிர்த்துவிடுங்கள்.

    உங்களைச் சுற்றிலும் நேர்மறை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொண்டிருங்கள். மனதை ஒருமுகப்படுத்தி செயல்களை ரசித்துச் செய்யுங்கள். அது அந்த நாளுக்கு நாம் காட்டும் நன்றியாகும். நேர்மறையான விஷயங்கள் மீது கவனம் செலுத்தி நேர்மறைப் பார்வையில் வாழ்க்கையை நோக்கி, வாழும் வாழ்க்கைக்கு நன்மைகளை ஈர்த்து மனமகிழ்ச்சி பெறுவோம்.

    • உடலும், மனமும் தரும் தொந்தரவுகள் எல்லாமே நோய்தான்.
    • மனதில் ஏற்படும் பாதிப்பும் தன் விளைவுகளை உருவாக்கும்.

    நம்முடைய வழக்கமான வேலைகளைச் செய்யவிடாமல் உடலும் மனமும் தரும் தொந்தரவுகள் எல்லாமே நமக்கு நோய்தான். எல்லோருக்குமே தங்களுடைய அன்றாட வழக்கங்கள் பாதிக்கப்படும்போது டென்ஷன் வந்துவிடுகிறது.

    உடனே மருத்துவரைப் பார்த்து மருந்துகளைச் சாப்பிட்டு, ஊசிகளைப் போட்டு உடனே உடல் குணமாகி, உடனே நம்முடைய வழக்கமான வேலைகளுக்குத் திரும்பிவிட வேண்டும் என்பதுதான் நம்மில் பெரும்பாலானோருடைய விருப்பமாக இருக்கிறது.

    நோய் என்றால் நம்முடைய மன, உடல் இயக்கத்தில் ஏற்படுகிற மாறுதல். உதாரணத்துக்குப் புகை, தூசு, மாசு மிகுந்த இடங்களில் நாம் இருக்க நேரிடும்போது, நம்முடைய உடலுக்கு ஒவ்வாத மேற்கண்ட விஷயங்களால் சுவாச பாதையில் அரிப்பும் எரிச்சலும் ஏற்படுகிறது.

    நுரையீரலில் இவை சேர்ந்துவிடாமல் இருக்க, நுரையீரல் ஒரு கணம் தன் முழு சக்தியையும் திரட்டி தும்மலாக வெளியேற்றுகிறது. அதையும் மீறிச் சுவாசப் பாதையில் நுழையும் ஒவ்வாத அந்நியப் பொருட்களை வெளியேற்ற சளிச் சவ்வுகளைத் தூண்டிவிட்டு அதிகமான சளிநீரைச் சுரக்கச் செய்து மூக்கின் வழியாக வெளியேற்றுகிறது

    இதன்மூலம் உடலுக்குள் அந்நிய விஷப்பொருள் நுழைவதைத் தடுக்க தானாகவே உடல் முயற்சிக்கிறது. அநேகமாக ஜலதோஷம் பிடித்த எல்லோருக்கும், இந்த உணர்வு வரும். இது ஆரம்பக்கட்டம். சுவாச உறுப்புகளால் சமாளிக்க முடியாத அளவுக்கு அந்நியப் பொருள் உள்ளே நுழைந்துவிட்டால், அதை அந்தந்த இடத்திலேயே சளிநீரானது சிறைப்படுத்துகிறது. பின்பு இருமலை உண்டு பண்ணுகிறது. இருமலுடன் சளி வெளியேறுகிறது. கூடவே சிறைபட்ட அந்த பொருளும். அதாவது அந்த தூசு, மாசு, எல்லாமும் வெளியேறுகின்றன.

    அதேபோல மனதில் ஏற்படும் பாதிப்பும் தன் விளைவுகளை உருவாக்கும். உதாரணத்துக்கு அலுவலகத்தில் மேல் அதிகாரியிடம் நியாயமில்லாத காரணத்துக்காக, ஒருவர் வாங்கும் ஏச்சு மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனாலும் நலம் பாதித்து உடல் நடுக்கத்தையும் நரம்புத்தளர்ச்சியையும் ஏற்படுத்தலாம். மனரீதியான பாதிப்பால் வரும் நோய்களுக்கு இதுபோல் பல உதாரணங்களை கூறமுடியும்.

    ஆக நோய் என்பது ஒருவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்படைவது ஆகும். மொத்தத்தில் நோய் என்பது ஒருவரது இயல்பான சுபாவத்தில் ஏற்படுகிற மாற்றங்களின் தொகுப்பு என மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

    • உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
    • தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதற்கும் மன அழுத்தம் காரணமாகிறது.

    உலக நாடுகளை ஒப்பிடுகையில் மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில் வேலை பார்ப்போர் விகிதம் 39.1 சதவீதமாகவே இருக்கிறது. பொருளாதார நிலையை சமாளிக்க தகுதியான வேலை கிடைக்காவிட்டாலும் கிடைத்த வேலையை ஏற்றுக்கொண்டு செய்யும் பலரை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

    வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கும் நிலையில் ஏதோ ஒரு வேலை கிடைத்து அங்கு பணிச்சூழல் சரியாக அமையவில்லை என்றால் அங்கே மனரீதியான பிரச்சினைகள் ஏற்படுகிறது. நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கும், பணியாளர்களின் செயல்திறனுக்கும் இடையே காணப்படும் இடைவெளிதான் இந்த மாதிரியான சூழ்நிலையை உருவாக்குகிறது. இதனால் வேலை, ஊதியம் தாண்டி மன அமைதியுடன் வேலை செய்வதற்கான ஒரு நல்ல சூழ்நிலை எல்லோருக்கும் தேவைப்படுகிறது.

    வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம் தவிர்க்க முடியாது. ஒரு நிறுவனத்தில் ஒருவருக்கு கீழ் வேலை செய்யும் போது நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் கிடைத்துவிடுவதில்லை. குடும்பச்சூழல், வேலைப்பளு, கட்டமைப்பு வசதிகள், அலுவலக சூழ்நிலை, சகபணியாளர்கள் நடந்துகொள்ளும் விதம், மேல் அதிகாரியின் நடவடிக்கை, நேரமின்மை, வேலையில் தெரியாமல் செய்யும் தவறுகள் என அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட பலவித காரணங்கள் உள்ளன.

    இவை எல்லாம் எப்போதாவது ஏற்பட்டால் பெரிதாக கண்டுகொள்ளத்தேவை இல்லை. ஆனால் அனைத்து சூழ்நிலைகளும் உங்களுக்கு எதிராக திரும்பும் போது உடனடியாக தீர்வுகாண வேண்டியது அவசியம்.

    கண்டிப்பாக எல்லோருக்கும் வேலைப்பளுவின் காரணமாக மன அழுத்தம் இருக்கிறது. சிலபேர் மட்டும் தான் இதற்கு முக்கியத்துவம் அளித்து மனதிற்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் தான் அவர்களுக்கும் உடம்பும், மனதும் மிகவும் பலவீனம் அடைகிறது.

    உங்களுக்கு வேலை கடினமாக உள்ளது, அதை கையாள்வதற்கு மிகவும் சிரமப்படும்போது வேலைபார்க்கும் இடத்திலேயே உதவிசெய்வதற்கு உங்கள் நண்பரையோ அல்லது மேலதிகாரியின் உதவியையோ நாடலாம். ஏனென்றால் அவர்கள் அதை எல்லாம் கடந்துதானே வந்திருப்பார்கள். உங்களுடைய தேவைகளை அவர்களிடம் கேட்டுப்பெறலாம்.

    இங்கு வேலை என்பது மிகவும் முக்கியமானது. இந்த வேலை கடினமாக இருக்கிறது என்று எண்ணினால் இதைவிடுத்து வேறு இடத்திற்கு போனாலும் அங்கும் வேலைப்பளு இருக்கத்தான் செய்யும். எனவே அதனை கையாள தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

    முதலில் உங்களது மனநிலை எதுவாக இருந்தாலும் அதனை உங்களால் கையாள முடியுமா? இல்லையா என்று பார்க்க வேண்டும். உங்களால் முடியவில்லை என்றால் நீங்கள் மருத்துவ ஆலோசகரை அணுகலாம். இப்போது நிறைய தெரப்பிஸ்டுகள் இருக்கிறார்கள். தற்போது நிறைய அட்வான்ஸ் டெக்னாலஜிகளும் வந்துவிட்டன.

    இதையும் மீறி உங்களுக்கு மன அழுத்தம் இருந்துகொண்டு இருந்தால், அதாவது மருத்துவ ஆலோசகரை அணுகியும் உங்களுக்கு சரியாகவில்லை என்றால் அப்போது அந்த வேலையை மாற்றுவதை பற்றி நீங்கள் சிந்திக்கலாம். உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறதோ, நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அந்த வேலைக்கு உங்களை மாற்றிக்கொள்ளலாம்.

    உயர் பதவிகளில் இருப்பவர்கள் இந்த வகை மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் வேலைப்பளு என்பது அவர்களுக்கு இருந்துகொண்டுதான் இருக்கும். மேலும் அவர்களால் வேலையைவிட்டு அவ்வளவு எளிதில் வெளியே வர முடியாது. அவர்கள் மன அழுத்தம் வேலைகளால் ஏற்படுகிறதா அல்லது வீட்டு சூழ்நிலைகளால் ஏற்படுகிறதா என்பதை பிரித்து பார்க்க வேண்டும்.

    மன அழுத்தத்தால் ஏற்படும் பிரச்சினைகள் மனநல பிரச்சினைகளையும், உடல்நல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். மன அழுத்தம் அதிகமாக இருந்தால் பக்கவாதம், மாரடைப்பு, உடல்பருமன், எடைகுறைவு என பல உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

    மனநல பிரச்சினை உள்ளவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதற்கும் மன அழுத்தம் காரணமாகிறது.

    வேலைப்பளுவினால் மன அழுத்தம் ஏற்பட்டால் அது உங்களது வேலையை பாதிக்கிறது, உங்களது கவனத்தை வேலைகளில் செலுத்த இயலல்லை. அதற்கு மாறாக உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் தான் அதிகம் வருகிறது என்றால் உடனடியாக மருத்துவ ஆலோசகரை சந்திப்பது தான் மிகவும் நல்லது.

    மருத்துவரை பார்ப்பதற்கோ அல்லது கவுன்ஸ்லிங் போவதற்கோ முதலில் அச்சப்படக்கூடாது. நம்மை பற்றி எப்படி பேசுவது, எல்லோருக்கும் தெரிந்துவிடுமோ, நம்மை பற்றி இவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணாமல் எல்லா தடைகளையும் உடைத்துவிட்டு துணிந்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும். அவர்களை சந்தித்து ஆலோசனைகளை பெற்றாலே உங்களுடைய வாழ்வியல் முறைகள் மாறிவிடும்.

    தற்கொலை எண்ணங்கள் ஏன் ஏற்படுகிறது

    தற்கொலை எண்ணங்கள் ஒரு மனிதன் கோபமாக இருக்கும்போது அல்லது சண்டையிடும் போது இந்த மாதிரி எண்ணங்கள் வருவது என்பது இயற்கை. ஆனாலும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. கோபத்தை கட்டுப்படுத்த முடியாத போது தான் விபரீதமான எண்ணங்களும், தற்கொலை முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. இதனால் நிறைய தற்கொலைகளும் நடந்துள்ளன.

    ஒருவருக்கு தொடர்ந்து தற்கொலை எண்ணங்கள் வருவது, தற்கொலை பற்றி அதிகமாக பேசுவது, தனிமையில் இருப்பது ஆகிய அறிகுறிகள் இருப்பவர்களை கண்டிப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். தற்போது ஹெல்ப்லைன் மூலமாக கூட மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்படுகிறது. எனவே மருத்துவமனைக்கு செல்லாமல் இந்த மாதிரி ஹெல்ப்லைன் மூலமாக மருத்துவ ஆலோசகருக்கு போன் செய்தும் கவுன்ஸ்லிங் அளிக்கலாம்.

    மன அழுத்தத்திற்கான சிகிச்சை முறைகள்

    பலவருடங்களுக்கு முன்னால் இருந்தே மன அழுத்தத்திற்கு நிறைய சிகிச்சைகள் இருக்கின்றன. அதிக மனக்குழப்பம் இருப்பவர்களுக்கு கூட இப்போது நல்ல சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அதில் மிகவும் முக்கியமானது யோகா மற்றும் தியானம். இது மன அழுத்தத்தில் இருந்து விடுபட மிகவும் உதவுவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இந்த சிகிச்சை முறைகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்தால் மட்டுமே நல்ல பலனை பெறமுடியும்.

    தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்வது, மருத்துவ ஆலோசகரின் வழிமுறைகளை பின்பற்றுவது. தொடர் சிகிச்சை முறைகளை பின்பற்றுவது என்று செய்தால் மட்டுமே சீக்கிரமாக இத்தகைய நிலையில் இருந்து வெளியே வர முடியும்.





    • உணவு, உடை மற்றும் தங்கும் வசதி உள்ளிட்டவைகளை குறித்து காப்பகத்தினரிடம் கேட்டறிந்தார்.
    • அங்குள்ள அனைத்து மனநலநோயாளிகளுக்கு திண்பண்டங்களை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் உத்தரவின் படியும் தஞ்சாவூர் மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசின்தா மார்டின் தலைமையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மனநலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாமானது தஞ்சாவூரில் உள்ள அன்பாலயம் மனநல காப்பகத்தில் நடைபெற்றது.

    அப்போது அன்பாலயம் மனநல காப்பகத்தில் இருக்கும் மனநோயாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளான உணவு, உடை மற்றும் தங்கும் வசதி உள்ளிட்டவைகளை காப்பகத்தின் அலுவல ர்களிடம் மாவட்ட முதன்மை நீதிபதி விசாரித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் குறித்தும் விசாரித்தார்.

    அங்கிருக்கும் மனநோயாளிகளுக்கு ஏதேனும் சட்ட உதவிகள் தேவைப்பட்டால் தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினை நாடி உதவிபெறலாம் என்று கூறினார். அங்குள்ள அனைத்து மனநலநோயாளிகளுக்கு திண்பண்டங்களை வழங்கினார்.

    இம்முகாமில் தஞ்சாவூர் மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான இந்திராகாந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர்சந்தோஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மர்ம நபர்கள் வீட்டில் உள்ளே இருந்த அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    • பெண்ணின் உறவினர்கள் ரோசனை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர் பகுதியைஒரு மனநல பாதிக்கப்பட்ட பெண் நேற்று இரவு அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது வீட்டில் யாரும் இல்லாததை கண்ட மர்ம நபர்கள் வீட்டில் உள்ளே இருந்த அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்தப் பெண் வெளியே வந்து அருகே உள்ள உறவினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் ரோசனை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண் யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மனநல அவருக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மன நலம் பாதித்த பெண்ணை பாலியல் சீண்டல் செய்த சம்பவம் அந்த பகுதி மக்களுடைய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மனஅழுத்தம் மற்றும் அதீத உணர்ச்சி வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவது.
    • மன ஆரோக்கியத்தை மேம்படுத்த 'ஸ்டிரெஸ் பால்'

    மனஅழுத்தம் மற்றும் அதீத உணர்ச்சி வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவது, பதற்றத்தைக் குறைப்பது, கை தசைகளின் செயல்பாட்டை அதிகரிப்பது, நரம்பு மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்துவது, கை விரல்களின் அசைவுகளை சீராக்குவது என பல்வேறு விதங்களில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த 'ஸ்டிரெஸ் பால்' எனப்படும் மென்மையான பந்து உதவுகிறது.

    பயன்படுத்தும் முறை

    உள்ளங்கையில் வைத்து. முடிந்த வரை ஸ்டிரெஸ் பாலை கடினமாக அழுத்தவும். இவ்வாறு அழுத்தியபடி 5 வினாடிகள் வைத்திருந்த பின்பு மெதுவாக கைகளை தளர்த்தவும், இதுபோல தொடர்ந்து 10 முறை செய்யலாம். ஒரு நிமிட இடைவெளிக்கு பின்பு மற்றொரு கையிலும் இதேபோல் செய்ய வேண்டும்.

    நன்மைகள்:

    ஸ்டிரெஸ் பாலை அழுத்தும்போது கையில் இருக்கும் நரம்புகள் தூண்டப்படும். மூளையில் ஏற்படும் உணர்ச்சிகளுடன் தொடர்புடைய நரம்புகள் உள்ளங்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவை தூண்டப்படுவதால், மூளையில் உள்ள உணர்ச்சிகளுக்கான பகுதியில் அமைதிக்கான தூண்டுதல் ஏற்படும். இந்த சமிக்கை உடல் முழுவதும் அனுப்பப்படும். பதற்றமாக இருக்கும் சமயங்களில், கைகளில் ஸ்டிரெஸ் பாலை வைத்து அழுத்தும்போது, தன்னிச்சையாகவே நம்முடைய கவனம் திசை திருப்பப்படும். மேலும், மூளையில் உள்ள நரம்புகள் தொடர்ந்து தூண்டப்படுவதால் 'எண்டோர்பின்' ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியை உணர வைக்கும் இந்த ஹார்மோன், வலி நிவாரணியாகவும் செயல்படும்.

    ஸ்டிரெஸ் பாலை தொடர்ந்து அழுத்தும்போது, அது உள்ளங்கை பகுதியை மட்டுமில்லாமல், முழு கையின் தசைகளையும் இறுக்கமாக்கும். சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுப்பதோடு, ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் பிற கழிவுப்பொருட்களையும் வெளியேற்றும். யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

    மனஅழுத்தம் உடையவர்கள். அடிக்கடி கோபம் வரும் குணாதிசயம் கொண்டவர்கள், எளிதில் பதற்றம் அடை பவர்கள், நரம்பு தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்கள் உள்பட அனைத்து வயதினரும் ஸ்டிரெஸ் பாலை பயன்படுத்தலாம். கையில் எலும்பு முறிவு, தசைநார் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஸ்டிரெஸ் பாலை பயன்படுத்தலாம்.

    • மனநலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தமிழியல் துறை சங்க பலகை இலக்கிய மன்றம் சார்பில் மனம் நிரல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கி உடல்நலம், மனநலம் குறித்து பேசினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    சிவகாசி அரசு மருத்துவமனை ஆலோசகர் சங்கர், மாவட்ட மனநல மருத்துவ திட்ட அதிகாரி நித்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். மனநல மருத்துவர் இளையராஜா மனதை பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும், மனகட்டுப்பாடு குறித்தும் பேசினார்.

    முன்னதாக மாணவி அங்காள பரமேஸ்வரி வரவேற்றார். மாணவி மாலதி நன்றி கூறினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    • ஒருவர் அங்கிருந்து இரும்பு சேர் ஒன்றை எடுத்து பஸ் முன் பக்க கண்ணாடியில் அடித்துவிட்டார்.
    • கண்ணாடியை உடைத்த நபரை பிடித்து சுங்கச்சாவடியில் பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    விழுப்புரம்:

    முசிறியில் இருந்து சென்னைக்கு ஒரு அரசு விரைவு பேருந்து பஸ் சென்று கொண்டிருந்தது. டிரைவர் சதீஷ்குமார் பஸ்சை ஓட்டிக் கொண்டிருந்தார். சுரேஷ் குமார் கண்டக்டராக இருந்தார். பஸ் நேற்று இரவு விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் நின்று கொண்டிருந்தஒருவர் அங்கிருந்து இரும்பு சேர் ஒன்றை எடுத்து பஸ் முன் பக்க கண்ணாடியில் அடித்துவிட்டார்.

    உடனடியாக பஸ் டிரைவர் சுதாகரித்துக் கொண்டு பஸ்சை நிறுத்தினார். பின்னர் டிரைவர், கண்டக்டர் இருவரும் பஸ்லிசிருந்து இறங்கி வந்து கண்ணாடியை உடைத்த நபரை பிடித்து சுங்கச்சாவடியில் பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட னர். அவர் மன நலம் பாதித்தவர் என தெரிய வந்தது. உடனடியாக அவரை விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட 45 வயது வடமாநில பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார்.
    • பெண்ணின் சொந்த ஊரை போலீசார் உதவியுடன் கண்டுபிடித்து அவரது குடும்பத்துடன் சேர்ப்பேன்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த திருமக்கோட்டை பள்ளிவாசல் அருகில் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட தேவிஸ்ரீ (வயது 45) என்ற வடமாநில பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார்.

    இந்நிலையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரைபடி, திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பக மீட்பு குழுவினர் இயக்குனர் சவுந்தர்ராஜன், சமூக பணியாளர் சக்தி பிரியா, ஒருங்கிணைப்பாளர் சரவணன், உதவியாளர் ஜெய்சரண் ஆகியோர் அப்பகுதிக்கு நேரடியாக சென்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டனர்.

    அப்போது மாவட்ட கவுன்சிலர், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவனேசன், தன்னார்வலர் அகமது ஆகியோர் சென்றனர்.

    பின்னர், திருமக்கோட்டை போலீஸ் நிலையத்தில் உரிய பதிவு பெற்று, மாவட்ட மனநல மருத்துவர் புவனேஸ்வரியை சந்தித்து பரிசோதனை செய்து நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.

    இதுகுறித்து காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் கூறுகையில்:-

    பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உணவு அளித்து மனநல சிகிச்சை கொடுத்து பெண்ணின் சொந்த ஊரை போலீசார் உதவியுடன் கண்டுபிடித்து அவரது குடும்பத்துடன் சேர்ப்பதே லட்சியம் என்றார்.

    • நம்பிக்கை மனநல காப்பகத்திற்கு உரிய பாதுகாப்பிற்காகவும் மனநல சிகிச்சை, மறுவாழ்விற்காக கொண்டு வந்து சேர்த்தனர்.
    • முகவரியை கண்டறிந்து இவரது குடும்பத்தினரை வர வைத்து விரைவில் குடும்பத்துடன் சேர்த்து விடுவோம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடி கடைத்தெருவில் 10 நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சரிவர உடை அணியாமல் சுற்றி திரிந்து கொண்டும் பொதுமக்களுக்கும் இடையூறாகவும் தொந்தரவு செய்து கொண்டு இருந்தார்.

    இதனை அறிந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். பின்னர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரையின்படி நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் தலைமையில் நம்பிக்கை மீட்பு குழுவினர் சமூகப் பணியாளர் சக்தி பிரியா, ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணைமீட்டு நம்பிக்கை மனநல காப்பகத்திற்கு உரிய பாதுகாப்பிற்காகவும் மனநல சிகிச்சை, மறுவாழ்விற்காக கொண்டு வந்து சேர்த்தனர் .

    இது பற்றி நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன் கூறும்போது, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குளிக்க வைத்து முடி சுத்தம் செய்து நல்ல உடைகள் அணிந்து உணவுகள் சரியாக கொடுத்து அவருடன் நன்கு அன்புடன் பேசிக்கொண்டு சிகிச்சை தொடர்ந்து செய்து வந்தால் முகவரியை கண்டறிந்து இவரது குடும்பத்தினரை வர வைத்து விரைவில் குடும்பத்துடன் சேர்த்து விடுவோம் என்றார்.

    • கணவரை பிரிந்து மனநலம் பாதிக்கப்பட்டு வயது முதிர்ந்த தாயாருடன் வசித்து வந்ததும், தற்போது சுற்றி திரிந்து வருவதும் தெரிய வந்தது.
    • காப்பகத்தில் நல்ல உணவு பராமரிப்பு உரிய பாதுகாப்பு தேவையான மனநல மருத்துவ உதவிகள் செய்து ஒரு சில மாதத்தில் இவரை சரியான நிலையில் அனுப்பி வைப்போம் என்றார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின்படி மனநலம் பாதிக்கப்பட்ட பட்டம் படித்த பெண் மீட்பு நம்பிக்கை மனநல காப்பகத்தில் இரவோடு இரவாக ஒப்படைப்பு

    திருவாரூர் அரசினர் மருத்துவக்கல்லூரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி திரிந்து வந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் பின்னவாசல் கிராமத்தை சேர்ந்த கனகவல்லி (வயது 32) என்பதும், திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கணவரை பிரிந்து மனநலம் பாதிக்கப்பட்டு வயது முதிர்ந்த தாயாருடன் வசித்து வந்ததும், தற்போது சுற்றி திரிந்து வருவதும் தெரிய வந்தது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவுப் படி இன்ஸ்பெக்டர் மணிமேகலை, காவலர்கள் மீனாட்சி, சத்யா ஆகியோ ர் நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் ஆலோசனை பெற்று மீட்டெடுத்து நம்பிக்கை மனநல காப்பகம் கொண்டு வந்த சேர்த்தனர் .

    நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன் இவரை மனநல காப்பகத்தில் சேர்த்துக் கொண்டு கூறுகையில் ,காப்பகத்தில் நல்ல உணவு பராமரிப்பு உரிய பாதுகாப்பு தேவையான மனநல மருத்துவ உதவிகள் செய்து ஒரு சில மாதத்தில் இவரை சரியான நிலையில் அனுப்பி வைப்போம் என்றார்.

    இந்நிகழ்வில் நம்பிக்கை மனநல காப்பக பணியாளர்கள் சரவணன், செவிலியர் சுதா, சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×