search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாவுமணி"

    கொல்கத்தாவில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் மெகா பேரணி பாஜக ஆட்சிக்கு சாவுமணியாக இருக்கும் என மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #MamataBanarjee #OppositionRally
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் மம்தா பானர்ஜி. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை மறுதினம் கொல்கத்தாவில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இதில் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    மம்தாவின் அழைப்பை ஏற்று இந்த பேரணியில் சரத் யாதவ், ஸ்டாலின், பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஹஸ்வி யாதவ், சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால், குமாரசாமி, உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்கிறார்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, நாளை மறுதினம் நடைபெறவுள்ள பேரணி பாஜக ஆட்சிக்கு சாவுமணியாக இருக்கும். பா.ஜ.க 125 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கவில்லை. காங்கிரசை பற்றி தெரியவில்லை. பிராந்திய கட்சிகள் முடிவு எடுப்பதாக இருக்கும். பிராந்திய கட்சிகள் இரு கட்சிகளை விடவும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவித்தார். #MamataBanarjee #OppositionRally
    ×