search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோய் பாதிப்பு"

    • நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் ஏற்படுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.
    • இது போன்ற உணவு வகைகளை தவிர்த்து சத்தான உணவுகளை உட்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பேக்கிங் செய்யப்பட்ட தின்பண்டங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன. கிராமங்களை விட அதிகளவில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு எளிதாக கிடைக்கிறது.

    இந்தியாவில் நகர் புறங்களில் வாழக்கூடியவர்கள் இனிப்புகள் மற்றும் காரங்கள் உள்ளிட்ட பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்கிறார்கள்.

    சராசரியாக, ஒரு சாதாரண நகர்ப்புற இந்தியர் குறைந்தபட்சம் 100 கிராம் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவை உட்கொள்கிறார், இது ஒரு நாளைக்கு 500 கிலோ கலோரிகளை வழங்குகிறது.

    இது தேவையானதை விட அதிகம் என்று ஐதராபாத்தை தளமாகக் கொண்ட தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அதிக ஆற்றல் கொண்ட உணவு மற்றும் உடல் செயல்பாடு இல்லாததன் விளைவாக, நகரங்களில் உள்ள மக்கள் அதிக எடை மற்றும் பருமனாக உள்ளனர்.

    "நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் ஏற்படுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.


    இது சமீபத்திய தரவுகளில் 60 சதவீதத்தை தாண்டியுள்ளது. ஒரு நாளைக்கு 50 கிலோகலோரி என்பது ஒரு மாதத்தில் எடை 1 கிலோ வரை அதிகரிக்க்கும்.

    "பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அதி சுவையான தன்மை, அதிகமாக உட்கொள்வதை எளிதாக்குகிறது. இது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய், நீரழிவு மற்றும் இருதய நோய்கள் போன்ற உணவு தொடர்பான தொற்று அல்லாத நோய்கள் அதிகரிக்கும்.

    உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் இந்தியர்களிடையே இளம் வயதிலேயே வெளிப்படுகின்றன, இறப்பு விகிதம் உலக சராசரியை விட அதிகமாக உள்ளது.

    இது போன்ற உணவு வகைகளை தவிர்த்து சத்தான உணவுகளை உட்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இதன் மூலம் இந்திய நகர்புற மக்களை நோய்வாய் படுதலில் இருந்து பாதுகாக்க முடியும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • உடலும், மனமும் தரும் தொந்தரவுகள் எல்லாமே நோய்தான்.
    • மனதில் ஏற்படும் பாதிப்பும் தன் விளைவுகளை உருவாக்கும்.

    நம்முடைய வழக்கமான வேலைகளைச் செய்யவிடாமல் உடலும் மனமும் தரும் தொந்தரவுகள் எல்லாமே நமக்கு நோய்தான். எல்லோருக்குமே தங்களுடைய அன்றாட வழக்கங்கள் பாதிக்கப்படும்போது டென்ஷன் வந்துவிடுகிறது.

    உடனே மருத்துவரைப் பார்த்து மருந்துகளைச் சாப்பிட்டு, ஊசிகளைப் போட்டு உடனே உடல் குணமாகி, உடனே நம்முடைய வழக்கமான வேலைகளுக்குத் திரும்பிவிட வேண்டும் என்பதுதான் நம்மில் பெரும்பாலானோருடைய விருப்பமாக இருக்கிறது.

    நோய் என்றால் நம்முடைய மன, உடல் இயக்கத்தில் ஏற்படுகிற மாறுதல். உதாரணத்துக்குப் புகை, தூசு, மாசு மிகுந்த இடங்களில் நாம் இருக்க நேரிடும்போது, நம்முடைய உடலுக்கு ஒவ்வாத மேற்கண்ட விஷயங்களால் சுவாச பாதையில் அரிப்பும் எரிச்சலும் ஏற்படுகிறது.

    நுரையீரலில் இவை சேர்ந்துவிடாமல் இருக்க, நுரையீரல் ஒரு கணம் தன் முழு சக்தியையும் திரட்டி தும்மலாக வெளியேற்றுகிறது. அதையும் மீறிச் சுவாசப் பாதையில் நுழையும் ஒவ்வாத அந்நியப் பொருட்களை வெளியேற்ற சளிச் சவ்வுகளைத் தூண்டிவிட்டு அதிகமான சளிநீரைச் சுரக்கச் செய்து மூக்கின் வழியாக வெளியேற்றுகிறது

    இதன்மூலம் உடலுக்குள் அந்நிய விஷப்பொருள் நுழைவதைத் தடுக்க தானாகவே உடல் முயற்சிக்கிறது. அநேகமாக ஜலதோஷம் பிடித்த எல்லோருக்கும், இந்த உணர்வு வரும். இது ஆரம்பக்கட்டம். சுவாச உறுப்புகளால் சமாளிக்க முடியாத அளவுக்கு அந்நியப் பொருள் உள்ளே நுழைந்துவிட்டால், அதை அந்தந்த இடத்திலேயே சளிநீரானது சிறைப்படுத்துகிறது. பின்பு இருமலை உண்டு பண்ணுகிறது. இருமலுடன் சளி வெளியேறுகிறது. கூடவே சிறைபட்ட அந்த பொருளும். அதாவது அந்த தூசு, மாசு, எல்லாமும் வெளியேறுகின்றன.

    அதேபோல மனதில் ஏற்படும் பாதிப்பும் தன் விளைவுகளை உருவாக்கும். உதாரணத்துக்கு அலுவலகத்தில் மேல் அதிகாரியிடம் நியாயமில்லாத காரணத்துக்காக, ஒருவர் வாங்கும் ஏச்சு மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனாலும் நலம் பாதித்து உடல் நடுக்கத்தையும் நரம்புத்தளர்ச்சியையும் ஏற்படுத்தலாம். மனரீதியான பாதிப்பால் வரும் நோய்களுக்கு இதுபோல் பல உதாரணங்களை கூறமுடியும்.

    ஆக நோய் என்பது ஒருவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்படைவது ஆகும். மொத்தத்தில் நோய் என்பது ஒருவரது இயல்பான சுபாவத்தில் ஏற்படுகிற மாற்றங்களின் தொகுப்பு என மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

    • நோய் பாதிப்பால் டிரைவர்-முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சுந்தர்ராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் (வயது62). இவருக்கு மதுபழக்கம் இருந்தது. கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவிரக்தியில் இருந்த அவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் முத்துராஜ் சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி(23), டிரைவர். இவருக்கு மதுபழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. நோய் பாதிப்பால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் பெண்களின் சுகாதாரத் தேவைகள் முற்றிலும் தீர்க்கப்படாத ஒன்றாக உள்ளது.
    • பெண்களுக்கு யோகா, உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கற்பிக்க வேண்டும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் சுகாதாரம் குறித்த மாநாடு நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் பெண்களின் சுகாதாரத் தேவைகள் முற்றிலும் தீர்க்கப்படாத ஒன்றாக உள்ளது.

    பொது சுகாதார வல்லுநர்கள் நீண்ட காலமாக பெண்களைப் பாதிக்கும் நோய்களைப் பற்றி போதுமான அளவுக்கு கணிக்கவில்லை.

    இது இலக்கு வைக்கப்பட்ட சுகாதாரக் கொள்கைகளை உருவாக்கும் முயற்சிகளைத் தடுக்கிறது. அரசு வழங்கும் சுகாதார சேவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியம்.

    குறிப்பாக கிராமப்புறங்களில், சுகாதார சேவையை மேம்படுத்த நடமாடும் மருத்துவ பிரிவுகளை நிறுவ வேண்டும்.

    ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீரகம், இதயம், எலும்பியல் மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் இருக்கிறது. குழந்தை பருவத்திலிருந்தே, பெண்களுக்கு யோகா, உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கற்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×