search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் சீண்டல்"

    • அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று Good Touch Bad Touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • அப்போது 4 சிறுமிகள், தலைமை ஆசிரியரிடம் சென்று, வீட்டின் அருகே விளையாடும் போது, ஒருவர் Bad Touch செய்ததாக கூறியுள்ளனர்.

    தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் காட்டுராஜா என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடும் 9 வயது சிறுமிகள் 3 பேர் மற்றும் 8 வயது சிறுமி ஆகியோருக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து, அவரது வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதை அடுத்து போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    புளியங்குடியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று Good Touch Bad Touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் தலைமை ஆசிரியர், பள்ளி குழந்தைகளிடம் உங்களது உடலில் உங்களது வீட்டு நபர்களை தவிர யாராவது உங்கள் உடலில் கை வைத்தால் பள்ளியிலோ, அல்லது வீட்டில் உள்ள பெற்றோர்களிடமோ உடனே தகவல் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    அப்போது 4 சிறுமிகள், தலைமை ஆசிரியரிடம் சென்று, வீட்டின் அருகே விளையாடும் போது, ஒருவர் Bad Touch செய்ததாக கூறியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் தகவல் கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து நான்கு குழந்தைகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் டாஸ்மாக் ஊழியரான காட்டு ராஜாவை (48) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மர்ம நபர்கள் வீட்டில் உள்ளே இருந்த அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    • பெண்ணின் உறவினர்கள் ரோசனை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர் பகுதியைஒரு மனநல பாதிக்கப்பட்ட பெண் நேற்று இரவு அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது வீட்டில் யாரும் இல்லாததை கண்ட மர்ம நபர்கள் வீட்டில் உள்ளே இருந்த அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்தப் பெண் வெளியே வந்து அருகே உள்ள உறவினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் ரோசனை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண் யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மனநல அவருக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மன நலம் பாதித்த பெண்ணை பாலியல் சீண்டல் செய்த சம்பவம் அந்த பகுதி மக்களுடைய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
    • பள்ளிக்கு சென்றபோது துணிகரம்

    செங்கம்:

    செங்கம் அடுத்த சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 57). இந்த நிலையில் கூலி தொழிலாளியின் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மகளிடம் கோவிந்தராஜ் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவியிடம் ஆபாசமாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். மேலும் செங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு கோவிந்தராஜை கைது செய்தனர்.

    • மணிவண்ணன் திரு.பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
    • இது குறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியான தோமாஸ் அருள் திடலில் வசிப்பவர் மணிவண்ணன் (வயது 36). இவர் காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அதுபோன்ற சமயத்தில், தனது உறவினர் வீட்டு அருகில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். நாளடைவில் அந்த சிறுமியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    இது குறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் சிறுமியின் பெற்றோர் திரு.பட்டினம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • இதுகுறித்து சந்துருவிடம் கேட்டதற்கு உங்கள் பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறினார்.
    • பெற்றோரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் பண்ருட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சிறுவத்தூர் திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சந்துரு, கூலி தொழிலாளி. இவர் பிளஸ்-2 மாணவியிடம் சென்று ஆசைவார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படு கிறது. இதை அறிந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து சந்துருவிடம் கேட்டதற்கு உங்கள் பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறினார்.

    இதற்கு பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சந்துரு பெண்ணின் பெற்றோரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். அத்துடன் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு தொடர்ந்து கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து மாணவி யின் பெற்றோர் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வள்ளி யிடம் புகார் கொடுத்தனர். இதனையடுத்து கூலி தொழிலாளி சந்துரு மீது மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவிசி தேடி வருகின்றனர்.

    • போக்சோ சட்டத்தில் கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மாற்றுத் திறனாளி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த பாஷா என்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருவண்ணாமலை காஞ்சி ரோடு கிரிவல பாதையில் உள்ள ராணி அண்ணாதுரை நகரைச் சேர்ந்த பாஷா என்பவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் அருகே உள்ள மாற்றுத்திறனாளி இளம் பெண் மற்றும் அவரது பெரியம்மா ஆகியோருக்கு வீட்டுக்கு தேவையான மருந்து உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுப்பது போன்ற உதவிகளை பாஷா செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பாட்ஷா மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் அவ்வப்போது ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இது பற்றி தகவல் அறிந்த நபர் ஒருவர் சமூக நலத்துறை உதவி எண் 1019 -க்கு தகவல் தெரிவித்தார்.

    இந்நிலையில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் அதிகாரிகள் மாணவியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். பின்னர் சமூக நல துறை சார்பாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் பாஷாவை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைத்தனர்.

    • ஒருவர் மீது ஒருவர் கால்களை தூக்கி போட்டும் தகாத உறவில் ஈடுபட்டனர்.
    • இருவரும் நிற்கக்கூட முடியாமல் கடுமையான போதையில் இருந்ததால் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

    பல்லடம் :

    பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில், தாலுகா அலுவலகம் அருகே ரோட்டின் மேற்கு புறமாக நீரோடை செல்கிறது.இந்த நீரோடையின் கரைகளில் புளிய மரங்கள் நடப்பட்டு வளர்ந்து நிழல் தருகின்றன. இந்த நிலையில் அந்த புளிய மரத்தின் கீழே நேற்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண்,பெண் இருவரும் குடிபோதையில், மரத்தின் கீழே படுத்துக்கொண்டு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டனர்.

    ஆடைகளை களைந்தும், ஒருவர் மீது ஒருவர் கால்களை தூக்கி போட்டும் தகாத உறவில் ஈடுபட்டனர். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.இருவரும் நிற்கக்கூட முடியாமல் கடுமையான போதையில் இருந்ததால் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோட்டில் குடிபோதையில் அவர்கள் செய்த பாலியல் சீண்டல்கள் அந்த வழியே சென்ற பொது மக்களை முகம் சுளிக்க வைத்தது.மது என்ற அரக்கனால் சமூகத்தில் ஏற்படும் இது போன்ற சீர்கேடுகள் அதிகரித்து வருவது பொதுமக்களை கவலை அடையச் செய்துள்ளது.

    • 17 வயது சிறுமி ஒருத்தி வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி வி.ஆண்டிக்கு ப்பம் ஜாகீர் உசைன் தெருவை சேர்ந்த முகமதீன் அன்சாரி (வயது 56) இவர் அதே பகுதியை சேர்ந்த சற்று மனநிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருத்தி வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்க ப்பட்ட சிறுமியின் பெற்றோர்பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தனர். இதனை தொடர்ந்துபண்ருட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி இது குறித்து வழக்குபதிவு செய்து முகமதீன் அன்சாரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துபண்ருட்டி நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    ×