search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kolkatta"

    கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, மத்தியில் ஆட்சியை மாற்றுவோம் என வலியுறுத்தினார். #Mamata #AntiBJPRally
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தா நகரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல மாநிலங்களில் உள்ள 22 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினர். 
     
    இந்த கூட்டத்தில் மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:

    பாஜக ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து வருகிறது. மோடி அரசின் காலாவதி தேதி முடிந்து விட்டது. மோடி அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. மோடி அரசு நாட்டை அழித்துவிட்டது.

    மோடி ஆட்சியின் முடிவுக்கான நாட்கள் நெருங்கி வருகிறது. புதிய விடியல் வர உள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்திருப்போம், இது உறுதி. நாட்டின் தேவையைக் கருதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
     


    பாஜகவை அகற்றுவதே எங்கள் நோக்கம். தேர்தலுக்கு பின் பிரதமர் குறித்து முடிவெடுப்போம். மத்தியில் ஆட்சியை மாற்றுவோம்.

    மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு பாஜக உரிய மதிப்பு அளிப்பதில்லை என தெரிவித்தார்.  

    இந்த கூட்டத்தில் பேசிய டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடியும் அமித்ஷாவும் வெற்றி பெற்று வந்தால் சர்வாதிகாரி ஹிட்லர் பாணியில் இந்த நாட்டை நாசப்படுத்தி விடுவார்கள் என குறிப்பிட்டார். #Mamata #AntiBJPRally
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்துள்ளதால் பாஜகவுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். #Mamata #AntiBJPRally #AkhileshYadav
    கொல்கத்தா:
        
    கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

    பாராளுமன்ற தேர்தலுக்காக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது பாஜவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.



    நாங்கள் இருவரும் அமைத்துள்ள கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அங்கு ஒரு இடத்திலாவது வெற்றி பெற வேண்டும் என பாஜக திட்டமிட்டு வருகிறது.

    எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என பாஜகவினர் கேட்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி நாட்டு மக்களை ஏமாற்றி விட்டார். அவருக்கு பதிலாக நாட்டுக்கு ஒரு பிரதமரை உங்களால் காட்ட முடியுமா? எங்கள் கூட்டணியில் யார் பிரதமர் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள் என தெரிவித்தார். #Mamata #AntiBJPRally #AkhileshYadav
    கொல்கத்தாவில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் மெகா பேரணி பாஜக ஆட்சிக்கு சாவுமணியாக இருக்கும் என மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #MamataBanarjee #OppositionRally
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் மம்தா பானர்ஜி. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை மறுதினம் கொல்கத்தாவில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இதில் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    மம்தாவின் அழைப்பை ஏற்று இந்த பேரணியில் சரத் யாதவ், ஸ்டாலின், பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஹஸ்வி யாதவ், சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால், குமாரசாமி, உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்கிறார்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, நாளை மறுதினம் நடைபெறவுள்ள பேரணி பாஜக ஆட்சிக்கு சாவுமணியாக இருக்கும். பா.ஜ.க 125 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கவில்லை. காங்கிரசை பற்றி தெரியவில்லை. பிராந்திய கட்சிகள் முடிவு எடுப்பதாக இருக்கும். பிராந்திய கட்சிகள் இரு கட்சிகளை விடவும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவித்தார். #MamataBanarjee #OppositionRally
    மேற்கு வங்காளத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய குஜராத் தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி, சாதிவாரி இட ஒதுக்கீட்டை நீக்குவதே ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வின் முக்கிய நோக்கம் என தெரிவித்தார். #10pcreservation #JigneshMewani
    கொல்கத்தா:

    பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கும் பொதுப்பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.

    இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குஜராத்தை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ.வும், தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:



    எஸ்.சி - எஸ்.டி மற்றும் ஓபிசி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை நீக்குவதே ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவின் முக்கிய நோக்கம். அதற்கான முதல் படியாகவே பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் அமைத்துள்ள கூட்டணியை வரவேற்கிறேன். பாஜகவுக்கு எதிராக மாநிலத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #10pcreservation #JigneshMewani
    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. #CBI #NaliniChidambaram #Chargesheet
    கொல்கத்தா:

    கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். 

    இதுதொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இதற்கிடையே, ரூ. 42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.26 கோடி கட்டணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி உள்ளன.

    இந்நிலையில் சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது. #CBI #NaliniChidambaram #Chargesheet
    அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி நடைபெறவுள்ள மெகா பேரணி முக்கிய திருப்பு முனையாக இருக்கும் என மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #MamataBanarjee #BrigadeRally
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் மம்தா பானர்ஜி. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அடுத்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி கொல்கத்தாவில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இதில் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    இதற்காக அவர் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேரணியில் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் மம்தா பானர்ஜி இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி நடைபெறவுள்ள மெகா பேரணி முக்கிய திருப்பு முனையாக இருக்கும் என தெரிவித்தார்.

    மேலும், மெகா பேரணிக்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்கும்படி கட்சி நிர்வாகிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார். #MamataBanarjee #BrigadeRally
    கொல்கத்தாவில் புல்வெளியில் எடுக்கப்பட்டது பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் கிடையாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். #KolkataInfantsBodies
    கொல்கத்தா:
     
    தெற்கு கொல்கத்தா நகரின் ஹரிதேப்பூர் பகுதியில் ஒரு ரியல் எஸ்ட்ட நிறுவனம் அண்மையில் வாங்கிய காலி மனை பகுதியில் தூய்மை பணி நடந்தது.

    அப்போது அங்கிருந்த புல்வெளிக்குள் ஆங்காங்கே 14 பிளாஸ்டிக் பைகள் சிதறிக் கிடந்தன. அவற்றை பணியாளர்கள் பிரித்து பார்த்தபோது துர்நாற்றம் வீசியது. அந்த பைகளுக்குள் 14 பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    தகவலறிந்த போலீசார் அங்கு சென்று குழந்தைகள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுபற்றி கொல்கத்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கொல்கத்தா புல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் கிடையாது. மனித உடல்கள் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. அவை வெறும் மருத்துவ கழிவுகள் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். #KolkataInfantsBodies
    கொல்கத்தாவில் வரும் 11-ம் தேதி பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளவுள்ள பேரணிக்கு அனுமதி அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #AmitShah
    கொல்கத்தா:

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்கும் வகையில் பாஜக திட்டமிட்டு தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகிறது. #BJP #AmitShah

    அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாஜக சார்பில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் வரும் 11-ம் தேதி பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளவுள்ள பேரணிக்கு அனுமதி அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே, மேற்கு வங்காள அரசின் அனுமதி இல்லாவிட்டாலும் நான் கொல்கத்தா செல்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பாஜக தலைவர் அமித் ஷா இன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #BJP #AmitShah
    மேற்கு வங்காள அரசின் அனுமதி இல்லாவிட்டாலும் நான் கொல்கத்தா செல்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #AmitShah
    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்கும் வகையில் பாஜக திட்டமிட்டு தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாஜக சார்பில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    இதற்கிடையே,  நேற்று முன்தினம் அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பான அறிக்கை வெளியானது. இது குறித்து மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், இந்த அறிக்கையால் உள்நாட்டு போர் வெடிக்கும் எனக்கூறி அதிர்ச்சி அளித்தார். இதுதொடர்பாக பாஜக தலைவர்களை கடுமையாக சாடினார். 

    இந்நிலையில், மேற்கு வங்காள அரசின் அனுமதி இல்லாவிட்டாலும் நான் கொல்கத்தா செல்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பாஜக தலைவர் அமித் ஷா இன்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் வரும் 11-ம் தேதி பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ள பேரணியில் பங்கேற்க செல்லவுள்ளேன். மாநில அரசு அனுமதி தராவிட்டாலும் நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என ஆவேசமாக தெரிவித்துள்ளார். #AmitShah
    முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் சோமநாத் சட்டர்ஜி மூளையில் ஏற்பட்ட ரத்தக்குழாய் அடைப்பால் கவலைக்கிடமாக உள்ளார். இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். #FormerLSSpeaker #SomnathChatterjee
    கொல்கத்தா:

    கடந்த 2004-ம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தின் மக்களவை  சபாநாயகராக பதவி வகித்தவர் சோமநாத் சட்டர்ஜி (89) . கடந்த 25-ம் தேதி இவருக்கு மூளையில் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் வசித்து வரும் அவருக்கு நேற்று இரவு மீண்டும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து, அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். #FormerLSSpeaker #SomnathChatterjee 
    மேற்கு வங்காளத்தில் சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு தவறான ரத்த வகையை செலுத்தி சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #ColumbiaAsiaHospital #InfusingWrongBlood #PoliceFilesCase
    கொல்கத்தா

    கொல்கத்தாவை சேர்ந்தவர் பைசாகி சஹா (31). இவர் வயிற்று வலியால் கடும் அவதிப்பட்டார். இதையடுத்து, அவரது கணவர் கொலம்பியா மருத்துவமனையில் கடந்த 5-ம் தேதி சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு நடந்த ஆபரேஷனின்போது ரத்த வகையை மாற்றி செலுத்தி உள்ளதால், அவரது நுரையீரல், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் அவர் தற்போது எமர்ஜென்சி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.



    இதுதொடர்பாக, அவரது கணவர் அபிஜித் சஹா கூறுகையில், கடந்த 5-ம் தேதி எனது மனைவியை மருத்துவமனையில் சேர்த்தேன். அவருக்கு ரத்த வகையை மாற்றி ஆபரேஷன் செய்துள்ளனர். அதனால் எனது மனைவி கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளார். இதுவரை நான் 2.5 லட்சம் பணம் கட்டியுள்ளேன். ஆனால், மருத்துவமனை நிர்வாகத்தினர் பில் கட்டினால் தான் சிகிச்சை அளிப்போம் என தெரிவிக்கின்றனர். இதுகுறித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதில் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளேன் என்றார்.

    இதையடுத்து, அவர் கொடுத்த புகாரின் பேரில் பிதான் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, மருத்துவமனை நிர்வாக அதிகாரி தீர்த்தங்கர் பாகி  கூறுகையில், பைசாகி சஹாவுக்கு உரிய சிகிச்சை அளித்து வருகிறோம். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். மருத்துவ குழுவினர் அவரை கண்காணித்து வருகின்றனர். அவரது கணவர் கூறியவாறு, அவரிடம் யாரும் பணம் கேட்டு நிர்ப்பந்தம் செய்வதில்லை. அப்படி யாராவது செய்திருந்தால் அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.  #ColumbiaAsiaHospital #InfusingWrongBlood #PoliceFilesCase
    ×