search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chain snatching"

    • பெரம்பூர் மேம்பாலம் கீழ்பகுதியில் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் 2.5 சவரன் தாலி செயின் பறித்து சென்றுள்ளனர்
    • செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர

    கடந்த 7-ம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் தலைமைக் காவலர் சுரேஷ் பாபுவின் மனைவி சுபாஷினி தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு பேர் அவரது கழுத்தில் இருந்த நான்கு சவரன் தாலி செயினை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

    இதுதொடர்பாக சுபாஷினி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், மீண்டும் கடந்த 9ம் தேதி அன்று பெரம்பூர் மேம்பாலம் கீழ்பகுதியில் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் 2.5 சவரன் தாலி செயின் பறித்து சென்றுள்ளனர்.

    இந்த செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஹரியானாவைச் சேர்ந்த சச்சின் குமார் (24), அங்கித் (24), அங்கித் யாதவ் (26) ஆகிய மூவரும் சுற்றுலா செல்வதாக சென்னை வந்து, இரு பைக்குகளை வாடகைக்கு எடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இவர்களை பிடிக்க முயன்ற போது மூவரும் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

    • மொபைலை பறி கொடுக்காமல் இருக்க, கீர்த்தி கெட்டியாக பிடித்து கொண்டார்
    • காவல் அதிகாரிகளின் துப்பாக்கி சூட்டில் ஜிதேந்திராவிற்கு காலில் குண்டடி பட்டது

    உத்தர பிரதேச மாநில காசியாபாத் நகரின் ஏபீஈஎஸ் பொறியியல் கல்லூரியில் (ABES Engineering College) முதலாம் ஆண்டு பி.டெக் படித்து வந்தவர் 19 வயதான கீர்த்தி சிங்.

    கீர்த்தி, கடந்த அக்டோபர் 27 அன்று காசியாபாத்தின் மசூரி பகுதியிலிருந்து ஒரு பணிக்காக ஹாபூர் வரை பேருந்தில் செல்ல வேண்டியிருந்தது. இதனால் அங்குள்ள பேருந்து நிலையத்தை அடைய ஒரு ஆட்டோ ரிக்ஷாவில், தனது தோழி தீக்ஷா ஜிண்டாலுடன் தேசிய நெடுஞ்சாலையில் (NH-9) சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் ஆட்டோவிற்கு அருகில் ஒரு மோட்டார் பைக் வந்தது. அதை பல்பீர் என்பவர் ஓட்டி வந்தார்; ஜிதேந்திரா (28) என்பவர் பின்னால் அமர்ந்திருந்தார். கீர்த்தி சென்ற ஆட்டோவிற்கு அருகில் அந்த மோட்டார் பைக் இணையாக வந்தது.

    அப்போது ஜிதேந்திரா, திடீரென கீர்த்தியின் கையிலிருந்த மொபைல் போனை பறிக்க முயன்றார். இதை எதிர்பாராத கீர்த்தி, மொபைலை பறி கொடுக்காமல் இருக்க அதனை கெட்டியாக பிடித்து கொண்டார். அந்த திருடர்கள் பைக்கை வேகமாக செலுத்தியதால், கீர்த்தி ஆட்டோவிலிருந்து கீழே விழுந்து, விழுந்த வேகத்தில் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார்.

    இந்த விபத்தில் கீர்த்திக்கு பலமான காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அங்குள்ளவர்கள் உதவியுடன் கீர்த்தி அருகில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஆனால் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, சிகிச்சை பலனின்றி துரதிர்ஷ்டவசமாக கீர்த்தி உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை காவல்துறை தீவிரமாக தேடி வந்ததில் பைக்கை ஓட்டி வந்த பல்பீர் காவலர்களிடம் சிக்கினார்.

    இதற்கிடையே, காவலர்கள் கங்கா நதி சாலையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு மோட்டார் பைக்கில் கீர்த்தியை தாக்கிய ஜிதேந்திராவும் மற்றொரு நபரும் சென்றனர். அவர்களை காவல்துறை அதிகாரிகள் நிற்க சொல்லி சைகை செய்தும் நிற்காமல் வேகமாக தப்பித்தனர்.

    உடனடியாக காவல் அதிகாரிகள் அவர்களை பின் தொடர்ந்த போது, இருவரில் ஒருவர் துப்பாக்கியால் காவலர்களை சுட தொடங்கினார். இதில் காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து காவல் அதிகாரிகள் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் ஜிதேந்திரா, காலில் குண்டடிபட்டு கீழே விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜிதேந்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்பியோடி விட்ட அவருடன் பயணம் செய்த மற்றோருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    கடந்த 2020ல் குண்டர்கள் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஜிதேந்திராவிற்கு எதிராக பல காவல் நிலையங்களில் 12 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • கலா குலசை கோவிலுக்கு சென்று விட்டு திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை செல்ல கூடிய தனியார் பஸ்சில் ஏறினார்.
    • அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் சொந்த ஊர் திரும்புகின்றனர்.

    பெண்ணிடம் நகை பறிப்பு

    இந்நிலையில் நெல்லை மாவட்டம் தேவர்குளத்தை சேர்ந்த கலா (வயது38) என்பவர் குலசை கோவிலுக்கு சென்று விட்டு திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் இருந்து சொந்த ஊர் செல்ல நெல்லை செல்ல கூடிய தனியார் பஸ்சில் ஏறினார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பஸ்சில் இருந்து இறங்கி சென்று திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலை யத்திற்கு சென்று புகார் செய்தார்.

    செல்போன் பறிப்பு

    இதே போல் திருச் செந்தூரில் உள்ள நகைக்கடையில் வேலை பார்க்கும் கண்ணன் என்பவர் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் இருந்து மற்றொரு பஸ்சில் சென்றுள்ளார். அவரிடமும் கூட்ட நெரிசலை பயன் படுத்தி அவரது செல் போனை பறித்து சென்றனர்.

    இதுபோல் நேற்று பஸ்சில் ஏறிய சுமார் 10 பேரின் செல்போன் பறிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்த னர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்ம ஆசாமி அரசு பெண் டாக்டர் கழுத்தில் அணிந்திருந்த 7.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிவிட்டான்.
    • விக்கியை கைது செய்தனர். அவரிடமிருந்த 7.5 தாலி செயினை மீட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் மணியரசி (வயது 27), இவர் புலியூர்காட்டு சாகையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் டாக்டராக பணிபுரந்து வருகிறார். இவர் நேற்று பிற்பகல் 2 மணியளவில் புலியூர் காட்டு சாகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது சிறு தொண்டைமாதேவி அருகே வந்து கொண்டிருந்தபோது இவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி அரசு பெண் டாக்டர் கழுத்தில் அணிந்திருந்த 7.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிவிட்டான்.

    இது குறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார்ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணையை முடுக்கிவிட்டார். அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளின்படி பெண் டாக்டரிடமிருந்து செயினை பறித்த கொள்ளையனை போலீசார் அடையாளம் கண்டனர். இவர் நெல்லிக்குப்பம் வைடிபாக்கத்தை சேர்ந்த விக்கி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் விக்கியை கைது செய்தனர். அவரிடமிருந்த 7.5 தாலி செயினை மீட்டனர். தாலி செயின் பறிப்பு சம்பவம் நடந்த சில மணி நேரத்தி லேயே கொள்ளையனை கண்டறிந்த பண்ருட்டி போலீசாரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார்.

    • கணவன் - மனைவி இருவரும் பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சுந்தரி. கடந்த 22.1.23 அன்று கணவன் - மனைவி இருவரும் பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செம்மிபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், முத்துசாமி ஓட்டிய மோட்டார் சைக்கிளை, காலால் எட்டி உதைத்துள்ளனர்.

    இதில் மோட்டார் சைக்கிள் தடுமாறி கணவன்- மனைவி இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதனைப்பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் சுந்தரி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்த போலீசார் மதுரையைச் சேர்ந்த கபாலி என்பவனை கைது செய்து அவனிடமிருந்து தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொருவனை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அவன் கொடைக்கானல் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, குற்றப்பிரிவு சப் - இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார், அங்கு சென்று அவனை பிடித்து வந்தனர். போலீசாரது விசாரணையில் அவன் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் அருண்குமார்(26) என்பது தெரியவந்தது.இதையடுத்து அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • முத்தம்மாளின் 2-வது மகள் ஈஸ்வரியின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது.
    • ராஜகோபால் நகரில் உள்ள ஈஸ்வரி வீட்டிற்கு முத்தம்மாள், மினி பஸ்சில் வந்து இறங்கி அங்குள்ள தியேட்டர் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தை யாபுரம் தோப்பு தெருவை சேர்ந்தவர் முத்து சாமி. இவரது மனைவி முத்தம்மாள் (வயது67). இவர்களுக்கு 2 மகள் ஒரு மகன் உள்ளனர்.

    முத்தம்மாளின் 2-வது மகள் ஈஸ்வரியின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்ப்பதற்காக தூத்துக்குடி அண்ணா நகர் 6-வது மேற்கு பகுதி ராஜகோபால் நகரில் உள்ள ஈஸ்வரி வீட்டிற்கு முத்தம்மாள், மினி பஸ்சில் வந்து இறங்கி அங்குள்ள தியேட்டர் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் திடீரென்று முத்தமாளை பிடித்து கீழே தள்ளியுள்ளனர்.

    இதில் அவர் கீழே விழுந்து வலியால் அலறி துடித்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க செயினை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு வாலி பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து முத்தம்மாள் சிப்காட் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்தார். மேலும் மூதாட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தாண்டாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.
    • 5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்து சென்றனா்.

    வெள்ளகோவில் :

    திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் பெருமாள்புதூா் பகுதியை சோ்ந்த முருகேசன் மனைவி ஜீவா (வயது 43). இவா் ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.

    இந்நிலையில் இவா் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் கடந்த ஜனவரி 24-ந்தேதி மாலை வீடு திரும்பி கொண்டிருந்தாா்.ஈரோடு முத்தூா் சாலை மு.வேலாயுதம்பாளையம் அருகே சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2பேர் ஜீவா கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்து சென்றனா்.இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ஜீவா புகாா் அளித்தாா். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினா்.

    இதில் ஈரோடு மாவட்டம் பவானியை சோ்ந்த ஆறுமுகம், கோவை செல்வபுரம் சாலை ஜோதிபுரம் பாரதி நகரை சோ்ந்த மாரீஸ்வரன் (27) ஆகியோர் நகைபறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.இவா்கள் ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பதும் தெரியவந்தது.இதையடுத்து ஆறுமுகத்தை கைது செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மாரீஸ்வரனை தேடி வந்தனா்.இந்நிலையில் அவரை வெள்ளக்கோவில் போலீசார் நேற்று கைது செய்தனா்.

    • அமலோற்பவம் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஆலயத்தில் நடந்த விழாவில் பங்கேற்பதற்காக சென்றார்.
    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் அமலோற்பவத்தின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கநகையை பறித்து சென்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த காவல்கிணறு அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி அமலோற்பவம்(வயது 67).

    இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஆலயத்தில் நடந்த விழாவில் பங்கேற்பதற்காக சென்றார். அவர் ஆலயம் முன்பு நின்று கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் அமலோற்பவத்தின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கநகையை பறித்து சென்றனர்.

    இதனை அறிந்த அவர் உவரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.  

    • கோவில் திருவிழாவையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் 3 பெண்களிடமும் இருந்து சுமார் 17 பவுன் நகையை திருடிச்சென்றுள்ளனர்.

    நெல்லை:

    முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடியில் திரிகடுகை முன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 27-ந்தேதி நடைபெற்றது.

    நகை மாயம்

    கோவில் திருவிழாவையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வானியர் மேட்டு தெருவை சேர்ந்த செண்டு(வயது 57) என்ற மூதாட்டி கோவிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தார்.

    அப்போது அவரது கழுத்தில் கிடந்த 65 கிராம் தங்கநகையை காணவில்லை. இதேபோல் கோவிலுக்கு வந்திருந்த முத்துலெட்சுமி என்பவரிடம் 40 கிராம் நகையும், சந்தானலெட்சுமி என்பவரிடம் 32 கிராம் நகையும் மாயமானது. கூட்ட ெநரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் 3 பெண்களிடமும் இருந்து சுமார் 17 பவுன் நகையை திருடிச்சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.6லட்சம் ஆகும். இதுதொடர்பாக அவர்கள் அளித்த புகாரின்பேரில் பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுரண்டை அருகே உள்ள துவரங்காடு மற்றும் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வவி நாயகர்புரம் வடக்கு பாண்டியனார்சாலை ஆகிய பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் பெண்களிடம் செயின் பறித்த குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
    • இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர்.

    தென்காசி:

    சுரண்டை அருகே உள்ள துவரங்காடு மற்றும் திரிகூடபதி விலக்கு பகுதி மற்றும் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வவி நாயகர்புரம் வடக்கு பாண்டியனார்சாலை ஆகிய பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் பெண்களிடம் செயின் பறித்த குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து சுரண்டை இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி, பாவூர்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா, கிருஷ்ணன், ஜோதிவேல் முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கீழப்பாவூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த தொழிலாளி முப்புடாதிமுத்து (வயது28), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (37) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    மேலும் குற்றாலம் அருேக உள்ள மெஞ்ஞான புரத்தில் கடந்த ஆண்டு இரவு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடமும், 2 பேரும் சேர்ந்து செயினை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர்.

    • தோழியின் வீட்டில் தூங்கிய போது சம்பவம்
    • போலீசார் விசாரணை

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் சின்னாறு பிள்ளையார் கோவில் எதிர்புறத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சத்தியபாமா(வயது 38). சத்தியபாமாவின் கணவர் வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இதனால் சத்தியபாமா தனது மகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது தோழியான ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த தனசேகரின் மனைவி சத்யா(31) என்பவர் எறையூரில் உள்ள தோழியை பார்ப்பதற்காக தனது மகனுடன் சத்தியபாமா வீட்டிற்கு வந்து கடந்த 2 நாட்களாக தங்கியுள்ளார். இரவு சத்யா வீட்டின் கதவு அருகே தூங்கி கொண்டிருந்தார். இந்த நிலையில் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் சத்யா கழுத்தில் கிடந்த ¾ பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோநகரை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி பார்வதி. இவர் சம்பவத்தன்று இரவு வண்ணார்பேட்டையில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

     அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து சென்ற ஒரு வாலிபர் பார்வதி கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டவாறு செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.

    இதில் செயின் அறுந்து சாலையில் விழுந்தது. அப்போது சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.

    அதில் அவர் கேரளாவை சேர்ந்த பட்டதாரி வாலிபரான ரித்திக் (வயது 22) என்பதும், வி.எம். சத்திரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு விடுமுறையில் வந்தபோது செலவிற்கு பணம் இல்லாததால் செயின் பறிப்பு முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்த ரித்திக்கை போலீசார்  கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் பார்வதி அணிந்திருந்தது கவரிங் நகை என்பது தெரியவந்தது. எனினும் குற்ற செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  
    ×