search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police warned"

    • ஒருவர் மீது ஒருவர் கால்களை தூக்கி போட்டும் தகாத உறவில் ஈடுபட்டனர்.
    • இருவரும் நிற்கக்கூட முடியாமல் கடுமையான போதையில் இருந்ததால் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

    பல்லடம் :

    பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில், தாலுகா அலுவலகம் அருகே ரோட்டின் மேற்கு புறமாக நீரோடை செல்கிறது.இந்த நீரோடையின் கரைகளில் புளிய மரங்கள் நடப்பட்டு வளர்ந்து நிழல் தருகின்றன. இந்த நிலையில் அந்த புளிய மரத்தின் கீழே நேற்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண்,பெண் இருவரும் குடிபோதையில், மரத்தின் கீழே படுத்துக்கொண்டு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டனர்.

    ஆடைகளை களைந்தும், ஒருவர் மீது ஒருவர் கால்களை தூக்கி போட்டும் தகாத உறவில் ஈடுபட்டனர். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.இருவரும் நிற்கக்கூட முடியாமல் கடுமையான போதையில் இருந்ததால் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோட்டில் குடிபோதையில் அவர்கள் செய்த பாலியல் சீண்டல்கள் அந்த வழியே சென்ற பொது மக்களை முகம் சுளிக்க வைத்தது.மது என்ற அரக்கனால் சமூகத்தில் ஏற்படும் இது போன்ற சீர்கேடுகள் அதிகரித்து வருவது பொதுமக்களை கவலை அடையச் செய்துள்ளது.

    ×