search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர்
    X

    மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர்

    • போக்சோ சட்டத்தில் கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மாற்றுத் திறனாளி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த பாஷா என்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருவண்ணாமலை காஞ்சி ரோடு கிரிவல பாதையில் உள்ள ராணி அண்ணாதுரை நகரைச் சேர்ந்த பாஷா என்பவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் அருகே உள்ள மாற்றுத்திறனாளி இளம் பெண் மற்றும் அவரது பெரியம்மா ஆகியோருக்கு வீட்டுக்கு தேவையான மருந்து உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுப்பது போன்ற உதவிகளை பாஷா செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பாட்ஷா மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் அவ்வப்போது ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இது பற்றி தகவல் அறிந்த நபர் ஒருவர் சமூக நலத்துறை உதவி எண் 1019 -க்கு தகவல் தெரிவித்தார்.

    இந்நிலையில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் அதிகாரிகள் மாணவியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். பின்னர் சமூக நல துறை சார்பாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் பாஷாவை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×