
கேரளாவின் வயநாடு தொகுதியில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டார். இத்தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது ஆரம்பம் முதலே ராகுல்காந்தி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.
காலை 11 மணி நிலவரப்படி ராகுல்காந்தி ஒரு லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருந்தார்.

பா.ஜனதா கூட்டணி சார்பில் இங்கு போட்டியிட்ட துஷார் வெள்ளாப்பள்ளி 20 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.