search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Words of desire"

    • புவனகிரி அருகே நர்சிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.
    • பழனிவேல் மகன் வீரமுத்துவை பார்ப்பதற்காக, எறும்பூரை சேர்ந்த ராயர் மகன் அருண் அடிக்கடி வந்து செல்வார்.

    கடலூர்:

    புவனகிரி அடுத்த பெரியநெல்லிகொல்லை அடுத்த துறிஞ்சிகொல்லை  கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகள் சிந்து (வயது 19). இவர் வடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இவர் வசிக்கும் வீதியில் உள்ள பழனிவேல் மகன் வீரமுத்துவை பார்ப்பதற்காக, எறும்பூரை சேர்ந்த ராயர் மகன் அருண் அடிக்கடி வந்து செல்வார். இவருடன் சிந்துக்கு பழக்கம் ஏற்பட்டது. இதில் இருவரும் அடிக்கடி போனில் பேசியுள்ளனர். சிந்துவை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய அருண், சிந்துவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.

    இதனையடுத்து, அருணுக்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதனை யறிந்த சிந்து மனஉலைச்சலில் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொ லைக்கு முயன்றார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிந்து, நடந்த விஷயங்களை தனது பெற்றோரிடம் கூறினார். சிந்துவின் பெற்றோர், அருண் வீட்டிற்கு சென்று, தனது மகளை திருமணம் செய்துகொள்ள கேட்டுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அருண் மற்றும் குடும்பத்தார், சிந்து மற்றும் அவரது பெற்றோரை அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது தொடர்பாக சிந்து மற்றும் அவரது பெற்றோர் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி, சிந்துவை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய அருண் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

    • மணிவண்ணன் திரு.பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
    • இது குறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியான தோமாஸ் அருள் திடலில் வசிப்பவர் மணிவண்ணன் (வயது 36). இவர் காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அதுபோன்ற சமயத்தில், தனது உறவினர் வீட்டு அருகில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். நாளடைவில் அந்த சிறுமியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    இது குறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் சிறுமியின் பெற்றோர் திரு.பட்டினம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • அடையாளம் தெரியாத வாட்ஸ்-அப் எண் மூலம் தொடர்பு கொண்டு சாட் செய்து டிரேடிங் பிசினஸ் பற்றி கூறியுள்ளார்.
    • அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி ரூ.1,20,000 மோசடி செய்தார்.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யம் அகஸ்தியன்பள்ளியை சேர்ந்த கவிதரன் என்பவர் கடந்த சில மாதங்களாக பினான் ஆப்பு டிரேடிங் பிசினஸ் செய்து வந்துள்ளார். அதன் மூலமாக சிறு சிறு தொகை லாபம் கிடைத்து வந்துள்ளது.

    அந்த சமயத்தில் சுனில் குமார் குப்தா என்ற அடையாளம் தெரியாத நபர் கவிதரனிடம் அடை–யாளம் தெரியாத வாட்ஸ் அப் எண் மூலம் தொடர்பு கொண்டு சாட் செய்து டிரேடிங் பிசினஸ் பற்றி கூறி அதில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகளை கூறி ரூ.1,20,000 மோசடி செய்தார். இது குறித்த புகாரின் பேரில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், நாகை சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்–கரசுவிடம் விசாரணை செய்ய உத்தரவிட்டார்.

    விசாரணையின் அடிப்படையில் மோசடி செய்தவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டு–பிடிக்கப்பட்டது. மேலும் அவர் பயன்படுத்திய வங்கிக் கணக்கினை முடக்கிய சைபர் கிரைம் போலீசார் ரூ.1,20,000 பணத்தை மீட்டனர்.

    மீட்ட பணத்தை கவிதரனிடம், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஒப்படைத்தார். மேலும் மோசடி செய்த நபர் விரைவில் கைது செய்யப்–படுவார் என்று அவர் தெரிவித்தார்.

    ×