search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்கத்தா"

    • மும்பை - தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடந்த ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் விளையாடினார்
    • அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் 95 ரன்கள் எடுத்தார்

    இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்ற 2-வது தேசிய போட்டியின் போது முதுகு வலி ஏற்பட்டதாக ஷ்ரேயாஸ் ஐயர் தொடரின் மீதமுள்ள 3 போட்டிகளில் இருந்து விலகினார்.

    பின்னர், மும்பை - தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடந்த ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் விளையாடினார். அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் 95 ரன்கள் எடுத்தார்.

    அதன் பிறகு, ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் மும்பை - விதர்பா அணிகள் மோதின. அப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    அப்போட்டியின் 4 மற்றும் 5-ம் நாட்களில், முதுகு வலி காரணமாக ஷ்ரேயாஸ் விளையாடவில்லை. முதுகு வலி காரணமாக கடந்த ஆண்டு அவர் அறுவை சிகிக்சை செய்திருந்தார்.

    இந்நிலையில், முதுகு வலி காரணமாக வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ், முதல் சில போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இது கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
    • கடந்த சீசனில் அந்த அணிக்காக ரூ. 2.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர், 9 போட்டிகளில் விளையாடி 218 ரன்களை எடுத்திருந்தார்.

    ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து அதிரடி வீரர் ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த சீசனில் அந்த அணிக்காக ரூ. 2.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர், 9 போட்டிகளில் விளையாடி 218 ரன்களை எடுத்திருந்தார்.

    ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஜேசன் ராய் விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தொடரிலிருந்து விலகிய ஜேசன் ராய்க்கு பதிலாக இங்கிலாந்து அதிரடி வீரர் பில் சால்ட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய மதிப்பில் ரூ.1.50 கோடிக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய பில் சால்ட், சரியாக விளையாடாத காரணத்தால் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார். அதன்பின் நடந்து முடிந்த வீரர்கள் மினி ஏலத்திலும் அவரை எந்த அணியும் ஏலம் கேட்க முன்வரவில்லை. அதிலும் குறிப்பாக, அவர் ஏலத்தில் எடுக்கப்படாத சில தினங்களுக்கு முன்புதான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடுத்தடுத்து சதங்களை விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பில் சால்ட்டை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் பில் சால்ட் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 21 போட்டிகளில் விளையாடி 2 சதம், 2 அரைசதங்களுடன், 639 ரன்களை எடுத்துள்ளார். மேலும். ஐ.சி.சி. டி20 தரவரிசையில் நம்பர் 2 டி20 பேட்ஸ்மேனாக அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள, அமலாக்கத் துறையின் செயல் இயக்குநர் கொல்கத்தா விரைந்தார்.
    • மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போசை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    ரேஷன் விநியோக ஊழல் வழக்கு தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், வடக்கு 24 பர்கான்ஸ் மாவட்டத்தில் உள்ள பங்கான் நகராட்சியின் முன்னாள் தலைவருமான சங்கர் ஆதியாவிடம் விசாரணை நடத்த கடந்த 5ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது, அவர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 அதிகாரிகள் காயமடைந்தனர்.

    இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை செயல் இயக்குநர் ராகுல் நவீன் கொல்கத்தா விரைந்துள்ளார். நள்ளிரவில் கொல்கத்தா விரைந்த ராகுல் ரவீன் -க்கு துணை ராணுவ படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக கொல்கத்தா சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அமலாக்கத்துறையின் விசாரணையில் உள்ள இதர வழக்குகளையும் விசாரிப்பார் என கூறப்படுகிறது.

    அதனைத்தொடர்ந்து, தாக்குதலால் காயமடைந்த அமலாக்கத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போசை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மேற்கு வங்காளம் மாநிலம் டம் டம் மத்திய சிறைச்சாலையில் உள்ள தனது காதலனுக்காக ஹெராயின் கடத்திய கல்லூரி மாணவியை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் பரசாத் பகுதியைச் சேர்ந்தவர் சுஷ்மிதா மாலாகர்(22). கல்லூரியில் பயின்று வரும் இவர் பாகிராத் சர்கார் என்பவரை காதலித்து வருகிறார். சர்கார் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு டம் டம் மத்திய சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், நேற்று மாலை சர்காரை பார்ப்பதற்கு சுஷ்மிதா சென்றார். அப்போது தனது காதலனுக்கு கொடுப்பதற்காக ஹெராயினை கொண்டு சென்றார். அவரை சோதனை செய்த போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவர் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுபோன்று பல முறை நடத்தப்பட்ட சோதனைகளில் சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள், செல்போன் மற்றும் சமையல் பொருட்கள் கடத்திச் செல்ல முயன்றவர்கள் கைது செய்யப்படுவர். ஆனால், தனது காதலனுக்கு ஒரு கல்லூரி மாணவி ஹெராயின் கடத்திச் சென்றது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×