search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lok Sabha Elections Results 2019"

    தமிழகத்தில் பா.ஜ.க. தோல்வியடைய காரணம் என்ன? என்பது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்தார்.
    தூத்துக்குடி:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி பெரியநாயகபுரத்தில் உள்ள தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த சில ஆண்டுகளாக நல்ல திட்டங்களையும் தவறான திட்டங்களாக முன்னிறுத்தி அது மிக அதிகளவில் பிரசாரங்களாக முன்னெடுத்து செல்லப்பட்டு, இன்று தமிழக மக்கள் அதற்கு செவிசாய்த்து வாக்குகளை கொடுத்து இருக்கிறார்கள். தூத்துக்குடியில் இந்த பகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தான் வேட்பாளராக இங்கு வந்தேன். இந்த பகுதி மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன்.

    எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்களும் பயன்பெறும் வகையில் தூத்துக்குடியில் எனது மக்கள் பணி தொடரும். கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கடந்த கால அரசியலை கொண்டு பார்க்கும்போது, மக்கள் தேர்ந்தெடுத்தவர் ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர் என்பதை மறந்து விடக் கூடாது. எது எப்படி இருந்தாலும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை வாழ்த்துகிறேன். மக்கள் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். தமிழகம், கேரளாவில் தோல்விக்கான காரணம் தொடர் எதிர் பிரசாரம்தான். பிரதமர் மோடிக்கு பாரத தேசம் முழுவதும் வரவேற்பு இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பை காண்பிக்க வேண்டும் என்று எதிர்ப்பை காண்பித்தனர். நல்ல திட்டங்களை மற்ற மாநில மக்கள் ஏற்றுக்கொண்டனர். அதே நல்ல திட்டங்கள் தமிழகத்தில் தவறான திட்டங்களாக முன்னெடுத்து செல்லப்பட்டது.

    நாங்கள் தமிழகத்தில் வெற்றி பெறவில்லை என்று ஆதங்கம் இல்லை. ஆனால் உரிமையுடன் தமிழகத்தில் பல திட்டங்களை கொண்டு வரலாம் என நினைத்து இருந்து தற்போது அது முடியாமல் போனது தான் எங்களுக்கு கவலை. அதே நேரத்தில் இடைத்தேர்தலில் எங்களின் கூட்டணி கட்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்.



    தற்போது மு.க.ஸ்டாலின் பெற்றிருப்பது மிகப்பெரிய வெற்றி இல்லை. தமிழகத்தில் பா.ஜனதா-அ.தி.மு.க. வெற்றி பெற்றிருந்தால் தமிழகம் இன்னும் அதிகம் பலனடைந்து இருக்கும். மு.க.ஸ்டாலின் வெற்றி தமிழகத்திற்கு எந்தவிதத்திலும் பலன் இல்லாத வெற்றி. வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். வரும் காலத்தில் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தொடர முடியுமா என்ற சூழ்நிலை உருவாகும். பின்னால் அது மு.க.ஸ்டாலினுக்கு தலைவலியாக மாறும். மு.க.ஸ்டாலினால் வெளிநடப்பை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

    தமிழக மக்கள் நிச்சயம் வருந்துவார்கள். தமிழக மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்ளும் காலம் மிக விரைவில் வரும். அதற்காக நாங்கள் இன்னும் கடுமையாக உழைப்போம். நாங்கள் தமிழக மக்களால் புறக்கணிக்கப்படவில்லை. இன்னும் அதிக கவனம் பெற வேண்டும் என்ற எச்சரிக்கையை பெற்றுள்ளோம். கர்நாடகா, மத்தியபிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    என் கன்னத்தில் அறை விழுந்துள்ளது. எனினும் எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருப்பேன். மதசார்பற்ற இந்தியாவுக்கான போராட்டத்தை தொடர்வேன் என்று பிரகாஷ்ராஜ் கூறி உள்ளார்.
    பெங்களூரு:

    தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ் சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக எதிர்த்து வந்தார். பணமதிப்பிழப்பையும், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்துத்துவா அமைப்புகளை தொடர்புபடுத்தியும் விமர்சித்தார்.



    கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்தார். பிரகாஷ்ராஜை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் பிரவேசத்தை தொடங்கிய நிலையில் பிரகாஷ்ராஜும் அரசியலில் குதித்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் களம் இறங்கினார். வீதிவீதியாக தீவிர பிரசாரமும் செய்தார். ஆனாலும் சினிமா நட்சத்திர அந்தஸ்து அவருக்கு கைகொடுக்கவில்லை. தோல்வி அடைந்துள்ளார்.

    இதுகுறித்து பிரகாஷ்ராஜ் டுவிட்டரில், “என் கன்னத்தில் அறை விழுந்துள்ளது. மேலும் கேலி, இழிவான சொற்கள், அவமானங்கள் எனது பாதையில் வருகின்றன. எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருப்பேன். மதசார்பற்ற இந்தியாவுக்கான போராட்டத்தை தொடர்வேன். இப்போதுதான் கடுமையான பயணம் ஆரம்பித்து உள்ளது. பயணத்தில் என்னோடு இருந்தவர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
    பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பாஜகவுக்கும், நரேந்திர மோடிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மாபெரும் வெற்றியை தன் வசப்படுத்திய பா.ஜ.க.வுக்கும், நரேந்திரமோடிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    டாக்டர் ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்):-

    வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாக 2-வது முறையாக இந்தியாவின் பிரதமராக நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தவேண்டும். நரேந்திர மோடி தலைமையில் வளமான, வலிமையான நாடாக இந்திய உருவெடுக்கும் என்று நம்புகிறேன்.

    விஜயகாந்த் (தே.மு.தி.க. தலைவர்):-

    பாராளுமன்ற தேர்தலில் தனிபெரும்பான்மையோடு 2-ம் முறை பாரத பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு தே.மு.தி.க. சார்பில் எனது இதயமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.



    ஜி.கே.வாசன் (த.மா.கா. தலைவர்):-

    பா.ஜ.க. அரசில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி ஆட்சியில் அமரப்போவது, ஒட்டுமொத்த இந்தியாவின் வருங்கால வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் உறுதி ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியும், பா.ஜ.க.வின் பெரும்பான்மையும் நரேந்திர மோடி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.

    ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி தலைவர்):-

    நரேந்திரமோடியின் உழைப்புக்கு மாபெரும் வெற்றி கிடைத்திருக்கிறது. மக்கள் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு கிடைத்துள்ள வெற்றியாகும். 5 ஆண்டு கால சாதனைகள் மூலம் மக்களின் இதயங்களை வென்று, 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்):-

    பா.ஜ.க.வின் அமோக வெற்றி இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. மக்களின் பேராதரவோடு மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்க இருக்கும் நரேந்திர மோடியின் பொற்கால ஆட்சியில் நாடு வல்லரசாக மாறி சாதனை படைக்க வேண்டும்.

    நிலையான அரசு அமைய தெளிவான தீர்ப்பு வழங்கிய மக்களுக்கு வாழ்த்துகள் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    நிலையான அரசு அமைவதற்காக தெளிவான தீர்ப்பை வழங்கிய மக்களை வாழ்த்துவதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நிலையான அரசு அமைவதற்கு தெளிவான, திட்டவட்டமான தீர்ப்பை தேர்தலில் வழங்கிய இந்திய மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். அதேபோல, இந்த தேர்தலை திறம்படவும், சுமுகமாகவும் நடத்தியமைக்காக இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் நம்பிக்கையை பெற்று இந்த தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.



    எந்த கட்சியை சார்ந்திருந்தாலும் செழுமைமிக்க ஜனநாயக பாரம்பரியத்தின் அடிப்படையை மேலும் ஆழமாக்கி வளர்ச்சி, சீர்திருத்தம் மக்களின் வாழ்வில் மேம்பாடு ஆகிய லட்சியங்களை நிறைவேற்ற ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் ‘மோடி வெற்றி பெற்றிருக்கிறார், இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்து உள்ளார்.
    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெற்று இருக்கிறது. 40-க்கு 40 வெற்றி என்றோம், ஏறக்குறைய அதை செய்திருக்கிறோம். இந்த தேர்தல் 2 சித்தாந்தங்களுக்கு இடையேயான தேர்தல். மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற ஒரு சித்தாந்தமும், மக்களை பிரித்து வைத்து ஆளும் ஒரு சித்தாந்தமும் போட்டியிட்டது.

    விந்திய மலைக்கு தெற்கே உள்ள மக்கள் ஒற்றுமையாக தேசத்தை பாதுகாக்க வாக்களித்து உள்ளனர். ஆனால் அந்த உணர்வு விந்திய மலைக்கு மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு இல்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த தேர்தலில், ‘மோடி வெற்றி பெற்றிருக்கிறார், இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது’, இதைத்தவிர சொல்வதற்கு எதுவும் இல்லை.



    ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி இயல்பானது. ஆனாலும் தவறான கொள்கை வெற்றி பெற்றுள்ளதே என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள் கிறோம். அ.தி.மு.க. தவறான சித்தாந்தத்தின் அடிப்படையில் பா.ஜ.க.வுடன் சென்றார்கள். பா.ம.க. உள்பட அவர்களுடன் கூட்டு சேர்ந்த அனைவருமே தவறான முடிவு எடுத்தார்கள். அதற்கான தண்டனையை பெற்றிருக்கிறார்கள். தென்னிந்திய மக்கள் பா.ஜ.க.வை ஏற்கமாட்டார்கள் என்ற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாமல் அவர்கள் ஏற்றுக்கொண்ட கூட்டணி தலைமை, அவர்களை படுகுழியில் தள்ளியிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத், ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    முன்னதாக தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றதை கொண்டாடும் விதமாக பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.
    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிப் பெற்றுள்ளதையொட்டி பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றிப் பெற்றுள்ளது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ‘டுவிட்டரில்’ ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-



    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி பெற்ற வெற்றிக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர், ஜனநாயகம் மற்றும் அனைத்தும் உள்ளடங்கிய கொள்கையின் அடிப்படையில் ஒரு முற்போக்கான அரசாங்கத்தை வழங்குவார் என்று நம்புகிறோம். விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் பாஜக 18 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.
    பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் கூறியதுபோல் பா.ஜனதா கூட்டணி 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.



    மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தின்போது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கும் பா.ஜனதா தலைவர்களான அமித் ஷா, பிரதமர் மோடிக்கும் இடையில் கடுமையான வார்த்தை போர் நடைபெற்றன.

    கடந்த முறை 2 இடங்கள் மட்டுமே பிடித்திருந்த பா.ஜனதா இரட்டை இலக்க இடங்களை பிடிக்க தீவிரம் காட்டியது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பா.ஜனதா கடும் சவாலாக விளங்கியது.

    42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பா.ஜனதா முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த முறை 34 இடங்கள் பிடித்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் 23 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது.
    அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடி பிரதமர் பதவியில் நீடிப்பது உறுதியாகி உள்ள நிலையில், காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் தலைவர் மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடரப்போவது இதுவே முதல் முறையாகும்.
    புதுடெல்லி:

    இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக பல ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்துள்ளது.

    இந்திராகாந்தி ஆட்சியின்போது தான் முதல் முதலாக ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்து காங்கிரசின் தொடர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

    அதன் பிறகு காங்கிரசுக்கு எதிராக வலிமையான கட்சி உருவாகாமல் இருந்தது. இந்த நிலையில் வாஜ்பாய் தலைமையில் பா.ஜனதா கட்சி மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்தது.



    மத்தியில் காங்கிரசை வீழ்த்திய வாஜ்பாய் 5 ஆண்டுகள் முழுமையான ஆட்சியை கொடுத்தார். அவர் 2 தடவை பிரதமர் பதவியை ஏற்றார். ஆனால் குறைந்த ஆண்டுகள்தான் அவரால் மத்தியில் ஆட்சி செய்ய முடிந்தது.

    இந்த நிலையில் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு கடந்த 2014-ம்ஆண்டு பிரதமர் மோடி முடிவுரை எழுதினார். 2019 வரை 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்த மோடி மீண்டும் தற்போது வெற்றி பெற்று இருக்கிறார்.

    இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடி பிரதமர் பதவி வகிப்பது உறுதியாகி இருக்கிறது. காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் தலைவர் மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடரப்போவது இதுவே முதல் முறையாகும்.

    அந்த வகையில் மோடி இந்திய அரசியலில் காங்கிரசுக்கு எதிராக புதிய சாதனையை உருவாக்கி இருக்கிறார்.

    கரூர் தொகுதியில் துணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்தங்கிய நிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தில் இருக்கிறது.
    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னணியில் இருந்து வருகின்றனர். கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 401 வாக்குகள் பெற்றுள்ளார்.



    அதிமுக வேட்பாளரான துணை சபாநாயகர் எம். தம்பிதுரை 55491 வாக்குகளே பெற்றுள்ளார். ஜோதிமணி 79910 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் 7724 வாக்குகள் பெற்றுள்ளது.
    கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி ராகுல்காந்தி ஒரு லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் வயநாடு தொகுதியில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டார். இத்தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது ஆரம்பம் முதலே ராகுல்காந்தி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.

    காலை 11 மணி நிலவரப்படி ராகுல்காந்தி ஒரு லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருந்தார்.

    அவருக்கு அடுத்தப்படியாக கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் சுனிர் 71 ஆயிரம் வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் இருந்தார்.



    பா.ஜனதா கூட்டணி சார்பில் இங்கு போட்டியிட்ட துஷார் வெள்ளாப்பள்ளி 20 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    பாராளுமன்ற தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றிருந்ததையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் திரண்ட திமுக தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.
    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் முன்னணி நிலவரங்கள் காலை 9 மணி அளவில் வெளிவர தொடங்கின. இதில் தி.மு.க. பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது.

    இதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் திரண்ட திமுக தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். கருணாநிதி வாழ்க, மு.க.ஸ்டாலின் வாழ்க என்று முழக்கமிட்டனர்.

    உற்சாக குரல் எழுப்பி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நேரம் ஆக ஆக தொண்டர்கள் கூட்டம் அதிகமானது. திமுக வெற்றியை அனைவரும் கொண்டாடினார்கள்.

    வெற்றி செய்தி காரணமாக அறிவாலயத்தில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அங்கு உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    அறிவாலயம் களை கட்டியது. தொண்டர்கள் இனிப்பு வழங்கி உற்சாகத்துடன் துள்ளிக்குதித்தனர்.




    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை முன்னணியில் உள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அக்ரிகிருஷ்ணமூர்த்தி போட்டியிட்டார்.

    தி.மு.க. வேட்பாளராக சி.என்.அண்ணாதுரை, அ.ம.மு.க. வேட்பாளராக ஞானசேகரன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக அருள், நாம் தமிழர் வேட்பாளராக ரமேஷ்பாபு போட்டியிட்டனர்.

    திருவண்ணாமலை தொகுதியில் மொத்தம் 14,70,203 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11,43,570 ஓட்டுகள் பதிவானது. இது 77.78 சதவீதமாகும்.

    சி.என்.அண்ணாதுரை

    (தி.மு.க.)- 32,683

    (அ.தி.மு.க.)- 19,618

    13,065 ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை முன்னணியில் உள்ளார்.
    ×