search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "June"

    • 28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

     28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. படக்குழுவினர் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். சமீபத்தில் நடந்த சென்னை ஐ.பி.எல் போட்டியில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்தியன் 2 ப்ரோமோஷனுக்காக கலந்துக் கொண்டனர்.

    திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான 'பாரா' பாடலின் ப்ரோமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். முழு பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இப்பாடலிற்கு எழுத்தாளர் பா.விஜய் வரிகள் எழுதியுள்ளார்.

    படத்தின் முதல் பாகம் போலவே இப்படமும் வெற்றிப்பெரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதைதொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் . 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

     28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் . 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தியன் இரண்டாம் பாகத்தை குறித்து சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

    திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் மே 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் குதிரையில் சில் அவுட் ஷாட்டில் கமல்ஹாசன் வருகிறார். இந்த அறிக்கையினால் ரசிகர்கள் மிகவும் கொண்டாடத்தில் இருக்கின்றனர். படத்தின் முதல் பாகம் போலவே இப்படமும் வெற்றிப்பெரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதைதொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உல்லு ஓடிடி தளத்தை 2018 ஆம் ஆண்டு விபு அகர்வால் தொடங்கினார்.
    • நிபு அகர்வால் தற்பொழுது அடுத்ததாக 'ஹரி ஓம்' என்ற ஓடிடி தளத்தை தொடங்கியுள்ளார்.

    உல்லு ஓடிடி தளத்தை 2018 ஆம் ஆண்டு விபு அகர்வால் தொடங்கினார். பிரதியேகமான அடல்ட் தொடர்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் ஓடிடி தளமாக இது நிலவி வருகிறது.

    நிபு அகர்வால் தற்பொழுது அடுத்ததாக 'ஹரி ஓம்' என்ற ஓடிடி தளத்தை தொடங்கியுள்ளார். இது இதிகாச கதைகளும், புராண கதைகளும் , இந்திய வரலாரும் இதில் ஒளிப்பரப்ப போவதாக கூறியுள்ளார். இந்த ஓடிடி தளத்தில் வெறும் U ரேடட் கண்டண்டுகளை மட்டுமே ஒளிப்பரப்ப போவதாகவும் இது உல்லு தளத்திலிருந்து முற்றிலும் மாறுப்பட்டவை என கூறியுள்ளார்.

    ஹரி ஓம் இந்திய பாரம்பரியம் மற்றும் மத உள்ளடக்கத்தை அனுபவிப்பதற்கான ஒரு இடமாகும், மேலும் இது போன்ற கருப்பொருள்கள் மீது இளைய பார்வையாளர்களிடையே உலகளாவிய ஆர்வத்தை அதிகரிக்கும், இது இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் கதைகளை ஆராயும் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    ஹரி ஓம் தளம் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். முதற்கட்டமாக 20 புராண நிகழ்ச்சியை வைத்து தொடங்க போகிறார்கள். குழந்தைகளுக்கு அனிமேஷன் வடிவில் புராண நிகழ்ச்சிகள் இடம் பெறும் என தெரிவித்துள்ளனர்.

    உல்லு போன்ற அடல்ட் வீடியோக்களை தயாரிக்கும் அதே நிறுவனம் இப்படி ஒரு ஆன்மீக தளத்தை தொடங்குவது மகக்ளிடையே அதிர்ச்சியையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது. இதனால் நெட்டிசன்கள் உல்லு நிறுவனத்தை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தை பகிர்ந்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார். தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.
    • படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு சூது கவ்வும் படம் வெளியானது. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. சூது கவ்வும் 2 என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

    படத்தின் டிரெயிலர் மற்றும் பாடல்கள் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி எப்பொழுதும் நல்ல இயக்குனர்களையும் , நல்ல படைப்புகளையும் பாராட்டுவது அவரின் இயல்பு. அதேப் போல் இயக்குனர் எம்.எஸ் அர்ஜூன் மற்றும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் தில்லை நேற்று அவரது அலுவலகத்திற்கு சென்று படம் வெளியாவதையொட்டி வாழ்த்துகளை பெற்றனர்.

    இயக்குனர் எம்.எஸ் அர்ஜூன் சூது கவ்வும் -2 படத்தின் முன்னோட்டத்தை விஜய் சேதுபதியிடம் காண்பித்து அது அவருக்கு பிடித்ததாக கூறியுள்ளார். படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'கோட்' படத்தின் 2 -வது சிங்கிள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 - ந்தேதி வெளியாகும்
    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5- ந்தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும்

    பிரபல நடிகர் விஜயின் 68-வது படமான 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்' (G.O.A.T.) படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி நடிக்கின்றனர்.

    இந்த படத்தை ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரித்து வருகிறது.இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.புதுச்சேரி, கேரளாவில் இதன் படப்பிடிப்பு நடந்தது.





    இப்படத்தின் முதல் சிங்கிள் 'விசில் போடு' பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பல விமர்சனங்கள், அதிக 'லைக்', பார்வைகள் சாதனை படைத்தது.

    இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சினிமாவில் 17 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட நிகழ்ச்சியில் 'கோட்' படத்தின் 2 -வது சிங்கிள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 - ந்தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார்.




    மேலும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5- ந்தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜூன் மாத மின் கட்டணத்தையே இம்மாதமும் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மின் கணக்கீடு நடக்கவில்லை.

    மங்கலம் :

    மங்கலம் அருகேயுள்ள அக்ரஹாரப்புத்தூர் பிரிவு அலுவலகத்தில் சில கிராம மக்கள் ஜூன் மாத மின் கட்டணத்தையே இம்மாதமும் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து செயற்பொறியாளர் சபரிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமனூர் கோட்டம் அக்ஹாரப்புத்தூர் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், வேட்டுவபாளையம், மலைக்கோவில், உப்பிலிபாளையம் பகுதிகளில் தவிர்க்க இயலாத காரணத்தால் மின் கணக்கீடு நடக்கவில்லை.

    இப்பகுதி மக்கள் ஜூன் மாதம் செலுத்திய கட்டணத்தையே இம்மாத கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது என்றும், திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
    சென்னை:

    சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் 32 மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் புதிய பாடத்திட்டம், கல்வி கட்டணம், நீட் தேர்வு, மாணவர் சேர்க்கை, ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வது எப்படி, தனியார் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை எப்படி நிறைவு செய்வது என்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    கூட்டம் முடிந்ததும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

    கோடை வெப்பத்தை பொறுத்தவரை சென்னை உள்பட சில மாவட்டங்களில் இருக்கிறதே தவிர, பிற மாவட்டங்களில் மழை பெய்து கோடை வெப்பம் தணிக்கப்பட்டு இருக்கிறது. எங்களுக்கு இருக்கும் சிக்கல் என்னவென்றால், புதிய பாடத்திட்டத்தில் பல்வேறு பாடத்திட்டங்களில் மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத்தர வேண்டியது இருக்கிறது.

    எனவே கோடை விடுமுறைக்காக கூடுதல் நாட்களை நாங்கள் தள்ளிப்போட்டால் இந்த பாடத்திட்டங்களை படிக்க மாணவர்களுக்கு ஏதுவாக இருக்காது. எனவே ஜூன் 1-ந் தேதியில் பள்ளிகளை திறப்பதாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும், இவ்வளவு தான் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும் என்பதை வரைமுறைப்படுத்தி அந்த கட்டணங்கள் பெயர் பலகைகளில் வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாணவர்களின் நிலைகளை மனதில் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக இந்த ஆய்வுக்குழு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

    உள்கட்டமைப்புகள், கழிப்பிட வசதிகள், ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் தொடங்கிய உடனேயே பள்ளிகளை சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் வருகிற 1-ந் தேதி முதலே மாணவர்களுக்கான 4 சீருடைகள் மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×