search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LokSabhaElections"

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி அபார வெற்றி பெற்றார். தனது வெற்றி குறித்து ஸ்மிரிதி என்ன சொல்கிறார் என பார்ப்போம்.
    அமேதி:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக வேட்பாளராக ஸ்மிரிதி இரானி களமிறங்கினார். தேர்தல் 7 கட்டங்களாக முடிவடைந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.வாக்கு எண்ணிக்கை துவக்கம் முதலே ராகுல் காந்தி, ஸ்மிரிதி ஆகிய இருவருக்குமிடையே கடுமையான போட்டி நிலவியது.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுலை விட 55,120 வாக்குகள் அதிகம் பெற்று ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 4,67,598 ஆகும்.  தனது வெற்றி குறித்து ஸ்மிரிதி இரானி கூறியதாவது:



    அமேதிக்கு இன்று புதிய விடியல். இந்த வெற்றி புதிய உறுதியை அளிக்கிறது. அமேதி மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமேதியை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் நம்பிக்கையை வாக்குகளாக செலுத்தியுள்ளீர்கள். தாமரையை அமேதியில் மலர வைத்துள்ளீர்கள். அமேதி தொகுதிக்கு பணியாற்ற என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

    நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை போன்று செயல்பட்டோம். தொண்டர்களின் மிகச்சிறப்பான பணிகளால் வென்றுள்ளோம். கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்த பாஜக தொண்டர்களின் குடும்பங்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
     

     
    மத்தியபிரதேசம் மாநிலத்தில் சுஜால்பூர் பகுதியில் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அன்பினால் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை பிரதமர் மோடி உணர வேண்டும் என கூறியுள்ளார்.
    சுஜால்பூர்:

    மத்தியபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 29, மே 6 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக மே 12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட  கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் மத்தியபிரதேசம் மாநிலத்தில் சுஜால்பூர் பகுதியில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் நாட்டுப்புற பாடகர் பிரஹலாத் திஸ்பியனை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இப்போது நடந்து கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் எண்ணங்களுக்கு இடையிலான போராட்டம் ஆகும். பாஜக, ஆர்எஸ்எஸ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் எங்கள் குடும்பத்தை அடியோடு வெறுக்கின்றனர். மக்களிடமும் வெறுப்பை ஏற்படுத்தும் விதத்தில் பேசி வருகின்றனர்.



    இதனை நீக்குவது தான் என் வேலை. மோடி என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கடுமையான கோவத்துடனும், வெறுப்புடனும் பேசி வருகிறார். ஆனால், நான் அவரை கட்டி அணைத்து அன்பு காட்டினேன். நீங்கள் இந்நாட்டின் பிரதமர், உங்களிடம் இருக்கும் தனிப்பட்ட வெறுப்புகளை நீக்கி அன்புடன் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை உணர வேண்டும்.

    வெறுப்பினை அன்பினால் மட்டுமே கலைய முடியும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். எங்கள் கட்சியினர் அதனை புரிந்துக் கொண்டு தான் செயல்படுகின்றனர். தேர்தல் அறிக்கையில் கூறியது போல காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு நன்மை கிட்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப்பொது கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் கங்கையை தரிசிக்க ராகுல் காந்தி வருவார் என தாக்கி பேசியுள்ளார்.
    வாரணாசி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 5 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், வரும் 12, 19 ஆகிய தேதிகளில் மீதமுள்ள தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் மத்திய மந்திரியும், உத்தரபிரதேசத்தில் அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளருமான ஸ்மிரிதி இரானி நேற்று நடந்த பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    நாட்டிற்காக பிரதமர் மோடி உழைத்து வருகிறார். ஆனால் கபடதாரிகளான காங்கிரஸ் கட்சியினர்  மற்றும் மகா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பிரதமரை குறை கூறுவதை தவிர வேரு எதையும் செய்வதில்லை. ஆண்டு தோறும் வெளிநாடுகளுக்கு சென்று வரும் ராகுல் காந்திக்கு இந்தியாவின் கங்கை,  5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதாவது தேர்தலின்போது மட்டும் தான் தெரியும்.  அப்போது தான் வருகை தந்து தரிசனம் செய்வார்.  

    மேலும் காங்கிரஸ் கட்சியினர் அயோத்தியாவிற்கு வருவார்கள். ஆனால், ராமர் ஆலயங்களுக்கு சென்று ராமரை வணங்கமாட்டார்கள். ஓட்டு தான் அவர்களுக்கு முக்கியம். மக்களை ஓட்டு வங்கிகளாக தான் பயன்படுத்துகிறார்கள். வாரணாசி தொகுதியில் களத்தில் இறங்கி நேரடியாக போட்டியிட முடியவில்லை. மேலும் ராகுல் காந்தி,  அமேதியையும் விடுத்து வயநாட்டிற்கு சென்று விட்டார்.

     இவ்வாறு அவர் பேசினார்.  
    ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளார் என கூறியுள்ளார். #RahulGandhi #LokSabhaElections2019
    ஜலோர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 29 மற்றும் மே 6 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலோர் பகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

    கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அநீதி இழைத்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்  'நல்ல நாள் வரும்' என  கூறிக் கொண்டிருந்தார். தற்போது 'நான் உங்கள் காவலாளி' என எங்கு சென்றாலும் கூறி வருகிறார்.



    பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் ஏழைகள், சிறுகுறுவணிகர்கள், தொழிலாளர்கள் என அனைவரிடம் இருந்தும் பணத்தை பறித்துக் கொண்டார். ஆனால் காங்கிரஸ் அறிவித்த நியாய் திட்டம் மக்களுக்கு நல்ல பலனை தரும். காங்கிரஸ், மத்தியில் ஆட்சி அமைத்தால் ஒரே வருடத்தில் 22 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

    ஜிஎஸ்டி நிச்சயம் எளிமையாக்கப்படும். 3 ஆண்டுகளுக்கு புதிதாக  தொழில் தொடங்கும் யாரும் அனுமதி வாங்க தேவையில்லை. மேலும் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள், வங்கிக் கடன் கட்ட முடியவில்லை என்றால் சிறை செல்ல வேண்டிய அவசியமில்லை. எனவே சிந்தித்து வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #RahulGandhi #LokSabhaElections2019
    கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பேசியபோது, ‘மன் கீ பாத்' உரையாற்ற நான் இங்கு வரவில்லை என கூறியுள்ளார்.#Loksabhaelections2019 #RahulGandhi
    வயநாடு:

    கேரளா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை கேரளா மாநிலத்தின் வயநாடுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திருநெல்லி கோவிலுக்கு சென்று வழிபட்டார்.  அதன்பின்னர் கோவிலில் செய்யப்படும்  சடங்குகளை செய்து முடித்தார். 



    இதையடுத்து வயநாடு தொகுதியில்  நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர்  பேசியதாவது:

    நான் கேரளாவிற்கு ஒரு அரசியல்வாதியாக வரவில்லை. மற்ற அரசியல் தலைவர்களை போல் நான் என்ன நினைக்கிறேன், என்ன செய்யப்போகிறேன் என கூறப்போவதுமில்லை. என்னுடைய  ‘மன் கீ பாத்’  உரை ஆற்றவும் இங்கு வரவில்லை. உங்கள் இதயங்களில்,  எண்ணங்களில் என்ன உள்ளது என்பதை அறிவதற்காகவே  இங்கு வந்துள்ளேன்.

    நான் இந்நாட்டின் பிரதமர் போல் வருகை தந்து, உங்களிடம் பொய் உரைக்க வரவில்லை. ஏனென்றால் உங்கள் திறமை, அறிவுக்கூர்மை குறித்து நான் நன்கு அறிவேன். சில மாதங்கள் மட்டுமே உங்களுடன் உறவுகொள்ள வரவில்லை. இந்த உறவு காலம்தோறும் தொடர வேண்டும் என்றே விரும்பி வந்துள்ளேன். என்னால் உங்களை புரிந்து கொள்ள முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Loksabhaelections2019 #RahulGandhi





    வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறுகிக் கொண்டே வரும் நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 100 சதவீதம் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும் என கர்நாடகா மாநில முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா உறுதியளித்துள்ளார். #Siddaramaiah #ElectionCommission
    மைசூர்:

    கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில்  பாராளுமன்ற தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் பிரசாரம், செய்தியாளர்கள் சந்திப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.  தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

    இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி, மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான சித்தராமையா பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உறுதியானவை அல்ல. விவிபேடுகளிலும் கோளாறுகள்  உள்ளதாக தெரிய வந்துள்ளது. நாட்டின் பல்வேறு கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து புகார் கொடுத்துள்ளனர்.



    ஆனால், தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. நெதர்லாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் தேர்தலின் பாதுகாப்பு மற்றும் சரியான வாக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை கைவிட்டு, பழைய வாக்குச்சீட்டு முறைக்கே  மீண்டும் மாறிவிட்டன.  

    கடந்த 2014ம் ஆண்டு  தேர்தலிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்தன.  அதேப்போல் இந்த தேர்தலிலும் மோசடி நடைபெற வாய்ப்புள்ளது. எனினும், இந்த தேர்தலில் தேசிய அளவில் பாஜக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இயலாது.

    இந்திய அரசியலமைப்பு சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலையே வலியுறுத்துகிறது. மேலும் தேர்தல் ஆணையம் நேர்மையுடனும், பாரபட்சம் இன்றியும் செயல்பட வேண்டும். பாஜகவிற்கு மக்கள் நிச்சயம் நல்ல பாடத்தை இந்த தேர்தலில் புகட்டுவார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறை 100 சதவீதம் நடைமுறைப்படுத்தப்படும்.  

    இவ்வாறு அவர் கூறினார். #Siddaramaiah #ElectionCommission 
    கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் தவறை காங்கிரஸ் கட்சி நிச்சயம் சுட்டிக்காட்டும் என கூறியுள்ளார். #LokSabhaElections2019 #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து கடந்த ஏப்ரல் 4ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று காலை கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    பிரதமர் மோடி, இந்தியாவில் காங்கிரஸின் எண்ணங்கள் முற்றிலும் அழிக்கப்படும் என கூறினார். இதற்கான பதிலாக காங்கிரஸ், மோடியிடம் என்ன கூறுகிறது என்றால், நாங்கள் உங்கள் எண்ணங்களுடன் ஒத்துப்போகவில்லை. உங்கள் தவறை சுட்டிக்காட்ட நிச்சயம் போராடுவோம்.   தேர்தலில் உங்களை தோற்கடிப்போம். ஆனால் உங்களுக்கு எதிராக எவ்வித வன்முறையிலும் ஈடுபடமாட்டோம்.

    நான் வட இந்தியாவின் அமேதி தொகுதியில் போட்டியிடுவது தான் வழக்கம். ஆனால் இம்முறை, கேரளாவில் இருந்து போராடுவேன் என தென் இந்திய மக்களுக்கு கூறவே போட்டியிடுகிறேன். மேலும் இந்தியாவை ஒரே கோணத்தில் பார்க்க இயலாது. இந்தியா ஒரே சிந்தனையை கொண்டு செயல்படவில்லை. இந்தியா பல்வேறு கோணங்களில், பலதரபட்ட பார்வைகளை கொண்டுள்ளது. இவை அனைத்தும் முக்கியமானவை ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #RahulGandhi

    வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுள் சொத்து மதிப்பு குறைவாக உள்ள ஏழை வேட்பாளகள் பற்றிய விவரங்களை பார்ப்போம். #LokSabhaElections2019 #Poorcandidates
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழகத்தைச் சேர்ந்த 31 ஏழை வேட்பாளர்கள் குறித்து தெரியவந்துள்ளது. கட்சிவாரியாக ஏழை வேட்பாளர்களின் பெயர்கள், போட்டியிடும் தொகுதி மற்றும் அவர்களின் சொத்து மதிப்பு வருமாறு:

    நாம் தமிழர் கட்சி:

    சிவரஞ்சனி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி ரூ. 15,000, மதிவாணன் தென்காசி தொகுதி - ரூ 21,000, மாலதி  நாகப்பட்டினம் தொகுதி – ரூ.1.19 லட்சம்,  பாண்டியம்மாள் மதுரை தொகுதி – ரூ.1.5 லட்சம்,  சாந்தி  பெரம்பலூர் தொகுதி- ரூ 1.11 லட்சம், சுபாஷினி மயிலாடுதுறை தொகுதி - ரூ 5.25 லட்சம்,  கல்யாணசுந்தரம் கோவை தொகுதி – ரூ.8.55 லட்சம், மணிமேகலை நீலகிரி தொகுதி – ரூ.9. 02 லட்சம், எம். சிவஜோதி சிதம்பரம் தொகுதி - ரூ 10.37 லட்சம், காளியம்மாள் வட சென்னை தொகுதி – ரூ.9.17 லட்சம்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள்

    வெற்றிச்செல்வி திருவள்ளூர் தொகுதி – ரூ.3.10 லட்சம், சனுஜா பொள்ளாச்சி தொகுதி - ரூ 5.5 லட்சம், சித்ரா  கடலூர் தொகுதி – ரூ.6.40 லட்சம்.
    தீபலட்சுமி  வேலூர் தொகுதி – ரூ.6.58 லட்சம்,  புவனேஷ்வரி ராமநாதபுரம் தொகுதி – ரூ.7 .93 லட்சம்,  பிரகலதா விழுப்புரம் தொகுதி – ரூ.12.53 லட்சம், ருக்மணி தேவி  தருமபுரி தொகுதி – ரூ.13.7 8 லட்சம், தமிழரசி ஆரணி தொகுதி – ரூ. 29.33 லட்சம், ஏ.ஜெ.ஷெரின்  தென் சென்னை தொகுதி – ரூ. 34.66 லட்சம், பாவேந்தன் அரக்கோணம் தொகுதி – ரூ. 35.20  லட்சம்.

    மக்கள் நீதி மய்யம்:

    அன்பின் பொய்யாமொழி விழுப்புரம் தொகுதி- ரூ.1.22 லட்சம், முனீஸ்வரன்  தென்காசி தொகுதி – ரூ.10.96 லட்சம்,  ஸ்ரீ காருண்யா சுப்பிரமணியம் கிருஷ்ணகிரி தொகுதி– ரூ. 20.1 லட்சம், அருள் திருவண்ணாமலை தொகுதி - ரூ.20.4 லட்சம், விஜயபாஸ்கர் ராமநாதபுரம் தொகுதி- ரூ. 26.36 லட்சம், பிரபு மணிகண்டன் சேலம் தொகுதி–ரூ. 27.5 லட்சம், ரவி சிதம்பரம் தொகுதி- ரூ. 28.54 லட்சம்.

    அமமுக:

    செங்கொடி நாகப்பட்டினம் தொகுதி – ரூ. 8.33 லட்சம்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:

     சு.வெங்கடேசன் மதுரை தொகுதி – ரூ.7.7 லட்சம்.

    பாமக:

    வடிவேல் ராவணன் விழுப்புரம் தொகுதி –ரூ. 19.25 லட்சம்.

    எஸ்டிபிஐ:

    தெகலான் பாகவி மத்திய சென்னை தொகுதி – ரூ.21.73 லட்சம்.
    ஆங்கிலேயர் ஆட்சிக்கும், உ.பி முதல்வர் ஆட்சிக்கும் வேறுபாடு கிடையாது என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். #YogiAdityanath #PChidambaram
    காரைக்குடி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 6 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    அந்த வகையில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி மீரட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், 'ஒரு நாளுக்கு முன்னர் மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணி மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது' என பேசினார்.



    இதையடுத்து தேர்தல் விதிகளை மீறி பேசியது தொடர்பாக   யோகி ஆதித்யநாத்க்கு அம்மாநில தேர்தல் ஆணையம், நோட்டீஸ் அனுப்பியிருந்தது. யோகி தரப்பில் எந்த பதிலும் இல்லை. இதனையடுத்து தேர்தல் ஆணையம், 16ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் அடுத்த 72 மணி நேரத்திற்கு யோகி ஆத்தியநாத் பிரசாரம் செய்யக்கூடாது என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இது குறித்து   முன்னாள் மத்திய நிதி மந்திரி  ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தன்னுடைய பேச்சால், தன்னுடைய நடவடிக்கையால் யோகி பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளுகிறார். ஆங்கிலேயர் ஆட்சிக்கும், உத்தரபிரதேசம் முதல்வர் ஆட்சிக்கும் வேறுபாடு கிடையாது. முதன்முறையாக ஒரு முதல்வருக்கு இது போன்ற தண்டனை கிடைத்திருக்கிறது. கொஞ்சம் தன்மானம் உள்ளவராக இருந்தால் உடனடியாக யோகி பதவியை விட்டு விலக வேண்டும்' என கூறினார். #YogiAdityanath #PChidambaram


    உத்தரபிரதேசம் மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் தேர்தல் விதிகளை மீறியதால், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. #ECNotice #ModelCodeofConduct
    புது டெல்லி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 6 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    அந்த வகையில் கடந்த ஏப்ரல் 7 மற்றும் ஏப்ரல் 9 ஆகிய தேதிகளில் உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ஆகியோர் சகரன்பூர் பகுதியில் உள்ள டியோபாண்ட் என்ற இடத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ஏப்ரல் 7ம் தேதி  மாயாவதி பேசுகையில் , 'முஸ்லிம் வாக்காளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் வாக்குகளை உறவினர்கள் என்பதாலோ, நண்பர்கள் என்பதாலோ பதிவிடக்கூடாது. உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காதீர்கள். அதற்கு பதிலாக மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள்.  இதனை முஸ்லிம் மக்களுக்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்' என பேசினார்.

    மாயாவதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி மீருட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், 'ஒரு நாளுக்கு முன்னர் மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணி மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்குபலி மீது நம்பிக்கை உள்ளது' என பேசினார்.



    இதையடுத்து தேர்தல் விதிகளை மீறி பேசியது தொடர்பாக   யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு அம்மாநில தேர்தல் ஆணையம், நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவர்கள் இருவரும்  24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் தரப்பில் எந்த பதிலும் அனுப்பப்படாததால், தேர்தல் ஆணையம் இன்று சாட்டையை சுழற்றியது.

    16ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் அடுத்த 72 மணி நேரத்திற்கு யோகி ஆத்தியநாத் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதேப்போல் முன்னாள் முதல்வர் மாயாவதியும் 16ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், பொதுக்கூட்டங்களில் பேசுவது மட்டுமின்றி தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தல், பத்திரிக்கை செய்தியாளர்களை சந்தித்தல் ஆகியவற்றிற்கும்  இந்த தடை பொருந்தும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  #ECNotice  #ModelCodeofConduct




    நடிகையும் பாஜக வேட்பாளருமான ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆசம் கானுக்கு , ஜெயப்பிரதா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். #AazamKhan #Jayaprada
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்களாக ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.

    ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில்,  தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும், ஆசம் கானின் கருத்து மிகவும் அருவருப்பான அவமானகரமான கருத்து என பாஜக செய்தித் தொடர்பாளர் சந்திர மோகனும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து ஆசம் கான் கூறிய சர்ச்சை கருத்து தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயப்பிரதா கூறியதாவது:

    இது போன்ற சர்ச்சை எனக்கு புதிதல்ல. ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு சமாஜ்வாடி  கட்சியில் வேட்பாளராக இருந்தேன். ஆனால் ஒருவர் கூட ஆசம் கூறியது தவறு என எதிர்த்தும்,  என்னை ஆதரித்தும் பேசவில்லை.  நான் ஒரு பெண்ணாக இருப்பதால் அவர் என்ன கூறினார் என்பதையும் சொல்ல இயலவில்லை. நான் ஆசமிற்கு என்ன செய்தேன்? ஏன் இவ்வாறு பேச வேண்டும்?



    ஆசம் நிச்சயமாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும். ஒரு வேளை அவர் வெற்றி பெற்றால் ஜனநாயகம் என்ன ஆகும்? என சிந்தியுங்கள். சமூகத்தில் பெண்களுக்கென இடமே கிடைக்காது. நாங்கள் உரிமைக்காக எங்கே போக வேண்டும்? நான் இறந்தால் நீங்கள் திருப்தியாக இருப்பீர்களா? இப்படி பேசியதால் நான் பயந்து ராம்பூரை விட்டு சென்றுவிடுவேன் என நீங்கள் நினைத்தால், நான் அவ்வாறு செய்யமாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #AazamKhan #Jayaprada
    முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும், தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதருமான ராகுல் டிராவிட் இந்த முறை தேர்தலில் வாக்களிக்க முடியாது என தெரிய வந்துள்ளது. #LokSabhaElections2019 #RahulDravid
    பெங்களூரு:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது கர்நாடகா மாநிலத்தில்  இந்திரா நகர் எனும் பகுதியில்  வசித்து வந்தார். அதன்பின்னர் இடம் மாறிய ராகுல், தற்போது சாந்தி நகர் பகுதியில் வசிக்கின்றார்.

    ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மாற்றம் செய்தால் அந்த இடத்தின் முகவரியை வாக்காளர், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது வழக்கம். ஆனால் ராகுல் அவ்வாறு செய்யவில்லை.



    இதையடுத்து தேர்தல் ஆணைத்தின் சார்பில் அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு இது குறித்து விசாரிக்க 2 முறை   நேரடியாக சென்றுள்ளனர்.  ஆனால்  ராகுல் வெளிநாடு சென்றிருந்ததால்  வீட்டில் நுழைய அனுமதி தரப்படவில்லை.அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

    ராகுல் ஸ்பெயினில் இருந்தார். வாக்களிக்க வேண்டி கர்நாடகா வருவதற்கு ஆர்வத்துடன் இருந்தார்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுவிட்டது.

    இது குறித்து சிறப்பு தேர்தல் தலைமை அதிகாரி ரமேஷ் கூறுகையில்,  ‘வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க கடந்த மார்ச் 16ம் தேதிக்குள் படிவம் 6 சமர்ப்பித்திருக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்காவிட்டால் எதுவும் செய்ய முடியாது. ராகுல் சமர்ப்பிக்க தவறிவிட்டார். எனவே அவரது பெயர் நீக்கப்பட்டது’ என கூறினார்.

    கர்நாடகா மாநிலத்தில்  தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக ராகுல் டிராவிட் இருப்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #RahulDravid
    ×